வெள்ளி, 21 நவம்பர், 2014

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியா வருகை...!


                     பாரதீய ஜனதாக்கட்சி பதவியேற்ற நாளிலிருந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு  ''மாதந்தோறும் ஒரு வெளிநாட்டுப்பயணம்'' என்றால், வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சுஷ்மா சுவராஜ்க்கோ ''வாரந்தோறும் ஒரு வெளிநாட்டுப்பயணம்'' என்று இந்த இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு வெளிநாட்டுப் பயணமாக பறந்து கொண்டிருக்கிறார்கள்.
                   வெளிநாடுகளுக்கு எல்லாம் பறந்து பறந்து சென்று அந்நாட்டு மக்களை எல்லாம் ஏதாவது ''சாகசங்களை'' செய்து கவர்ந்து தன்னை உலக மக்களை கவர்ந்த ''உலக நாயகனாக'' காட்டிக்கொள்ளவேண்டும் என்ற பேராசையில் மாதம் ஒரு வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். மோடி பிரதமராக பதவியேற்று ஆறு மாதங்களே ஆகின்றன. இந்த காலத்தில் அவர்  பூடான், நேபாளம், பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி என எட்டு நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். பயணம் செய்த நாட்கள் இந்த ஆறு மாதத்தில் 30 நாட்கள். அதுவும் இவர் மட்டும் தனியாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வாரா...? ஒரு பட்டாளத்தையே அல்லவா அழைத்துச்செல்கிறார். உள்நாட்டில் உழைப்பாளி மக்களை சுரண்டி வருமானத்தையும், செல்வாக்கையும், சொத்துக்களையும் பெருக்கி கொழுத்துப்போன பெருமுதலாளிகள் கூட்டத்தையும், தனக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தையும், அதிகாரிகள் கூட்டத்தையும் அல்லவா தன்னோடு அழைத்துச்செல்கிறார். இவர்கள் அனைவரும் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தான் வெளிநாட்டை சுற்றி வருகிறார்கள். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்களுக்கு அளிக்கப்பட்டுவந்த மானியத்தை வெட்டுவது, தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை ஒத்திப்போடுவது, படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை தடை செய்வது போன்ற சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடும் நரேந்திரமோடி இந்த விஷயத்தில் எந்தவிதமான சிக்கன நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது தான் வெளிப்படையான உண்மை.
              இன்னொரு பக்கம் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சுஷ்மா சுவராஜோ கடந்த ஐந்து மாதங்களில் இன்றுவரை பங்களாதேஷ், பூடான், நேபாளம், மியான்மர், சிங்கப்பூர், வியட்நாம், பஹரைன், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, மொரிஷியஸ், மாலத்தீவுகள் மற்றும் அரபு நாடுகள் என   பதினான்கு நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். வாரந்தோறும் ஒரு வெளிநாட்டுக்கு பயணம் செய்கிறார். இவர் எப்போதாவது இந்தியாவிற்கு வருகை தருவார். அதிலும் குறிப்பாக வெளிநாட்டிற்கு சென்று திரும்பும் மோடி இந்தியா வந்து இறங்கும்போது அவரை விமானநிலையத்தில் வரவேற்பதற்கு இவர் கண்டிப்பாக இந்தியாவில் இருப்பார். சுஷ்மா வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்றால் இவரும் ஒரு கூட்டத்தையே அழைத்துச்செல்வார். இந்த பயணங்களுக்கும் மக்களின் வரிப்பணம் பலகோடி செலவாகிறது. இந்த வெளிநாட்டுப்பயனத்திற்கும் கட்டுப்பாடுகளோ, சிக்கன நடவடிக்கைகளோ கிடையாது என்பதும் வெளிப்படையான உண்மை.
             இவர்கள் மக்களின் வரிப்பணத்தில் ''உலகம் சுற்றும் வாலிபர்கள்''

கருத்துகள் இல்லை: