சனி, 20 ஆகஸ்ட், 2011

தோழர். எம். கே. பாந்தே மறைவு - உலக உழைப்பாளி வர்க்கத்திற்கே பேரிழப்பு.

             சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமைக்குழு  உறுப்பினரும், முதுபெரும் தொழிற்சங்கத்தலைவரும், உழைப்பாளி வர்க்கத்தின் உன்னதமான தோழருமான தோழர்.  எம். கே.  பாந்தே அவர்கள்  இன்று அதிகாலை நடுநிசிக்குப் பிறகு 12.30 மணி அளவில்  மாரடைப்பால்   ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் காலமானார். 
             தோழர். பாந்தே அவர்களின் இறுதிவரை அயராத தொழிற்சங்கப் பணியும், அரசியல் பணியும் வியக்கத்தக்கது. சர்வதேச தொழிற்சங்க மேடைகளிலும், இந்திய தொழிற்சங்க மேடைகளிலும்   தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான தாராளமயம், தனியார்மயம், உலகமயம் - இவைகளை எதிர்த்து  இறுதி வரை கடுமையாக குரல் கொடுத்து வந்தவர். 
                  இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 22 - ஆம் தேதி அன்று புதுடெல்லியில் எல். ஐ. சி முகவர் சங்கம் - LICAOI சார்பில் முகவர்களுக்கெதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நடத்தப்பட்ட தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றியதும் , அடுத்த நாள் 23 - ஆம் தேதி கடுமையாக உயர்ந்துவரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதே இடத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்திய மிகப்பிரம்மாண்டமான பேரணியில் உரையாற்றியதும் நான் அவரை கடைசியாக பார்த்த நிகழ்ச்சி. இன்றும் நெஞ்சைவிட்டு அகலாத உரை - காட்சி.
                 அவரது மறைவு என்பது உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
                    மறைந்த தோழர். எம். கே. பாந்தே அவர்களுக்கு வீரவணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: