திங்கள், 31 மார்ச், 2014

''கல்கி'' பத்திரிகையின் பார்வையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்....!...


நன்றி: கல்கி (ஏப்ரல் 6)

மிகச்சிறந்த வேட்பாளர்...!

              ‘கம்யூனிச இயக்கத்தின் தொழிலாளர் நலன் மற்றும் தொழில் வளர்ச்சிக்கென அடித்தளமாக அமைந்திருந்தன, தோழர் அனந்த நம்பியார் மற்றும் தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடுத்தடுத்து பணியாற்றிய மக்களவைக் காலங்கள். 1962லிருந்து 1980வரையிலான பதினெட்டு ஆண்டுகளில் திருச்சியில் பாய்லர் ஆலைi மற்றும் அதனைச் சார்ந்த சிறு தொழிற்சாலைகள், துப்பாக்கித் தொழிற்சாலை ஆகியவை அமைய இவர்களின் முயற்சிகள் இன்றியமையாததாக இருந்துள்ளன. பொன்மலை ரயில்வே பணிமனை இங்கு வந்து அமைவதற்கும், பின்னாளில் இங்கிருந்து வேறிடம் செல்ல இருந்தபோது அதனைத் தடுத்து நிறுத்தியதும் கம்யூனிஸ்ட் எம்பிக்களின் சாதனை.இன்றைக்கு திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறு தொழிற்சாலை கள் பரந்து விரிந்து இயங்கி வருவதற்கு மேற்குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் எம்.பிக்களின் தொடர்முயற்சிகளை மறுக்க முடியாதது........சிட்டிங் எம்.பி.யான அதிமுகவின் ப.குமார், தொகுதிக்குள் பெயர் சொல்லிக்கும்படியாக ஏதும் செய்யவில்லை என்கின்றனர் வாக்காளர்கள். இந்நிலையில் அதிமுக வேட்பாளராக அவரே திருச்சியில் மீண்டும் போட்டியிடுகிறார். “திருச்சி பார்லிமென்ட் தொகுதியின் இன்றையவளர்ச்சியும் நாளை வளர்ச்சியும் பெரிய கேள்விக்குறிதான். போட்டியிடுவதிலேயே மிகச்சிறந்த வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஸ்ரீதர்....” என்கிறார் நடுநிலையாளர் ஒருவர்.

இந்த எளிமை ரொம்ப பிடிச்சிருக்க...!

                 “இதுவரைக்குமான தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின், முதல் பெண் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ச்செல்விதான்.பொதுவாக வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் அந்தந்தக் கட்சிகளின் செயல்வீரர்கள் மற்றும் அறிமுகக் கூட்டங்களுக்கு சாரை சாரையாகக் கார்கள் அணிவகுத்துச் செல்லும். அந்த ஏரியா முழுவதும் கார்களாக இருக்கும். ஆனால், மார்க்சிஸ்ட் வேட்பாளர் தமிழ்ச்செல்வி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், இரு சக்கர வாகனங்களும் சைக்கிள்களுமே அணி வகுத்துச் செல்கின்றன. தொகுதிவாசிகளுக்கு இந்த எளிமை ரொம்பப் பிடிச்சிருக்காம்!

நிரந்தர ஆதரவு உண்டு....!

                     “திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி. முப்பத்தியாறு ஆண்டு காலப் பொதுவுடைமைக் கட்சி அனுபவம் மிக்கவர். பல போராட்டங்களில் பங்குபெற்றவர். பஞ்சாலை மற்றும் தோல் தொழிற்சாலைகள் மிகுந்த இத்தொகுதியில் இரண்டு கம்யூனிஸ்ட்களுக்கும் நிரந்தர ஆதரவு உண்டு. பழனியில் தலித்களுக்காக இடம்பெற்றுத்தர தற்போது வரை போராடி வருபவர்

கருத்துகள் இல்லை: