தேர்தல் அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

எச்சரிக்கை : மதவெறியை முன்மொழியும் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை...!


 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,          
                                 மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)          

           அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, போன்ற அம்சங்களில் மட்டுமல்ல, வேறு பல கோணங்களிலும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையே மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
          வெளிநாடுகளில் வாழும் “இந்துக்கள் துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தரும்” என பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கூறுகிறது. இந்தியர்கள் பல கோடிப் பேர் சிங்கப்பூர், மலேசியா, அரேபிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு பணிகளில் உள்ளனர். ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களாகவும் ஆகி விட்டனர்.
          இவர்களில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என இந்தியாவின் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மட்டும்தான் இந்திய அரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றால் இது ஒரு வகுப்புவாத அணுகுமுறை என்பதைத் தவிர வேறென்ன? சொந்த நாட்டு மக்களையே மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கும் இந்தப் பார்வை மிகவும் ஆபத்தானது அல்லவா? தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நிறவெறி கொடுமைக்கு ஆளானபோது, காந்திஜி அவர்கள் அனைவருக்காகவும் போராடினார். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எந்த மதத்தை, எந்த சாதியைச் சார்ந்தவர்கள் என்று காந்திஜி வேறுபடுத்தி பார்க்கவில்லை.           
          தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேதுக்கால்வாய் திட்டத்தையும் பாஜக தடுப்போம் என கொக்கரிப்பது வகுப்புவாத கண்ணோட்டத்தோடுதான். புராணங்களின் அடிப்படையில் வளர்ச்சியை தடுப்பது முறையா?பாஜக தேர்தல் அறிக்கை வகுப்புவாத அணுகுமுறையை கொண்டதாக மட்டுமல்ல, தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானதாக உள்ளது.
             நலிந்த பிரிவினருக்கு சமூக நீதி, அதிகாரம் அளித்தல் என்று துவங்கும் பாஜகவின் தேர்தல் அறிக்கை “கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கக்கூடிய ஒரு பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்” எனக் கூறுகிறது. தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தற்பொழுது அமலாகி வரும் இடஒதுக்கீடு பற்றி பாஜக அறிக்கையில் எதுவும் இல்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலத்தை வைத்து நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை ஒழித்திட பாஜக சதிவலை பின்னுகிறது.
            பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்த அநீதியான சாதிய முறையினால்தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அது தொடர்வதும் அவசியமாகிறது. “அரசியல் தளத்தில் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற ஜனநாயகம் உள்ளது. ஆனால் பொருளியல் வாழ்க்கையில் இந்த ஜனநாயகம் அல்லது சமமான வாய்ப்பு இல்லை” என டாக்டர் அம்பேத்கார் கூறினார். ஒரு சிலர் டாலர் பில்லியனராக கொழுப்பதும், பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடுவதும் நீடிக்கும் தேசத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது ஏமாற்று வித்தையே.
             மேலும், சமூக ரீதியிலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை யினத்தைச் சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது முக்கியமான அம்சம். இதையும் பாஜக வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன் நிராகரிக்கிறது.சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வறுமையில் வாடுவதாக கூறும் பாஜக, அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் தனது தேர்தல் அறிக்கையில் முன்வைக்கவில்லை.
              நவீன இந்தியாவில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற சொல்லாடலை பாஜக பயன்படுத்துகிறது. ஆனால், இஸ்லாமிய சிறுபான்மை மக்களுடைய கல்வி, வேலைவாய்ப்பு , வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகளைப் பற்றி ஆய்வு செய்த நீதிபதி சச்சார் குழு அறிக்கை பற்றியோ, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரை பற்றியோ ஏதும் கூறவில்லை. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த கட்சிதான் பாஜக என்பதை மறந்துவிடமுடியாது. பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை என்பது மட்டுமல்ல, பாஜக ஒரு வகுப்புவாத கட்சி என்பதை அது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையே மேலும் அம்பலப்படுத்துகிறது.
         இத்தகைய வகுப்புவாதக் கட்சியோடு மதிமுக, பாமக, தேமுதிக உடன்பாடு வைத்திருப்பதும், இதுவரையில் பாஜக தேர்தல் அறிக்கை பற்றி அதிமுக தலைமை வாய் திறக்காததும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அந்த கட்சிகளுக்கு உண்டு.
          எனவே, வகுப்புவாதத்திற்கு எதிராக, மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, உறுதியாக போராடி வரும் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

வியாழன், 10 ஏப்ரல், 2014

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை : நாம் பேசியாக வேண்டும்


 கட்டுரையாளர் : என். ராம், பத்திரிக்கையாளர்        


             இந்த 16-வது மக்களவைப் பொதுத்தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும்வரை, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய போதிலும் எந்த விளக்கமும் அளிக்காத கட்சி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய பின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தேர்தல் அறிக்கை என்பது பெரிய விஷயமல்ல என்று பா.ஜ.க. நினைப்பது போலத் தெரிகிறது. ''வளர்ச்சி நாயகன்'' என்றுஅழைக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரச்சார இயந்திரம், 2002-ல் நடந்ததைப் பற்றி விவாதிக்க விடாமல் - அல்லது அதிலிருந்து கவனத்தை வேறுதிசைகளில் இழுத்துச்செல்லும் வேலையை - தனது வரம்புக்கு உட்பட்ட வகையில் ஏற்கெனவே கச்சிதமாகச் செய்துமுடித்து விட்டது. ''மோடி மந்திரம்'' கையில் இருக்கும் போது தேர்தல் அறிக்கைக்கு என்ன தேவை என்று கட்சி நினைத்திருக்கலாம்.

  தாமதத்தின் உண்மையான பின்னணி                    

           ஏனைய தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகும், முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் வரை பாஜகவால் தேர்தல் அறிக்கையைக் கொண்டுவர முடியவில்லை என்பது சாதாரண விஷயமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அவசியமான தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட உண்மையான காரணம் என்ன? இதுதொடர்பாக பாஜக தலைமையிடமிருந்து விளக்கம் ஏதும் வருவதற்கு முன்பாகவே, ஊடகங்களில் ‘பாஜக சார்புள்ளவர்கள்’ முந்திக்கொண்டு பதில் அளிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ‘நெட்வொர்க் 18’ குழு வெளியீடுகளின் தலைமை ஆசிரியர் ஆர். ஜெகந்நாதன், “மோடியே தேர்தல் அறிக்கை தான்; கனமான இன்னொரு அறிக்கை பாஜக-வுக்குத் தேவையா என்ன?” என்று கட்டுரையில் வினவுகிறார்.
                 கட்டுரையின் கடைசிப் பகுதியை அவர் இப்படி முடிக்கிறார்: “தேர்தல் அறிக்கைகள் என்பவை கால்கட்டு மாதிரி, தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகும் கட்சிக்கு இம்மாதிரியான தளைகள் தேவையில்லை.” இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ‘நிச்சயம் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு இந்தத் தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையாக மாறிவிடக்கூடும்‘ என்று தெரிகிறது. தேர்தல் அறிக்கை என்பது ‘தெரிவிப்பது குறைவாகவும் மறைப்பது அதிகமாகவும்‘ இருப்பது. அப்படி மறைக்கப்பட வேண்டியவற்றில் கட்சியின் சித்தாந்தம், குணவிசேஷம் ஆகியவை முக்கியமானவை. பாஜகவைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை அதன் சங் பரிவாரங்களின் முக்கியமான செயல்திட்டங்கள், நோக்கங்கள், சித்தாந்தங்கள், ‘இந்துத்துவா’ என்று அது கருதும் விஷயங்கள் - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்துசெய்வது, அனைவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டம் இயற்றுவது, மதமாற்றங்களைத் தடை செய்வது, பசுவதைத் தடை உள்பட பல. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அம்சங்களெல்லாம் பெரும்பாலான மக்களுடைய கவனத்திலிருந்து தப்பிவிடுவதுதான். பா.ஜ.க என்பது தன்னுடைய கொள்கைகளில் பிடிப்பு உள்ள கட்சி. எந்தக் காரணத்துக்காகவும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய உணர்ச்சிப் பிழம்பான அமைப்புகளைக் கொண்டது தான் சங் பரிவாரம். இவற்றையெல்லாம் ஊட்டி வளர்ப்பது ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்’ என்ற தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.
                  இந்த அமைப்புகளுக்குள்ள உறவு எப்படிப்பட்டது, அவை எப்படிச் செயல்படுகின்றன என்று அறிய வேறெங்கும் போக வேண்டாம் அவற்றின் இணையதளங்களைக் கவனித்தாலே போதும். ஒரு இணையதளம் சொல்கிறது: “சங் பரிவாரத்தின் மிகவும் பிரபலமான அங்கம் பாரதிய ஜனதா கட்சி. இந்திய வரலாறு எது என்பதில் சங் பரிவாரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்திய நாட்டுக்கும் சமூகத்துக்கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.”


 அடிநாதம் இந்துத்துவமே                  

           பாஜக 1980-86 காலகட்டத்தில் அதன்‘சாதாரணமான’ வலதுசாரிக் கருத்துகளுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றிகளால் துணிச்சல் பெற்று, 1989-ல் ‘தீவிரமான’ இந்துத்துவக் கருத்துக்களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியது. 1996 தொடங்கி பாஜக-வின் தேர்தல் அறிக்கைகளை ஊன்றிக் கவனித்தால், 1999 தவிர பிற தேர்தல்களிலெல்லாம் இந்துத்துவக் கருத்துகளை மையமாக வைத்தே அது தேர்தல் அறிக்கை யைத் தயாரித்துவந்துள்ளது தெரியவரும். கொள்கைகளைச் சொல்லப் பயன்படுத்தும் மொழி, தொனி, பாணி வேறுபட்டாலும் பிரதான அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன. பாஜக-வின் 1998 தேர்தல் அறிக்கை அதனுடைய முக்கியக் கொள்கைகளை வெளிப்படையாகப் பேசுகிறது. “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது. “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது. “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது.
              “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது. “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அழகிய, பெரிய ஆலயத்தை எழுப்ப வேண்டும்” என்கிறது. இதைச் செய்ய சட்டப்பூர்வமாகவும் கருத்தொற்றுமை அடிப்படையிலும், அரசியல் சட்டம் மூலமாகவும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறது. மேலும், காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்துசெய்யப்படும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது. அடுத்த பொதுத்தேர்தலில் அதாவது 1999 தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக, ‘நிர்வாகத்துக்கான தேசிய செயல்திட்டம்‘ வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
                அதில் இந்துத்துவத்தின் அடிப்படை அம்சங்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தன. அடுத்த பொதுத்தேர்தலில் பலகட்சிகளையும் உள்ளடக்கி விரிவானகூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் இந்துத்துவக் கொள்கைகள், ‘2004-க்கான தீர்க்கதரிசனத் திட்டங்கள்’ என்ற பெயரில் அப்படியே இடம்பிடித்தன. இந்த அறிக்கையின் முக்கிய அம்சம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை பா.ஜ.க. மீண்டும் கையில் எடுத்ததுதான். அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, “ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளுக்கும் போதிய நிதி, நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி பிரதேச ஆணையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கை இதில் இடம் பெற்றிருந்தது.



   மீண்டும் இறுகிய இந்துத்துவா                      
            மீண்டும் இந்துத்துவக் கொள்கைகள் தீவிரமாக வலியுறுத்தப்பட்டன 2009 தேர்தல் அறிக்கையில். “அத்வானி தலைமையிலான அயோத்தி இயக்கம்தான் சுதந்திர இந்தியா வில் மக்களிடையே எழுச்சியைப் பெற்ற பெரியநிகழ்வு” என்று வாழ்த்துப் பாடிய அந்த அறிக்கையில், “காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும்” என்ற பழைய பல்லவி மீண்டும் ஒலித்தது. அனைத்துமதத்தவருக்கும் பொதுவான குடி யுரிமைச் சட்டத்தை உருவாக்க உறுதி பூண்டிருப்பதாகவும் எல்லா மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த அம்சங்களை ஒன்றுசேர்த்து நவீன சமூகத்துக்கு ஏற்ற வகையில் குடியுரிமைச் சட்டம் தயாரிக் கப்படும் என்றும் அது கூறியது.



   முன் தயாரிப்புகள்                         

            இந்த 2014 தேர்தல் அறிக்கைக்கான பூர்வாங்க வேலைகளை 2013 அக்டோபரிலேயே பா.ஜ.க. தொடங்கிவிட்டது. வாக்காளர்களிடமிருந்தே யோசனைகளை வரவேற்கிறோம் என்றெல்லாம், தனி இணையதளம் தொடங்கப்பட்டாலும் கட்சியின் அடிப்படை என்னவோ இந்துத்துவக் கொள்கைகள்தான். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் நடத்தும் மதவாதம் தெறிக்கும் பிரச்சாரங்களும், அமித்ஷாவின் அனல் கக்கும் பேச்சுகளும் எதைக் காட்டுகின்றன...? பாஜகவின் குணம் மாறவே மாறாது என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன.
நன்றி : தி `ஹிந்து’, தமிழில் : சாரி

வெள்ளி, 21 மார்ச், 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்போம்...!



                   16வது மக்களவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வியாழனன்று தில்லியில் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., பிருந்தா காரத், ஏ.கே.பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டனர்.                                

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு :

           ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கியமான படுதோல்வி என்பது, உணவுப்பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணைத்தாண்டி உயரப்பறந்த கொடுமையை தடுத்து நிறுத்துவதற்கு வழி யில்லாமல் முற்றிலும் தோல்வியடைந்தது என்பதுதான் 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏழு ஆண்டு காலம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இரட்டை இலக்க உணவுப் பணவீக்கத்தின் பிடியிலேயே சிக்கியிருந்தனர் என்பதே உண்மை.

வேலையின்மை :

          ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வி, வேலைவாய்ப்பை எந்தவிதத்திலும் உரு வாக்கவில்லை என்பதே. 2005-2010ம் ஆண்டு களுக்கு இடையில் ஐந்தாண்டு காலம், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதிம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ஒவ்வொரு மூன்று பட்டதாரிகளில் ஒருவர் இதுவரையிலும் வேலையில்லாதவராகவே இருந்து வருகிறார்.

ஐ.மு.கூ அரசின் பொருளாதாரக் கொள்கைகள் :

                தனது ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டின் ஒட்டுமொத்த ஏழை-எளிய மக்களிடமிருந்து அனைத்து வளங்களையும் பணக்காரர்களுக்கு கைமாறச் செய்தது. ரூ.5ஆயிரம் கோடியும் அதற்கு மேலும் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2003ம் ஆண்டில் 13 என்று இருந்தது; இது தற்போது 56 என அதிகரித்துள்ளது.
            அதாவது, பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.இந்த அரசு, நிலங்களாக இருந்தாலும் சரி, தாது வளங்கள், இயற்கை எரிவாயு வளம் அல்லது தொலைபேசி அலைக்கற்றை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அனைத்து இயற்கை வளங்களையும் பெரும் வர்த்தகக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கு அனுமதித்துள்ளது.2009க்கும் 2013க்கும் இடையிலான காலத்தில் மட்டும் பெரும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் என்ற பெயரில், வரித் தள்ளுபடி என்ற பெயரில் ரூ.21 லட்சம் கோடி அளவிற்கு எண்ணிப்பார்க்க முடியாத மிகப்பெரும் தொகை வாரி வழங் கப்பட்டுள்ளது.மறுபுறத்தில், மக்களின் அன்றாட வாழ்க் கைக்கான செலவினங்கள் கடுமையாக வெட்டப்பட்டுள்ளன.
          குறிப்பாக உணவு, பெட்ரோலியப் பொருட்கள், உரம் உள்ளிட்ட அடிப்படையான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளன.இந்தியாவில் பல்பொருள் சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதித்துள்ளது. இதன்விளைவாக இத்துறையில் நேரடியாக ஈடுபடும் 4 கோடி மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
          அரசு சொல்வதுபோல, அதன் கொள்கைகளை செயல்படுத்த முடியாமல் போனதால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை; மாறாக இந்தக் கொள்கைகளையெல்லாம் செயல்படுத்தியதன் விளைவாகவே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் இத்தகைய நவீன தாராளமயக் கொள்கைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளது.

ஊழல் மற்றும் மெகா ஊழல்கள் :

         உயர்மட்டத்தில் நடக்கும் ஊழலைப் பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்னெப்போதும் இல்லாத விதத்தில் `சாதனையை’ எட்டியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டு ஊழல், கிருஷ்ணா - கோதாவரி இயற்கை எரிவாயு நிர்ணய விவகாரத்தில் நடந்த ஊழல் போன்றவை இந்த ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் ஊழல்கள்.
           ஆனால் அதே நேரத்தில், ஊழலைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலம் எந்தவிதத்திலும் சிறந்தது என்று சொல்வதற்கில்லை. தற்போது நடந்துள்ள தொலைத்தொடர்பு மற்றும் நிலக்கரிப் படுகை ஒதுக்கீடுகளில் நடந்துள்ள மெகா ஊழல்களின் துவக்கப்புள்ளியே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலத்தில்தான் இருந்துள்ளது. கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் நடந்த பாஜக அரசு சுரங்க ஊழலில் மிகவும் கேடுகெட்ட விதமாக அம்பலப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதவெறியை முறியடிப்போம் :

               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர் தல் அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் மதவெறி நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்துக் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆழமான பிரிவினையை ஏற்படுத்த இந்துத் துவா மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் நடந்த மிக மோசமான வன்முறை என முசாபர் நகரில் நடந்த மதவெறி வன்முறையை குறிப்பிட முடியும். பெரும்பாலான மதவெறி வன்முறைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் தலைமையில் இயங்கும் பல்வேறு மதவெறி அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன என்பது தொடர்ந்து அம்பலப்பட்டு வரு கிறது. இத்தகைய மதவெறி சக்திகளை தடுத்து நிறுத்துவதில் காங்கிரசும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளன.

பாஜக: பிற்போக்குவாத மாற்று :

          பாரதிய ஜனதா கட்சியும், அதன் தலைமை அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒரு நவீன மதச்சார்பற்ற அரசு என்ற கோட் பாட்டிற்கு நேர் எதிரான சித்தாந்தத்தை முன் வைத்து செயல்படுகின்றன.இன்றைய தினம் பாஜகவால் தனது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடியும், அவரால் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குஜராத் மாடலும் பெரும் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன் என்பதோடு தீவிரமான மதவெறியையும் இணைத்து அவை இரண்டையும் முன்வைக்கிற ஒரு ஆபத்தான கலவையே ஆகும். குஜராத் மாடல் என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன் சார்ந்தது ஆகும். தொழிலாளர்களு க்கு மிக மிகக் குறைவான ஊதிய விகிதமும், அதிகபட்ச ஊட்டச்சத்து குறைபாடு, அதிகபட்ச குழந்தை இறப்பு விகிதம், அதிகபட்ச கர்ப்பி ணித் தாய்கள் மரணவிகிதம் என்பது உள்பட மிக மோசமான சமூக நிலை மைகளும்தான் மோடி யின் குஜராத் மாடல்.

மாற்றுக் கொள்கைகள் :

         காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளிலிருந்தும், அவை நடத்தும் மோசமான அரசியலில் இருந்தும் இந்த நாட்டை மீட்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதை நிறைவேற்ற, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தளங்களில் மாற்றுக் கொள்கைகள் தேவைப்படு கின்றன. அத்தகைய ஒரு மாற்றை உருவாக்கிடவே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிக ளும் போராடுகின்றன.

சில முக்கிய அம்சங்கள் : 

* இந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஆலோ சனைகள் இடம்பெற்றுள்ளன.
* அனைவருக்கும் பொது விநி யோக முறையை உறுதிசெய்யும் ஒரு புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்(வருமான வரி செலு த்துவோர் மட்டும் விலக்கு). ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 35 கிலோ உணவுதானியம் அல்லது தனி நபர் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம், இதில் எது அதிகமோ அந்த அளவு உணவுதானியம், அதிகபட்சம் கிலோ ஒன்றுக்கு ரூ.2 விலையில் வழங்குவது உறுதிசெய் யப்படும்.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் :
* பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய அதிகாரம் அரசின் வசமிருந்து தளர்த்தப்பட்டது ரத்து செய்யப்படும்; பெட்ரோலியப் பொ ருட்கள் மீதான கலால் மற்றும் சுங்க வரிகள் குறைக்கப்படும்.
* விவசாய உற்பத்திப் பொருட் களைப் பொறுத்தவரை நாடாளு மன்ற நிலைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டதன்படி, முன்பேர வர்த் தகத்தில் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்படும்.
* பெரும் பணக்காரர்கள் மீது வரி விதிப்பு, பெரும் வர்த்தக நிறுவனங் களின் லாபங்கள் மீது வரிவிதிப்பு, வரி ஏய்ப்போர் மீது கடும் நடவடிக் கை, கருப்புப் பணத்தை கைப்பற்று வது, யூக வணிகத்தில் பணத்தை முன் வைத்து சூதாடுவதைத் தடுப்பது, ஆடம்பரப் பொருட்கள் மீது அதிக பட்ச வரிவிதிப்பு போன்ற நடவடிக் கைகள் மூலம் அரசுக்கான நிதி ஆதார தளம் விரிவுபடுத்தப்படும்.
* விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு பொது முதலீடு அதி கரிக்கப்படும்.
நிதி ஆதாரம் திரட்டுதல் :
* நீண்டகால மூலதன லாபங்கள் மீதான வரியை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஊக முதலீட்டின் மூலம் பெறப்படும் லாபங்கள் மீது வரி விதிப்பு உறுதிசெய்யப்படும். பங்கு பரிவர்த்தனைகள் மீது வரி விதிப்பு அதிகரிக்கப்படும்.
* கறுப்புப் பணத்தை கண்டு பிடித்து மீட்க, குறிப்பாக ஸ்விஸ் வங்கிகள் மற்றும் வரி ஏய்ப்புக்கான சொர்க்கங்களாகத் திகழும் பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத் தை கைப்பற்றுவதற்கான நடவடிக் கை துவக்கப்படும்.
மொரீசியஸ் மற்றும் இதர நாடுகளுடன் ஏற்கெனவே அமலில் உள்ள இரட்டை வரி தவிர்ப்பு ஒப் பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும்; இதன்மூலம் இந்தச் சட்டத்தை பயன் படுத்தி (மொரீசியஸ் பாதை) இந்தியா விற்குள் நுழையும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.
மத்திய - மாநில உறவுகள் :
மத்திய வரி வருவாய்த் தொகுப் பிலிருந்து மாநிலங்களுக்கு 50 சதவீதம் பகிர்ந்தளிக்கப்படும்; சந்தை களில் மாநிலங்கள் கடன்பெறுவதற் கான பங்கு 50 சதவீதமாக அதிகரிக் கப்படும்.
* மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு திட்டங்கள் நிதி ஆதாரத் தோடு மாநில பட்டியலில் கொண்டு வரப்பட்டு, மாநிலங்கள் மூலமே நிறைவேற்றப்படும்.
நிலச்சீர்திருத்தம் :
* நில உச்சவரம்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான தற் போதைய நடவடிக்கைகள் நிறுத்தப் படும்; நிலச்சீர்திருத்தத்தை முறையா கவும் முழுமையாகவும் அமலாக்கிட விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.
* உச்சவரம்புக்கு மேல் உள்ள அனைத்து உபரி நிலங்களும் கை யகப்படுத்தப்பட்டும், விவசாயம் செய்வதற்கு ஏற்ற அனைத்து தரிசு நிலங்களும் வரையறை செய்யப் பட்டும், நிலமற்ற ஏழை- விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக விநி யோகிக்கப்படும்; இதில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; அப்படி வழங்கப்படும் நிலங்களில் பெண்களுக்கும் சம உரிமையை உறுதி செய்யும் விதத்தில் கூட்டுப் பட்டா வழங்கப்படும்.
வெளியுறவுக் கொள்கை :
* பன்முக உலகை மேம்படுத்தும் விதத்தில் சுயேச்சையான மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கை பின்பற்றப்படும். பிரிக்ஸ் மற்றும் ஐபிஎஸ்ஏ அமைப்புகளை வலுப்படு த்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
* லிபியாவில் நடந்தது போல, தற்போது சிரியாவிலும் உக்ரை னிலும் நடந்துகொண்டிருப்பது போல, அமெரிக்காவும் அதன் தலை மையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியும் பிற நாடுகளில் அத்துமீறி தலையீடு செய்வதையும், அரசாங்கங்களை பலவந்தமாக மாற்றுவதையும் கடுமையாக எதிர்ப் போம்.
பெண்கள் :
* நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் கொண்டுவரவும் அதை நிறைவேற்றி டவும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த மசோதா ஏற்கெனவே மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டுள் ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலன் :
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை நிறை வேற்றுவதற்காக ஒரு மத்திய சட்டம் நிறைவேற்றப்படும்; பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டத்தைப் பொறுத்தவரை, மத்தியிலும் மாநிலங் களிலும் தாழ்த்தப்பட்டோரின் மக் கள் தொகைக்கு சமமான விதத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும்.
* பழங்குடி மக்களின் வன உரி மைகள் பாதுகாக்கப்படும்; வனங்க ளிலிருந்து சட்டவிரோதமாக அவர் களை வெளியேற்றும் நடவடிக் கைகள் நிறுத்தப்படும்.
சிறுபான்மையினர் :
* சச்சார் கமிட்டியின் பரிந்துரை களை நிறைவேற்றும் பொருட்டு, பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டத்தைப் போலவே முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கான ஒரு துணைத் திட்டம் வரையறை செய் யப்படும்; வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டத் துறைகளில் சிறப்பு முன் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு, முஸ்லிம் மக்கள் அதிக மாக வாழும் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு சீரிய கவனம் செலுத் தப்படும்.
* ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை முன்வைத்துள்ள பரிந் துரை அமலாக்கப்படும்; அதில் உட னடியாக, நாடு முழுவதும் பரவி யுள்ள முஸ்லிம் சமூகத்தினர் அனை வரும் ஓபிசி(இதர பிற்படுத்தப்பட் டோர்) பிரிவின் கீழ் கொண்டுவரப் பட்டு, மாநில வாரியாக இட ஒதுக்கீடு களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்வி மற்றும் சுகாதாரம் :
கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படும்.
சுகாதாரத்திற்கு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப் படும். இதில் அதிகபட்ச நிதி மத்தி யிலிருந்து ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
ஊதியம், ஓய்வூதியம் :
* நுகர்வோர் விலைவாசி குறி யீட்டு எண் அடிப்படையில் குறை ந்தபட்சக் ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் என்று உறுதி செய் யப்படும்.
* மூத்த குடிமக்களைப் பொறுத் தவரை, மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் அல்லது அவர்கள் பெற்ற வருமா னத்தில் குறைந்தபட்சம் 50சதவீதம்- இதில் எது அதிகமோ அந்தத் தொகை கிடைக்கும் விதத்தில் முதி யோர் ஓய்வூதியத் திட்டம் அனை வருக்கும், அரசின் பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப் படுவது உறுதி செய்யப்படும்; ஓய்வூதி யம் என்பது அனைத்து குடிமக்க ளின் உரிமையாக ஒவ்வொருவருக் கும் உறுதிசெய்யப்படும்.
ஊழல் எதிர்ப்பு :
* ஊழல் தடுப்புச் சட்டம் திருத் தப்பட்டு வலுப்படுத்தப்படும்; லோக் பால் சட்டத்தின் வரையறை விரிவுப் படுத்தப்படும்; அதன்கீழ் அனைத்து ஒப்பந்தங்கள், நிறுவனங்களுடனான புரிந்துணர்வு உடன்பாடுகள்அல்லது அரசு மற்றும் தனியார் துறையின் அனைத்து நிதி உடன்பாடுகளும் கொண்டு வரப்படும்.
தனியார் நிதித்துறை நிறுவ னங்கள், தனியார் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அனை த்து பொது - தனியார் கூட்டு திட்டங் களும் லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

சட்டத் திருத்தங்கள் : 

* ஒரு மாநிலத்தை பிரிப்பது அல்லது மறுசீரமைப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநில சட்ட மன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டி யதை உறுதி செய்யும் விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3 திருத்தப்படும்.
ராணுவப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும்; அதற்கு பதிலாக, ராணுவப் படைக ளுக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்காத - சட்டத்திற்குட்பட்டு செயல்படும் அதிகாரங்களை கொண்ட ஒரு புதிய பொருத்தமான சட்டம் கொண்டுவரப்படும்.
* பாலின உறவுகள் தொடர்பாக தனிநபர் விருப்பங்கள் சார்ந்த உறவு களை குற்றம் என தீர்மானிக்காத விதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 திருத்தப்படும்.
* சட்டவிதிகளிலிருந்து மரண தண்டனையை நீக்கும் விதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் திருத்தப்படும்.
நன்றி :