வெள்ளி, 21 மார்ச், 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்போம்...!



                   16வது மக்களவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வியாழனன்று தில்லியில் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., பிருந்தா காரத், ஏ.கே.பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டனர்.                                

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு :

           ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கியமான படுதோல்வி என்பது, உணவுப்பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணைத்தாண்டி உயரப்பறந்த கொடுமையை தடுத்து நிறுத்துவதற்கு வழி யில்லாமல் முற்றிலும் தோல்வியடைந்தது என்பதுதான் 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏழு ஆண்டு காலம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இரட்டை இலக்க உணவுப் பணவீக்கத்தின் பிடியிலேயே சிக்கியிருந்தனர் என்பதே உண்மை.

வேலையின்மை :

          ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வி, வேலைவாய்ப்பை எந்தவிதத்திலும் உரு வாக்கவில்லை என்பதே. 2005-2010ம் ஆண்டு களுக்கு இடையில் ஐந்தாண்டு காலம், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதிம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ஒவ்வொரு மூன்று பட்டதாரிகளில் ஒருவர் இதுவரையிலும் வேலையில்லாதவராகவே இருந்து வருகிறார்.

ஐ.மு.கூ அரசின் பொருளாதாரக் கொள்கைகள் :

                தனது ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டின் ஒட்டுமொத்த ஏழை-எளிய மக்களிடமிருந்து அனைத்து வளங்களையும் பணக்காரர்களுக்கு கைமாறச் செய்தது. ரூ.5ஆயிரம் கோடியும் அதற்கு மேலும் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2003ம் ஆண்டில் 13 என்று இருந்தது; இது தற்போது 56 என அதிகரித்துள்ளது.
            அதாவது, பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.இந்த அரசு, நிலங்களாக இருந்தாலும் சரி, தாது வளங்கள், இயற்கை எரிவாயு வளம் அல்லது தொலைபேசி அலைக்கற்றை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அனைத்து இயற்கை வளங்களையும் பெரும் வர்த்தகக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கு அனுமதித்துள்ளது.2009க்கும் 2013க்கும் இடையிலான காலத்தில் மட்டும் பெரும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் என்ற பெயரில், வரித் தள்ளுபடி என்ற பெயரில் ரூ.21 லட்சம் கோடி அளவிற்கு எண்ணிப்பார்க்க முடியாத மிகப்பெரும் தொகை வாரி வழங் கப்பட்டுள்ளது.மறுபுறத்தில், மக்களின் அன்றாட வாழ்க் கைக்கான செலவினங்கள் கடுமையாக வெட்டப்பட்டுள்ளன.
          குறிப்பாக உணவு, பெட்ரோலியப் பொருட்கள், உரம் உள்ளிட்ட அடிப்படையான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளன.இந்தியாவில் பல்பொருள் சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதித்துள்ளது. இதன்விளைவாக இத்துறையில் நேரடியாக ஈடுபடும் 4 கோடி மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
          அரசு சொல்வதுபோல, அதன் கொள்கைகளை செயல்படுத்த முடியாமல் போனதால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை; மாறாக இந்தக் கொள்கைகளையெல்லாம் செயல்படுத்தியதன் விளைவாகவே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் இத்தகைய நவீன தாராளமயக் கொள்கைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளது.

ஊழல் மற்றும் மெகா ஊழல்கள் :

         உயர்மட்டத்தில் நடக்கும் ஊழலைப் பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்னெப்போதும் இல்லாத விதத்தில் `சாதனையை’ எட்டியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டு ஊழல், கிருஷ்ணா - கோதாவரி இயற்கை எரிவாயு நிர்ணய விவகாரத்தில் நடந்த ஊழல் போன்றவை இந்த ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் ஊழல்கள்.
           ஆனால் அதே நேரத்தில், ஊழலைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலம் எந்தவிதத்திலும் சிறந்தது என்று சொல்வதற்கில்லை. தற்போது நடந்துள்ள தொலைத்தொடர்பு மற்றும் நிலக்கரிப் படுகை ஒதுக்கீடுகளில் நடந்துள்ள மெகா ஊழல்களின் துவக்கப்புள்ளியே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலத்தில்தான் இருந்துள்ளது. கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் நடந்த பாஜக அரசு சுரங்க ஊழலில் மிகவும் கேடுகெட்ட விதமாக அம்பலப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதவெறியை முறியடிப்போம் :

               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர் தல் அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் மதவெறி நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்துக் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆழமான பிரிவினையை ஏற்படுத்த இந்துத் துவா மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் நடந்த மிக மோசமான வன்முறை என முசாபர் நகரில் நடந்த மதவெறி வன்முறையை குறிப்பிட முடியும். பெரும்பாலான மதவெறி வன்முறைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் தலைமையில் இயங்கும் பல்வேறு மதவெறி அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன என்பது தொடர்ந்து அம்பலப்பட்டு வரு கிறது. இத்தகைய மதவெறி சக்திகளை தடுத்து நிறுத்துவதில் காங்கிரசும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளன.

பாஜக: பிற்போக்குவாத மாற்று :

          பாரதிய ஜனதா கட்சியும், அதன் தலைமை அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒரு நவீன மதச்சார்பற்ற அரசு என்ற கோட் பாட்டிற்கு நேர் எதிரான சித்தாந்தத்தை முன் வைத்து செயல்படுகின்றன.இன்றைய தினம் பாஜகவால் தனது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடியும், அவரால் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குஜராத் மாடலும் பெரும் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன் என்பதோடு தீவிரமான மதவெறியையும் இணைத்து அவை இரண்டையும் முன்வைக்கிற ஒரு ஆபத்தான கலவையே ஆகும். குஜராத் மாடல் என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன் சார்ந்தது ஆகும். தொழிலாளர்களு க்கு மிக மிகக் குறைவான ஊதிய விகிதமும், அதிகபட்ச ஊட்டச்சத்து குறைபாடு, அதிகபட்ச குழந்தை இறப்பு விகிதம், அதிகபட்ச கர்ப்பி ணித் தாய்கள் மரணவிகிதம் என்பது உள்பட மிக மோசமான சமூக நிலை மைகளும்தான் மோடி யின் குஜராத் மாடல்.

மாற்றுக் கொள்கைகள் :

         காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளிலிருந்தும், அவை நடத்தும் மோசமான அரசியலில் இருந்தும் இந்த நாட்டை மீட்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதை நிறைவேற்ற, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தளங்களில் மாற்றுக் கொள்கைகள் தேவைப்படு கின்றன. அத்தகைய ஒரு மாற்றை உருவாக்கிடவே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிக ளும் போராடுகின்றன.

சில முக்கிய அம்சங்கள் : 

* இந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஆலோ சனைகள் இடம்பெற்றுள்ளன.
* அனைவருக்கும் பொது விநி யோக முறையை உறுதிசெய்யும் ஒரு புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்(வருமான வரி செலு த்துவோர் மட்டும் விலக்கு). ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 35 கிலோ உணவுதானியம் அல்லது தனி நபர் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம், இதில் எது அதிகமோ அந்த அளவு உணவுதானியம், அதிகபட்சம் கிலோ ஒன்றுக்கு ரூ.2 விலையில் வழங்குவது உறுதிசெய் யப்படும்.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் :
* பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய அதிகாரம் அரசின் வசமிருந்து தளர்த்தப்பட்டது ரத்து செய்யப்படும்; பெட்ரோலியப் பொ ருட்கள் மீதான கலால் மற்றும் சுங்க வரிகள் குறைக்கப்படும்.
* விவசாய உற்பத்திப் பொருட் களைப் பொறுத்தவரை நாடாளு மன்ற நிலைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டதன்படி, முன்பேர வர்த் தகத்தில் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்படும்.
* பெரும் பணக்காரர்கள் மீது வரி விதிப்பு, பெரும் வர்த்தக நிறுவனங் களின் லாபங்கள் மீது வரிவிதிப்பு, வரி ஏய்ப்போர் மீது கடும் நடவடிக் கை, கருப்புப் பணத்தை கைப்பற்று வது, யூக வணிகத்தில் பணத்தை முன் வைத்து சூதாடுவதைத் தடுப்பது, ஆடம்பரப் பொருட்கள் மீது அதிக பட்ச வரிவிதிப்பு போன்ற நடவடிக் கைகள் மூலம் அரசுக்கான நிதி ஆதார தளம் விரிவுபடுத்தப்படும்.
* விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு பொது முதலீடு அதி கரிக்கப்படும்.
நிதி ஆதாரம் திரட்டுதல் :
* நீண்டகால மூலதன லாபங்கள் மீதான வரியை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஊக முதலீட்டின் மூலம் பெறப்படும் லாபங்கள் மீது வரி விதிப்பு உறுதிசெய்யப்படும். பங்கு பரிவர்த்தனைகள் மீது வரி விதிப்பு அதிகரிக்கப்படும்.
* கறுப்புப் பணத்தை கண்டு பிடித்து மீட்க, குறிப்பாக ஸ்விஸ் வங்கிகள் மற்றும் வரி ஏய்ப்புக்கான சொர்க்கங்களாகத் திகழும் பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத் தை கைப்பற்றுவதற்கான நடவடிக் கை துவக்கப்படும்.
மொரீசியஸ் மற்றும் இதர நாடுகளுடன் ஏற்கெனவே அமலில் உள்ள இரட்டை வரி தவிர்ப்பு ஒப் பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும்; இதன்மூலம் இந்தச் சட்டத்தை பயன் படுத்தி (மொரீசியஸ் பாதை) இந்தியா விற்குள் நுழையும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.
மத்திய - மாநில உறவுகள் :
மத்திய வரி வருவாய்த் தொகுப் பிலிருந்து மாநிலங்களுக்கு 50 சதவீதம் பகிர்ந்தளிக்கப்படும்; சந்தை களில் மாநிலங்கள் கடன்பெறுவதற் கான பங்கு 50 சதவீதமாக அதிகரிக் கப்படும்.
* மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு திட்டங்கள் நிதி ஆதாரத் தோடு மாநில பட்டியலில் கொண்டு வரப்பட்டு, மாநிலங்கள் மூலமே நிறைவேற்றப்படும்.
நிலச்சீர்திருத்தம் :
* நில உச்சவரம்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான தற் போதைய நடவடிக்கைகள் நிறுத்தப் படும்; நிலச்சீர்திருத்தத்தை முறையா கவும் முழுமையாகவும் அமலாக்கிட விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.
* உச்சவரம்புக்கு மேல் உள்ள அனைத்து உபரி நிலங்களும் கை யகப்படுத்தப்பட்டும், விவசாயம் செய்வதற்கு ஏற்ற அனைத்து தரிசு நிலங்களும் வரையறை செய்யப் பட்டும், நிலமற்ற ஏழை- விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக விநி யோகிக்கப்படும்; இதில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; அப்படி வழங்கப்படும் நிலங்களில் பெண்களுக்கும் சம உரிமையை உறுதி செய்யும் விதத்தில் கூட்டுப் பட்டா வழங்கப்படும்.
வெளியுறவுக் கொள்கை :
* பன்முக உலகை மேம்படுத்தும் விதத்தில் சுயேச்சையான மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கை பின்பற்றப்படும். பிரிக்ஸ் மற்றும் ஐபிஎஸ்ஏ அமைப்புகளை வலுப்படு த்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
* லிபியாவில் நடந்தது போல, தற்போது சிரியாவிலும் உக்ரை னிலும் நடந்துகொண்டிருப்பது போல, அமெரிக்காவும் அதன் தலை மையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியும் பிற நாடுகளில் அத்துமீறி தலையீடு செய்வதையும், அரசாங்கங்களை பலவந்தமாக மாற்றுவதையும் கடுமையாக எதிர்ப் போம்.
பெண்கள் :
* நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் கொண்டுவரவும் அதை நிறைவேற்றி டவும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த மசோதா ஏற்கெனவே மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டுள் ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலன் :
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை நிறை வேற்றுவதற்காக ஒரு மத்திய சட்டம் நிறைவேற்றப்படும்; பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டத்தைப் பொறுத்தவரை, மத்தியிலும் மாநிலங் களிலும் தாழ்த்தப்பட்டோரின் மக் கள் தொகைக்கு சமமான விதத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும்.
* பழங்குடி மக்களின் வன உரி மைகள் பாதுகாக்கப்படும்; வனங்க ளிலிருந்து சட்டவிரோதமாக அவர் களை வெளியேற்றும் நடவடிக் கைகள் நிறுத்தப்படும்.
சிறுபான்மையினர் :
* சச்சார் கமிட்டியின் பரிந்துரை களை நிறைவேற்றும் பொருட்டு, பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டத்தைப் போலவே முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கான ஒரு துணைத் திட்டம் வரையறை செய் யப்படும்; வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டத் துறைகளில் சிறப்பு முன் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு, முஸ்லிம் மக்கள் அதிக மாக வாழும் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு சீரிய கவனம் செலுத் தப்படும்.
* ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை முன்வைத்துள்ள பரிந் துரை அமலாக்கப்படும்; அதில் உட னடியாக, நாடு முழுவதும் பரவி யுள்ள முஸ்லிம் சமூகத்தினர் அனை வரும் ஓபிசி(இதர பிற்படுத்தப்பட் டோர்) பிரிவின் கீழ் கொண்டுவரப் பட்டு, மாநில வாரியாக இட ஒதுக்கீடு களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்வி மற்றும் சுகாதாரம் :
கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படும்.
சுகாதாரத்திற்கு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப் படும். இதில் அதிகபட்ச நிதி மத்தி யிலிருந்து ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
ஊதியம், ஓய்வூதியம் :
* நுகர்வோர் விலைவாசி குறி யீட்டு எண் அடிப்படையில் குறை ந்தபட்சக் ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் என்று உறுதி செய் யப்படும்.
* மூத்த குடிமக்களைப் பொறுத் தவரை, மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் அல்லது அவர்கள் பெற்ற வருமா னத்தில் குறைந்தபட்சம் 50சதவீதம்- இதில் எது அதிகமோ அந்தத் தொகை கிடைக்கும் விதத்தில் முதி யோர் ஓய்வூதியத் திட்டம் அனை வருக்கும், அரசின் பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப் படுவது உறுதி செய்யப்படும்; ஓய்வூதி யம் என்பது அனைத்து குடிமக்க ளின் உரிமையாக ஒவ்வொருவருக் கும் உறுதிசெய்யப்படும்.
ஊழல் எதிர்ப்பு :
* ஊழல் தடுப்புச் சட்டம் திருத் தப்பட்டு வலுப்படுத்தப்படும்; லோக் பால் சட்டத்தின் வரையறை விரிவுப் படுத்தப்படும்; அதன்கீழ் அனைத்து ஒப்பந்தங்கள், நிறுவனங்களுடனான புரிந்துணர்வு உடன்பாடுகள்அல்லது அரசு மற்றும் தனியார் துறையின் அனைத்து நிதி உடன்பாடுகளும் கொண்டு வரப்படும்.
தனியார் நிதித்துறை நிறுவ னங்கள், தனியார் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அனை த்து பொது - தனியார் கூட்டு திட்டங் களும் லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

சட்டத் திருத்தங்கள் : 

* ஒரு மாநிலத்தை பிரிப்பது அல்லது மறுசீரமைப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநில சட்ட மன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டி யதை உறுதி செய்யும் விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3 திருத்தப்படும்.
ராணுவப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும்; அதற்கு பதிலாக, ராணுவப் படைக ளுக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்காத - சட்டத்திற்குட்பட்டு செயல்படும் அதிகாரங்களை கொண்ட ஒரு புதிய பொருத்தமான சட்டம் கொண்டுவரப்படும்.
* பாலின உறவுகள் தொடர்பாக தனிநபர் விருப்பங்கள் சார்ந்த உறவு களை குற்றம் என தீர்மானிக்காத விதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 திருத்தப்படும்.
* சட்டவிதிகளிலிருந்து மரண தண்டனையை நீக்கும் விதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் திருத்தப்படும்.
நன்றி :




கருத்துகள் இல்லை: