செவ்வாய், 14 ஜூன், 2011

ஊழலுக்கு எதிராக களம் இறங்குவோம்: பிரகாஷ் காரத்

                பெரு முதலாளிகள் - ஆளும் அரசியல்வாதிகள் - அதிகாரவர்க்கத்தினர் ஆகியோருக்கு இடையே நிலவும் மிக மோசமான தொடர்புகள் காரணமாக ஊழல் என்பது ஒரு நிறு வனமாகவே மாற்றப்பட்டுள்ளது என்றும், இந்த 
உறவின் விளைவே 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டினார்.

              மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் 
ஹைதராபாத்தில் ஜூன் 11, 12ம்தேதி களில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அரசின் உயர்மட்டங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தியதிலும், அவற்றுக்கு எதிராக மிகப் பெரும் போராட்டங்களை நடத்தியதிலும் நாட்டிலேயே இடதுசாரி கட்சிகளுக்கே மகத்தான பங்கு உண்டு என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நாட்டிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட் சிப் பொறுப்புக்கு வந்த இடதுசாரி பிரதிநிதிகள் மட்டுமே ஊழல் கறைபடியாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

                நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவதன் விளைவாக பெருமுதலாளிகள் - அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கத்தினர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோசமான உறவு, ஊழலை ஒரு சட்டப்பூர்வமான நிறுவனமாக மாற்றிவிட்டது என்று சாடிய பிரகாஷ் காரத், ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய மாபெரும் இயக்கத்தை நடத்திட இடதுசாரிக் கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசித்து முடிவெடுக்கும் என்று குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிராக அமைக்கப்படும் இடது சாரி மேடை, தேர்தல் சீர்திருத்தங்களுக்காகவும், நீதித்துறை சீர்திருத்தங்களுக்காகவும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

                 ஊழல் மட்டுமின்றி கறுப்புப் பணத்திற்கு எதிராகவும் இடதுசாரிக் 
கட்சிகளோடு இணைந்து தீவிரமான போராட்டத்தை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி ; தீக்கதிர்   

கருத்துகள் இல்லை: