கியூபா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கியூபா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 நவம்பர், 2014

கியூபா சர்வாதிகார நாடு - பொய் பிரச்சாரம்


  சர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்....!           
கியூபாவில் வாழும் புரட்சியாளன் சே குவேராவின் 
புதல்வியுடனான பேட்டி ...!               

கேள்வி : 
                 மேற்குலகம் கியூபாவை ஒரு சர்வாதிகார நாடாகப் பார்க்கின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : 
    மேற்குலகில் இருப்பவர்களுக்கு ''சர்வாதிகாரம்'' என்றால் என்னவென்றே தெரியாது. எந்த சர்வாதிகாரியும் தனது மக்களை படிக்க வைக்கமாட்டான். ஏனென்றால், எந்தளவுக்கு மக்கள்  அதிகமாக படிக்கிறார்களோ, அந்தளவுக்கு சுதந்திரமாக சிந்திப்பார்கள்.
                எந்தவொரு சர்வாதிகாரியும் அனைவருக்கும் இலவசக்கல்வியை அறிமுகப்படுத்தமாட்டான்.... எப்படிப்பட்ட சர்வாதிகாரி தனது மக்கள் ஆரோக்கியமாக வாழவும், இலவசமாக கல்வி கற்கவும் விடுவான்....? எப்படிப்பட்ட சர்வாதிகாரி பிற உலக மக்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு தனது மக்களுக்கு போதிப்பான்....? கியூபாவில் அதுதான் நடக்கிறது.
        ஒற்றுமை, மரியாதை, பிற மக்களின் மேல் அன்பு செலுத்துதல், மற்றவர்களின் நன்மைக்கான சுய அர்ப்பணிப்பு - இந்தக் கொள்கைகள் தான் கியூப மக்களுக்கு போதிக்கப்படுகின்றன. அதை எப்படி நீங்கள் சர்வாதிகாரத்துடன் முடிச்சுப் போடலாம்...?

முழுமையான பேட்டியை வாசிப்பதற்கு:

‘West has no idea what a dictatorship is’ – Che Guevara’s daughter to RT
http://rt.com/news/207111-west-dictatorship-cuba-guevara/

திங்கள், 20 ஜூன், 2011

இந்த வயதிலும் உலகத்தைப் பற்றிய அக்கறை...

உலகத்தின் மாபெரும் தலைவனாக விளங்கிவரும் பிடல் காஸ்ட்ரோ இன்றும் உலகத்தைப் பற்றிய சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். வயதோ என்பத்தி எட்டு.. உடல் நலமோ பாதிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் சென்ற ஜூன் 8 - ஆம் தேதி வெனிசுலா அதிபர் சாவேஸ் -உடன் உலக அரசியல் - அமெரிக்க ஏகாதிபத்தியம் இவைகளைப் பற்றி ஆலோசனை நடத்தி இருக்கிறார். பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் கியூபா உலகத்திற்கே வழிகாட்டுகிறது.