செவ்வாய், 29 ஜூலை, 2014

ஸ்காட்லாந்தில் ஒளிரும் புரட்சி மண்ணின் தங்க மகன்...!

                  தற்போது ஸ்காட்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் ஆடவருக்கான பளுத்தூக்கும் போட்டியில், இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சியை நடத்திய வீரபூமியாம் வேலூரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் என்ற இளைஞர் முதல் இடத்தில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார். இந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பரிசுகளை குவிக்கும் இளைஞர்களில் இவரும் ஒருவர். இவர் இந்தியாவிற்காக தங்கம் பெறும் ஆறாவது வீரர்.
            இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரியும் சிவலிங்கம் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நம் பக்கத்திலேயே சாதனைப்படைத்த ஒரு தொழிலாளியின் மகன். காலமெல்லாம் முயன்று போட்டியில் தங்கம் வென்று சாதனைப்படைத்த இளைஞர் சதீஷுக்கும், அவருக்கு ஊக்கமளித்து திறமைகளை வளர்த்த அவரது பெற்றோர்களுக்கும் நெஞ்சார்ந்தப் பாராட்டுகள்....! வாழ்த்துகள்.....! இந்த இளைஞர் ஆசிய விளையாட்டுப்போட்டிகளிலும் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனைப்படைக்க மத்திய - மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இவரை ஊக்கப்படுத்தவேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு.

கருத்துகள் இல்லை: