பொருளாதார சீர்த்திருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளாதார சீர்த்திருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 டிசம்பர், 2012

கோவணத்தையும் உருவப் போறாராம் மன்மோகன் சிங்... ஜாக்கிரதை...!

                       இன்றைக்கு புதுடெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு FICCI ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மன்மோகன் சிங் ஒரு ''அபாய சங்கை'' ஊதியிருக்கிறார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தக் கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமாம். அதுவும் வேகமாக நடைமுறைப்படுத்தப்படுமாம். அப்படின்னா என்ன அர்த்தம்...?ஜெனங்க கொஞ்ச நெஞ்சம் போட்டிருக்கிற கோவணத்தையும் உருவிடுவாருன்னு அர்த்தம். ஜெனங்களை ஒட்டுத் துணி இல்லாம அலையவிட்டுடுவாருன்னு அர்த்தம். தனது அமெரிக்க எஜமான் இட்ட கட்டளைய சிறப்பா செய்யப்போறாருன்னு அர்த்தம். அப்படின்னா இதற்கு பேரு தான் சீர்த்திருத்தமா...?
         உண்மையிலேயே சீர்த்திருத்தம் என்றால் என்ன...? அம்மணமா அலைந்தவனை ஆடை அணிய சொல்லுறது ஒரு வகை சீர்த்திருத்தம். குழந்தைத் திருமணம் கூடாதுன்னு தடுக்கிறது ஒரு வகை சீர்த்திருத்தம். கணவன் இறந்துட்டா மனைவி உடன்கட்டை ஏறி உயிர் துறப்பதை ஒழித்து கட்டியது என்பது ஒரு வகை சீர்த்திருத்தம். சமூக விடுதலை, பெண் விடுதலை - இவைகளுக்காக போராடுவது என்பது கூட ஒரு வகை சீர்த்தித்தம் தான். இதெல்லாம் சமூக சீர்த்திருத்தம்.
             அனால் மன்மோகன் சிங்கோ சொல்லுவது ''பொருளாதார சீர்த்திருத்தமாம்''. அப்படி என்ன பொருளாதார சீர்த்திருத்தம் செய்யப்போறாரு என்று கேட்டால், பெட்ரோல் - டீசல் - சமையல் காஸ் விலைகளை மனசாட்சியே இல்லாம உயர்த்த போறாருங்க.  நாம் அன்றாடம் பயன்படுத்துற பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை சாமான்கள், காய்கறிகளின் விலைகளை தாறுமாறாக உயர்த்த போறாருங்க. கண்டபடி வரிவிதிப்புகள் இருக்கும். ஜெனங்க கட்ட வேண்டிய வங்கி வட்டிகளை அதிகப்படுத்திடுவாரு. ஜெனங்களுக்கு கொடுக்கவேண்டிய வட்டிகளை குறைச்சிடுவாரு. மக்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய மானியத்தை வேட்டிடுவாரு.   வேலையின்மையும், வேலையிழப்பும் அதிகமாகும். மக்களுக்கு சொந்தமான பொதுத்துறைப் பங்குகளை தயக்கமே இல்லாமல் தைரியமாக வித்துடுவாரு. இப்படியாக ஜெனங்கப் போட்டிருக்கக்கூடிய சட்டை, துண்டு, வேட்டி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உருவிட்டு, கடைசியாக ஜெனங்களுக்கு ஏதாவது போக்குக்காட்டிட்டு அவங்க போட்டிருக்க கோவணத்தையும் உருவிடுவாரு. அதுமட்டுமல்ல.... இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகையை தாராளமாக தருவாரு. அதுமட்டுமா... மானியங்களை அவர்களுக்கு கொட்டிக்கொடுப்பாரு. ஒரு பக்கம் ஜெனங்க மேல மிகப்பெரிய சுமையை தூக்கி வைப்பாரு. இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளை குஷிப்படுத்திடுவாறு. இதற்கு பேரு தான் பொருளாதார சீர்த்திருத்தமாம். மன்மோகன் சிங் சொல்லுறாரு. இப்படி செய்தால் தான் நாட்டில அவர் ''எதிர்பார்க்கிற'' பொருளாதார வளர்ச்சி இருக்குமாம்.
         இதை மட்டும் சொல்லலைங்க.   இதுவரையில் அரசு மேற்கொண்ட ''பொருளாதார சீர்திருத்த'' நடவடிக்கைகள் ஒரு தொடக்கம் தானாம்.  இன்னமும் ஏராளமான ''சீர்திருத்தக் கொள்கைகள்'' நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறதாம்.  அப்படி செய்தால் மன்மோகன் சிங்கை ''ஒரு செயல்படும் பிரதமர்ன்னு'' அமெரிக்கா  ஒத்துக்குமாம். இன்னுமொரு பொன்மொழியை மன்மோகன் சிங் உதிர்த்திருக்கிறார். இந்த மாதிரியான ''பொருளாதாரச் சீர்திருத்தங்களை'' எதிர்க்கக் கூடியவர்கள் ''பழமைவாதிகளாம்''. யாரை சொல்கிறார் என்று புரிகிறதா....? மக்களை பாதிக்கின்ற - மக்கள் மீது சுமையை ஏற்றுகின்ற - ஏழை மக்களை மேலும் ஏழ்மை ஆக்குகின்ற இதுபோன்ற ''முட்டாள்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரிகள். தான் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது. பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளிக்கொடுத்து, அவர்களை மேலும் செழிக்கச் செய்யும் ''தறுதலைத்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது.
          அப்படியென்றால் பிரதமர் மன்மோகன் சிங் இதன் மூலம் என்ன திருகு வேலை செய்கிறார் என்றால்.... ''மக்களுக்காக நான் சீர்த்திருத்தம் செய்யப்போறேன். அதை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. அப்படியென்றால் அவர்கள் உங்களுக்கு எதிரானவர்கள்'' என்று சொல்லாமல் சொல்லி, வெறும் இலவசங்களுக்கும், தொலைக்காட்சி சீரியல்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் மயங்கிப்போன சிந்தனை இல்லாத இந்திய மக்களை இடதுசாரிக்கட்சிகளுக்கு எதிராக திருப்புவதற்கான திருகு வேலையையும் மன்மோகன் செய்திருக்கிறார்.
          ''பொருளாதார சீர்த்திருத்தம்'' என்ற பெயரில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு செய்யும் மோசடி வேலைகளை மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது தான் நமது கேள்வி...? 

திங்கள், 16 ஜூலை, 2012

இந்திய சந்தையை கொள்ளையடிக்கத் துடிக்கிறது அமெரிக்க கழுகு....!

             கடந்த பத்து நாட்களாக அமெரிக்கா இந்தியா மேல ஒரே எரிச்சலா இருக்கு. அங்கிருந்து கடுமையான வார்த்தைகளாகத் தான் வந்து விழுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு தான் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ''டைம்'' பத்திரிகை தனது இதழில் நமது பிரதமர் மண்ணு மோகன்சிங்கைப் பற்றி ''செயல்படாத மங்குனி பிரதமர்'' என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்ததை நாடே பார்த்தது. ஆனால்  இவ்வளவு கடுமையான விமர்சனத்தைப் பார்த்தும் அதைப் பற்றி எதையுமே சொல்லாமல் நமது பிரதமர் வழக்கம் போல் ''மௌன சாமியாராகவே'' இருந்தார். 
          இன்னும்  அமெரிக்கா இந்தியாவை விடுவதாக இல்லை. இந்தியா அமெரிக்காவிற்கு வேண்டிய மிகப்பெரிய சந்தை. ''அந்நிய நேரடி முதலீடு'' என்ற பெயரில் இந்தியாவில் அமெரிக்கா மிகக் குறைவான முதலீட்டை செலுத்தி மிகப்பெரிய இலாபத்தை கொள்ளையடித்துச் செல்லத் துடிக்கும் அமெரிக்காவிற்கு, தங்களின் பேராசை நிறைவேறாமல் தடுக்கும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் பெரும் சிம்மசொப்பனமாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த சூழல் என்பது அமெரிக்காவை மேலும் மேலும் எரிச்சலூட்டுகிறது 
         அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடிமை ஆட்சிக்காலத்திலேயே  ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ., நாங்கள் சாகவோ'' என்று இந்திய  மக்களை தட்டி எழுப்பிய  பாரதியின் எழுச்சிக்குரலைப் போல், இன்று இந்த தேசத்தை கொள்ளை கொண்டு போக துடிக்கும் அமெரிக்காவின் ''தாராளமயம், தனியார்மயம், உலகமயம்'' என்ற சுரண்டல் கொள்கைகளை ஆரம்பக் காலத்திலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரி கட்சிகளும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்த்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதால்,  அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் தங்கள் இஷ்டப்படி   அமெரிக்காவிற்கு சாதகமான சட்டங்களை அவர்கள் கேட்கிற மாதிரி நிறைவேற்றி தந்து தங்களின் எஜமான விசுவாசத்தை காட்டமுடியாமல் தவிக்கிறார்கள் என்பது நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கும் உண்மை.
              கடந்த முதலாவது ஐக்கிய முற்போக்கு முன்னணியின் ஆட்சி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவில் நடைபெற்ற ஆட்சி என்பதால் குறைந்தபட்ச செயல் திட்டம் அடிப்படையில் அந்த ஆட்சியை மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் சரியான பாதையில் வழிநடத்தி சென்றதால் அமெரிக்கா எதிர்ப்பார்த்த சாதகமான சூழ்நிலை இல்லாமல் போனது. அமெரிக்காவிற்கு ஆதரவான சட்டங்களை இயற்றி, அவர்கள் இந்த தேசத்தை சூரையாடுவதற்கு ஏற்பாடு செய்து எங்கள் எஜமான விசுவாசத்தை காட்டமுடியாமல் ''இடதுசாரிகள் எங்கள் கைகளை கட்டிப்போட்டு விட்டார்கள்'' என்று அன்றே மண்ணு மோகன்சிங் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் தங்களால் இந்த தேசத்தில் இருந்து ஒரு சிறு துளியைக் கூட கொத்திச் செல்ல முடியவில்லையே என்று அமெரிக்காவிற்கு ஏமாற்றமாய் இருந்தது. எரிச்சலூட்டியது. 2009 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு அமெரிக்காவும் சேர்ந்து தானே தேர்தல் களம் இறங்கியது. இடதுசாரி கட்சிகள் மீண்டும் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றாலும், அவர்கள் ஆதரவோடு மத்தியில் ஆட்சியமைந்தாலும் தங்கள் ஆசை நிறைவேறாமல் போய்விடும் என்பதால் இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்க உளவுத்துறை சி. ஐ. ஏ - வும், அமெரிக்க தூதரகமும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக - குறிப்பாக மண்ணு மோகன்சிங்கிற்கு ஆதரவாக தேர்தல் வேலைகளை செய்தது என்பதை இந்த நாடு மறந்திருக்க முடியாது.  
              ஆனால்  இன்றும்  இரண்டாவது ஐக்கிய முற்போக்கு முன்னணியின் நடப்பு ஆட்சியிலும் அதே நிலைமை தான். அவர்கள் நினைத்து போல் இடதுசாரி  கட்சிகளின் தயவு இல்லாமல் ஆட்சி செய்யலாம் என்ற கனவோடு 2009 - ஆம் ஆண்டு இரண்டாவது கட்ட ஆட்சியை தொடங்கிய  மண்ணு மோகன்சிங்கிற்கு அமெரிக்கா விரும்புவது போன்ற - அவர்கள் எதிர்ப்பார்ப்பது போன்ற அமெரிக்க சாதக சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. காரணம் ''கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'' என்பது போல் வெறும் இருபத்து நான்கே பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றிருந்தாலும், நாட்டின் பாதக விஷயங்களை - அமெரிக்காவின் சாதக விஷயங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் இடதுசாரிகள் குறுக்கே நிற்பதால், அமெரிக்க சாதக சட்டங்களான இன்சுரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் சட்டம், சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கும் சட்டம், இந்திய உழைப்பாளி மக்களின் பென்ஷன் நிதியை தனியாரிடம் கொடுத்து பங்குசந்தையில் சூதாட வகை செய்யும் பென்ஷன் சட்டம், விலைப்போகாத அமெரிக்க பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது, அமெரிக்காவில் மருத்துவம், சட்டம், மேலாண்மை, தணிக்கை, பொறியியல், கட்டடக்கலை போன்ற தொழில் சார்ந்த கல்விப்பயின்றவர்களையும், அமெரிக்க ஆசிரியர்கள்  மற்றும் பேராசிரியர்களையும் இந்தியாவில்  அனுமதிக்கும் அந்நிய பல்கலைக்கழக சட்டம், இந்திய கடல் செல்வங்களை - வளங்களை அமெரிக்கா கொள்ளையடிக்க வகை செய்யும் கடற்கரை மேலாண்மை சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் போராட்டங்களின் காரணமாக இன்றைக்கு பாராளுமன்றத்தில் அறிமுகக்கட்டத்திலேயே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. மண்ணு மோகன்சிங்கால் அந்த சட்டங்களை  எல்லாம் நிறைவேற்ற முடியவில்லை.
               இந்த சூழ்நிலையில் தான், இந்திய வளங்களை சூறையாடத்துடிக்கும் அமெரிக்காவிற்கு கோபத்தை ஊட்டுகிறது. இந்திய நாட்டின் சொத்துக்களான நிலம், நீர், ஆகாயம், கடல் ஆகிய இடங்களில் கிடைக்கும் செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போக துடிக்கும் அமெரிக்காவிற்கு தங்களுக்கு சாதகமான சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போவது கண்டு எரிச்சலூட்டுகிறது. அதனால் தான் கடுமையான கோபத்திலிருக்கும் அமெரிக்கா, இந்திய  பிரதமர் மண்ணு மோகன்சிங்கை ''எதற்கும் லாயக்கில்லாத பிரதமர்'' என்று ''டைம்'' பத்திரிகை மூலம் திட்டுவதும், ''மண்ணு மோகன்சிங் எனது இனிய நண்பர்'' என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரதமர் மண்ணு மோகன்சிங்கை தூக்கிவைத்து கொஞ்சுவதுமாக கடந்த வாரங்களில் அமெரிக்கா நடந்துகொள்கிறது. 
           நேற்று கூட ஒபாமா, தனது இனிய நண்பர் மண்ணு மோகன்சிங் இந்தியாவில் கடுமையான ''பொருளாதார சீர்த்திருத்தங்களை'' கொண்டு வரவேண்டும் என்று அறியுரை கூறியிருக்கிறார். இது அறியுரையா...? ஆலோசனையா...? கட்டளையா...? சர்வாதிகாரமா..? என்பது மண்ணு மோகன்சிங்கிற்கு தான் வெளிச்சம்.