திங்கள், 17 ஜூன், 2013

துணிச்சல்மிக்க மக்கள் கலைஞன் மணிவண்ணன்...!

            
எம்.ஜி.ஆர் - சிவாஜி காலங்களில் குணச்சித்திர நடிகராக, சிரிப்பு நடிகராக, வில்லன் நடிகராக பல்வேறு பரிமாணங்களில் பிரகாசித்தவர்  மறைந்த திரைப்பட நடிகர் எம்.ஆர். இராதா அவர்கள் தான். அவர் அதிகாரவர்க்கத்தை கிண்டலடித்து விமர்சிப்பதிலும், பகுத்தறிவு கருத்துக்களை பரப்புவதிலும் தனக்கென ஒரு பாணியை எப்படி வைத்திருந்தாரோ அதேப்போல் மணிவண்ணனும் தனக்கென்று ஒரு தனி பாணியை கடைபிடித்தவர். தான் இயக்கம் படங்களில் நிகழ்கால அரசியலை ஒரு பிடி பிடிப்பார். அது ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்நாள் முதல்வர் என்றாலும், முன்னாள் முதல்வர் என்றாலும் தன்னுடையப் திரைப்படங்களில் மிகக் கூர்மையான வசனங்களால் மிகக் கடுமையாக கிண்டலடிப்பார். அது ஒரு சாட்டையடியாக தான் இருக்கும். ஆரம்பத்தில் அவர் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்திருக்கிறார். இடதுசாரிக்கட்சிகளின் மேடைகளில் அவரைப் பார்க்கலாம். வருமானத்திற்காக திரைப்படத்தை சுவாசிப்பவர் என்றாலும், வாசிப்பை நேசிப்பவர். நிறையப் புத்தகங்களை படிக்கக்கூடியவர். அவர் மாரடைப்பால் இறக்கும்போது அவரது படுக்கையில் புத்தகங்கள் அவரோடு இருந்திருக்கின்றன.
           அவரது மறைவு என்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல. மாற்று சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஒரு பேரிழப்பு தான்.

கருத்துகள் இல்லை: