திங்கள், 17 டிசம்பர், 2012

கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு உதவி செய்யுங்கள்...!

           ஒரே நாளில் கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு 16-12-2012 ஞாயிறு அன்று 23-வது  பிறந்த நாள்.
          படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின்னர் வரவிருந்த இந்த பிறந்த நாளை தன் தோழிகளுடன் ஊருக்கு வந்து கொண்டாடுவேன் என்று தன் பெற்றோரிடம் கூறியிருந்த வினோதினிக்கு
அன்று தன்னுடைய பிறந்த நாள் என்பது தெரியாது.  அவரது பெற்றோர்களுக்கும் சொல்லாமல் மறைக்க வேண்டிய பரிதாப நிலை. ''இன்னைக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா....'' என்று சொல்லும்போதே அவரது தந்தைக்கு கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது. இத்தனை ஆண்டுகளாய் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்கள் கூட வாய்விட்டு சொல்லமுடியாத சூழ்நிலை. 
      முகம் - பார்வை இரண்டையும் இழந்து பகலா...இரவா.. என்ன தேதி.. என்ன நேரம்.. எதுவும் தெரியாமல் கருகிய மலராய் படுக்கையில் கிடக்கிறார் வினோதினி.
         காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே நாளில் தன் கனவுகளையெல்லாம் தொலைத்து நிற்கும் இந்த பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள். வசதியில்லாத வினோதினியின் குடும்பத்திற்கு உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள். 

JAYAPALAN (வினோதினியின் தந்தை) 
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037
contact : ramesh 9944161416


(அந்த பெண் மீது வீசிய ஆசிட் சிறிது அவன் மீதும் தெரித்ததால் சிறு காயத்துடன் கொடூரன் சுரேஷ்)

கருத்துகள் இல்லை: