சிவத் தம்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவத் தம்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜூலை, 2011

முற்போக்குத் தமிழறிஞர், இடதுசாரிச் சிந்தனையாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி காலமானார்

  ''ஆயுத எழுத்து'' இதய அஞ்சலியை செலுத்துகிறது


                     புகழ்பெற்ற உலகத்தமிழறிஞரும், இடதுசாரிச்சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கொழும்புவில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79.
                    புதனன்று இரவு அவர் மரணமடைந்ததாக அவரது இல்லத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிவத்தம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
                   இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கரவெட்டியில் 1932ம் ஆண்டு பிறந்தவர் சிவத்தம்பி. கரவெட்டி மற்றும் கொழும்புவில் படித்த அவர், கொழும்புவில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கண்டி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் அவர் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
                  இங்கிலாந்தின் பர்மிங்காம் பல் கலைக்கழகத்திலும் டாக்டர் பட்டம் பெற்றார். 17 ஆண்டு காலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சிவத்தம்பி, கிழக்குப் பல் கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறையில் வருகை தரு பேராசிரியராகவும் சிவத் தம்பி பணியாற்றியுள்ளார்.
                  அக்காலத்தில் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்களிலும் நடித் துள்ளார். இலங்கைத் தமிழ் தொடர்பாக 70க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி யுள்ளதுடன், 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
                 இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோயம்புத்தூரில் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆகும்.

நன்றி : தீக்கதிர்