வியாழன், 25 செப்டம்பர், 2014

அடேங்கப்பா...மோடி என்னமா பேசறாரு....?

                         ''மேக் இன் இந்தியா'' என்ற முழக்கமிட்டு ஆண் சிங்கம் ஒன்று நடந்து வருவது போல் ஒரு சின்னத்தை உருவாக்கி நரேந்திரமோடி தன்னை ஒரு சிங்கமாக உலக முதலாளிகளுக்கு இன்று புதுடெல்லியில் விழா ஒன்றில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.  இதன் மூலம் ''அந்நிய முதலாளிகளே... இந்தியாவிற்கு வாருங்கள்... இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்.... இந்திய பொருட்கள் உலகெங்கும் விற்கட்டும்...'' என்று உலக முதலாளிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார். இந்த விழாவில் மோடி என்னமா பேசினாரு தெரியுமா...? அடேங்கப்பா... இவர் பேசுவதற்கு எழுதிகொடுத்த அந்த மனுஷன் என்னமா யோசிச்சிருப்பான்.... அந்த பேச்சை கேட்கும்போதே மெய்சிலிர்க்குது. அந்த விழாவில் மோடி அப்படி என்ன பேசினாரு...? FDI-க்கு ஒரு புது அர்த்தம் சொன்னாரு பாருங்க. ஆஹா... என்னமா கருத்தா பேசினாரு. உண்மையாவே உலகத்துல யாரும் இவர் போல் இவ்வளவு அறிவாளியாக பேசியிருக்கமுடியாதுங்க. எப்படி மோடியால மட்டும் இப்படியெல்லாம் அறிவா சிந்திக்க முடியுது என்று நினைச்சி நினைச்சி புல்லரிச்சி போனேன்னா பாத்துக்கொங்குளேன். 
               அப்படி என்ன மோடி FDI -ஐ பத்தி பேசினார்னு தானே கேட்கறீங்க...? ''FDI'' - அப்படின்னா நாம்ப இதுவரைக்கும் என்ன அர்த்தத்தை புரிஞ்சிகிட்டு இருந்தோம்னா...? ''Foreign Direct Investment - அந்நிய நேரடி முதலீடு'' என்று தானே நாம்  இதுவரையில் நெனைச்சிகிட்டிருந்தோம். ஆனால் மோடி இதை வேறு மாதிரி சிந்திக்கிறார். அந்த விழாவில் அவர் என்ன சொல்கிறார்ன்னா, FDI என்றால், ''First Develop India'' வாம். ''இந்தியாவை முதலில் முன்னேற்று'' என்று புதுபுது அர்த்தங்களாக உதிர்த்து தனது தேசபக்தியை உலகத்திற்கு உயர்த்தி காட்டினாரு பாருங்க... தாங்கல... இப்படி அவர் பேசியதற்கு என்ன அர்த்தம் என்றால், FDI-ஐ எதிர்ப்பவர்களே.... FDI-ன்னா நீங்க நினைக்கிற மாதிரி அந்நிய நேரடி முதலீடு கிடையாது. அந்நிய நேரடி முதலீட்டினை ஏற்றுக்கொன்று நாட்டை முதலில் முன்னேற்று என்று அர்த்தம். நீங்க FDI-ஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இந்தியாவை முன்னேற்றுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள் என்பது போல பேசியிருக்கிறார். ''FDI மூலம் இந்தியாவை முன்னேற்ற துடித்துக்கொண்டிருக்கிறார் மோடி... அதை இவர்கள் எதிர்க்கிறார்கள்... அப்படின்னா FDI-ஐ எதிர்ப்பவர்கள் நமக்கும் வேண்டாதவர்கள்''  என்று மக்களை FDI-ஐ எதிர்ப்பவர்களுக்கு எதிராக திருப்பிவிடுவதற்காக மோடி செய்த தந்திரம் தான் இது. இப்படியெல்லாம் பேசி யாரை எமாற்றப்பார்க்கிறார் மிஸ்டர் மோடி....? தன்னை நம்பி வாக்களித்த இந்திய மக்களையா...? என்பது தான் எனது கேள்வி.

3 கருத்துகள்:

விசு சொன்னது…

என்னமோ சொல்ல வராரு... ஆனால் என்னன்னு புரியல்ல. போதும், அழுதிடுவேன்.

விசு சொன்னது…

என்னமோ சொல்ல வராரு... ஆனால் என்னன்னு புரியல்ல. போதும், அழுதிடுவேன்.

M.Thevesh சொன்னது…

You allowed Congress to rule India for sixty years why can't you allow Mr.Mody to rule at least one full term to see the progress.