சமையல் எரிவாயு மானியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் எரிவாயு மானியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 நவம்பர், 2015

சமையல் எரிவாயு மானியத்திற்கும் வைக்கப்போறான் ஆப்பு...!


               ''உங்களுக்கு சொந்தவீடு இருக்கா...? சொந்தமா கார் வெச்சிருக்கீங்களா...? இருசக்கர வாகனம் வேற இருக்கா...? அப்ப எதுக்குங்க  கேசுக்கான மானியம் உங்களுக்கு...? சமையல் எரிவாயுக்கான முழுத்தொகையையும் கொடுத்து வாங்கிக்கவேண்டியது தானே...? ஏழைங்க வீட்டில அடுப்பெரிய வசதிப்படைச்சவங்க கேசுக்கான மானியத்தை விட்டுக்கொடுக்கக்கூடாதா...?'' 
           இதை நான் சொல்லலீங்க...! ஓட்டுப்போட்டுப் பாத்தீங்களே... உட்காரவெச்சி பாத்தீங்களே... நம்ம பிரதமரு மோடி தாங்க இப்படி சொல்றாரு...! அவரு என்னா பண்ணுவாரு பாவம்... ரேடியோவில சொன்னாரு... தொலைக்காட்சியில சொன்னாரு... மொபைல் போன்ல சொன்னாரு... ஜீரோவ அமுக்க சொன்னாரு... நீங்க எதையாவது கேட்டீங்களா...? அவரு சொன்னப் பேச்சை கேட்டீங்களா...? இல்லையே...! 
              பாத்தாரு... இவிங்கெல்லாம் இப்படி சொன்னா கேட்கமாட்டாங்க... மயிலே... மயிலேன்னா... இறகு போடாது... வெச்சாரு ஒரு ஆப்பு...! ஓட்டு போட்டவங்க... பாடதவங்க... சாமி கும்புடுறவங்க... கும்புடாதவ்ங்க... மாட்டு மூத்திரத்தை குடிக்கிறவங்க... மாட்டிறைச்சி சாப்புடுறவங்க... யாரையும் விட்டுவைக்கல... பாரபட்சம் இல்லாம மோடி இந்திய மக்கள் எல்லாருக்கும் வெச்சாரு ஆப்பு...! இவரு சொன்ன பேச்சை  கேட்டு 42 இலட்சம் வசதிபடைச்சவங்க   எங்களுக்கு மானியம் வேணாமுன்னு சொல்லிப்பூட்டாங்களாம். எவ்வளவு சொல்லியும்  இவரு பேச்சைக்கேட்காத மிச்சமிருக்கிற வசதி படைச்சவங்களுக்கெல்லாம் அவராவே மானியத்தை புடுங்கிவிட்டுடுவாராம். 
            யாரு அந்த வசதி படைச்சவங்கன்னா...? கடனை வாங்கி வீட்டைக்கட்டி... கடனுல  வாங்கின காரை பெட்ரோல் போடமுடியாம வீட்டு வாசலில நிறுத்திவெச்சிபுட்டு... இருசக்கர வாகனத்தை ஓட்டிகிட்டு, கடனுக்கும்  சாப்பாட்டுக்கும்  அல்லாடிகிட்டு இருக்கிற அந்த வசதி படைச்சவங்ககிட்ட இருந்து தான் மோடி மானியத்தை ஒரேயடியா புடுங்கப்போறாரு.  
           குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் சிலிண்டர் வழங்கத் தேவையில்லையாம்.
                     அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மானியம் ரத்தாகுமாம். 
          அப்போது தான் அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்ற நலிவடைந்தவர்களுக்கு மேலும்  உதவ முடியுமாம்.
             இப்படியெல்லாம் ஆப்பு வைக்க மோடி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம்.
            ஒரு விஷயத்தை நீங்க மறந்திருப்பீங்க...!
             இதே மாதிரியான ஒரு திட்டத்தை முந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்   முன்வைத்தது. ஆனால் அன்று இடதுசாரிக்கட்சிகள் பலத்த  எதிர்ப்பை காட்டியதால்  அந்த திட்டம் அப்போதே  கைவிடப்பட்டது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
            ஆனால் இன்றைக்கு நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் இடதுசாரிக்கட்சிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள சூழ்நிலையில், தனி பெரும்பான்மையுடன் ராட்சச பலத்துடன் உள்ள மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சி  அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று  குறியாக உள்ளது.
            அதன் பிறகு மக்கள் கேஸ் சிலிண்டர் போல் வெடிப்பார்களா...? அல்லது புஸ்வானம் போல் புஸ்ஸ்ஸ்னு போயிடுவாங்களான்னு பார்ப்போம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

பொதுமக்களின் மானியத்தை பறிக்கத்துடிக்கும் ''இம்சை அரசன்''


              பல காலமாக உலகவங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றின் கண்களை உருத்திக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு வழங்கப்படும்   உணவுப்பொருட்களுக்கான மானியமும், சமையல் காஸ் மீதான மானியமும், விவசாயப்பொருட்கள் மீதான மானியமும், எரிபொருட்கள் மீதான மானியமும் இன்று நரேந்திரமோடியையும், அவரது கூட்டாளிகளான இந்திய பெருமுதலாளிகளையும் உருத்திக்கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதன் விளைவாகத்தான் விவசாயப்பொருட்கள் மீதான மானியத்தையும், எரிபொருட்கள் மீதான மானியத்தையும் படிப்படியாக குறைத்துவந்தாலும், ஏறக்குறைய நாடுமுழுதும் ஒட்டுமொத்த  பொதுமக்களுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயுவிற்கு கொடுக்கப்படும் மானியத்தை ஒரேயடியாக பிடுங்கிவிடவேண்டும் என்று நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து துடித்துக்கொண்டிருக்கிறார்.
              தேர்தல் காலத்தில்  இவர், தான் ஆட்சிக்கு வந்தால் எரிவாயுவிற்கான மானியத்தை வங்கிக்கணக்கில் போடும் முறையை ஒழித்துக்கட்டுவேன் என்று சொல்லி நாடு முழுதும் பிரச்சாரம் செய்து வந்தவர், வெற்றிபெற்றவுடன் தேர்தல் காலத்தில் தான் சொன்னதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டார். சென்ற காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் செய்ததை காட்டிலும் அதிவேகமாக செய்யத்தொடங்கினார். அதில் ஒன்று தான் எரிவாயு மானியம் வெட்டு. அடாவடியாக மானியம் முழுமையும்  வெட்டினால் மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்று தெரிந்திருக்கும் மோடி நீங்களாகவே மானியத்தை விட்டுக்கொடுங்கள் என்று கேஞ்சிப்பார்த்தார். அதற்காக பெட்ரோல் பங்க்களிலும், தொலைபேசிகளிலும் விளம்பரமும் செய்துபார்த்தார். ஆன்லைனில் ''GIVEITUP'' என்று பதிவு செய்யுங்கள் அல்லது  ''GIVEITUP'' என்று எஸ்.எம்.எஸ் செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார். ஆனால்  அவர் எதிர்ப்பார்த்தபடி  வெற்றிகிட்டவில்லை.
              எனவே நரேந்திரமோடி  தந்திரமாக வேறொரு சூழ்ச்சியில் இறங்கினார். பொதுமக்கள் தங்கள் தேவைக்கு எரிவாயு சிலிண்டரை  தொலைபேசியிலோ அல்லது கைப்பேசியிலோ பதிவுசெய்யும் போது, வழக்கமாக உங்கள் மானியத்தை விட்டுக்கொடுத்து ஏழைகள் வீட்டில் அடுப்பெரிய உதவுங்கள் என்ற விளம்பரத்திற்கு பிறகு, # கேஸ் சிலிண்டரை பதிவு செய்ய எண் ஒன்றை அழுத்தவும்... # ஆதார் எண்ணை பதிவு செய்ய எண் இரண்டை அழுத்தவும், # நீங்கள் பதிவு செய்த விபரத்தை தெரிந்துகொள்ள எண் மூன்றை அழுத்தவும்... என்ற வேண்டுகோளுக்கு தகுந்தார் போல் மக்கள் பதிவு செய்வார்கள். ஆனால் சமீபகாலமாக எரிவாயு சிலிண்டரை பதிவு செய்யும் போது, மேலே சொன்ன  விட்டுக்கொடுக்கும் விளம்பரத்திற்கு பிறகு, வழக்கமான அந்த மூன்று வேண்டுகோளுக்கு  முன்பாகவே  புதிதாக ஒரு  வேண்டுகோளையும் மக்கள் முன்பு ''தந்திரமாக'' வைக்கிறார் ''நரிதந்திர'' மோடி....!
           #  மானியத்தை விலக்கிக்கொள்வதற்கு எண் சீரோவை அழுத்தவும்...!!!!!???? என்று  கூசாமல் அன்புக்கட்டளையாக வேண்டுகோள் வைக்கிறார். எனவே பொது மக்களே... கேஸ் சிலிண்டரை பதிவு செய்யும் போது  நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்படுங்கள். அவசரத்தில்  ''பூஜ்ஜியத்தை'' அழுத்திவிட்டால், உங்கள் எரிவாயுவுக்கான மானியமும் ''பூஜ்ஜியமாக'' போய்விடும்.... ஜாக்கிரதை... எச்சரிக்கை....!