செவ்வாய், 17 மே, 2011

தமிழக சட்டமன்றத்தில் 20 இடதுசாரி எம்.எல்.ஏ -க்கள் - பெருமையாக இருக்கிறது.

              சமீப சட்டமன்றங்களில் இல்லாத அளவிற்கு இம்முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில்  இருபது இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்த தமிழ்க் மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்து சட்டமன்ற உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்பது பேரும், பார்வர்ட்  ப்ளாக் கட்சியின் சார்பில் ஒருவரும் சட்டமன்றத்திற்கு செல்கிறார்கள். 
                 சட்டமன்றமும் பாராளுமன்றமும் இடதுசாரிகளுக்கு பதவியையும் சுகபோகத்தையும் அனுபவிக்கும் அரண்மனை அல்ல.   சட்டமன்றமோ பாராளுமன்றமோ இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் அவைகளும் மக்களுக்காகப் போராடும் போராட்டக்களம் தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்து உறுப்பினர்கள் உட்பட்ட இருபது இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களின் சட்டமன்ற மக்கள் பணி சிறப்படைய , வெற்றியடைய "ஆயுத எழுத்து" வலைப்பூ நெஞ்சார வாழ்த்துகிறது.
 

3 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

puduvairamji.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி தோழர்..

S.Raman, Vellore சொன்னது…

To be Frank I am not happy as there are two traitors of CPIM are in the list of 20. Though alliance and part of the Left, My heart wished the defeat of Two cpi candidates Lingamuthu, Gudiyatham and Ramachandran, Thali