புதுச்சேரி அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுச்சேரி அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

"டிஜிடல் பேனர்" போதையில் கூச்சமில்லாமல் திரியும் முதலமைச்சர்..!

  குப்பைத்தொட்டி போல் அருவருக்கும் புதுச்சேரி..                            















            இன்று ஆகஸ்ட் 4 - ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு பிறந்தநாள். இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.  புதுச்சேரியே அல்லல்லோபடுகிறது. குப்பைத்தொட்டி போல் நாறுகிறது.  சுமார் இரண்டு கோடிக்கும் மேல் செலவு செய்து, ஊர் முழுதும் 25,000 க்கும் மேற்பட்ட டிஜிடல் பேனர்கள். விதவித மான கெட்டப்பில் பல அவதாரங்களை எடுத்து ரங்கசாமி ஆங்காங்கே காட்சியளிக்கிறார். சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் தோற்று போய்விடுவார்கள். பல தமிழ் - ஆங்கில திரைப்பட நடிகர்கள் வேஷம் கட்டி நடித்த ஸ்டில்களில் அவர்களின் தலையை எடுத்துவிட்டு இவரது தலையை ஒட்டிவைத்து, இந்த பேனர்கள் சாலையின் இருப்பக்கங்களிலும் நிறுத்த பட்டிருக்கும். அதைப்பார்ப்பவர்களுக்கு வாந்தியே வந்துவிடும். அவ்வளவு அருவருப்பு. அவ்வளவு கோமாளித்தனம். இதைப்பார்க்கும் பொது 23 - ஆம் புலிகேசி திரைப்படம் தான் ஞாபகத்திற்கு வரும். நாளைய தலைமுறையினர் இந்த பேனர்களின் புகைப்படங்களைப் பார்த்தால் புதுச்சேரி முதலமைச்சர் பொழுது போகாமல் இப்படியெல்லாம் அலங்காரம் செய்து கொண்டு திரிந்திருக்கிறார் என்று நினைக்கக்கூடும்.     இதில் இவருக்கு சின்ன காமராசர் என்ற பட்டபேரு. இப்படி பேனர் வைத்து அவரை போற்றுவதை அவர் விரும்புகிறார். ஆனால் மக்கள் வசைபாடுகிறார்கள் என்பதை அவர் உணரவில்லை. இவரே இரவில் தன் நண்பர்களோடு சேர்ந்து நகர்வலம் வந்து இந்த பேனர்களை ரசிக்கிறார்.
               டிஜிடல் பேனர்கள் சுற்றுசூழலை பாதிக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு மாநில முதலமைச்சருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் இல்லையே என்பது தான் வேதனையாக இருக்கிறது.

வெள்ளி, 1 ஜூலை, 2011

புதுவை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட ரங்கசாமி

                     புதுச்சேரியில் தேர்தல் முடிந்து, ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்று  2 மாதங்கள் ஆகியும் அரசு நிர்வாகம் செயல்படாமல் ஸ்தம்பித்து போயிருப்பது என்பது புதுவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமுள்ள 30 இடங்களில் இந்த அணி 20 இடங்களில் வெற்றி பெற்றதால், தேர்தல் நேர ஒப்பந்தப்படி கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று பத்திரிகைகளும் அரசியல் விமர்சகர்களும் மற்றும் மக்களும்  எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தல் முடிந்த கையோடு கூட்டணி கட்சியான அதிமுகவை ரங்கசாமி கழட்டிவிட திட்டமிட்டு, காரைக்காலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரை தன்னோடு சேர்த்துக்கொண்டு, தான் இரண்டு தொகுதியில் வெற்றிபெற்றவர் என்பதையும் மறந்துவிட்டு,       30- இல் 16 உறுப்பினர்கள் என்கிற பலத்துடன் தனித்து  ஆட்சியமைத்தார். இது கூட்டணித் துரோகம் மட்டுமல்லாது,  கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் எதிரானது.
                   அது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் தாய்க்கட்சியோடு இணையலாம் என்கிற  திட்டத்தோடு ரங்கசாமி வெளிப்படையாகவே காய் நகர்த்துவது என்பது  மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.  கடந்த கால காங்கிரஸ்- திமுக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக அவர் செயல்படுவது மக்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. . இதனால் இன்று அந்த சின்னஞ்சிறிய மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
                    மேலும் ரங்கசாமி வெற்றிபெற்ற இரு தொகுதிகளில் ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்ததும், அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பதினாறிலிருந்து பதினைந்தாக குறைந்ததும் ரங்கசாமிக்கே பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது. தற்சமயம் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு வலை வீசிப்பார்த்தார். நரிக்கு வடை கிடைக்கவில்லை.  தற்போதைக்கு யாரும் சிக்காததால் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதை தள்ளிப்போட்டுவருகிறார்.
                   தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசிப் பார்த்தார். தனக்கு ஆதரவு கோரினார்.  ஆனால் கட்சியை கலைத்துவிட்டு வந்தால் மட்டுமே ஆதரவு என்று அவரும் கைவிரித்து விட்டதால், அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் கூட ஏதாவது உளறிக்கொண்டே இருக்கிறார். 
                    இந்த சூழ்நிலையில், மாநிலத்தில் இவ்வளவு அலங்கோலங்கள்  அரங்கேறிய  போதிலும் மாநில துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் அரசியல் சாசனத்தை நிலைநாட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ரங்கசாமியை  அவர் இதுவரை கேட்டுக்கொள்ளாமலேயே இருக்கிறார். . ஆளுநர் மட்டுமல்ல, புதுவை அரசை நேரடியாக கட்டுப்படுத்தக் கூடிய மத்திய உள்துறை 
அமைச்சகமும் வேடிக்கை தான்  பார்த்துக்கொண்டிருக்கிறது. தனது சொந்த அரசியல் லாபத்துக்காக  அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கருதுகிறது என்பது தான் உண்மை.

புதன், 27 ஏப்ரல், 2011

குற்றவாளிக்கூண்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் !














ஆளுநர் பதவி - ஓர் அறிமுகம் :

பொதுவாக நாட்டிலுள்ள படித்தவர்கள், பண்பாளர்கள், உயர்பதவியிலிருந்து - பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள்  போன்றவர்களுக்கு மரியாதை நிமித்தமாக கொடுக்கப்படுவதற்கும்...
அதே சமயத்தில் மத்திய அரசின் சார்பில்  மாநில அரசுகளை கண்காணிக்கும்  கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்காகவும் இந்த மாநில  ஆளுனர் பொறுப்பு என்பது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.  அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பதவிஎன்பதால்  அதற்குரிய மரியாதையை நாம் அளிக்கவேண்டியிருக்கிறது.  மற்றபடி ஆளுனர் பதவி என்பது ஆட்டுக்கு வேண்டாத தாடியை போன்றது தான்.
                  அனால் காங்கிரஸ்காரன் சட்டத்தை தனக்கு சாதகமாக குறுக்குவழியில் பயன்படுத்துவதில் கெட்டிக்காரன். இந்த கவர்னர் பதவியை ரெண்டு விஷயங்களுக்கு பயன்படுத்திக்கொண்டான். ஒன்று - முக்கியமாக தனக்கு வேண்டாத அரசுகளை - எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் அரசுகளை கண்காணிப்பதற்கும் மிரட்டுவதற்கும் இந்த கவர்னர் பதவியை இன்று வரை பயன்படுத்திவருகிறது காங்கிரஸ் கட்சி. இன்னொன்று - காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்து வயதான பின் தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் மூத்த கட்சித்தலைவர்களுக்கு, கட்சியிலேயே இருந்துகொண்டு கோஷ்டிபூசல் செய்துகொண்டிருக்கும் தறுதலைகளுக்கு  இந்த கவர்னர் பதவியை கொடுத்து வாயில் பூட்டுப்போட்டு விடுவார்கள்... இப்படித்தான் இந்த பதவியினை காங்கிரஸ் கட்சி சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரையிலும் - இடையில் வந்த பாரதீய ஜனதா கட்சியும் பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.  
                அப்படி வந்தவர்தான் இந்த குட்டி கவர்னர் இக்பால் சிங். 

யார் இந்த இக்பால் சிங் ?
                இவர் ஆரம்ப காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கிறார். அதில் அகில இந்திய பொறுப்பும் வகித்திருக்கிறார். பிறகு அவரது வளர்ச்சி என்பது காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளர்களில்  ஒருவராக உயர்த்தி இருக்கிறது. 1992 முதல் 1998 வரை மாநிலங்களவை உறுப்பினர்களாக பணிபுரிந்திருக்கிறார். அப்போது தான் - பல நிதி மோசடிகளை செய்து, பல கோடி அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு செய்து, ஆயுத கடத்தல் - போதை பொருள் கடத்தல்- கொலை - கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களை செய்து சம்பாதித்த   பல கோடி கறுப்புப் பணங்களை வெளிநாட்டு வங்கியில் பதுக்கிவைத்து இன்று மாட்டிக்கொண்டு டெல்லி திஹார் சிறையிலிருக்கும் சமூக விரோதி ஹசன் அலி கான் - உடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஹசன் அலி கான் தான் முறைகேடாக சேர்த்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் போடுவதற்கு - வெளிநாடு சென்றுவர பாஸ்போர்ட் பெறுவதற்கு 
இந்த குட்டி கவர்னர் இக்பால் சிங் 1997-ஆம் ஆண்டு  பெரிதும் உதவி செய்திருக்கிறார். அதற்கு கைமாறாக பல கோடிகள் கைமாறியிருக்கின்றன என்று சொல்லப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் வகையாக சிக்கி இருக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றன. அதனால் தான்  இன்று மத்திய  அமலாக்கப் பிரிவின் விசாரணையில் இக்பால் சிங்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். இது வரை மூன்று முறை விசாரணை நடந்திருக்கிறது. ஆனால்  புதுச்சேரியின்  தற்காலிக முதலமைச்சர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, தலைமைச்செயலாளர்,  ஐ ஜி. போன்ற பரிசுத்தவான்கள் எல்லாம் இக்பால் சிங்  ஒரு "திருவாளர் .பரிசுத்தம்" என்றும் அவர் பதவி விலகத்தேவை இல்லை என்றும் இவர்களாகவே  தீர்ப்பு சொல்கிறார்கள் என்பது தான் புதுவைக்கு வந்த வெட்க கேடு.
                  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிக்கட்சிகளும் மற்ற எதிர்கட்சிகளும் மாநில துணைநிலை ஆளுநர் தானாக பதவி விலகவேண்டும் அல்லது இந்திய குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று போராடிவருகிறார்கள். ஏப்ரல் 27 அன்று ஒரு நாள் கடையடைப்புக்கும் அறைகூவல் விடுத்து ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
அதே சமயத்தில் மாநில காங்கிரஸ் அரசும் காவல் துறையும் இந்த அறப்போராட்டத்தை ஒடுக்குவதற்கு புதுவையில் 144-தடை உத்தரவு போட்டிருக்கிறது என்பதும் வெட்க கேடானது.

புதுவையில் செய்த முறைகேடுகள்..
               இக்பால் சிங் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும், முறைகேடுகள் 
செய்வதுமே அவருடைய முக்கியப் பணியாக இருந்து வந்திருக்கிறது. 
              (1)   கவர்னராக பதவி ஏற்க  வரும் போதே பஞ்சாப்பிலிருந்து ஓய்வுபெற்ற பொறியாளரான அவரது நண்பரையும் அழைத்துவந்து புதுவையில் ஐ ஏ எஸ் பதவிக்கு இணையான பொறுப்பில் அமர்த்தி இருக்கிறார்.  
              (2)   பஞ்சாப்பில் இவரது நண்பர் நடத்திக்கொண்டிருக்கும் பஞ்சாப் மொழி தொலைக்காட்சி சேனல் புதுவையில் கிடைக்கும் விளம்பர வருமானத்திற்காக புதுவை கேபிள் மூலம்  ஒளிபரப்பப்படுகிறது.
              (3)   இவரது இரண்டு மகன்களை பங்குதாரர்களாக கொண்ட சவுத் எஜுகேஷனல் டிரஸ்ட் என்ற பெயரில் காரைக்காலில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க ஏற்பாடுகள் செய்தார். அதற்கு வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் அரசு காரைக்காலில் இடம் அளித்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சியான தகவல். 
                      அதுமட்டுமல்லாமல் மருத்துவக்கல்லுரி அமைப்பதற்கான தடையில்லா சான்றிதழையும் முதலமைச்சருக்கோ அமைச்சரவைக்கோ தெரியாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய பயங்கரம். அப்படி முறைகேடாக சான்றிதழ் பெற்றதில் தவறில்லை என்று முதலமைச்சர் வைத்திலிங்கமும் மற்ற அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவும் கந்தசாமியும் சொல்வது என்பது வேடிக்கையானது. 
                       பார்வதி ஷா என்ற பெண் கவர்னர் மாளிகைக்குப் பக்கத்திலேயே இருக்கும் வீட்டிலேயே  பல ஆண்டுகளுக்கு முன்  அவரது கணவரின் தம்பியால் கொலைசெய்யப்பட்டு, பின் சமீபத்தில் அந்தக் கொலையாளியும் புதுவை சிறையிலேயே கொலைசெய்யப்பட்டான். எனவே பல ஆண்டுகளாக பூட்டியே இருந்த அந்த வீட்டை திறந்து அந்த மருத்துவக் கல்லூரிக்கான அலுவலகத்தை நடத்தியது என்பதும் மற்றுமொரு மிகப்பெரிய பயங்கரம்.
                       இப்படியாக இக்பால் சிங் பல்வேறு வகையான முறைகேடுகளை செய்ததும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் வெட்டவெளிச்சமாக தெரிந்தும், மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் வைத்திலிங்கமோ இக்பால் சிங்கை எதிர்த்து போராடும் எதிர்கட்சிகள் மீது சீறிப் பாய்கிறார். 
                      அதுமட்டுமல்ல.. இவ்வளவு நடந்தும்  சீக்கியர்கள் 100-150-க்குள் மட்டுமே வாழும் புதுவையில் சீக்கியக்கோயிலான குருத்வாராவை கட்டுவதற்கு முதலமைச்சர் வைத்திலிங்கம் அரசு நிலத்தை ஒதுக்கி இருப்பது என்பது யாரை ஏமாற்றுவதற்கு என்று  தெரியவில்லை.