சனி, 16 ஜூலை, 2011

இதைப் படித்தும் உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் ..?

                தொட்டுத் தொடரும் பாரம்பரியமாக காங்கிரசும் ஊழலும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. குறுகிய காலமாக இருந்தாலும் ஐ.பி.எல்.,ஏலம் முறைகேடு, ஸ்பெக்ட்ரம் ஊழல், எஸ்-பாண்ட் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், கே.ஜி ஆற்றுப்படுகை ஊழல் என மெகா சாதனையை நிகழ்த்தியுள்ளது.
               கிராமப்புற தொலைபேசி சேவைக்காக மத்திய அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி ரிலையன்ஸ் நிறுவனம் கிராமப்புற சேவையை செய்யாமல் ஒப்பந்த விதிமுறைகளை மீறி பாதியில் நிறுத்திக் கொண்டது. இதையடுத்து மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை சட்டத்துறையின் உதவியுடன் தொலைத்தொடர்புத்துறை வசூலிக்க வேண்டும். ஆனால் மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச் சர் கபில்சிபல் 650 கோடி ரூபாய் அபராதத்தை ரூ.5 கோடியாக குறைத்து தனது விசுவாசத்தை காட்டியுள்ளார். அதன் மூலம் அரசுக்கு ரூ.645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய பணத்தை ரிலையன்ஸூக்கு தூக்கிக் கொடுத்ததன் உள் நோக்கம் என்ன? அதில் கபில்சிபலுக்கு ஏன் அவ்வளவு அக்கறை? அரசு கஜானாவில் சேரவேண்டிய பணம் ரிலையன்ஸூக்கு மட்டும் திருப்பிவிடப்பட்டதா? அல்லது கபில்சிபல் கணக்கிற்கும் திருப்பி விடப்பட்டிருக்கிறதா? என்பதுள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
                 ஆனால் இவ்வளவு அப்பட்டமாக நடந்துள்ள மோசடியில் நீதிமன்றம் “இவ்வழக்கில் தலையிட விரும்பவில்லை எனவும், உத்தரவு ஏதும் பிறப்பிக்க விரும்பவில்லை” எனவும் கூறியிருக் கிறது. இப்படி நீதிமன்றமே ரிலையன்ஸ் விஷ யத்தில் ஒதுங்கிக் கொள்வது சரியா? சாமானி யனுக்கு ஒரு நீதி, பெரும் முதலாளிக்கு ஒரு நீதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் ஏட்டில் மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இவ்வளவு தூரம் அம்பலப்படுத்தியதில் உச்ச நீதிமன்றத்திற்கும் முக்கிய பங்குண்டு. ஸ்பெக்ட் ரம் வழக்கில் உச்சநீதிமன்றம் எடுத்த நிலையை ரிலையன்ஸ் நடத்தி வரும் மோசடி விஷயங்களி லும் எடுத்தால் மத்திய அரசின் முக்கிய அமைச் சர்கள் மட்டுமல்ல; பிரதமர் கூட தப்புவது கடினமே!
              ஏற்கனவே வெளிநாட்டு அழைப்புகளை லோக்கல் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது. அப்போதும் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
             அதே போல் கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு அரங்கேற்றப்பட்டது. ரிலையன்ஸூக்காக அரசின் விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள் என்று தணிக்கைத் துறை கூட கேள்வி எழுப்பியிருந்தது.
           தொழிலதிபர்களும் அரசும் சேர்ந்து தேசத்தின் சொத்தை கொள்ளையடிப்பதை வலுவான மக்கள் இயக்கத்தின் மூலமே தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை: