அ.குமரேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ.குமரேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 மே, 2014

வாசிப்பை நேசிப்போம் - கம்பன் கனவுக்கும் கம்யூனிசமே மார்க்கம்!


 புதிய புத்தக விமர்சனம் : அ. குமரேசன்                
           மார்க்சிய ஒளியால் கண்கூசிப்போகிறவர்கள் அதை இருட்டடிப்பதாக நினைத்துக் கொண்டு, “அது ஒரு அந்நியத் தத்துவம்” என்ற ஒரு பலகையைத் தொங்கவிடுவதுண்டு. பாரம்பரியம், பண்பாட்டுத் தனித்துவம் என்ற பெயர்களில் ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வுகளை, பிறப்பால் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற சமூகப் பாகுபாடுகளை, அடங்கியிருப்பதே பெண்ணுக்குப் பெருமை என்ற ஆணாதிக்கக் கட்டளைகளை அப்படியப்படியே பராமரிக்க விரும்புகிறவர்கள், அவற்றில் கீறலை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகளையெல்லாம் இப்படி “அந்நியம்” என்று முத்திரையைக் குத்துவதன் மூலமாகத்தான் மழுங்கடிக்க முயல்கிறார்கள். மார்க்சியமோ இந்த ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் ஆதிக்கங்களையும் அடியோடு பெயர்த்து உடைக்கக்கூடியது.
           கீறல்களையே பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பெரும் உடைப்பை ஏற்றுக்கொள்வார்களா என்ன...? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று இங்கிருந்தே முழக்கங்கள் எழுந்த வரலாறு உண்டு. உலகம் முழுவதும் சமத்துவத்திற்காக எழுகிற இத்தகைய முழக்கங்களை உள்வாங்கிய அரசியல், சமுதாய இயக்க அறிவியலே மார்க்சியம். அதே வேளையில் அது அப்படியப்படியே படியெ டுத்து எல்லா இடங்களிலும் ஒட்டவைக்கப்படுகிற மேற்கோள்களின் தொகுப்பல்ல. அந்தந்த நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்ற முறையில் பொருத்தப்பட வேண்டிய, பொருந்தக்கூடிய, கோட்பாடும் செயல்பாடும் இணைந்த இயங்குவிசையே மார்க்சியம். தமிழ்மண் உள்ளிட்ட இந்தியப் பரப்பில் அது எப்படி பொருந்தி இயங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் நூல்தான் ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்.’         
              இங்கே மார்க்சிய இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும், மார்க்சியவாதிகள் நடத்திய போராட்டங்களையும் கால வரிசைப்படி அடுக்கிக்கொண்டிராமல், எப்படி இந்த மண்ணுக்கேற்றதாக உலக உழைப்பாளி வர்க்கத் தத்துவம் தழைத்திருக்கிறது என்பதை தர்க்கப்பூர்வ ஆய்வாக முன் வைக்கிறார் நூலாசிரியர் அருணன். “இதை இரண்டுவிதமாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்திய மண்ணுக்கும் பொருந்தக்கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால் அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பது...” என்று அறிமுகத்தில் குறிப்பிடுகிறார் அருணன். கம்யூனிஸ்ட்டுகள் நவம்பர் புரட்சி தினத்தைக் கொண்டாடுவது பற்றி சிலர், அந்தப் புரட்சியால் உருவான சோவியத் யூனியனே தகர்ந்துவிட்ட நிலையில் இங்கே ஏன் இன்னும் அதைக் கொண்டாடு கிறார்கள் என்று கேட்பதுண்டு. புத்தகத்தின் முதல் கட்டுரையான ‘கம்யூனிஸ்டு அறிக்கையும் நவம்பர் புரட்சியும்’ அவர்களுக்கு பதிலளிக்கிறது. “மார்க்சிய சிந்தனையின் தோற்றத்தைக் ‘கம்யூ னிஸ்டு அறிக்கை’ குறித்தது என்றால், அது இந்த அளவுக்கு உலகளாவிய சித்தாந்தமாய் - செயல் பாடாய் பரவியதற்கு நவம்பர் புரட்சியே முதல் காரணமாகும்.
               அறிக்கை கொள்கைப் பிரகடனம் என்றால், ''புரட்சி அதன் செயல்பாட்டு வடிவம். இரண்டும் தத்துவம் மற்றும் அரசியல் ஞானிகளின் ஆய்வுப் பொருளாய் இன்னும் வெகு காலத்திற்கு இருக்கும்,” என்று ஆணித்தரமாகப் பறை சாற்றுகிறார். அறிக்கையின் கூறுகளையும், புரட்சியின் விளைச்சல்களையும் விரிவாக விளக்குகிற அந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில், “ஆனால் ஒரு விஷயம். நவம்பர் புரட்சியைக் கொண்டாடும் இந்த வேளையில், கம்யூனிஸ்டுகளாகிய நாம் வரலாற்றிலிருந்து உரிய படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்தளித்த கம்யூனிஸ்டு அறிக்கையின் சாரத்தை நடை முறைப்படுத்துவதில் சோவியத் அமைப்பு பெற்ற வெற்றி தோல்விகளை கவனமாக ஆராய வேண்டும்...” என்கிறார். ஒரு மார்க்சிய மனம் இப்படித்தான் சரிநிலையில் அனுபவங்களை சீர்தூக்கிப் பார்க்கும்.மனித சமுதாயம் உறைந்துகிடக்கவில்லை, இயங்கிக்கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறவர்களே கூட, அதுவெல்லாம் கடவுள் செயல் என்றோ, சில மாமனிதர்களின் வரலாறு என்றோதான் சொல்கிறார்கள். இப்படி வரலாற்றைக் கடவுள் வழிபாட்டுடன் அல்லது தனிமனித வழிபாட்டுடன் கட்டியிழுக்க முயல்கிறவர்களிடம், அந்த அவதார நாயகர்கள் ஏன் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தோன்றினார்கள் என்பதற்கு பதில் இருப்பதில்லை. இத்தகைய கேள்விகளைக் கேட்டு 19ம் நூற்றாண்டில் எழுந்த மார்க்சியம் உலக சமூக இயக்கம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டத்தை, ஒரு முழுமையான தத்துவத்தைத் தந்தது. மனித குலம் தன்னைத்தானே கண்டு கொண்டது... என்று தனக்கே உரிய எளிமையும், இனிமையும் கலந்த சொல்லாடல்களில் விவரித்துச் சொல்கிறார் நூலாசிரியர்.
              ''மார்க்சியம்'' எனும் மங்கா ஒளிவிளக்கின்  ஒளியால் கண்கூசிப்போகிறவர்கள் அதை இருட்டடிப்பதாக நினைத்துக் கொண்டு, “அது ஒரு அந்நியத் தத்துவம்” என்ற ஒரு பலகையைத் தொங்கவிடுவதுண்டு. பாரம்பரியம், பண்பாட்டுத் தனித்துவம் என்ற பெயர்களில் ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வுகளை, பிறப்பால் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற சமூகப் பாகுபாடுகளை, அடங்கியிருப்பதே பெண்ணுக்குப் பெருமை என்ற ஆணாதிக்கக் கட்டளைகளை அப்படியப்படியே பராமரிக்க விரும்புகிறவர்கள், அவற்றில் கீறலை ஏற்படுத்தக்கூடிய சிந்தனை களையெல்லாம் இப்படி “அந்நியம்” என்று முத்திரையைக் குத்துவதன் மூலமாகத்தான் மழுங்கடிக்க முயல்கிறார்கள். மார்க்சியமோ இந்த ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் ஆதிக்கங்களையும் அடியோடு பெயர்த்து உடைக்கக்கூடியது. கீறல்களையே பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பெரும் உடைப்பை ஏற்றுக்கொள்வார்களா என்ன...? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று இங்கிருந்தே முழக்கங்கள் எழுந்த வரலாறு உண்டு.
            உலகம் முழுவதும் சமத்துவத்திற்காக எழுகிற இத்தகைய முழக்கங்களை உள்வாங்கிய அரசியல், சமுதாய இயக்க அறிவியலே மார்க்சியம். அதே வேளையில் அது அப்படியப்படியே படியெ டுத்து எல்லா இடங்களிலும் ஒட்டவைக்கப்படுகிற மேற்கோள்களின் தொகுப்பல்ல. அந்தந்த நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்ற முறையில் பொருத்தப்பட வேண்டிய, பொருந்தக்கூடிய, கோட்பாடும் செயல்பாடும் இணைந்த இயங்குவிசையே மார்க்சியம். தமிழ்மண் உள்ளிட்ட இந்தியப் பரப்பில் அது எப்படி பொருந்தி இயங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் நூல்தான் ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்.’ இங்கே மார்க்சிய இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும், மார்க்சியவாதிகள் நடத்திய போராட்டங்களையும் கால வரிசைப்படி அடுக்கிக்கொண்டிராமல், எப்படி இந்த மண்ணுக்கேற்றதாக உலக உழைப்பாளி வர்க்கத் தத்துவம் தழைத்திருக்கிறது என்பதை தர்க்கப்பூர்வ ஆய்வாக முன் வைக்கிறார் நூலாசிரியர் அருணன். “இதை இரண்டுவிதமாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
           ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்திய மண்ணுக்கும் பொருந்தக்கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால் அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பது...” என்று அறிமுகத்தில் குறிப்பிடுகிறார் அருணன். கம்யூனிஸ்ட்டுகள் நவம்பர் புரட்சி தினத்தைக் கொண்டாடுவது பற்றி சிலர், அந்தப் புரட்சியால் உருவான சோவியத் யூனியனே தகர்ந்துவிட்ட நிலையில் இங்கே ஏன் இன்னும் அதைக் கொண்டாடு கிறார்கள் என்று கேட்பதுண்டு. புத்தகத்தின் முதல் கட்டுரையான ‘கம்யூனிஸ்டு அறிக்கையும் நவம்பர் புரட்சியும்’ அவர்களுக்கு பதிலளிக்கிறது. “மார்க்சிய சிந்தனையின் தோற்றத்தைக் ‘கம்யூ னிஸ்டு அறிக்கை’ குறித்தது என்றால், அது இந்த அளவுக்கு உலகளாவிய சித்தாந்தமாய் - செயல் பாடாய் பரவியதற்கு நவம்பர் புரட்சியே முதல் காரணமாகும். அறிக்கை கொள்கைப் பிரகடனம் என்றால், புரட்சி அதன் செயல்பாட்டு வடிவம்.
              ''இரண்டும் தத்துவம் மற்றும் அரசியல் ஞானிகளின் ஆய்வுப் பொருளாய் இன்னும் வெகு காலத்திற்கு இருக்கும்,” என்று ஆணித்தரமாகப் பறை சாற்றுகிறார். அறிக்கையின் கூறுகளையும், புரட்சியின் விளைச்சல்களையும் விரிவாக விளக்குகிற அந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில், “ஆனால் ஒரு விஷயம். நவம்பர் புரட்சியைக் கொண்டாடும் இந்த வேளையில், கம்யூனிஸ்டுகளாகிய நாம் வரலாற்றிலிருந்து உரிய படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்தளித்த கம்யூனிஸ்டு அறிக்கையின் சாரத்தை நடை முறைப்படுத்துவதில் சோவியத் அமைப்பு பெற்ற வெற்றி தோல்விகளை கவனமாக ஆராய வேண்டும்...” என்கிறார். ஒரு மார்க்சிய மனம் இப்படித்தான் சரிநிலையில் அனுபவங்களை சீர்தூக்கிப் பார்க்கும்.மனித சமுதாயம் உறைந்துகிடக்கவில்லை, இயங்கிக்கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறவர்களே கூட, அதுவெல்லாம் கடவுள் செயல் என்றோ, சில மாமனிதர்களின் வரலாறு என்றோதான் சொல்கிறார்கள்.
          இப்படி வரலாற்றைக் கடவுள் வழிபாட்டுடன் அல்லது தனிமனித வழிபாட்டுடன் கட்டியிழுக்க முயல்கிறவர்களிடம், அந்த அவதார நாயகர்கள் ஏன் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தோன்றினார்கள் என்பதற்கு பதில் இருப்பதில்லை. இத்தகைய கேள்வி களைக் கேட்டு 19ம் நூற்றாண்டில் எழுந்த மார்க்சியம் உலக சமூக இயக்கம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டத்தை, ஒரு முழுமையான தத்துவத்தைத் தந்தது. மனித குலம் தன்னைத்தானே கண்டு கொண்டது... என்று தனக்கே உரிய எளிமையும், இனிமையும் கலந்த சொல்லாடல்களில் விவரித்துச் சொல்கிறார் நூலாசிரியர்.
               ''மார்க்சியம் எனும் மங்கா ஒளிவிளக்கு'' என்ற கட்டுரையில், அந்த மார்க்சியம் என்றால் என்ன என்று விளக்குகிற இடம் முக்கியமானது.
            மார்க்சியம் ஒரு பொருளாதாரவாதம் என்று வெறும் காசுக்குடுவைக்குள் அடைக்க முயல்கிறவர்களை, “இறுதிக்காரணி” பற்றிய விளக்கம் அந்தக் குடுவையிலிருந்து மீட்கக் கூடியதாக இருக்கிறது.“மார்க்சியத்தின் விஞ்ஞானப்பூர்வ நாத்திகத்தைத் தவிர்த்துவிட்டு நீங்கள் தத்துவம் பேச முடியாது. வர்க்கப் போராட்டம் மற்றும் அரசு பற்றிய மார்க்சிய நோக்கைக் கழித்துவிட்டு நீங்கள் அரசியல் கோட்பாடுகளைப் பேச முடியாது. மொழி பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு நீங்கள் பண்பாடு பற்றிப் பேச முடியாது. யதார்த்தவாதம் எனும் மார்க்சிய அழகியலைப் புறந்தள்ளிவிட்டு நீங்கள் கலை-இலக்கியம் பற்றிப் பேச முடியாது,” என்ற பத்தி, மார்க்சியத்தின் பேரண்டத்தன்மையை அழகாகப் புரியவைக்கிறது.கார்ப்பரேட் உலகிற்கேற்ற காவி அரசியலைப் புகட்டுகிற பொருளாதார வல்லுநர் எஸ். குருமூர்த்தி ‘மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதி மார்க்கெட்டில் விட்டுள்ளார்.
              இப்படிப்பட்டவர்கள் இப்போதும் மார்க்சை எண்ணி மிரள்வது பற்றிச் சொல்கிறது ‘எஸ். குருமூர்த்திக்கு பதில்’ என்ற மூன்று பாகங்களைக் கொண்ட நீண்ட கட்டுரை. மனதைத் திறந்து வைத்துக்கொண்டு விவாதிக்க முன்வருவோரால் அந்தக் கட்டுரை வரவேற்கப்படும்; அறிவுத்தளத்திலும் போராட்டக்களத்திலும் இயங்கிடும் தோழர்களுக்கு ஒரு கையேடாகவும் பயன்படும். குருமூர்த்திகள் துதிக்கிற இந்தியபாணி முதலாளித்துவமானது, மொத்தத்தில் சாதியமும் ஆணாதிக்கமும் நிறைந்த வருணாசிரம முதலாளித்துவமே என்று காட்டுகிற பகுதி, மதவாதம் தோய்ந்த சுரண்டல் கூட்டின் ஒப்பனைகளைக் கலைத்துப் போடுகிறது.
         அந்த வருணாசிரமத்தை அன்றைக்குத் தமிழக மண்ணில் வளர்த்ததே ராஜராஜ சோழனின் கைங்கரியம் என்பதன் மீது வெளிச்சம் பாய்ச்சுகிற மற்றொரு கட்டுரை, அந்த மன்னனைப் பற்றி கட்டப்பட்டுள்ள, சில பகுத்தறிவாளர்களாலும் நம்பப்படுகிற பொய்மைகளை அசைத்து அப்புறப்படுத்துகிறது. பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர் பிராமணியத்தை புதிய சூழல்களுக்கேற்ப நியாயப்படுத்தியவர்களே என்று தனது ‘காலந்தோறும் பிராமணியம்’ நூலில் எழுதியிருக்கிறார். அது பற்றிய ஒரு நேர் காணல் கேள்விக்கு இவர் அளித்துள்ள பதில், அந்த நூல் தொகுப்பை முழுமையாகப் படிக்கத் தூண்டுகிறது.
            அயோத்திதாசர், சிங்காரவேலர், அம்பேத்கர், பெரியார் என இந்திய - தமிழக சமுதாய வளர்ச்சியில் தலையாய பங்களித்தோர் பற்றிய கட்டுரைகளும் அவ்வாறு விரிவாகப் படித்தறியும் முனைப்பை ஏற்படுத்துகின்றன. “எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்துவதாலே இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை மாதோ”-என்ற கம்பன் கனவோடு இணைத்து இந்த வாதங்களை முன்வைத்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. ஆசிரியர் தான் கூறும் விளக்கங்களே இறுதியானவை என்று முடித்துக்கொள்ளவில்லை என்பது மற்றொரு சிறப்பு.  தனது பதில்கள் “சரியானவை தானா  என்று வாசகர்கள் யோசிக்கலாம். அந்த யோசனை மார்க்சியத்தை மேலும் கற்பது, தமிழக - இந்திய வரலாற்றை மேலும் வாசிப்பது, நடப்பு வாழ்வை மேலும் கூர்ந்து நோக்குவது என்பதற்கு இட்டுச் செல்லுமேயானால் அதுவே இந்த நூலின் வெற்றி என்பேன்,” என்கிறார். நூலைப் படிக்கிற ஒவ்வொருவரும் அந்த வெற்றிக்கு சாட்சியமாவார்கள்.

மண்ணுக்கேற்ற மார்க்சியம்
ஆசிரியர்: அருணன்
வெளியீடு :
வசந்தம் வெளியீட்டகம், 
69-24 ஏ, அனுமார் கோயில் படித்துறை, 
சிம்மக்கல், மதுரை - 625001. 
தொலைபேசி: 0452-2625555, 2641997
மின்னஞ்சல்: vasanthamtamil@yahoo.co.in
பக்கங்கள்: 752 விலை ரூ.400
நன்றி :      
       

திங்கள், 18 நவம்பர், 2013

சச்சின் கிரிக்கெட்டில் ரத்தினம் தான், ஆனால்.....?

 கட்டுரையாளர் : அ. குமரேசன்,            
                                 பத்திரிக்கையாளர்                       
           இந்திய விளையாட்டுக் களத்தில், அதிலும் கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் நிச்சயமாக ஒரு ஒளிவீசும் ரத்தினம்தான். தனது ஆட்டமுறைக்கு என உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிற, இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களை பக்தர்களாகவே பெற்றிருக்கிறவர் அவர்.
              ‘பாரத ரத்னா’ விருதினை அரசு அறிவிக்காமலே விட்டிருந்தாலும் அவருக்கு அந்த அன்பை விடவும் பெரிய விருது எதுவும் இருக்கப்போவதில்லை. இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருப்பதில், அவரது திறமையும் நுட்பமும் மிக்க பங்களிப்பு தலையாய ஒன்று. அதனால்தான், ஓய்வு பெறுவதற்கு முந்தைய தனது கடைசி ஆட்டத்தின் முடிவில், அவ்வளவு பெரும் மக்கள் திரள் முன்னிலையில் அவர் கண்ணீருடன் விடைபெற்றபோது, அதைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே உணர்ச்சிவசப்பட்டார்கள்.
              பொதுவாக இப்படிப்பட்ட விருதுகள் ஒருவர் ஓய்ந்து ஒதுங்கி மறக்கப்பட்ட பிறகுதான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சச்சின் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறபோதே, துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறபோதே, இளமை வயதின் விளிம்பில் நிற்கிறபோதே இந்த விருது வழங்கப்படுகிறது. அதுவும், அவர் அவ்வாறு ஓய்வு பெற்ற நாளிலேயே பிரதமர் இதை அறிவிக்கிறார்.
            இது நம் நாட்டிற்கு ஒரு மாறுபட்ட அனுபவம்தான்.ஆயினும், நாட்டின் மிக உயர்ந்த விருது சச்சினுக்கு வழங்கப்படுவதில் உள்ள சில உறுத்தல்களைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது.முதலில் சொல்ல வேண்டியது, இவரோடு சேர்த்து ‘பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டுள்ள மூத்த அறிவியலாளர் சி.என்.ஆர். ராவ் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பது.
        திட வேதியல் துறை அறிவியலாளரான அவர் இங்கே அடிப்படை வேதியியல் கல்வியைக் கட்டிக்காப்பதில் முன்னின்றவர். அவரது ஆராய்ச்சி நூல்களும், பல ஆய்வு நிறுவனங்களை உருவாக்கிய முயற்சிகளும் நாட்டின் அறிவியல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.
            இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அவருக்கு மட்டுமேயாக இப்போது இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தால், அதையொட்டி அவரைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் நாடு முழுவதும் இப்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால், சச்சின் கழுத்தில் போடப்படும் மாலைகளின் குவியலுக்கு அப்பால் அறிவியலாளரின் சிறப்பு ஓரங்கட்டப்படுவது ஆரோக்கியமானதுதானா?சச்சினுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே கோரிக்கைகள் எழுந்தன.
             அடுத்தடுத்து விரைவாக, விளையாட்டுத் துறையினருக்கும் வழங்கத்தக்க வகையில் பாரத ரத்னா விதிகள் திருத்தப்பட்டதிலும், அவர் ஓய்வுபெறுவதையொட்டி உருவான உணர்ச்சிமயமான சூழலுக்காகக் காத்திருந்து அறிவிக்கப்பட்டதிலும் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழவே செய்கிறது.
               அரசியல் உள்நோக்கம்தான் இருக்கிறது என்று நேரடியாகக் கூற முடியாவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பைப் பெற்றவருக்கு இந்த விருதை அளித்ததன் மூலம் அந்தக் கோடிக்கணக்கானோரின் ஆதரவைத் தன் பக்கம் இழுக்க முடியாதா என்ற உள்நோக்கம் இல்லவே இல்லை என்றும் கூறிவிட முடியாது. இப்படிப்பட்ட உத்திகளில் காங்கிரசார் கரைகண்டவர்களாயிற்றே!ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான சேவைகள் என்ற அடிப்படையில் இல்லாமல், தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டும் நாட்டின் உயர்ந்த விருதை வழங்குவது பற்றிய வினாக்களும் புறப்படத்தான் செய்கின்றன.
               நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சச்சின் அங்கே மக்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறாரா? விளையாட்டுத்துறையில் மலிந்திருக்கிற பிரச்சனைகள் பற்றியோ, நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் பற்றியோ கருத்துக் கூறியிருக்கிறாரா? நாடாளுமன்றத்திற்கு வெளியே, ஐபிஎல் தில்லுமுல்லுகள் உள்ளிட்ட விவகாரங்களிலும் இதர சமூக நிகழ்ச்சிப்போக்குகளிலும் எந்த அளவுக்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்? 1992ல் அயோத்தி அக்கிரமத்தைத் தொடர்ந்து மும்பையில் மதவெறிக் கும்பல் சூலாயுதங்களோடு தெருவில் இறங்கியபோது, சுனில் கவாஸ்கர் அவர்களைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களுக்கு அரணாக நின்றது நினைவுக்கு வருகிறது.
   கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தக விளம்பரச் சரக்காகவும் தன்னை உருவாக்கிக்கொண்டவர் சச்சின். விளையாட்டின் மூலமாகவும் விளம்பரங்களின் மூலமாகவும் கோடிக்கணக்கில் பணம் ஈட்டினார். அதெல்லாம் அவரது திறமைக்கும் புகழுக்கும் கிடைத்த அங்கீகாரங்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அவரை அனைத்து இளைஞர்களுக்குமான முன்னுதாரணமாகக் கொள்ள முடியுமா? தலையிடத் துடிக்கும் சமூக அக்கறையோ தட்டிக் கேட்கும் அரசியல் விழிப்புணர்வோ இல்லாத தலைமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே கார்ப்பரேட் பிரம்மாக்களின் திட்டம்.
           அதைக் கட்டமைக்கிற வேலைக்கு இந்த நட்சத்திரமும் பயன்படுகிறாரே என்ற ஆதங்கம், சமுதாயத்தை அரசியல்படுத்த விரும்புகிற எவருக்கும் ஏற்படவே செய்யும்.கிரிக்கெட் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு, நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளும் தேசிய விளையாட்டும் கூட கடைக்கோடிக்கு ஒதுக்கப்பட்டதிலும், ஒற்றை ரசனையில் சமுதாயத்தை வார்க்கிற உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் கனவான்களின் செயல்திட்டம் இருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ அதற்கும் சச்சின் போன்றோர் உதவுகிறார்கள்.இதைச் சொல்வதால், சச்சின் என்ற கிரிக்கெட் நட்சத்திரத்தின் தனித்துவமான அசத்தல் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. விளையாட்டுத் துறை சார்ந்த அந்தச் சாதனைகளுக்கான உயர்ந்த அங்கீகாரம், இப்படிப்பட்ட விருதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
       ஏன், விளையாட்டுத்துறையைப் பிடித்துள்ள பல்வேறு நோய்களிலிருந்து அதனை மீட்பதற்கான உயர் பொறுப்புகளை, அதற்கான வயது இருக்கிறபோதே வழங்கலாமே? அது அவரைப் பெருமைப்படுத்தியதாகவும் இருக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிசிசிஐ) உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளை மீட்கலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துமே...அணியில் விளையாடிக்கொண்டிருந்தவர் என்ற முறையில் பல்வேறு பிரச்சனைகளில் அவரது மவுனம் புரிந்துகொள்ளத் தக்கதுதான்.
         இனியேனும் சமுதாயத்தைக் கண்கொண்டு பார்ப்பாரா....? மனம் திறந்து பேசுவாரா...? மாற்றமுயல்வோருக்குத் தோள் கொடுப்பாரா...? அப்படியெல்லாம் செய்வாரானால் ரத்தினம் பல மடங்கு ஒளி வீசும். பாரதம் பார்க்கத்தான் போகிறது.
நன்றி :