சனி, 1 மார்ச், 2014

மாறுகிறது மோடியின் குரல்...!


ஆக்கம் :
தோழர். க.சுவாமிநாதன், பொருளியல் அரங்கம்,          
               நாற்காலியில் உட்கார்ந்த பிறகு குரல் மாறுவது அரசியல் வாடிக்கை. ஆனால் நாற்காலிக் கனவிலேயே மோடியின் குரல் மாறியுள்ளது. 
             புதுதில்லியில் அகில இந்திய வணிகர் கருத்தரங்கில் உரையாற்றிய போது, “வியாபாரத்தில் பன்னாட்டுச் சவால்கள் வருவது பற்றி நாம் அச்சப்பட வேண்டாம். அவற்றையெல்லாம் வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் 10 அடிகள் முன்னேறினால், நாம் 15 அடி போக வேண்டும். ஓடக்கூடாது... சந்திக்க வேண்டும்.” வணிகர்கள் மாநாட்டில் உட்கார்ந்து கொண்டு ''பன்னாட்டு மூலதனத்தை தவறாக நினைக்காதீர்கள்'' என்று தரப்படும் சிக்னல் இது. 
           ''இதைத்தானே இவ்வளவு நாளா நானும் சொன்னேன்'' என்று மன்மோகன் சிங் சொல்லலாம். மாறுகிறது மோடியின் குரல். வணிகர்கள் உஷார்....!  

நன்றி :
 

கருத்துகள் இல்லை: