வியாழன், 5 செப்டம்பர், 2013

இப்படியும் ஒரு பேராசிரியர்...! இவர் தான் நல்லாசிரியர்....!

 
இப்படியும் ஒரு பேராசிரியர்....!!!

இந்திய சுதந்திர வேள்வியில் மாணவர்கள் குதித்திருந்த நேரம் அது...! 
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் மாணவர்களின் யாகசாலையாக இருந்தது....!

சைமன் கமிஷனுக்கு எதிராக கங்கை ஆற்றினுள் நீந்திச்  சென்று பி.ராமமூர்த்தி தன் சகமாணவர்களொடு கறுப்புக் கோடி கட்டிய பல்கலைக்கழகம் அது தான் !

அப்போது  அங்கு அவர் பேராசிரியராக  இருந்தார் !

பிரிட்டிஷ் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது...! பல்கலைக்கழக  வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது...!  அன்று அந்த பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் அந்த பேராசிரியர் தான்...! பல்கலைக்கழக  வளாகத்திற்குள் போலீசார் வரக்கூடாது என்று உத்திரவிட்டார்...!

அதுமட்டுமல்ல சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த மாணவர்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கமாட்டேன் என்று அறிவித்தார்...!

அவரையும் மீறி போலிஸ் உள்ளே நுழைந்தால் என்ன செய்வது ...?

மாணவர்கள் துணைவேந்தரை சந்தித்தார்கள்...! நிலைமையை அவரும் பரிசீலித்தார்...! 

"நீங்கள் வளாகத்தில் இருக்கும் வரை உங்களுக்கு நான் பாதுகாப்பு...! என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள்...! இரவோடு இரவாக  கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள்...! அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள்...!" என்று மாணவர்களுக்கு தைரியம் கொடுத்தார் அந்த துணைவேந்தர் !

மறுநாள் போலீஸ் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த போது அவர்கள் தேடிவந்த மாணவர்கள் அங்கு இல்லை...! 

அந்த துணைவேந்தர் வேறு யாருமில்லை... அவர் தான் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்...!
 
இந்தியாவின் தூதுவராக மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்த ஒரே இந்தியர் !!!
 
தோழர் காஷ்யபன் அவர்கள் கட்டுரையிலிருந்து....!

கருத்துகள் இல்லை: