புதன், 13 பிப்ரவரி, 2013

இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு மலிவு அரசியல் தேடும் சினிமா நடிகர் சீமான்...!
















 


           தமிழகத்தின் திடீரென முளைத்த அரசியல்வாதியான நடிகர் சீமான் தமிழ் இன உணர்வுகளை தூண்டிவிட்டு இளைஞர்களை தன்னோடு வைத்துக் கொண்டு அரசியல் பண்ணுபவர். இலங்கைத் தமிழர்களுக்காக அல்லது தூக்கு தண்டனைக் கைதிகளாக சிறையிலிருக்கும் ராஜீவ் கொலையாளிகளுக்காக தங்களையே தீயிட்டு மாய்த்துக் கொண்ட முத்துகுமரன் மற்றும் செங்கொடி போன்றவர்களின் உடலை வைத்து  அரசியல் வளர்ப்பவர்.  இறந்து போனவர்களின் உடலை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மலிவான அரசியல்வாதி தான் இந்த நடிகர் சீமான். எங்கே இழவு விழுந்தாலும் அங்கே ஆஜர் ஆகிவிடுவார்.
          இதே போன்று,  ஆசீட் வீச்சினால் சென்னையில் மூன்று மாத காலமாக சிகிச்சைப் பெற்று நேற்று மரணமடைந்த காரைக்கால் பெண் வினோதினி விஷயத்திலும் ஒரு மலிவான அரசியல் இலாபத்தை பார்த்திருக்கிறார். கடந்த மூன்று மாத காலமாக சென்னையில் தான் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வந்தது. மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்தார்கள். வந்து பார்த்திருப்பாரா...? விசாரித்திருப்பாரா...? அப்போதெல்லாம்  எங்கே போயிருந்தார் இந்த சீமான்...? வெளிநாட்டில் இருந்தாரா...?  இவர் நினைத்திருந்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு வெளிநாட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கு  உதவி செய்திருக்க முடியுமே. இந்த எழுச்சித் தமிழர் ஏன் செய்யவில்லை...?  இதையெல்லாம் செய்யாதவர் இறந்த பின் ஏன் இப்படி ''அலைந்து'' கொண்டு ஓடினார்...?  நேற்று  சீமானும், அவரது கூட்டாளிகளும் வினோதினியின் உடலை கைப்பற்றிக்கொண்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். மகளை இழந்த துயரத்தில் இருந்த வினோதினியின் பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்த உடலை இவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர் என்பதை ஊடங்களை பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும்.
         அதுமட்டுமல்லாது கோயம்பேட்டில் இவர்கள்  ''வழக்கமாக'' கூடும் பகுதியில் வினோதினியின் உடலை  அஞ்சலிக்கு  வைத்திருந்தார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், எப்படியெல்லாம் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை இந்த சமூகம் பார்க்கவேண்டுமாம். வினோதினியின் உடல் என்ன காட்சிப் பொருளா...? உண்மையிலேயே ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட கொடுமை நிகழ்ந்திருக்கிறது என்று கொதித்திருந்தால் மூன்று மாதங்களுக்கு முன் அந்த சம்பவம் நடந்த உடனேயே வீதியில் இறங்கி போராடி இருக்கவேண்டாமா..? அப்படி செய்திருந்தால் இந்த சமூகத்திற்கு மட்டுமல்ல, கண்ணை மூடிக்கொண்டிருந்த இந்த ஆட்சியாளர்களின் கண்ணையும் திறந்திருக்கலாம். டெல்லி பெண்ணின் கொடுமையை உலகமே அறிந்தது போல் செய்திருக்கலாமே. அந்த பெண்ணிற்கு மத்திய அரசாங்கம் வெளிநாட்டில் மருத்துவம் பார்த்தது போல் இந்த பெண்ணிற்கும் செய்ய வாய்ப்பை உண்டாக்கி இருக்கலாமே. ஆனால் அதையெல்லாம் செய்யாமல், வினோதினியின் இறப்பினால் ஏற்பட்ட மக்களின் அனுதாபத்தை தன்  பக்கம் திருப்பி அதை அரசியலாக்க சீமான் துடித்தது என்பது ஒரு மலிவான - தரமற்ற அரசியல் ஆதாயமாகும்.

கருத்துகள் இல்லை: