பாரதீய ஜனதாக்கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதீய ஜனதாக்கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 நவம்பர், 2015

இடதுசாரிக்கட்சிகளுக்கு கேரள மக்கள் கொடுத்த வெற்றிப்பரிசு...!



                நேற்று உலகம் முழுதும் நவம்பர் 7 - புரட்சி தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் கேரள மக்களோ நேற்றைய இந்த தினத்தை மேலும் சிறப்புடையதாக மாற்றிவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு  உள்ளாட்சித்தேர்தல் வெற்றியை புரட்சிதினப்பரிசாக அளித்து சிறப்பு சேர்த்தனர். அதற்காக கேரள மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும். 
             இடது ஜனநாயக முன்னணியிலுள்ள இடதுசாரிக்கட்சிகளை இந்த தேர்தலோடு ஒழித்துக்கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக்கட்சியும் ஒருபுறம் மதவாத அமைப்புகளோடும், சாதிய அமைப்புகளோடும், மறுபுறம்  தங்களுக்கு ஒத்து ஊதும் ஊடகங்களோடும் வெட்கமில்லாமல் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தில் இறங்கின.
            அதுமட்டுமில்லாமல்    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கதையும், இடது ஜனநாயக முன்னணியின்  கதையும் இந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடுமென்று ஊடகங்கள் ''கிளி ஜோசியக் கணிப்புகளை'' கொஞ்சம் கூட  தயக்கமில்லாமல்  அள்ளி வீசின.
             ஆனால் இடது ஜனநாயக முன்னணி கட்சிகளோ  ''மக்களாகிய நாம் தோற்காமலிருக்க... இடது ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள்'' என்று கேரள மக்களிடம் விடுத்த வேண்டுகோளை தலைமேல் ஏற்று, ஊழல்வாத காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாரதீய ஜனதாக்கட்சியையும், சாதிய - மதவாத அமைப்புகளையும், உண்மையை உரைக்காத ஊடகங்களையும் தூக்கியெறிந்து கேரள  மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். 
           ஆயிரக்கணக்கான தியாகிகளின் செங்குருதியில் சிவந்த கேரள மண்ணிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளை  துடைத்தெறிவது என்பதும், எங்கள் மனதிலிருந்து தூக்கி எறிவது என்பதும் அவ்வளவு எளிதானகாரியமல்ல என்பதை கேரள மக்கள் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் தெளிவாக பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை நெஞ்சார  பாராட்டவேண்டும். வாழ்த்தவேண்டும்.   
     இந்த வெற்றி என்பது நேரம் அறிந்து இடதுசாரிக்கட்சிகளுக்கு கொடுத்தப்பரிசு.                               

செவ்வாய், 20 அக்டோபர், 2015

மதவெறியர்களுக்கு எதிராக திரண்ட உலக எழுத்தாளர்கள்...!



                இந்தியாவில் பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்திய மக்களின் அரசியல், கல்வி, உணவு, வழிபாடு, உடை, கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய அத்தனையும் இன்றைக்கு  பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கின்றன.  அவைகள் அத்துனையும் மக்களின் பழக்கவழக்கம், பொருளாதாரம், சிந்தனை, மரபு, குடும்பம், வளர்ப்பு போன்ற இவைகள் அத்தனையையும் உள்ளடக்கியன. அதுமட்டுமல்ல அவைகள் அத்தனையும் தங்களின் அடிப்படை உரிமைகள் என்பதை  முதலில் இந்திய மக்கள் உணரவேண்டும். இவைகளைத்தான் கடந்த அறுபத்தெட்டு ஆண்டுகளாக போராடி பாதுகாத்து போற்றிவருகிறோம். 
            இவைகளையெல்லாம் உணராத மக்களுக்கு தங்களது எழுத்துகள் மூலம் எடுத்துரைத்து அவர்கள் மூலையில் மாற்று சிந்தனையை விதைக்கும் அபாரமான பணிகளில்,  பல மாநிலங்களிலும் உள்ள  நம் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் அவரவர் தாய் மொழிகளில் பல ஆண்டுகளாக  ஈடுபட்டு வருகிறார்கள்.   அவர்களது  கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, மரபு ஆகிய அனைத்தும்  உள்ளிட்ட முற்போக்கு சிந்தனைகளுடன் கூடிய அரிய எழுத்துப்பணிகளுக்காக மத்திய - மாநில அரசுகளின் விருதுகளையும், பெருமைகளையும், சிறப்புகளையும்  பெற்று  மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
              ஆனால் 2014ஆம் ஆண்டு பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து,  பாஜகவின் தலைமை  பீடமான ஆர்.எஸ்.எஸ் மதம் பிடித்து   சர்வாதிகாரத்துடன்  தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இந்திய மக்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், வழிபாடு, உடை, உணவு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்து மக்கள் சார்ந்த உரிமைகளிலும் ஆர்.எஸ்.எஸ்-இன் தலையீடு என்பது எல்லை மீறி சென்றுக்கொண்டிருக்கிறது.
#    இதை சாப்பிடக்கூடாது.... இதைத்தான் சாப்பிடவேண்டும்....
#    இதை செய்யக்கூடாது.... இதைத்தான் செய்யவேண்டும்.... இப்படித்தான்      
      செய்யவேண்டும்....
#    இந்த ஆடையை உடுத்தக்கூடாது.... இதைத்தான் உடுத்தவேண்டும்....
#    இந்த மாதிரியான திரைப்படத்தில் நடிக்கக்கூடாது....
#    அறிவியல் சார்ந்த முற்போக்கு கருத்துக்களை வெளியிடக்கூடாது....
#    மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது....
#    இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இந்தியாவில் இரு....
      இஸ்லாமியர்கள் என்றால் பாகிஸ்தானுக்கு ஓடு....

          ''இது கூடாது'' என்று சொன்னதை மீறி யார் செய்தாலும்,  சங் பரிவார் என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் சத்தம் போடாமல் அவர்களை தீர்த்துக்கட்டும் ''தேச நலப்பணிகளில்'' ஈடுபடுவார்கள். கடந்த ஓராண்டு காலமாக இது போன்ற ''உயிர் பலி பட்டியல்'' என்பது நீண்டுகொண்டே போகிறது. இதுபோன்ற  மனித உரிமைகளுக்கெதிரான பிரச்சினைகளையோ அல்லது கொலைகளையோ இந்த நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திரமோடியோ அல்லது உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ராஜ்நாத் சிங்கோ கண்டிக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருக்கின்றார்கள் என்பது தான் இந்த நாட்டின் சாபக்கேடு.
             இப்படியாக கடந்த ஓராண்டுகளில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்துவந்த முற்போக்கு எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்க்கி போன்றோர்கள் மதவெறிக் கூட்டத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால் இந்த மூவரையும் கொலை செய்த கயவர்களை காவல்துறை இன்றுவரை கைது செய்யவில்லை என்பது தான். ஆனால் நாட்டில் எங்கோ மூன்று மூலைகளில் நடைபெற்ற இந்த உயிர்பலிகளை கண்டித்தும், இதுவரையில் கொலையாளிகளை கைது செய்யாததை கண்டித்தும் நாடு முழுதும் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களும், ஜனநாயக அமைப்புகளும் கண்டனக்குரல் எழுப்பி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்து நாடு முழுதும் பல்வேறு மூலைகளில் இருக்கும் மத்திய அரசின் சாகத்ய அகாடமி விருதுகளை பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை மத்திய அரசிடமே திருப்பித்தந்து வருகிறார்கள்.
           மேலும் அண்மையில் கனடாவில் PEN International என்ற உலக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை கொண்ட அமைப்பின் 81வது மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இந்தியாவில் எழுத்துரிமையும், கருத்து வெளியிடும் உரிமையும் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும், இந்த உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், மூன்று பெரும் எழுத்தாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்க்கி ஆகியோர் மதவெறியர்களால் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை கொலை செய்த கொலையாளிகளை இதுவரையில் கைது செய்யாததை கண்டித்தும், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளின் உயிர்களுக்கு பாதுகாப்புத் தரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் மத்திய அரசின் மீது காரித்துப்பினர்.
               அதுமட்டுமல்ல, நீதிக்காக போராடும் இந்திய எழுத்தாளர்கள் பக்கம் தாங்கள் இருப்பதாகவும், அவர்களின் போராட்டத்திற்கு எண்களின் ஆதரவுக்கரங்களை நீட்டுகிறோம் என்றும் மாநாட்டிலேயே பிரகடனப்படுத்தியது என்பது மத்திய அரசின் முகத்தில் கரியை பூசியது போல் ஆனது.  உலக எழுத்தாளர்கள் இந்திய எழுத்தாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது என்பது இந்திய எழுத்தாளர்களின் போராட்டங்களுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துவிட்டது. எழுத்தாளர்களின் போராட்டங்களை பொதுமக்களாகிய நாமும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிராமல், போராடும் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பக்கம் நிற்போம். 

புதன், 15 ஜூலை, 2015

காமராசர் மீது பாரதீய ஜனதாக்கட்சிக்கு என்ன திடீர் பாசம்...?


                இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், பழைய காங்கிரஸ் கட்சியின்  தலைவருமாகிய காமராசரின் பிறந்தநாள் என்பதால்,  வழக்கம் போல் தமிழ்நாட்டில் ''பலவகைப்பட்ட'' காங்கிரஸ் கட்சிக்காரர்களும், அந்த காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருக்கும் ''பலவகைப்பட்ட'' கோஷ்டிக் கட்சிக்காரர்களும், சாதிக்கட்சிகள் மற்றும்  சாதி சங்கம் என பலப்பல குழுக்களாக தனித்தனியே காமராசரின் புகழ்பாடி அவரது  சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்கள். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை என்ன விசேஷம் என்றால், இன்று  இந்த கோஷ்டிகளோடு சேர்ந்து பாரதீய ஜனதாக்கட்சியும் ''கோஷ்டிகானம்'' பாடியது தான் எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை  வரவழைத்த நிகழ்ச்சியாக இருந்தது. ஆம்... பா.ஜ.க.-காரர்களும் தமிழ்நாடு முழுதும் எல்லா மாவட்டங்களிலும் காமராசர் சிலைக்கு ஒன்று கூடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கின்றார்கள். 
              பாரதீய ஜனதாக்கட்சிக்கு காமராசர் மீது என்ன திடீர் பாசம் கொப்பளித்துக்கொண்டு வருகிறது....? விருதுநகருக்கு காமராசர் வாழ்ந்த இல்லத்திற்கு மோடியின் ''அடியாள்'' அண்ணன் அமித்ஷா தான்  முதலில் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் வெங்காய நாயுடு டெல்லியிலிருந்து பறந்து வந்து காமராசருக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார். இன்னொரு பக்கம் தமிழிசை அக்கா மாலையணிவிக்குது.   என்னாப்பா இது காமராசர் மேல இவிங்களுக்கு இவ்ளோ பாசம் வந்திருக்குது. எல்லாம் அடுத்த ஆண்டு தேர்தலை கணக்கு பண்ணித்தான். பாரதீய ஜனதாக்கட்சி தமிழ்நாட்டில் கால்பதிக்க  சாதி ஓட்டுக்கு குறிவைக்கிறது என்பது பா.ஜ.கவின் கடந்த கால வரலாறு தெரிந்த யாருக்கும் புரியாமல் இல்லை. 
           அது என்ன பா.ஜ.க வின் கடந்தகால வரலாறு...? கடந்த 1966  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி என்று நினைக்கிறேன். பாரதீய ஜனதாக்கட்சிக்கு அன்றைய பெயர் ''பாரதீய ஜனசங்'' என்று பெயராக இருந்தது. நவம்பர் 6 ஆம் தேதி அன்று அன்றைய ஜனசங்கத்தினர்   - இன்றைய பா.ஜ.க வினர், புதுடெல்லியில் மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கி நாட்டையே ஸ்தம்பிக்க செய்தனர். அன்றைய தினம் புதுடெல்லியில் ஜனசங்கத்தினர்  நூற்றுக்கணக்கான வாகனங்களையும், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தின் கட்டிடத்தையும்  தீயிட்டுக்கொளுத்தி அராஜகத்தையும், அடாவடித்தனத்தையும் அரங்கேற்றினர் என்பது நாடு அறிந்த உண்மை. அவ்வாறு கொடூரமான கலவரத்தில்  ஈடுபட்ட ஜனசங்கத்தினர், அன்றைய காங்கிரஸ் கட்சியின்  அகில இந்தியத்  தலைவராய் இருந்த  காமராசர் டெல்லியில் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் உள்ளே இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டே அந்த வீட்டைக்கொளுத்தி அவரை உயிரோடு எரித்து  கொலை செய்ய முயற்சி செய்தனர் என்பதும்  யாராலும் மறுக்க முடியாத உண்மை.
        அப்படிப்பட்ட முன்னாள் ஜனசங்கத்தினர் தான் இன்று நாடுமுழுதும் காமராசர் சிலைக்கு கூச்சப்படாமல் மாலை அணிவித்து, சாதி அரசியலுக்கு தூபம் போடுகின்றனர் என்பதும் யாராலும் மறக்க முடியாத உண்மை...! 

ஞாயிறு, 28 ஜூன், 2015

எதற்கும் கூச்சப்படாத நரேந்திரமோடி...!

                பங்காரு இலட்சுமணனின் ஆயுதபேர ஊழல், இராணுவவீரர்களுக்கான சவப்பெட்டி  ஊழல், ராணுவவீரர்களுக்கு வாங்கிய ஷூவில் ஊழல், இராணுவ பீரங்கி  ஊழல், எடியூரப்பா - ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் - இப்படியாக வகைவகையான ஊழல்களை  அடையாளமாக கொண்ட பெருமைமிகு கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி, கடந்த  காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் செய்த ஊழல்களை ஒழித்துக்கட்டிவிட்டு, ஊழலற்ற ஆட்சியை தருவோமென்று, ஊழல் என்றால் என்னவென்று தெரியாதவர்களை போல் நாடகமாடி ஓட்டுக்களை வாங்கி மோடி தலைமையில்  ஆட்சிக்கு வந்தவர்கள்.  கடந்த மே மாதம் இவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவையொட்டி, இவர்கள் வாய் கிழியப் போட்ட கோஷமே, 
''கடந்த ஓராண்டில் ஊழல் இல்லாத ஆட்சியை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம்'' என்பது தான். ஓராண்டு சாதனை விளம்பரங்களும் இப்படித்தான் வெளியிடப்பட்டன. 
                ஆனால் அந்த கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்தபின்பு தான் இவர்கள் சாயம்  வெளுக்க ஆரம்பித்திருக்கிறது. புற்றீசல் போல் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியிருக்கிறது. 
        (1) பல்வேறு மோசடி வழக்கில் தேடப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாக வாழும்  ''உலகமகா திருடன்'' லலித் மோடியுடன் இந்திய வெளியுறவு  அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  அவரது கணவர் மற்றும் அவரது மகள் ஆகியோரின் நெருக்கமான தொடர்பு உள்ளது.  விசா கிடைக்காமல் இலண்டனில் இருக்கும் லலித் மோடிக்கு விசா கிடைக்க ''மனிதாபிமான'' அடிப்படையில் உதவிசெய்ய சுஷ்மா தனது அதிகாரத்தை தாவறான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்.  
              (2) சுஷ்மாவைப் போல் பாரதீய ஜனதாக்கட்சியை சேர்ந்த இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேக்கும், லலித் மோடிக்கும் உள்ள  நெருக்கமும் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.
                (3) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் போலி கல்வி சான்றிதழ் ஊழலும் காற்றில் பறந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யும் வேட்பாளர் மனுவில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான கல்வித்தகுதியை அளித்திருக்கிறார். கல்லூரியில்  படிக்காமலேயே ஒருமுறை பி.ஏ என்றும் இன்னொரு முறை பி.காம் என்றும் தவறான தகவல்களை அளித்துவிட்டு வகையாக மாட்டிக்கொண்டார். 
                 (4) மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட கடலை மிட்டாயை களவாடி தின்ற பாரதீய ஜனதாக்கட்சியை சேர்ந்த அம்மாநில குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜ் முண்டே நடத்திய ''கடலை மிட்டாய் ஊழல்'' 
              இப்படியாக மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சியின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஊழல்கள் சந்தி சிரிக்கின்றன. இவைகளைப் பார்த்து ஊழலுக்கு வித்திட்ட காங்கிரஸ் கட்சியே வெளியே கூச்சலிடுகின்றன. இடதுசாரிக்கட்சிகள் இன்னொருபக்கம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று பேச ஆரம்பித்த ''கடப்பாரை புகழ்'' அத்வானி  கூட, என் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது நான் எனது எம்.பி பதவியை இராஜனாமா செய்திருக்கிறேன். அதேப்போல் தற்போது  ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டவர்களும் இராஜனாமா செய்யவேண்டும் என்று தனது கட்சிக்காரர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்.   ஆனால் பிரதமர் நரேந்திரமோடி மட்டும் எப்போதும் போல், எந்தவித கூச்சநாச்சமுமின்றி  வாய் திறக்காமலும், கண்டுகொள்ளாமலும்  இருக்கிறார். 
           வழக்கம் போல் மக்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  

ஞாயிறு, 24 மே, 2015

இது தான் மோடியின் ஓராண்டு சாதனை...!


                    காங்கிரஸ் கட்சியின் மெகா ஊழல்களிலிருந்து  நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் ''வளர்ச்சி நாயகனாகிய''  நான் ஆட்சிக்கு வரவேண்டும். நான்  ஆட்சிபொறுப்புக்கு  வந்துவிட்டால்  நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும்.  சாதாரண டீக்கடை வைத்து அரசியலில் முன்னுக்கு வந்த  நான் அரசியலில் நேர்மையானவன். நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பது மட்டுமல்ல. இந்திய பணக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில்  பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையெல்லாம் மீட்டுவந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் பதினைந்து இலட்சம் ரூபாயினை போடுவேன்'' என்றெல்லாம் வார்த்தை ஜாலங்களை மக்களிடம் உதிர்த்து, தன்னுடைய  வார்த்தை ஜாலங்களை மக்கள் நம்புவதற்காக  இந்திய கார்ப்பரேட் ஊடகங்களையும், அதற்கு ஆகிற செலவுகளை கோடிக் கோடியாய் கொட்டுவதற்கு பெருமுதலாளிகளையும் பயன்படுத்திக்கொண்டு, 31 சதவீத மக்களை தன் வலையில் விழச்செய்து அவர்களின் வாக்குகளை மட்டுமே பெற்று  எண்ணிக்கை அடிப்படையில்  நரேந்திரமோடி மத்தியில் ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு நிறைவுபெறுகிறது. 
            இவர் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து 30 நாள், 100 நாள், 200 நாள், 300 நாள், 365 நாள் என ஒரு சினிமா படத்தை ஓட்டுவது போல் தான் ஆட்சியை ஒட்டினாரே தவிர, தேர்தல் நேரத்தில் இவர் உதிர்த்த  வார்த்தை ஜாலங்கள் என்பது மாயாஜாலங்களாகவே போய்விட்டன. அவர் சொன்னது போல் தேனாறும் பாலாறும் ஓடவில்லை. மக்கள் பதினைந்து இலட்சத்தை எதிர்ப்பார்த்து ஏமார்ந்தது தான் மிச்சம். விலைவாசி  கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போய்கொண்டிருக்கிறது. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. வேலையிலிருப்பவர்களுக்கு வருமான உயர்வு இல்லை. மக்கள் விழி பிதுங்கி, நாக்கு வெளியே வந்து சாகிறார்கள். வருமானமின்மையால் விவசாயிகள் மட்டுமல்லாமல், இப்போது தொழிலாளர்கள், ஊழியர்களும்  தற்கொலை சாவில் பங்குப் போட்டுக்கொள்கிறார்கள். 
                நாட்டில் இப்படி எல்லாம் பிரச்சனைகள் இருக்க  மோடியின் அமைச்சர்களும், எம்பிக்களும், அவரது   கட்சிக்காரர்களும்   திட்டமிட்டே இஸ்லாமிய  மக்களையும், தலித் மக்களையும்  வம்புக்கு இழுத்துக்கொண்டும், கலவரங்களை நடத்திக்கொண்டும், அமைதியை குலைத்துக்கொண்டும் இந்த பிரச்சனைகளை மக்களின் பார்வைகளிலிருந்து திசைத்திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. ''இஸ்லாமியர்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்யவேண்டும்... விரும்பி மதம் மாறிய இந்துக்கள் மீண்டும் இந்து மதத்திற்கு வரவேண்டும்... இந்து பெண்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.... இஸ்லாமிய பெண்களுக்கு கருத்தடை செய்யவேண்டும்... தலித் மணமகன் குதிரை ஊர்வலம் சென்றால் அடி-உதை... தலித் இளைஞன் தன்னுடைய செல்லிடபேசியில் அம்பேத்கர் ''ரிங்டோன்'' வைத்திருந்தால் கொலை... இஸ்லாமியர்களோ தலித் மக்களோ மாட்டிறைச்சி சாப்பிட தடை... சாப்பிட்டால் சிறை தண்டனை... மாட்டிறைச்சி சாப்பிட வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்...'' இப்படியெல்லாம் நாளொரு மேனியும்,  பொழுதொரு வண்ணமுமாக மோடியின் ஆட்கள் விஷத்தை கக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடியோ இதுவரையில் அதை கண்டித்ததே இல்லை என்பதும்  தான் உண்மை.   இது தான் மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சியின் ஓராண்டு சாதனையாக பொதுமக்கள் பார்க்கிறார்கள். 
               இது மட்டுமா மோடியின் சாதனைகள்...? இன்னும் இருக்கின்றனவே...! அந்நிய பயண மோகம் கொண்ட பிரதமர் மோடி கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை செலவு செய்து கடந்த    பன்னிரெண்டு மாதங்களில் பத்தொன்பது நாடுகளுக்கு பயணம் செய்து வரலாறு படைத்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று இரு நாடுகளுக்கான நல்லுறவுகளைப் பற்றி பேசுகிறாரா...? என்றால் இல்லை. அந்த நாடுகளில் வாழும் இந்தியர்களையும், அந்த நாட்டு மக்களையும் கவருவதற்காக வகைவகையான ஆடை அலங்காரங்கள், போட்டோவிற்கு ''போஸ்'' கொடுப்பது, இளைஞர்களோடு ''செல்ப்பி'' எடுத்துக்கொள்வது போன்ற கோமாளித்தனங்களையும் மோடியின் ஓராண்டுகால சாதனைகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 
             இவைகள் தவிர நாட்டின் வளர்ச்சி... மக்களின் பொருளாதார வளர்ச்சி அனைத்தும் பூஜ்ஜியம் தான்.  பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் நடத்தும் ''போஸ் பாண்டி'' மோடியின் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏமாற்றமும், வெறுப்பும், கோபமும் தான் உள்ளது என்பதும் யாராலும் மறைக்கமுடியாத உண்மை. 

