புதன், 8 பிப்ரவரி, 2012

பொறுக்கிகளையும் புறம்போக்குகளையும் சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படித்தான்...!

           பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில  சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த  மொபைல்போனில் ஆபாச படத்தைப்  பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விஷயமாகும். அது மட்டுமல்ல, சபையில்   அவர் அருகில் அமர்ந்திருந்த  ''பெண்கள் நலத்துறை'' அமைச்சர் சி.சி.பாட்டீலும் அவரோடு சேர்ந்துகொண்டு உற்சாகமாகப் பார்த்தார் என்பதும் வெட்கக்கேடான விஷயமாகும். 
                மக்களைப்பற்றிய சிந்தனை இல்லாதவர்களை - ஒழுக்கக்கேடானவர்களை - ஒழுன்கீனமானவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படி தான் நடக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும். இந்த மிருகங்களின் செயல்களை கண்டிக்காமல் - தண்டிக்காமல்  தொடர்ந்து சட்டமன்றத்தில் அனுமதித்தால், சட்டசபையிலேயே காபரே நடனம் கூட கூசாமல் பார்க்கும் துணிச்சல் இவர்களுக்கு வந்துவிடும். இவர்களையெல்லாம், சட்டசபையிலிருந்து மட்டுமல்ல  அரசியலை விட்டே மக்கள் தூக்கி எறியவேண்டும். இவர்கள் சமூகத்தில் விஷப்பாம்புகள். 

கருத்துகள் இல்லை: