வெள்ளி, 8 ஜூலை, 2011

கமல்ஹாசனின் சமூக பார்வை...

                 உறுப்பு தானங்கள் செய்வது அதிகரித்து வரும் வேளையில், அது பற்றிய படம் ஒன்றை எடுக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
                 நாடு முழுவதும் உறுப்பு தானம் வழங்குவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உறுப்பு தானங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வந்துள்ளது. இந்திய நாட்டின் மாபெரும் தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தவர்களில் ஒருவருமான ஜோதிபாசுவின் உடல்தானம், மேற்கு வங்கத்தில் பெரும் எழுச்சியையே ஏற்படுத்தியது.
               தமிழகத்தில் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், நடைமுறையில் தானம் செய்வதில் தயக்கம் இருக்கவே செய்கிறது. அண்மையில் கேரளா சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் உறுப்பு தானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ''டிராபிக்'' என்ற மலையாளப்படத்தின் கதை தனக்குப் பிடித்துள்ளது என்று கூறி அதன் உரிமையை வாங்கியுள்ளார்.
இந்தக் கதை தமிழில் திரைப்படமாக உருவாகப்போகிறது. அதைத் தயாரிக்க முடிவு செய்துள்ள கமல்ஹாசன், தான் நடிக்காமல் வேறு நடிகர்களை வைத்து அப்படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார். உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தும் ஆர்வலர்கள் மத்தியில் இந்த செய்தி நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
                 கமல்ஹாசனின் சமூகப்பார்வையை ''ஆயுத எழுத்து'' நெஞ்சார பாராட்டுகிறது          

1 கருத்து:

asokan muthusamy சொன்னது…

கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள்.