புதன், 11 பிப்ரவரி, 2015

டெல்லி மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும்...!

                   
             ''மோடி அலை'' என்ற மாயையை மோதி உடைத்த ''மக்கள் அலையை'' பாராட்டியே ஆகவேண்டும். ஆம்... அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், பாரதீய ஜனதாக் கட்சியையும் ஒரேயடியாய் தூக்கியெறிந்த டெல்லி மக்களை நன்றியுடன் வாயார - நெஞ்சார வாழ்த்துகிறேன்... பாராட்டுகிறேன். பொய்களை அள்ளித்தெளித்து - பெருமுதலாளிகளின் கோடிகளை அள்ளிக்கொடுத்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, பின்னாளில் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல்களிலும் வெற்றிபெற்று திமிரோடும், ஆணவத்தோடும் மதவெறியை உயர்த்திப்பிடித்து நாட்டில் உலா வந்த பாரதீய ஜனதாக்கட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வும், பாராளுமன்றத்தில் இராட்சச பலத்தை வைத்துக்கொண்டு, அமெரிக்காவிற்கு ஆதரவாக - தேசத்திற்கு எதிராக - மக்களுக்கு எதிராக தான்தொன்றித்தன்மாக - அடாவடித்தனமாக - தருதலைத்தனமாக மத்திய மோடி ஆட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் இந்த சட்டமன்றத்தேர்தலில் பிரதிபலித்திருப்பது தெளிவாகத்தெரிகிறது.
               உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் இந்த தலைநகர் தேர்தலில் தான் எப்படியாவது வெற்றிபெற்று உலகத்திற்கு காட்டவேண்டும் என்று துடிதுடித்து தேர்தல் வேலைகளை பார்த்தார். அதற்காக பத்திரிக்கைகளுக்கு பல கோடிகளை  செலவு செய்திருக்கிறார். ஆனால் அவை எதையும் டெல்லி மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதும், மோடியின் பொய்யான வார்த்தை ஜாலங்களுக்கு மக்கள் செவி சாய்க்கவில்லை என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் நாசகரக்கொள்கைகளையும், மெகா ஊழல்களையும் நேரில் தங்கள் அருகிலேயே பார்த்து நொந்து போன டெல்லி மக்கள், காங்கிரஸ் கட்சியை தங்கள் தலையை சுற்றி தூக்கிஏறிந்தார்கள். 
                அதை கிழிப்பேன்... இதை கிழிப்பேன் என்று வார்த்தை ஜாலங்களை அள்ளித்தெளித்து, கோடிகளை அள்ளிக்கொடுத்து ஆட்சியிலமர்ந்த பாரதீய ஜனதாக்கட்சியோ கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் போலவே கொஞ்சமும் வித்தியாசமில்லாமல், அதேப்பாதையில் அவர்களை விட வேகமாக - தாறுமாறாக பயணம் செய்ததை பார்த்து வெறுத்துப் போன டெல்லி மக்கள் - மதச்சார்பின்மையை குழித்தோண்டி புதைத்து, இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினருக்கெதிரான மதவெறி சம்பவங்களை பார்த்து வெகுண்டு போன டெல்லி மக்கள் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சியாக அமரவைத்த பாரதீய ஜனதக்கட்சியை, நடந்துமுடிந்த சட்டமன்றத்தேர்தலில் எதிர்கட்சியாகக்கூட அமரமுடியாமல் துடைப்பத்தால் அள்ளி குப்பைத்தொட்டியில் வீசி எறிந்துவிட்டார்கள்.
                  இதற்காக மீண்டும் மீண்டும் டெல்லி மக்களை வாயார பாராட்டலாம். நெஞ்சார வாழ்த்தலாம். இந்திய மக்களிடையே மாற்று சிந்தனையை விதைத்திருக்கிறார்கள். மீண்டுமொரு முறை வாழ்த்துகள்.....! 

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சீன கம்யூனிஸ்ட் கட்சியும், ''MISSED CALL'' கட்சியும்...!

                 
                  அண்மையில் செய்தித்தாள்களில் நகைச்சுவை ஊட்டும் செய்தி ஒன்று வந்திருந்தது. ''இந்தியாவில் உள்ள பாரதீய ஜனதாக்கட்சியில் உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையையே மிஞ்சி உலக சாதனைப்படைக்கும்'' என்பது தான் அந்த நகைச்சுவைத் ததும்பும் செய்தி.
                முதலில் இந்தியாவில் பாரதீய ஜனதாக்கட்சி எப்படி உறுப்பினர்களை சேர்க்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஏழு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ''எதிர்பாராத'' வெற்றி மற்றும் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட எட்டமுடியாத காங்கிரஸ் கட்சியின் தோல்வி இவைகளெல்லாம் மோடியை உற்சாகப்படுத்தியது. அதனால் தனது கட்சியை இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு ராட்சச பலத்துடன் வளர்த்துவிடவேண்டும்  என்ற கனவில்,  தன் மனம் அறிந்து நடந்துகொள்ளும் தனது கூட்டாளியான அமித் ஷாவை பா.ஜ.க-வின் தலைவர்  ஆக்கினார். பிறகு இருவரும் சேர்ந்து கட்சியை ஊதி பெரிதாக்கப்போறோம் என்று முடிவெடுத்து உலக அளவில் இதுவரையில் யாரும் செய்யாத - ''உலக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக'' மாபெரும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்கள். அந்த தகவல்கள்  நாடு முழுதும் அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், வார மற்றும்  மாதாந்திர பத்திரிக்கைகளிலும், வானொலிகளிலும் கடந்த இரண்டு மாதகாலமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.    
                அவர்கள் கொடுத்திருக்கும் எண்ணிற்கு  ஒரு ''missed call'' கொடுத்தால் போதும் பா.ஜ.க-வின் உறுப்பினராகிவிடலாமாம். missed call கொடுத்து மத்திய மந்திரி ஆன அதிசயமெல்லாம் நடந்திருக்கிறது. உலக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக மிக சுலபமான முறையில் கட்சி உறுப்பினர் சேர்க்கை பா.ஜ.க-வில் நடைபெற்று வருகிறது. புதிதாக சேருகிற உறுப்பினர் யார்...? எப்படிப்பட்டவர்...? எங்கிருக்கிறார்...? என்ன செய்கிறார்...? என்பதை பற்றி எல்லாம் கவலையில்லை. கட்சித் தலைமைக்கோ அல்லது ஏற்கனவே உள்ள சாதாரண உறுப்பினருக்கோ கூட அறிமுகமானவர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. இது போல் உறுப்பினர்களை சேர்ப்பதை இந்திய தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது என்று தான் தெரியவில்லை. இதைப்பற்றியே தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. ஆக இப்படியாக கடந்த இரண்டு மாதங்களில் missed call கொடுத்தவர்கள் எண்ணிக்கை என்பது இதுவரையில்  மூன்று கோடியை தொட்டிருக்கிறது என்று பெருமையாக சொல்கிறார்கள். 
             சரி அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பத்து கோடிக்கு மேல் உறுப்பினர்களை சேர்த்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையையும் தாண்டி பாரதீய ஜனதாக்கட்சி உலக சாதனை படைக்கும் என்று பா.ஜ.க-வின் தலைமையில் உள்ளவர்கள் பீற்றிக்கொள்கிறார்கள் என்பது தான் விழுந்து  விழுந்து சிரிக்க வைக்கும் இன்றைய தலைசிறந்த நகைச்சுவையாக கருதப்படுகிறது. 
              மக்கள் சீனம் உட்பட உலகத்தில் எல்லா நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவர்கள் போல் missed call கொடுத்து உறுப்பினர் ஆகமுடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் சேரவேண்டுமென்றால் அவரைப்பற்றி அறிந்த ஏற்கனவே  கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவர் அவரை முன்மொழிய வேண்டும். அதேப்போல் அவரைப்பற்றி அறிந்த கட்சியில் உள்ள வேறொரு உறுப்பினர் வழிமொழிய வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு அவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்காணிக்கப்படுவார். அவர் பெயர் முன்மொழியப்பட்ட நாளிலிருந்து கட்சியில் அவர் காட்டும் ஈடுபாடு, இயக்கங்கள் மற்றும் போராட்டங்களில் அவரது பங்களிப்பு, கட்சிக்கல்வியில், மக்கள் பிரச்சனைகளில் அவர் காட்டும் அக்கறை, நேர்மை, நன்னடத்தை, தனிமனித ஒழுக்கம் இப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு நிறைய அளவுகோள்கள் இருக்கின்றன.  இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற சோதனைக்கட்டங்களை வெற்றிகரமாக கடந்தபின் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 
          சீனா போன்ற நாடுகளில் இன்னும் கடுமையான பரிசோதனைகள் நடைபெறும். சீன நாட்டை சேர்ந்தவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவேண்டுமென்றால் குறைந்தது நான்கு ஆண்டுகளாவது ஆகும். அங்கு உறுப்பினராவதற்கு மேலே சொன்ன அளவுகோள்கள் மட்டுமல்லாது, அவர்களுக்கு கட்சியினால் ஏதாவது ஒரு பகுதி கொடுக்கப்பட்டு மக்கள் நலத்திட்டப்பணிகளில்  கடுமையாக உழைக்கவேண்டும். அவரது திட்டப்பணிகளினால் மக்களுக்கு கிடைத்திருக்கும் பலன்கள் கணக்கிடப்படும். இவ்வளவு சோதனைகளில் வெற்றிபெற்ற பிறகு தான் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக முடியும். அதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகளாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ள 10கோடி பேர்களில் ஆறு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள்  சோதனைக்கு பிறகு உறுப்பினர்களாக ஆனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போதும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் - ஆறு ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் கட்சியின் உறுப்பினர்களாக சேர்வதற்கு காத்திருப்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. 
          எனவே இங்குள்ள missed call கட்சியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒரு சிறு துளி கூட ஒப்பிட முடியாது. அந்த எண்ணிக்கையை எட்டக்கூட முடியாது என்பதும் உண்மை.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

பா.ஜ.க-வின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை - தேச ஒற்றுமைக்கு ஆபத்தானது

                             டெல்லி அருகில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த புள்ளிவிவர மையம் அண்மையில் ஒரு அதிரச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டது. அந்த செய்தி சொல்வது என்னவென்றால், நடப்பு 2014-ஆம் ஆண்டு இறுதியில் நமது நாட்டில் மிக அதிக எம்.எல்.ஏ-க்கள் கொண்ட கட்சியாக பாரதீய ஜனதாக்கட்சி உருவெடுத்துள்ளது. நாட்டிலேயே பா.ஜ.க 1.058 எம்.எல்.ஏ-க்களுடன்   முதலிடத்தில் இருக்கிறது. எண்ணிக்கை அடிப்படையில் முதலிடம் பெற்றது மட்டுமின்றி,  காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கையையே மிஞ்சியதும் இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியோ  இந்த ஆண்டு நாடு முழுவதும் 949 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
                 முடிந்து போன மக்களவை தேர்தல் முடிவுகளையும் சேர்த்து அலசினால், பா.ஜ.க இந்த ஆண்டு 282 எம்.பி-க்களுடன் முதலிடம் உள்ளது. மக்களவையில் 282 என்ற எண்ணிக்கையை அக்கட்சி எட்டியிருப்பதும்  இதுவே முதல்முறை. இதுபோல் இந்திய அரசியலில் 44 எம்.பி.-க்கள் என்ற மிக்குறைந்த எண்ணிக்கையை காங்கிரஸ் கட்சிப் பெற்றிருப்பதும்   இதுவே முதல்முறை என்பது போன்ற அதிர்ச்சிகரமான செய்திகளை அந்த புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ளது. 
               இது போல் பிராந்திய அளவிலும், நாட்டில் பரவலாகவும் பாரதீய ஜனதாக்கட்சி இதுவரை இல்லாத அளவிற்கு எம்.எல்.ஏ-க்களையும் எம்.பி-க்களையும் பெற்றிருப்பது என்பது தேச நலனுக்கும், ஒற்றுமைக்கும் ஆபத்தானது என்பதை நாம் கண்டிப்பாக உணரவேண்டும். நாட்டின் மீது - மக்களின் மீது அக்கறையில்லாத பிற்போக்குத்தனமான பா.ஜ.க மாதிரியான கட்சியின் இராட்சச வளர்ச்சி என்பது தேச ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்.  ஆளும் கட்சியின் இந்த அசுர பலமும், எதிர்க்கட்சிகளின் பலமிழப்பும் ஆட்சியாளர்களை சர்வாதிகாரத்தை நோக்கியே அழைத்துச் செல்லும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். 

சனி, 20 டிசம்பர், 2014

கங்கைஅமரா... உனக்கு வெட்கமாக இல்லை...?

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பட்டித்தொட்டிகளிலெல்லாம்  பொதுவுடைமை கருத்துகளை கொண்ட பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடி, பொது மக்களை ஈர்த்துவந்த பாவலர் வரதராஜன் அவர்களின் தம்பிகளில் ஒருவரான கங்கைஅமரன் இன்று பாரதீய ஜனதாக்கட்சியில் இணைந்தார் என்ற இன்றைய செய்தி பெரும் அதிர்ச்சியை தந்தது. ஏனென்றால் பாவலர் வரதராஜன், இளையராஜா மற்றும் கங்கைஅமரன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் திரைப்படத்தொழிலுக்கு வருவதற்கு முன்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேடைகளில் பொதுவுடைமை மற்றும் முற்போக்கு கருத்துகளை கொண்ட பாடல்களை பாடி கூட்டத்தை சேர்ப்பார்கள்.
             இன்றைக்கும் பல்வேறு முற்போக்கு இயக்க மேடைகளில் கருத்துரையாற்றியிருக்கிற கங்கைஅமரனுக்கு  திடீரென்று மதவாத சக்திகள் மீது ஏற்பட்ட ஈர்ப்புக்கு காரணம் என்ன...? வெட்கமில்லாமல் அமித்ஷாவுக்கு பொன்னாடைப் போர்த்தி அவர்களோடு இணையும் அளவிற்கு அவரது அறிவுக்கண்ணை மறைத்தது எது...?

செவ்வாய், 18 நவம்பர், 2014

''வாரம் ஒரு திட்டம் - மாதம் ஒரு வெளிநாட்டுப் பயணம்'' - கலக்கறீங்க மோடி!


                         நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற நாளிலிருந்து  கடந்த ஆறு மாதங்களாகவே இந்திய மக்களுக்கு ஏதாவது படம் காட்டிகிட்டே இருக்கிறாரு. எப்போ பார்த்தாலும் தொலைக்காட்சி, வானொலி, ட்வீட்டர், பேஸ்புக், செய்தித் தாள்கள்







வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

தமிழக மக்களே... மீண்டும் மீண்டும் முதலமைச்சர்களை திரையரங்கில் தேடாதீர்கள்...!

                 
           அண்மையில் பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக மாநிலத்தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக சட்டமன்றத்தின் மீது தனது பார்வையை திருப்பியிருக்கிறார். இதுவரையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட இல்லாத தமிழக சட்டமன்றத்தை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கான திட்டத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கு வருகிற   2016 - ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தமிழக சட்டமன்றத்தேர்தலில், நாடாளுமன்றத்தேர்தலை போன்று ஏதாவது ''மோடி வித்தையை'' காட்டி தமிழக மக்களை கவர்ந்திழுக்க பல்வேறு திட்டங்களை தீட்டிவருகிறார். அந்த நேரத்தில் அவர்கள் மூலையில் உதித்த திட்டம் தான், ''ரஜினிகாந்த வலையை'' போட்டு தமிழக மக்களை சிக்கவைத்து ஓட்டுகளை பெருவது என்ற முயற்சியில் முனைப்புடன் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள்.
            அதன் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்தை பாரதீய ஜனதாக்கட்சியில் இழுப்பதற்கு ''தூது விடும் படலத்தில்'' இறங்கியிருக்கிறது பாஜகவின் தமிழக தலைமை. அதுமட்டுமல்ல... இன்னுமொரு படி மேலே போய், ''பிரதமர் வேட்பாளராக'' மோடியை அறிவித்து மோடி வித்தை காட்டியது போல்,  நடிகர் ரஜினிகாந்தை ''முதலமைச்சர் வேட்பாளராக'' அறிவித்து ''காந்தவலை'' விரித்து தமிழக மக்களை ஈர்ப்பது வரையில் பாரதீய ஜனதாக்கட்சி யோசித்துவருகிறது. பாஜகவின் இந்த பகல் கனவு நனவாகுமா ஆகாதா என்பது நடிகர் ரஜினிகாந்த் சொல்லும் பதிலில் தான் இருக்கிறது என்பது  வேறு விஷயம். 
             இதிலிருந்து நமக்கு ஒன்று மட்டும் புரிகிறது. தமிழ்நாட்டில் நடிகர் - நடிகைகளை காட்டினால் தான் தங்களுக்கு வெற்றிபெருமளவிற்கு ஓட்டு கிடைக்கும் என்பதை தமிழகத்திலிருக்கும் அரசியல் கட்சிகள் புரிந்துவைத்திருக்கின்றன என்பது நமக்குப் புரிகிறது. அதிலும் மாநில முதலமைச்சராக ஒரு நடிகரை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்கிற அளவிற்கு தமிழக மக்களை புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது உண்மையிலேயே நாமெல்லாம் வெட்கப்படவேண்டும். ஏனென்றால் 1967-ஆம் ஆண்டிலிருந்து தமிழக மக்கள் தமிழகத்தின் முதலமைச்சரை திரைப்படத்தில் தான் தேடி கண்டுபிடித்து தேர்ந்தெடுத்து உட்காரவைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இன்றுவரையில் நடிகர்களை நம்பித்தான் தமிழகத்தின் ஆட்சியை ஒப்படைக்கிறார்கள்.  அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர்., வி.என். ஜானகி, ஜெயலலிதா ஆகிய முதலமைச்சர்கள் திரைப்படத்திலிருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரத்குமார், ராதாரவி, விஜயகாந்த் போன்றவர்களை சட்டமன்றத்திற்கும், எஸ்.எஸ்.சந்திரன்,  ராமராஜன், நெப்போலியன் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கும் அனுப்பிவைத்து அழகு பார்த்தார்கள். திரைப்படத்தில் முகம் காட்டினால் போதும், மக்களின் மனதில் இடம்பிடித்து விடலாம். பின்பு அதே மக்களின் ஆதரவோடு சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இடம் பிடித்துவிடலாம் என்றும், அடுத்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விடலாமென்றும் தான் திரைப்பட நடிகர்களும் நடிகைகளும் அரசியலுக்குள் நுழைகிறார்கள். நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்தவர்களையும், தியாகம் செய்தவர்களையும் ஓரங்கட்டிவிட்டு, வருமானம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு அரிதாரம் பூசி கோடிக் கோடியாய் சம்பாதித்து அரசுக்கு கட்டவேண்டிய வரியை கூட முழுமையாக கட்டாமல் ஏமாற்றும் நடிகர் - நடிகைகளை இந்த நாட்டின் முதலமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து உட்காரவைப்பது என்பது தமிழகத்தின் சாபக்கேடாகப் போய்விட்டது. 
                 தமிழக மக்களே... ஒரே ஒரு வேண்டுகோள் ....!  இனிமேலும்  தமிழக முதலமைச்சரை திரையரங்குகளிலும், திரைப்படங்களிலும் தேடாதீர்கள். கடந்த 47 ஆண்டுகளாக தமிழகம் சீரழ்ந்தது போதும். இனிமேலாவது மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் உயர்வுக்காகவும், உண்மையான அரசியல் விடுதலை, சமூக விடுதலை மற்றும் பொருளாதார விடுதலைக்காகவும் வீதியில் இறங்கிப் போராடுபவர்களை தேர்ந்தெடுங்கள்.  உங்கள் முதலமைச்சரை பொதுமக்களிடம் தேடுங்கள். வீதியில் மக்கள் கூட்டத்தில் தேடுங்கள். போராட்டக்களத்தில் போராளிகள் மத்தியில் தேடுங்கள். இன்று வீதியில் உங்களுக்காக முழங்கிக்கொண்டிருப்பார்கள். நாளை உங்களுக்காக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் உங்களுக்காக உழைத்திடுவார்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல். சிந்தித்து பாருங்கள்.  

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

காங்கிரஸ் கட்சியின் பேரம் இன்னும் படியவில்லை...!

                  ''புலி வருது... புலி வருது...'' என்பது போல ''வருது... வருது... இதோ இன்சூரன்ஸ் மசோதா மாநிலங்களவையில் வருது...'' என்று கடந்த வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி அபாய சங்கு ஊதிக்கொண்டே இருந்தது. ஆனால் மாநிலங்களவையில் தங்கள் கட்சி உறுப்பினர்களை கொண்டுள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எட்டு கட்சிகளும் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வுக்கான அந்த மசோதாவை பலமாக எதிர்த்தன. அந்த மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட நிலைக்குழுவுக்கு அனுப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் மாநிலங்களவைத் தலைவரிடமும் அளித்துள்ளனர். இதுல என்ன ஒரு ஆச்சரியம் என்றால்...? இன்சூரன்ஸ் மசோதாவை எதிர்க்கிற எட்டு எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்று என்பது தான் வேடிக்கையான விஷயம். ஏனென்றால் சென்ற ஆட்சி காலத்தில் தான் ஆளுங்கட்சியாக இருந்த இதே காங்கிரஸ் கட்சி இதே மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. அன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மசோதா இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் போனது. 
               ஆனால் பாரதீய ஜனதாக்கட்சி பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று பதவியில் அமர்ந்தவுடன் பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை உயர்த்தி அதை அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பரிசாக அளிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் தான் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வுகளில் இத்தனை வேகத்தை காட்டுகிறது. ஆரம்பத்தில் இந்த இரு துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை பற்றிய தனது ஆசையை மத்திய அரசு வெளியிட்டப்போது, தனக்கு நிராசையாய் போன இந்த ''உயர்வை'' காங்கிரஸ் கட்சி வரவேற்றது மட்டுமல்ல. அந்த மசோதா கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றும் அறிவித்தது. ஆனால் அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி தான் இப்போது திடீரென அந்த மசோதாவை வரவிடாமல் எதிர்க்கின்றது. 
              காங்கிரஸ் கட்சிக்கு அப்படி என்ன திடீர் ஞானோதயம் வந்து விட்டது  மசோதாவை எதிர்க்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு விடாதீர்கள். தேர்தல் படுதோல்வியால் திருந்திவிட்டார்களோ என்று மகிழ்ச்சிக்கொள்ளாதீர்கள். அப்படியெல்லாம்  அதிசயம் ஒன்றும் நடந்துவிடாது. பாரதீய ஜனதாக்கட்சியிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கான பயமுறுத்தலே இந்த மசோதா எதிர்ப்பு போராட்டம். பன்றி வேண்டுமானால் தான் ஈன்ற குட்டியையே சாப்பிட்டுவிடும். ஆனால் காங்கிரஸ் கட்சி தான் ஈன்ற ''ராட்சச குட்டியான'' இன்சூரன்ஸ் மசோதாவை தானே தின்று கொன்று விடாது. அப்படி செய்தால் பன்றிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். எனவே காங்கிரஸ் கட்சியின் இந்த மசோதா எதிர்ப்பு என்பது தற்காலிகமானதே. பாரதீய ஜனதாக் கட்சியை பணியவைப்பதற்கான ஆயுதம் தானே தவிர வேறொன்றும் இல்லை. 
            பாரதீய ஜனதாக்கட்சியினால் காங்கிரஸ் கட்சிக்கு அப்படியென்ன ஆகவேண்டியிருக்கிறது என்று கேட்டால், நாடாளுமன்றத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு மக்களவையில் இரண்டாவது பெரியக்கட்சியான காங்கிரஸ் கட்சியானது, போதுமான எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாததால் ''எதிர்க்கட்சித் தலைவர்'' அந்தஸ்தை இழந்தது. ஆனால் மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சி என்ற வகையில் எண்ணிக்கையெல்லாம் பார்க்காமல் காங்கிரஸ் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்படவேண்டும் என்று மன்றாடிப்பார்த்தது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியோ காங்கிரஸ் கட்சிக்கு அப்படியொரு அந்தஸ்தை கொடுப்பதற்கு தயாராக இல்லை. அந்த அந்தஸ்தை பெறுவதற்கு  வேண்டித்தான், காங்கிரஸ் கட்சியானது குறுக்கு வழியில் இப்படியொரு பயமுறுத்தல் நாடகத்தை நடத்துகிறது. தனக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்பட்டுவிட்டால், 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை அனுமதிக்கும் இன்சூரன்ஸ் மசோதாவிற்கு தாராளமாக ஆதரவளிக்கும் என்பது தான் உண்மை.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மோடியின் முழு கட்டுப்பாட்டில் ஆட்சியையும், கட்சியும்....!

               
        பாராளுமன்றத்தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டிற்கு முன்னரே, ''வளர்ச்சியின் நாயகனாக'' தன்னை தானே அறிவித்துக்கொண்டு, பல ஆண்டுகளாக பிரதமர் கனவில் மிதந்த கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானியை ஓரங்கட்டிவிட்டு, தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கச் செய்து நாடு முழுதும் நாயா பேயா அலைந்து பிரச்சாரம் செய்து, வெற்றிபெற்று நினைத்தது போல் பிரதமர் பதவியில் உட்கார்ந்துவிட்ட மோடி அத்தோடு விட்டுவிடவில்லை. பெரும்பாலும் ஆளுங்கட்சியில் பிரதமர் பதவிக்கு ஒருவர், அக்கட்சியின் மற்றொரு மூத்தத் தலைவர் அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்த்தப்படுவது தான் இதுவரை வழக்கமாக இருந்துவந்தது. அதேப்போல், ஆளுங்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சியிலும் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், பிரதமர் பதவியும் இல்லாமல், மந்திரிப் பதவியும் இல்லாமல் வெறுமனே எம்.பி-யாக மட்டுமே வெளங்காமல் நடமாடிக்கொண்டிருக்கும் மூத்தத் தலைவர் அத்வானிக்கு கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று அக்கட்சியிலேயே எதிர்ப்பார்க்கப்பட்டுவந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக-வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக்குழுத் தலைவராக நரேந்திர மோடியே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதிலிருந்து கட்சியிலும், ஆட்சியிலும் மோடியின் கை ஓங்கியிருக்கிறது என்று தான் பொருள்கொள்ளவேண்டும். 
               அதுமட்டுமல்ல, சென்ற வாரம் பாரதீய ஜனதாக் கட்சியின் புதிய அகில இந்திய தலைவராக மோடியின் ''நெருங்கிய கூட்டாளியான'' அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட போதே கட்சியில் மோடியின் கை ஓங்கிவருகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது. அதுவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு நாட்டின் ஆளுங்கட்சியின் தலைவர் எப்படியிருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச தகுதிகளைக் கூட ஆய்வு செய்யாமல் தன்  கட்சித்தலைவராக தன்னுடைய நெருங்கியக் கூட்டாளியை தேர்ந்தெடுக்கச் செய்ததன் மூலம் கட்சியில் மோடியின் கை எந்த அளவிற்கு ஓங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். கட்சித் தலைவராக அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ''கட்சித்தலைவர் பதவிக்குக்கூட லாயக்கில்லாமல் போய்விட்டாரா அத்வானி'' என்று அக்கட்சியிலேயே தொண்டர்கள் பொருமித்தள்ளுகிறார்கள். 
              புதிய தலைவர் அமித்ஷா யார்...? 2010-ஆண்டு வரை குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர். முதலமைச்சர் நரேந்திர மோடியின் கண்ணசைவை பார்த்தே கச்சிதமாக காரியத்தை முடிக்கக்கூடியவர்.  முதலமைச்சரின் பார்வைப்பட்ட இளம்பெண்ணை அவ்வப்போது இரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்து முதலமைச்சரை குஷிப்படுத்திய பெருமை இந்த அமித்ஷாவிற்கு உண்டு.
            இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது போலி என்கவுண்டரில் புகழ் பெற்றவர். முதலமைச்சரை குஷிப்படுத்த சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி போன்ற அப்பாவிகளை போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய பெருமையும் இவருக்கு உண்டு. இந்த படுகொலையை விசாரணை செய்த மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாத காலங்கள் சிறைச்சாலையில் இருந்தார். அதுமட்டுமல்ல நிபந்தனை ஜாமீனில்  சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த அமித்ஷாவை   இரண்டு ஆண்டுகளுக்கு  குஜராத் மாநிலத்திற்குள்ளேயே  நுழையக்கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்தக்காலக்கட்டத்தில் தான் அமித்ஷா மோடியின் பிரதிநிதியாக - பாஜக-வின் மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உத்திரபிரதேச மாநிலத்தில் குடியேறினார். 
              உத்திரபிரதேசத்திலும் அமித்ஷா சும்மா இறக்கவில்லை. அங்கேயும் குஜராத்தில் தூவிய மதவெறி விஷத்தை மிக கச்சிதமாக தூவினார். அங்கே காப் பஞ்சாயத்துகள் என்ற மதவெறி தர்பார், முசாபர் நகர் மதக்கலவரம் போன்ற மதமோதல்களுக்கு காரணமாக திகழ்ந்தவர் தான் இந்த அமித்ஷா. மக்களவைத்தேர்தலின் போது மதவெறியை தூண்டும் வகையில் பொதுக்கூட்டங்களில் பேசியமைக்காக உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு அமித்ஷாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தபோதும், தான் ஏற்கனவே தூவிவிட்ட மதவாத விஷத்தையே மூலதனமாக வைத்து தான் உத்திரபிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 72 இடங்களில் பாஜக-வை வெற்றிபெற மூலகாரணமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். அந்த மாபெரும் வெற்றியையே மோடிக்கு காணிக்கையாக்கினார். மோடியும், பாஜக-வும் மிருகபலம் பெற்று - இராட்சசபலம் பெற்று யாரும் எதிர்பாராதவிதமாக தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுப்பதற்கு ''மாபெரும் உதவி'' செய்ததனால் தான் அமித்ஷா பாஜக-வின் தேசியத்தலைவராக முடிசூட்டப்பட்டார் என்பதும்  யாரும் அறியாதது அல்ல. 
             ஏற்கனவே ஏராளமான கொலை வழக்குகள் நிலுவையிலுள்ள ஒருவர் ஆளுங்கட்சியின் தேசியத்தலைவர் என்பது பாஜக-விற்கு பெருமையான விஷயமாக இருக்கலாம். இப்படிப்பட்ட ''புகழ்'' வாய்ந்த தன் கூட்டாளியை தேசியத்தலைவராக ஆக்கிய பெருமை ''வளர்ச்சி நாயகன்'' மோடியையே சாரும். அப்படியென்றால் அவரது கை எப்படி ஓங்கியிருக்கிறது என்பதை பாருங்கள்.