ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

என்னை கவர்ந்த பாடகர் P. B. ஸ்ரீநிவாஸ் - நெஞ்சம் மறப்பதில்லை....!

      
         காலங்களில் அவர் வசந்தம்... பாடகர்களில் அவர் பி. பி. ஸ்ரீநிவாஸ். அவருக்கு நிகர் அவரே. காற்றில் மிதந்து வரும் மென்மையான குரல். அவர் பாடிய அத்துனைப் பாடல்களும் திகட்டாமல் தேனாய் இனிக்கும் பாடல்கள். வயதான காலத்திலும் கடைசிவரையில் பாடிக்கொண்டே இருந்தவர்.
         தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர். என் நெஞ்சம் மறக்கமுடியாத என் உள்ளம் கவர்ந்த பாடகர். என் சிறுவயதிலிருந்தே என்னுடைய குரலும் அவரது குரலை ஒத்திருப்பதால் நான் சாதாரணமாகவே அவரது பாடல்களை வீட்டில் பாடிக்கொண்டே இருப்பேன். ஒரு சில மேடைகளிலும் அவரது பாடல்களை பாடியிருக்கிறேன்.
         அந்த காணக்குயில் இன்று பாடுவதை நிறுத்திக்கொண்டது. ஆம்... அந்த கலைமாமணி - இசைமாமணி பி. பி. எஸ். இன்று மறைந்துவிட்டார். என்றாலும் அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
        மறைந்த இசை மேதைக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி....!

கருத்துகள் இல்லை: