வெள்ளி, 11 மார்ச், 2011

எதையும் செய்யத்துணியும் ஏகாதிபத்தியம் ! ( பகுதி - 1 )

சில சந்தேகங்கள் : 1
தனக்கு லாபம் கிடைக்கிறது என்றால் மனிதகுலமே அழிந்து போனாலும் கவலைபடாது எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம் என்பது சோவியத் யூனியன் சிதறுண்டு போன பிறகு இந்த உலகம் பார்க்கும் உண்மை..
கடந்த 2004 லிலும் கடந்த வாரமும் நிகழ்ந்த சுனாமி என்பது இயற்கையாக நடந்ததா என்கிற சந்தேகம் நமக்கெல்லாம் எழுகிறது...!
இதைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால் கடந்த கால நிகழ்வுகளை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
காற்று மண்டலத்திலும், பூமிக்கடியிலும் , கடலுக்கடியிலும் அணுகுண்டு சோதனை நடத்துவது என்பது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளுக்கு அந்த காலத்திலிருந்து புதிதல்ல. அமெரிக்கா கடைசியாக கடலுக்கடியில் நடத்திய அணுகுண்டு சோதனை என்பது 1958 - இல்
நடத்தப்பட்டது. மேலே உள்ளப்படத்தை பார்க்கவும். இது தான் 1958 - இல் அமெரிக்கா கடைசியாக கடைசியாக கடலுக்கடியில் நடத்திய அணுகுண்டு சோதனை (Underwater Nuclear Explosion). இதன் பிறகுதான் பூமிக்கு மேலேயும் கடலுக்கடியிலேயும் அணுகுண்டு சோதனை நடத்துவது என்பது பெரும் உயிர் சேதத்தை உண்டாக்குகிறது என்பதால் அண்டவெளியிலும், பூமிக்கு மேலும் மற்றும் கடலுக்கடியிலும் அணு ஆயுத சோதனை என்பதை தடை செய்யும் ஒப்பந்தம் ஒன்றில் 1963 ஆகஸ்ட் 5 -ஆம் தேதியன்று சோவியத் யூனியன் , அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சோவியத் யூனியனின் தலைநகரான மாஸ்கோவில் கையெழுத்திட்டார்கள். அதன் பிறகு 1963 அக்டோபர் 7 - ஆம் தேதியன்று அமெரிக்க வெள்ளைமாளிகையில் உள்ள ஒப்பந்த அறையில் அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ( மேலே உள்ள படத்தை பார்க்கவும் ). அதன் பிறகு 1963 அக்டோபர் 10 - ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் தான் ஜான் கென்னடிக்கு எமனாக அமைந்தது. மனித உயிர்கள் அழிவதைப் பற்றி கவலைப்படாத இரத்தவெறிபிடித்த போர் வெறிபிடித்த அமெரிக்க உளவுத் துறையான சி ஐ ஏ தன் சொந்த நாட்டின் ஜனாதிபதி ஜான் கென்னடியை தேசத்துரோகி என்று குற்றம்சாட்டி 1963 நவம்பர் மாதம் 22 - ஆம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டார்கள். இதை இந்த உலகம் மறந்திருக்க முடியாது. ( மேலும் தொடரும் )

1 கருத்து:

simmakuralon சொன்னது…

aaahhhaaa kelambittangaiya,kelambittanga
ellam nallathaney poikittirunthadhu