புதன், 24 ஏப்ரல், 2013

முதல்ல இவரை மக்கள் எம்.பி ஆக்குறாங்களான்னு பார்ப்போம்....!


         சிவகங்கை சீமான் சிதம்பரம் தனக்கு பிரதமர் ஆகும் எண்ணமில்லை. அதற்கு ஆசைப்படவில்லை என்று ஒரு கூட்டத்தில் இவராகவே தன்னிச்சையாக பேசி தன்னுடைய ஆசையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசைப்படட்டும் வேண்டாம்ன்னு சொல்லவில்லை. இவரு பிரதமரா ஆவது இருக்கட்டும். முதல்ல இவரு எம்.பி ஆவாரான்னே சந்தேகமா இருக்கு. 2009 - ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலிலேயே சிவகங்கை மக்கள் இவருக்கு தண்ணி காட்டிட்டாங்க. இந்த முறை சிவகங்கை என்றில்லை. ஏன் தமிழ்நாடு  மட்டுமல்ல... இந்தியாவில் எந்த மூலையில் இவர் நின்றாலும் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார். அதுமட்டுமல்ல மக்கள் இவரை துரத்தி துரத்தி அடிப்பார்கள். மக்களுக்கு இவரு அவ்வளவு ''நல்லது'' செய்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: