ஊழல் என்பது இந்தியாவில் காலம் காலமாக ஒரு அங்கிகரிக்கப்பட்ட தொழிலாக செம்மையாக நடந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் மட்டுமே ஊழலை எதிர்த்து பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராடிவந்தனர். ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் மசோதாவை கொண்டுவரவேண்டுமென்றும் வலியுறுத்தி வந்தனர். அப்போதெல்லாம் மத்திய அரசு அதை பற்றி கண்டுகொள்ளாமலே இருந்து வந்தது.
ஆனால் சமீப காலமாக, மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்ததிலிருந்து புற்றிலிருந்து பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வருவது போல் ஏகப்பட்ட ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியே அம்பலமாவதைப் பார்த்து மக்களே அதிர்ந்து போயிருக்கிறார்கள். அப்போது தான் கதைகளில் வருவது போல் - இதிகாசத்தில் கம்சனை ஒழிக்க அவதாரம் எடுத்த கிருஷ்ண பரமாத்மா போல் - இந்தியாவில் ஊழலை ஒழிக்க அன்னா ஹசாரே அவதாரம் எடுத்தது போல் ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றனர். நாடெங்கும் அவரின் பெயரால் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் முளைத்துவிட்டன. அன்னா ஹசாரே ஒரு மகாத்மாவைப் போல் காட்சித் தருகிறார். ஏதாவது ஒரு கதாநாயக நடிகர்களுக்குப் பின்னாலேயே சென்று பழக்கப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே ஒரு கதாநாயகனாக - இந்தியன் தாத்தாவாக தெரிகிறார்.
பா. ஜ. க. -வும், சில அரசு சார்பற்ற நிறுவனங்களும், கார்ப்போரேட் கம்பெனிகளும் அன்னா ஹசாரெக்குப் பின்னால் இருந்துகொண்டு இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அன்னா ஹசாரே டெல்லியில்
நடைபெறும் ஊழலை மட்டுமே எதிர்த்து போராடுவார். ஆனால் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் - குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பற்றியோ அல்லது குஜராத் மாநில முதலமைச்சர் மோடியைப் பற்றியோ அல்லது ஊழல் செய்து கொள்ளை இலாபம் சம்பாதித்த அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, டாடா, கலாநிதி மாறன் போன்ற கார்ப்போரேட் முதலாளிகளைப் பற்றியோ வாயை திறக்க மாட்டார்.
இந்தியாவில் ஒரு பக்கம் ஊழல் ஆறு வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்திய அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்திருக்கிறார்கள். இது அரசின் பணம் - மக்களின் பணம் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேப் போகும் விலைவாசியோ மக்களை பிழிந்தேடுக்கிறது. இன்றைக்கு மக்களின் கவனமெல்லாம் - பார்வையெல்லாம் - சிந்தனையெல்லாம் இவை இரண்டின் மீது தான் பதிந்திருக்கிறது. மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை மன்மோகன் சிங் நன்கு அறிவார்.
ஆக குழம்பிப் போயிருக்கும் மக்களை திசைத்திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு மன்மோகன் சிங் தள்ளப்பட்டிருக்கிறார். மக்களின் உணர்வுகளை திசைத் திருப்பவேண்டி தான் பாரதீய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு பாராளுமன்றத்தை முடக்கும் நாடகத்தையும், அன்னா ஹசாரேவுடன் சேர்ந்துகொண்டு உண்ணாவிரதம் - கைது நாடகத்தையும் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதா கட்சியும் சேர்ந்து நடத்துகிறார்கள் என்பதை மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் சமீப காலமாக, மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்ததிலிருந்து புற்றிலிருந்து பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வருவது போல் ஏகப்பட்ட ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியே அம்பலமாவதைப் பார்த்து மக்களே அதிர்ந்து போயிருக்கிறார்கள். அப்போது தான் கதைகளில் வருவது போல் - இதிகாசத்தில் கம்சனை ஒழிக்க அவதாரம் எடுத்த கிருஷ்ண பரமாத்மா போல் - இந்தியாவில் ஊழலை ஒழிக்க அன்னா ஹசாரே அவதாரம் எடுத்தது போல் ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றனர். நாடெங்கும் அவரின் பெயரால் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் முளைத்துவிட்டன. அன்னா ஹசாரே ஒரு மகாத்மாவைப் போல் காட்சித் தருகிறார். ஏதாவது ஒரு கதாநாயக நடிகர்களுக்குப் பின்னாலேயே சென்று பழக்கப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே ஒரு கதாநாயகனாக - இந்தியன் தாத்தாவாக தெரிகிறார்.
பா. ஜ. க. -வும், சில அரசு சார்பற்ற நிறுவனங்களும், கார்ப்போரேட் கம்பெனிகளும் அன்னா ஹசாரெக்குப் பின்னால் இருந்துகொண்டு இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அன்னா ஹசாரே டெல்லியில்
நடைபெறும் ஊழலை மட்டுமே எதிர்த்து போராடுவார். ஆனால் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் - குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பற்றியோ அல்லது குஜராத் மாநில முதலமைச்சர் மோடியைப் பற்றியோ அல்லது ஊழல் செய்து கொள்ளை இலாபம் சம்பாதித்த அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, டாடா, கலாநிதி மாறன் போன்ற கார்ப்போரேட் முதலாளிகளைப் பற்றியோ வாயை திறக்க மாட்டார்.
இந்தியாவில் ஒரு பக்கம் ஊழல் ஆறு வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்திய அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்திருக்கிறார்கள். இது அரசின் பணம் - மக்களின் பணம் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேப் போகும் விலைவாசியோ மக்களை பிழிந்தேடுக்கிறது. இன்றைக்கு மக்களின் கவனமெல்லாம் - பார்வையெல்லாம் - சிந்தனையெல்லாம் இவை இரண்டின் மீது தான் பதிந்திருக்கிறது. மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை மன்மோகன் சிங் நன்கு அறிவார்.
ஆக குழம்பிப் போயிருக்கும் மக்களை திசைத்திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு மன்மோகன் சிங் தள்ளப்பட்டிருக்கிறார். மக்களின் உணர்வுகளை திசைத் திருப்பவேண்டி தான் பாரதீய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு பாராளுமன்றத்தை முடக்கும் நாடகத்தையும், அன்னா ஹசாரேவுடன் சேர்ந்துகொண்டு உண்ணாவிரதம் - கைது நாடகத்தையும் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதா கட்சியும் சேர்ந்து நடத்துகிறார்கள் என்பதை மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.
