வெள்ளி, 28 அக்டோபர், 2011

13 - வது உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சி மாநாடு...!

                        13 - ஆவது சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சி மாநாடு வருகிற டிசம்பர் 9 முதல் 11 - ஆம் தேதி வரை கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்சில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகத்திற்கே கலங்கரைவிளக்காய் விளங்கிய சோவித் யூனியன் சிதறுண்டு இருபது ஆண்டுகள் கழிந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் முதலாளித்துவத்துக்கு எதிரான மக்களின் எழுச்சி தானாக ஓங்கி ஒலிக்கும் சூழ்நிலையில்  இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதிலும் ''சோசலிசமே எதிர்காலம்'' என்ற முழக்கத்தோடு  இந்த மாநாடு  நடத்தப்படுவது என்பது தற்போதைய சூழ்நிலைக்கு மிகப்பொருத்தமானதாகும்.
                 இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, மாநாட்டின் செயற்குழுக் கூட்டம்  சென்ற அக்டோபர் 22 - 23 தேதிகளில் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ருட்டில் நடைபெற்றது. லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி தான் இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் லெபனான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி, ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, போர்ச்சுகீசியக் கம்யூனிஸ்ட் கட்சி, தென்னாப்பிரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிரியா கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களோடு இந்தியாவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீதாராம் யெச்சூரியும் கலந்துகொண்டார். 
              மாநாட்டின் சிறப்பான ஏற்பாடுகளைப் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 
             இந்த மாநாடு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான... உலகமயத்திற்கு எதிரான... முதலாளித்துவத்துக்கு எதிரான உலக மக்களின் சக்திகளை திரட்டுவதற்கும், உலக மக்களை சோசலிசப் பாதையில் அழைத்துச்செல்வதற்கும் சரியான முறையில் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை: