மேக் இன் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேக் இன் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 18 நவம்பர், 2014
வெளிநாட்டில் இந்தியாவை கூவி விற்கும் நரேந்திரமோடி...!
லேபிள்கள்:
நரேந்திரமோடி,
மேக் இன் இந்தியா,
வெளிநாட்டுப்பயணம்
ஞாயிறு, 2 நவம்பர், 2014
நடுரோட்டுக்கு வந்த நோக்கியா தொழிலாளர்கள் - இது தான் ஆரம்பம்...!
சென்னைக்கு அருகில் இயங்கிவந்த ''நோக்கியா'' செல்லிடபேசி பன்னாட்டு தொழிற்சாலை நேற்று நவம்பர் 1 முதல் மூடப்பட்டு, இன்று அதில் வேலை செய்த தொழிலாளர்களும், ஊழியர்களும் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதற்கு யார் காரணம்....? மத்திய - மாநில அரசுகள் தான் காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதற்கு பேர் தான் ''மேக் இன் இந்தியா'' என்று பிரதமர் நரேந்திரமோடி சொல்கிறார். பன்னாட்டு முதலாளிகளே... உங்கள் நாட்டில் உங்கள் நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்து அவர்கள் உழைப்பை சுரண்டி கொள்ளையடித்து, பின் அவர்களை அம்போவென்று நடுத்தெருவில் விட்டது போதும். இனி எங்கள் நாட்டிலும் அதை செய்யுங்கள். இதை தான் நம்ம மவராசன் மோடி மேக் இன் இந்தியா... மேக் இன் இந்தியான்னு கூவிகிட்டே இருக்கிறாரு.
எங்கள் நாட்டில் உங்கள் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு நாங்கள் இலவசமாய் இடத்தை கொடுக்கிறோம். தொழிற்சாலைகள் இயங்குவதற்கு நாங்கள் இலவசமாய் மின்சாரம் 24 மணிநேரமும் தருகிறோம். ஆற்று நீரை திருப்பிவிட்டு தண்ணீர் தருகிறோம். எங்க மக்களுக்கு இல்லேன்னாலும் பரவாயில்லை. நீங்க தாராளமாய் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
நீங்க உற்பத்தி செய்யற பொருட்களின் விற்பனை மூலமா கோடிக்கணக்கில உங்களுக்கு வருமானம் வரும். அதற்கெல்லாம் வருமான வரி, சேவை வரி, வணிக வரி எதையும் கட்டிபுடாதீங்க. ஆமா சொல்லிபுட்டேன். உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
அப்புறம் நீங்க யாரை வேண்டுமென்றாலும் வேலைக்கு வெச்சிக்குங்க. மணிக்கணக்கா வேலை வாங்கிக்குங்க. வேலைக்கு தகுந்தமாதிரி சம்பளம் கொடுக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லை. உங்க விருப்பத்துக்கு சும்மா கொஞ்சூண்டு சம்பளம் கொடுத்தா போதும். இந்த பொம்பள புள்ளைங்கள வேலைக்கு வெச்சீங்கன்னா பிரச்சனையே இருக்காது. மணிக்கணக்கா வேலைய வாங்கிகிட்டு தும்மாதூண்டு காசு கொடுத்தாக்கூட போதும். வாயை மூடிகிட்டு சந்தோஷமா வாங்கிப்பாங்க. இயந்திரங்களை இயக்குறது, சுமை தூக்குறது, இரும்பை தூக்கி அடிக்கிறது - இதுமாதிரியான ஆம்பளைங்க செய்யற கடுமையான வேலைங்க எல்லாத்தையும் இனி மேல பொம்பள புள்ளைங்ககிட்டேயே கொடுத்துடுங்க. பாவம், பரிதாபமெல்லாம் பாக்காதீங்க.
உங்களுக்காகவே நான் தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தையே ஒழிச்சிக்கட்டிட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. இடஒதுக்கீட்டை கூட சுத்தமா ஒழிச்சிக்கட்டிட்டேன். ஏன்னா... உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
இப்படியாக நீங்க கொஞ்சமான பணத்தை எங்க நாட்டுல போட்டு தொழிலை நடத்தி, அப்பாவி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, இலாபம் சம்பாதித்து, பணத்தெல்லாம் சுருட்டிக்கின்னு, உழைச்ச தொழிலாளர்களை நடுத்தெருவுல விட்டுட்டு நீங்க ஓடிப்போயிடலாம். நாங்க உங்கள ஒண்ணுமே கேக்கமாட்டோம். ஏன்னா... உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
இதை தான் ''மேக் இன் இந்தியான்னு'' மோடி சொல்றாரு. அதனுடைய ஆரம்பம் தான் இந்த ''நோக்கியா'' - மேக் இன் இந்தியா... போவுது பார் நோக்கியா....!
எங்கள் நாட்டில் உங்கள் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு நாங்கள் இலவசமாய் இடத்தை கொடுக்கிறோம். தொழிற்சாலைகள் இயங்குவதற்கு நாங்கள் இலவசமாய் மின்சாரம் 24 மணிநேரமும் தருகிறோம். ஆற்று நீரை திருப்பிவிட்டு தண்ணீர் தருகிறோம். எங்க மக்களுக்கு இல்லேன்னாலும் பரவாயில்லை. நீங்க தாராளமாய் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
நீங்க உற்பத்தி செய்யற பொருட்களின் விற்பனை மூலமா கோடிக்கணக்கில உங்களுக்கு வருமானம் வரும். அதற்கெல்லாம் வருமான வரி, சேவை வரி, வணிக வரி எதையும் கட்டிபுடாதீங்க. ஆமா சொல்லிபுட்டேன். உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
அப்புறம் நீங்க யாரை வேண்டுமென்றாலும் வேலைக்கு வெச்சிக்குங்க. மணிக்கணக்கா வேலை வாங்கிக்குங்க. வேலைக்கு தகுந்தமாதிரி சம்பளம் கொடுக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லை. உங்க விருப்பத்துக்கு சும்மா கொஞ்சூண்டு சம்பளம் கொடுத்தா போதும். இந்த பொம்பள புள்ளைங்கள வேலைக்கு வெச்சீங்கன்னா பிரச்சனையே இருக்காது. மணிக்கணக்கா வேலைய வாங்கிகிட்டு தும்மாதூண்டு காசு கொடுத்தாக்கூட போதும். வாயை மூடிகிட்டு சந்தோஷமா வாங்கிப்பாங்க. இயந்திரங்களை இயக்குறது, சுமை தூக்குறது, இரும்பை தூக்கி அடிக்கிறது - இதுமாதிரியான ஆம்பளைங்க செய்யற கடுமையான வேலைங்க எல்லாத்தையும் இனி மேல பொம்பள புள்ளைங்ககிட்டேயே கொடுத்துடுங்க. பாவம், பரிதாபமெல்லாம் பாக்காதீங்க.
உங்களுக்காகவே நான் தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தையே ஒழிச்சிக்கட்டிட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. இடஒதுக்கீட்டை கூட சுத்தமா ஒழிச்சிக்கட்டிட்டேன். ஏன்னா... உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
இப்படியாக நீங்க கொஞ்சமான பணத்தை எங்க நாட்டுல போட்டு தொழிலை நடத்தி, அப்பாவி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, இலாபம் சம்பாதித்து, பணத்தெல்லாம் சுருட்டிக்கின்னு, உழைச்ச தொழிலாளர்களை நடுத்தெருவுல விட்டுட்டு நீங்க ஓடிப்போயிடலாம். நாங்க உங்கள ஒண்ணுமே கேக்கமாட்டோம். ஏன்னா... உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
இதை தான் ''மேக் இன் இந்தியான்னு'' மோடி சொல்றாரு. அதனுடைய ஆரம்பம் தான் இந்த ''நோக்கியா'' - மேக் இன் இந்தியா... போவுது பார் நோக்கியா....!
லேபிள்கள்:
தொழிலாளர்கள்,
நரேந்திரமோடி,
நோக்கியா,
மேக் இன் இந்தியா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


