புதன், 30 அக்டோபர், 2013

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி அனுமானே...!

        
          இந்திய நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திரப்போராட்டத் தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சித்தலைவர்களில் ஒருவருமான  சர்தார் வல்லபாய் பட்டேல் மீது 2014 - ஆம் ஆண்டில் பிரதமாரகத் துடிக்கும் திருவாளர் நரேந்திரமோடிக்கு திடீர் பாசம் - திடீர் பக்தி என்னவென்று புரியவில்லை.
          பட்டேலுக்கு உலகிலேயே மிக உயரமான - பிரமாண்டமான சிலைவைக்க ஏற்பாடுகளை செய்யும் மோடி, பட்டேல் ''இரும்பு மனிதர்'' என்று அழைக்கப்படுவதால்  அந்த சிலையை சிம்பாலிக்கா இரும்பிலேயே செய்வதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இப்படி சிலை வைப்பதற்கும் அவர் புகழ் ''பஜனை'' பாடுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அது எப்படியாவது போகட்டும். 
              மோடி பேச்சில் வழக்கமாக பொய் ''மை'' பூசப்பட்டிருக்கும் என்பதை எல்லோரும் அறிந்ததே. அதிலும் நடந்த வரலாற்றையும் திரித்து மோடி பொய் பொய்யாய் புளுகுவது என்பது ஏற்றத்தக்கதல்ல. சமீபத்தில் ஒரு பேட்டியில் பட்டேலைப் பற்றி பேசும்போதும் ஒரு மாபெரும் பொய்யை சொல்லி, முழு பூசணிக்காயை மறைத்து, வரலாற்றையே மாற்றி எழுத துணிந்திருக்கிறார் என்பது கண்டிக்கத்தக்கது. வரலாற்றை மாற்றி எழுதுவது என்பது ''காவிக்கூட்டத்திற்கு'' கைவந்த கலை. அதைத்தான் இந்த மோடியும் அழகாக செய்கிறார்.
         அவர் என்ன அப்படி சொல்லிவிட்டார் என்று தானே கேட்கிறீர்கள்....? சர்தார் வல்லபாய் பட்டேல் 1950 - ஆம் ஆண்டில்  இந்திய நாட்டின் துணை பிரதமராகவும் பணியாற்றி மறைந்த போது  அன்றைய பிரதமர் நேரு அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லி முழுப் பொய்யை அவிழ்த்துவிட்டு வரலாற்றின் பக்கத்தை மூடி மறைக்கப்பார்க்கிறார் என்பது தான் வரலாறு தெரிந்தவர்களின் கோபமாக வெடித்திருக்கிறது. 
            இங்கு காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது நேருவுக்கோ வக்காலத்து வாங்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மீதும், நேருவின் மீதும் மாற்றுக்கருத்து என்பது எப்போதும் உண்டு. எப்படியாவது பிரதமராக வேண்டும் என்பதற்காக இது மாதிரியான பொய்களையும், புரட்டுகளையும் கிளப்புவது என்பது மோடிக்கு தெரிந்த  ''வித்தை'' தான் என்றாலும், நடந்த ஒரு வரலாற்று நிகழ்வை மறைத்து பொய் சொல்லுவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதை அனுபதித்தால் அடுத்தத் தலைமுறையையும் இந்த தவறான செய்தியே சென்று அடையும். 
              பட்டேலின் இறுதி நிகழ்ச்சியில் நேரு கலந்துகொண்ட காட்சியையும், மொரார்ஜி தேசாய் தன்னுடைய சுயசரிதையில் அந்த நிகழ்ச்சிப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதையும் இங்கே பதிவு செய்துள்ளேன். 

Ex PM of India Morarji Desai's Autobiography - THE STORY OF MY LIFE Volume 1 Page 271


1 கருத்து:

Barari சொன்னது…

workili
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ் தனத்தின் சொந்த காரர்கள் அல்லவா இந்த சங் பரிவார் கும்பல்.அதை மோ (கே) டி சிறப்பாக செய்கிறார் இந்த சரித்திர புரட்டர்.