அமெரிக்க எழுச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க எழுச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 அக்டோபர், 2011

“முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை” - ஜூனியர் விகடன்

            வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது. அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்ற வர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங் களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது!
                         அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத் தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுக ளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது.
                                       கடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர் புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க வில்லை.
                                 அப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத் திலேயே முடிந்தது. அமெரிக்கப் பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.
                           பொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின் டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங் கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு... கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!
                         'முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதி யத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
                        உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட் ங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப் போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.
                                முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

சமஸ்
நன்றி : ஜூனியர் விகடன் (23.10.2011)

வியாழன், 20 அக்டோபர், 2011

''வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்'' - உலகெங்கும் பரவும் மக்கள் எழுச்சி

           
           அமெரிக்காவில் முதலாளித்துவத்திற்கு எதிராகக் கடந்த மாதம் 17 ஆம் தேதி துவங்கி, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களில் 2 ஆயிரம் பேரை அந்நாட்டின் காவல்துறை கைது செய்துள்ளது.
               ''வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்'' என்று பங்குச்சந்தையை முன்னிறுத்தும் அமெரிக்காவின் முதலாளித்துவக்கொள்கையை எதிர்த்துத் துவங்கிய போராட்டம் தற்போது சுமார் 100 நாடுகளுக்குப் பரவியுள்ளது. போராட்டத்தின் வீச்சு அதிகரிக்க, அதிகரிக்க அடக்குமுறை நடவடிக்கைகளையும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் காவல்துறையினர் அதிகரித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க், சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.
          நியூயார்க்கில்தான் இந்தப் போராட்டம் துவங்கியது. அங்கு தற்போது போராட்டக்களத்தில் இருக்கும் மக்கள், தங்கள் முழக்கங்களை விரிவுபடுத்தியுள்ளனர். மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், பெரு நிறுவன உயர்அதிகாரிகளுக்கு கூடுதல் போனஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் எழுப்பி வருகிறார்கள்.

கைக்கூலியினராய் காவல்துறையினர்...

       மக்களின் போராட்டத்தை சீர்குலைக்க காவல்துறைக்கு நிதி தர பெரு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பொருளாதார விமர்சகரும், பத்திரிகையாளருமான மேக்ஸ் கெய்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், போராட்டக்காரர்களை ஒடுக்கவும் 25 கோடி ரூபாயை ஜே.பி.மார்கன் சேஸ் நிறுவனத்தின் தலைவர் ஜேமி டிமோன் நியூயார்க் காவல்துறைக்கு தந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
           போராட்டக்காரர்கள் மீது மிளகுத்தூள் தூவப்பட்டுள்ளது. போராட்டக்களத்தில் இருப்பவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சியிலும் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இது மாதிரியான எந்தவொரு அடக்குமுறை நடவடிக்கைக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். முகாமடித்துத் தங்கியுள்ளவர்கள் போராட்டம் வெல்லும்வரை நகர மாட்டோம் என்ற உறுதியோடு இருக்கிறார்கள்.

அனைத்து கண்டங்களிலும் போராட்டம் பரவுகிறது....
          உலகின் அனைத்து கண்டங்களிலும், சுமார் 951 நகரங்களில் இந்தப் போராட்டம் பரவியுள்ளது. ''அமெரிக்க எழுச்சி'' என்று அழைக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு கருத்து ரீதியான தலைமை இல்லை என்றாலும், ஆட்சியாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரசியல் வல்லுநர்களில் ஒருவரான டெட் மார்கன் கூறுகையில், நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் ஆகியவை இந்தப் போராட்டங்களால் நடுநடுங்கிக் கிடக்கின்றன என்கிறார்.

ஐரோப்பாவும்  குலுங்குகிறது....

          இத்தாலியின் ரோம் நகரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். லண்டனில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பலர் கைது செய்யப்பட்டார்கள். கைதானவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் சுமார் லட்சம் பேர் முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பெர்லின் மற்றும் பிராங்க் பர்ட் ஆகிய இரண்டு நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்றனர்.