உயிர்காக்கும் மருந்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிர்காக்கும் மருந்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 அக்டோபர், 2011

உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை - இது அரசே செய்யும் பயங்கரவாதம்...!

                   ஒரு நாட்டின் சுகாதாரம் - மருத்துவம் என்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. இந்த அத்தியாவசியத் தேவைகளை ஏற்பாடு செய்ய வேண்டியது  அரசின் கடமையாகும். இதைத்தான் ஐநா சபையின் 1948  - ஆம் ஆண்டு மனித உரிமை பிரகடனம் வலியுறுத்துகிறது. 
                 ஆனால் நமது நாட்டில் நடப்பது என்ன...? தாராளமயம் - தனியார்மயம் -  உலகமயம் காரணமாக, அவைகளை அமெரிக்க எஜமான விசுவாசத்தோடு நமது ஆட்சியாளர்கள் பின்பற்றுவதால் இன்றைக்கு நம் நாட்டில் நடப்பது என்ன..? அந்நிய - உள்நாட்டு தனியார் மருந்து கம்பெனி முதலாளிகளும், தனியார் மருத்துவமனை முதலாளிகளும் கொள்ளை இலாபம் அடிப்பதற்கான ஏற்பாட்டினை அரசே செய்து தருகிறது என்பது தான் இன்றைக்கு நம் நாட்டில் நடக்கின்ற உண்மையாகும். அரசாங்கம் உயிர்காக்கும் மருந்து விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை பாருங்கள்...!
       
தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்பனை :
   
            தடைசெய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

உயிர்காக்கும் மருந்துகள் மீது வரி விதிப்பு :

தடுப்பூசி மற்றும் மருந்துகள் தயாரிக்கும் அரசு நிறுவனங்கள் மூடல் :

அனுமதி பெறாத மருந்து தயாரிக்கும் கம்பெனிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது :

அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் 
மருந்துகளின் பற்றாக்குறை :

 புதிய மருந்துகள் - தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு - 
சோதனை எலிகளாக இந்தியர்கள் :

இதன் காரணமாக கோடிக்கணக்கான இந்தியர்கள் 
கொல்லப்படுவார்கள். இதுவும்  ஒருவகை பயங்கரவாதச் செயலே... 
பயங்கரவாதிகளால் வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்து 
கொல்லப்படுவதை விட இந்த செயல் மிக மோசமானது.
எனவே இதுவும் பயங்கரவாதச் செயலே.. 
இது அரசே செய்யும் பயங்கரவாதச் செயல் என்பது தான் 
மக்கள் நினைத்துப் பார்த்திராத பயங்கரம்...

இன்னும் எழுதுகிறேன்...