சனி, 27 ஏப்ரல், 2013

பிரதமர் ஆசையில் ஒட்டுரிமையே இல்லாத சாமியார்களின் ஆதரவைத் தேடும் நரேந்திர மோடி....!


          பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை முடிவெடுப்பதற்கு  முன்பே தனக்குத் தானே ராஜாவாக முடி சூடிக்கொண்டு, மதவெறியோடு பதவி பைத்தியமும் பிடித்து அலைகிறார் நரேந்திர மோடி. போகிறப் போக்கைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச நாளுல சட்டையை பிய்த்துக் கொண்டு அலைவார் போலிருக்கிறது. பிரதமராக வேண்டும் என்ற ஆசையில யாருகிட்ட போய் ஓட்டுக் கேட்கிறதுன்னு கூட தெரியாம அலைகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவரு சட்டைய பிய்த்துக்கொண்டு அலையறதுக்கு ரொம்ப நாள் ஆகாது.
         நீங்க கவனிச்சிங்களா...? இவரு பிரதமர் ஆகணும்னா யாருகிட்ட போய் ஓட்டுக் கேட்கணும்...? ஓட்டுரிமையுள்ள பொது மக்கள்கிட்ட அல்லவா போய் பேசணும்...? ஆனா இவரு யாருகிட்டத் தெரியுமா பேசுறாரு....? இந்தியாவில் ஓட்டுரிமையே இல்லாத அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் இங்கிருந்தபடியே வீடியோ கான்பெரென்சிங்கில் பேசுறாரு.  இந்தியாவில் ஓட்டுரிமையே இல்லாத அமெரிக்க எம். பி -க்களை இவரே காசுக் கொடுத்து செலவு பண்ணி இந்தியாவிற்கு வரவழைத்து பேசுறாரு.
        நேற்று என்ன செய்திருக்கிறார் என்றால்...? அரித்துவார் போயி அங்கிருக்கிற போலி சாமியார்களையும், பிச்சைக்காரர்களையும் கூட்டி வைத்துக்கொண்டு பேசியிருக்கிறார். இவங்களெல்லாம் யாருன்னா...? care of platform. காசி - அரித்துவார் போன்ற இடங்களில் ஓட்டுரிமை இல்லாமல் பிச்சை எடுத்து திரிந்து கொண்டிருக்கும் போலி சாமியார்கள். இவங்ககிட்ட போயி ஒட்டு கேட்டா இவரு எப்படி பிரதமராவது....? அவங்க என்ன சொல்லிட்டாங்கன்னா...? எங்ககிட்ட  ஓட்டை கேட்கத்தானே வந்தன்னு சொல்லிபுட்டு, அவங்க கையிலிருந்த ''திருவோட்டை'' கொடுத்து ''எங்க பக்கத்திலேயே உட்காரு. நீ நல்லா தான் பேசுற'' என்று சொல்லியிருக்காங்க. பின்ன என்னங்க... அவங்களெல்லாம் முன்ன பின்ன பேப்பரா படிச்சிருக்கப் போறாங்க... அவங்ககிட்டப் போயி, ''கடந்த கடந்த 12 ஆண்டுகளில் குஜராத்துல கலவரங்களே நடக்கவில்லை. அமைதியா இருக்கிறது'' என்று சொன்னா அவங்க என்ன செய்வாங்க. மோடி ரொம்ப நல்லவரு போலிருக்கிறதுன்னு அவங்ககிட்ட இருக்கிற திருவோட்டை எடுத்து அவரு கையில கொடுத்துட்டாங்க. இப்பதாங்க நீங்க பொருத்தமா இருக்கீங்கன்னு சொல்லிட்டாங்க.
        இப்படியாக நரேந்திர மோடி ஓட்டில்லாதவன் கிட்டல்லாம் ''நான் பிரதமராகனும்ன்னு'' சொல்லிக்கிட்டு அலையறாரு. போகிறப்போக்கைப் பார்த்தால் சின்னக்குழந்தைகளை எல்லாம் உட்கார வெச்சிகிட்டு பேசிகிட்டு இருப்பாரு போலிருக்கிறது. நரேந்திர மோடி கூடிய சீக்கிரம் சட்டைய பிச்சிக்கிட்டு அலையப்போறத நாம பாக்கத்தான் போகிறோம்.

கருத்துகள் இல்லை: