ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளரை வரவேற்போம்...!

 
                 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் இன்று வரை ஆறு நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இறுதி நாளான இன்று வரும் மூன்று ஆண்டுகளுக்கான கட்சியின் புதிய மத்தியக்குழு உறுப்பினர்களையும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தோழர்.சீத்தாராம் யெச்சூரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் அமைப்பு விதிப்படி ஒருவர் மூன்று முறை மட்டுமே கட்சிப்பொறுப்பில் இருக்கமுடியும் என்பதால், கடந்த மூன்று மாநாடுகளில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.பிரகாஷ் காரத் அவர்களுக்கு பதில் தோழர்.யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி மக்களுக்கான போராட்டங்களை மேலும் முன்னெடுத்துச்செல்லும். கட்சி இன்னும் வீறுகொண்டு எழும். அதற்காக வழிகாட்டவிருக்கும்  புதிய பொதுச்செயலாளர், புதிய  அரசியல் தலைமைக்குழு  மற்றும் புதிய மத்தியக்குழு ஆகியோர் பின்னால் நாம் அணிவகுத்து நிற்போம். ஒன்றுபடுவோம்... போராடுவோம்... வெற்றிபெறுவோம்... புதியதோர் உலகம் செய்வோம்...
              புதிதாய் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் தோழர்.சீத்தாராம் யெச்சூரி வாழ்த்தி வரவேற்போம். புரட்சிகர நல்வாழ்த்துகளை உரித்தாக்குவோம். வாழ்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி....!

கருத்துகள் இல்லை: