ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஜெயலலிதா சொன்ன ''அமைதிப்பூங்கா'' இது தானோ..?

                    தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்களைப் பார்க்கும் போது, தமிழக மக்கள் எவ்வளவு பாவப்பட்டவர்கள் என்று நமக்குத் தோன்றும். முன்னாள் - இந்நாள் முதலமைச்சர்களும் ஒருப்பக்கம் குழாயடி சண்டைப் போட்டுக்கொள்வது வேடிக்கையாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சரம் சரமாய் பூக்களை தமிழக மக்களின் காதுகளில் சுற்றுவதைப் பார்க்கும் போது தான் இந்த மக்கள் ரொம்ப பாவப்பட்டவர்கள் என்று தோன்றுகிறது. அவ்வளவு பூ சுத்துறாங்கப்பா... தாங்கல... ம்ம்ம்... முடியல... அழுதுடுவேன்... 
             ''இந்த ஜெனங்க ரொம்ப நல்லவங்க.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க''..ன்னு இந்த ரெண்டு பேரும் சேர்ந்து இவ்வளவு போடு போடுறாங்க..
        ''சட்டம்  - ஒழுங்கைப் பொறுத்த வரையில், கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய ''காவல் துறை'' தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக, அமளிக் காடாக விளங்கிய தமிழகத்தை நான்கே மாதங்களில் அமைதிப் பூங்காவாக, மாற்றிக் காட்டி உள்ளேன்'' என்று உள்ளாட்சி தேர்தல் கூட்டங்களில்  வாய் கிழியப் பேசும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொன்ன அமைதிப்பூங்கா இது தானோ...?
                 அமைதிப்பூங்கா என்றால் இப்படித்தான் இருக்குமோ..?
   பரமக்குடியில் காவல் துறையினர், துப்பாக்கிச்  சூட்டில் மரணமடைந்த தன் நண்பனை ''அன்போடு'' தூக்கிவருகிறார்கள் 
''மக்களின் நண்பர்கள்'' தன் நண்பர்களை ''அன்பாய்'' துப்பாக்கியால் சுட்டு கிடத்தி வைத்திருக்கிறார்கள் 
முன்பு ரௌடிகளின் நண்பர்களாய் இருந்தவர்கள் இப்போது மக்களுக்கு எதிராக ரௌடிகளாய் மாறியிருக்கும் காவலர்கள் 
காவல் துறையினர் தன் நண்பர்களோடு ஓடிபிடித்து விளையாடுகிறார்கள்
தன் நண்பர்களை  துப்பாக்கி  குண்டுகளால் துளைத்து  ஆனந்தமாய் விளையாடுகிறார்கள்.

தன் நண்பர்களை லத்திக் கம்பால் விரட்டி விரட்டியடிக்கிறார்கள்

சேலத்தில் மூடப்பட்ட ஏழை மக்கள் பயன்படுத்தும்  மருத்துவமனையை திறக்கக்கோரி போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களை சினிமா வில்லனை போல் அடிக்கும் ''மக்களின் நண்பன்''
குற்றவாளிகளைக் கூட விட்டுவிடுவார்கள்.. ஆனால் போராளிகளின் கழுத்தை நெருக்குவார்கள் இந்த ''மக்களின் நண்பர்கள்''
                            கோவையில் வழக்கறிஞர் ஒருவரை ''மக்களின் நண்பர்களான'' காவல் துறையினர் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்கள்  






































               அமைதிப்பூங்கா என்றால் ஜெயலலிதா அகராதியில் இது தான் அர்த்தமோ..?
               ஆட்சி மாறினாலும்... முதல்வர் மாறினாலும்... அமைச்சர்கள் மாறினாலும்... காவல் துறையின் குணம் மட்டும் மாறாது என்பதற்கு இந்நாள் - முன்னாள் முதல்வர்களின் ஆட்சிகளின் லட்சணமே ஒரு சான்றாகும்...

கருத்துகள் இல்லை: