வியாழன், 30 அக்டோபர், 2014

அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்....!

               மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.                                         
                அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?
          இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள். என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே? அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும். 

சாவும் கடைசி அல்ல
 
            ஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையே மாற்றிவிட்டது. என்னுடைய உடல் வீதியில் தூக்கி வீசப்படவில்லை; எவின் சிறைச்சாலையின் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டது, இப்போது கல்லறை போன்ற ஷார்-இ-ராய் சிறையின் அறையில் புதைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் தலைவிதி என்பதால், நான் அதை ஆட்சேபிக்கவில்லை. சாவு ஒன்றே வாழ்க்கை யின் கடைசி அல்ல என்பதை நீயும் அறிவாய்.
           நாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; ஒவ்வொரு பிறவியிலும் நம்மீது புதிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. சில வேளைகளில் தீமைகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்று நான் கற்றிருக்கிறேன். என்னைச் சவுக்கால் அடித்தவன் தன்னுடைய தலையிலும் முகத்திலும்தான் கடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லி யிருக்கிறாய். அதைத்தானே செய்தேன்.
          பள்ளிக்குச் செல்லும்போது அடுத்தவர்களுடைய புகார்களுக்குக் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று அறிவுரை சொன்னாய். ஒரு காமுகன் என்னைப் பலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரையெல்லாம் பயன்படவேயில்லை அம்மா. நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி, காலமெல்லாம் கொலை செய்வதற்காகவே சதி செய்தவளைப் போலவும், இரக்கமில்லா கொலைகாரி என்றும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். நான் கண்ணீர் விடவில்லை, எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை. சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்ற நம்பிக்கையில் நான் அழவேயில்லை அம்மா. 

வசை கிடைத்தது
 
         கடுமையாகக் குற்றம்சாட்டியும் துளியும் வருத்தம் இல்லாமல் இருக்கிறாள் பார் என்ற வசைதான் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான் கொசுவைக்கூட அடித்துக் கொன்றதில்லை. எனக்குத்தான் இந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு. பிராணிகளை நான் நடத்திய விதத்தைக் கொண்டு என்னை ஆண் சுபாவம் மிக்கவள் என்று முடிவுகட்டினார்கள். நீ என்னை மிகவும் நேசிக்கச் சொன்ன இந்த தேசம்கூட நான் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை அம்மா; போலீஸ் விசாரணை என்ற பெயரில் சொல்ல முடியாத - காது கூசும்படியான - கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அடுத்தடுத்து இடிபோல என்னை அடித்துத் துவைத்தபோது, எனக்கு ஆதரவாக அங்கே யாருமே இல்லை அம்மா. ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் என் கரிய கூந்தலை நானே மழித்துக்கொண்டதற்குப் பரிசாக என்னை 11 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள்.
           போலீஸ் காவலில் முதல் நாள் இருந்தபோது அங்குவந்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர், “உனக்கெல்லாம் என்னடி நீள நகம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்டு சரமாரியாக அடித்தார். இந்தக் கால கட்டத்தில் இங்கு எதுவுமே அழகாக இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். தோற்றப் பொலிவு, சிந்தனையில் அழகு, ஆசையில் அழகு, கையெழுத்தில் அழகு, கண்ணில் அழகு, பார்வையில் அழகு, இனிமையான குரல் அழகு என்று எதுவுமே விரும்பப்படுவதில்லை. 

இறுதி விருப்பம்
 
          உனக்குத் தெரியாமலோ, நீ இல்லாமலோ என்னைத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அதனால், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறேன், இது இன்னொருவர் மூலம் உன் கைக்குக் கிடைக்கும். என் நினைவாக, நான் கைப்பட எழுதிய பல பக்கங்களை வீட்டில் உனக்காக வைத்திருக்கிறேன்.
       இறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்தும் இந்த நாட்டிடமிருந்தும் - ஏன் உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத்தான். அம்மா ப்ளீஸ், அழாதே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி. எனக்காக நீ யாரிடமும் சென்று பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடம் பிச்சை கேட்டாலும் தவறில்லை.
         அம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். அம்மா, எனக்காக ஒரு பூச்செண்டை வாங்கு, எனக்காக இறைவனிடம் வேண்டு. என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல் கிறேன், என்னை அடக்கம் செய்து எனக்காக ஒரு சமாதியை ஏற்படுத்தாதே அம்மா; வாழும்போதுதான் நான் உனக்குத் துயரங்களையே கொடுத்தேன். நான் இறந்த பிறகும் என்னுடைய சமாதிக்கு வந்து நீ அழ வேண்டாம் அம்மா. எனக்காகக் கருப்புத் துணியை நீ போட வேண்டாம். என்னையும் துயரகரமான என்னுடைய நாட்களையும் மறக்க முயற்சி செய்; என்னுடைய எந்த எச்சமும் உன் எதிரிலோ நினைவிலோ இருக்கக் கூடாது. 

கடவுளிடம் பதில் 
 
           இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ்ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
          இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப்பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா! – உன் பிரிய ரெஹானா. 

(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)   
- தமிழில்: சாரி
நன்றி : தி இந்து - தமிழ்  

புதன், 29 அக்டோபர், 2014

மக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றும் மோடி அரசு...!

                      பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகள் வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைத்திருக்கும் கருப்புப்பணத்தை பதவியேற்ற நூறே நாட்களில் இந்தியாவிற்கு கொண்டுவந்து அந்த பணத்தை அனைத்து இந்திய மக்களுக்கும் ''பிச்சி பிச்சி'' கொடுப்போம். ஆளுக்கு 11 இலட்சம் ரூபாய் கிடைக்கும் என்றெல்லாம் பாராளுமன்றத்தேர்தல் சமயத்தில் மக்களின் காதுகளில் பூ சுற்றிய பாரதீய ஜனதாக்கட்சி இன்றைக்கு ஆட்சிக்கு வந்து 100 நாட்களை தாண்டியும் தான் சொன்னதுபோல் கருப்புப்பணத்தை கொண்டுவருவதில் துப்பில்லாமல் ஒரு பக்கம் மக்களை ஏமாற்றுகிறது.
                 இன்னொரு பக்கம் உச்சநீதிமன்றமும் மத்திய அரசிடம் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லியும் இது நாள் வரையில் அந்த பட்டியலை தருவதற்கு மோடி அரசு தயங்குகிறது.  ஆனால் சும்மா ஒப்புக்கு மூன்று பேர்கள் மட்டும் அடங்கிய பட்டியலை கொடுத்தது. பெரும் பணமுதலைகளை விட்டுவிட்டு சின்னச்சின்ன மீன் குஞ்சுகளை மட்டும் மோடி அரசு வீசி எறிந்தது. இரகசியம் காப்பாற்றப்படவேண்டுமாம். அதனால முழுப்பட்டியலையும் தரமுடியாதாம். நீதிமன்றம் கேட்கும் தகவல்களை கொடுக்காமல் இரகசியம் என்ன வேண்டிக்கிடக்கிறது...? மத்திய அரசால் மறைக்கப்பட்ட பணமுதலைகள் எல்லாம் பாரதீய ஜனதாக்கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் படியளக்கும் எஜமான்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அவர்களை பகைத்துக்கொள்ளமுடியுமா...? அவர்களை காப்பாற்றத்தான் அன்றைக்கு காங்கிரஸ் கட்சியும், இன்றைக்கு பாரதீய ஜனதாக்கட்சியும் மக்களிடம் நாடகமாடி வருகின்றன.
                 மூன்று பேர்களை மட்டும் தூக்கி எரிந்ததை பார்த்த உச்சநீதிமன்றம் 800 பேர் அடங்கிய முழுப்பட்டியலையும் நீதிமன்றத்திற்கு உடனடியாக தரவேண்டுமென்று கடிந்து கூறிய பின் நேற்று வெறும் 627 பேர்களையே கொண்ட அடுத்தப்பட்டியலை மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதிலும் இவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய ''மாபெரும்'' பணமுதலைகளின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன.

திங்கள், 27 அக்டோபர், 2014

A ''BAG-LESS'' SCHOOL IN KERALA...!


   || This school in Kerala doesn't have bags that break your child's back. ||   

              Vishnu, Arya, Augustine, Syam and their friends are more than happy to go to school every day as they are the luckiest of school-goers in their locality. Their school does not put the “burden” of learning on their backs...!

            The Govt LPS Tholikkode in Punalur, has already earned the title of a bag-less school as students don’t have to carry their textbooks to school. The kids have two set of books. One, for the school, and the other, for studies at home. “One set is given for free by the Government and the other is contributed by the Parent-Teachers Associations (PTA). For scribbling notes, 40-page books without hard covers are given, that too according to the units in an academic year,” said K.G.Abraham, Headmaster. The students are also given weightless cloth bags to carry their pens, pencils and notebooks.


Source : DeccanChronicle


Courtesy : The Logical Indian 
             

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

முதலாளிகள் நலத்துறையாக மாறும் தொழிலாளர்கள் நலத்துறை...!


                தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று கருதும் பிரதமர் நரேந்திர மோடி, ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய உழைப்பே வெல்லும்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார்.ஏனைய அரசியல் கட்சிகள், மத்திய தொழிற்சங்கங்கள் யாரையும் ஆலோசனை கலந்து இந்த முடிவு எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து டிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.புதிய நடைமுறையின்படி தொழில் நிறுவனங்களே தங்களுடைய ஆலையில் உள்ள தொழிலாளர்கள் நிலைமை குறித்து, எளிமைப் படுத்தப்பட்ட விண் ணப்பங்களில் தகவல்களை நிரப்பி, தாங்களே ஆய்வு செய்து அந்த அறிக்கையை உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கலாம். அதேசமயம், தொழிற்சாலை ஆய்வாளர்கள் இனி எந்த ஆலைக்கு ஆய்வுக்குச் செல்வதாக இருந்தாலும் அதை எழுத்துபூர்வமாக முன்கூட்டியே தங்கள் அலுவலகங்களில் பதிவுசெய்ய வேண்டும்.
                  ஆலையில் ஆய்வுகளை முடித்த பிறகு, ஆய்வறிக்கையை 72 மணி நேரத்துக்குள் கணினியில் பதிவுசெய்துவிட வேண்டும். அதன் பிறகு அதில் மாறுதல்கள் எதையும் செய்ய முடியாது. அந்தப் பதிவை அந்தத் துறையின் அதிகாரிகள், ஆலையின் நிர்வாகம், தொழிலாளர்கள் தரப்பு என்று அனைவரும் பார்க்க முடியும். அரசின் இந்த முடிவைத் தொழில் துறையும் முதலாளிகளும் வரவேற்கின்றனர்; தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றனர்.ஆய்வாளர் பணி என்பதன் இலக்கணம் என்ன? ஒரு அமைப்பில் விதிகளுக்கு உட்பட்டு எல்லொரும் இயங்குகின்றனரா என்று எப்போது வேண்டுமானாலும், பரிசோதித்துப் பார்ப்பதுதானே? இந்திய அமைப்பில் தொழிற்சாலைகள் எந்த அளவுக்கு விதிகளை மதிக்கின்றன; இங்கே ஆய்வுகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதையெல்லாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
                  முப்பதாண்டுகள் ஆகும் நிலையிலும், போபால் விஷவாயுக் கசிவின் அழிவுகள் இன்னும் மறக்கவிடாமல் துரத்துகிறதே... எல்லா விதிகளையும் வளைக்கும் தொழில் துறையின் பண அரசியல்தானே போபால் அழிவுக்குக் காரணம்? ஏற்கெனவே ஊழல் புற்றாகப் பரவிக் கிடக்கும் அதிகார அமைப்பில், சீர்திருத்தம் என்ற பெயரில் இன்னும் நூறு ஓட்டைகளைப் போட்டால் என்னவாகும்?ஒரு தொழில்சாலையை நடத்த தொழிலதிபர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நிலம், மின்சாரம், தண்ணீர், மூலதனக் கடன் என எதையெல்லாம் சலுகையில் பெற முடியுமோ, அதையெல்லாம் சலுகையில் பெறுகின்றனர்; புதிய நிறுவனங்களாக இருந்தால் முதலீட்டு மானியமும் பெறுகின்றனர்; முன்னுரிமை பெற்ற ஏற்றுமதித் துறையாக இருந்தால் ஏற்றுமதி மானியமும் பெறுகின்றனர். நாடு வாரிக் கொடுக்கிறது.
                 ஆனால், தொழில் அதிபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இப்படியெல்லாம் காட்டப்படும் சலுகையிலும், பரிவிலும் நூறில் ஒரு பங்குகூடத் தொழி லாளர்களுக்குக் காட்டப்படுவதில்லை. அவர்கள் வசம் மிச்சசொச்சம் இருக்கும் உரிமைகளையும் பறிக்க அரசே துணை போகும் என்றால், தொழிலாளர் நலத் துறையின் பெயரை முதலாளிகள் நலத் துறை என்று மாற்றிவிட்டு பகிரங்கமாக அதைச் செய்யட்டும்!

நன்றி : தி இந்து - தமிழ் 

வெள்ளி, 24 அக்டோபர், 2014

இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு அஞ்சலி...!


                   சென்ற தலைமுறையின் பழம்பெரும் நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் ஆகிய முப்பெரும் மூன்றெழுத்து நடிகர்களில் இலட்சியநடிகர் என்று தமிழக மக்களால் சிறப்புடன் அழைக்கப்படும் எஸ்.எஸ்.ஆர் இன்று காலமானார். அன்றைய தலைமுறையின் எல்லா முன்னணி கலைஞர்களும் மறைந்துவிட்ட சூழ்நிலையில், இன்றுவரை    இன்றைய தலைமுறை இளைய கலைஞர்களுக்கு வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருந்த இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் தமிழ் திரையுலகத்திற்கு மாபெரும் இழப்பு.
               இவர் தன்னுடைய கடைசி திரைப்படம் வரை பிற மொழி கலப்பில்லாத தமிழில் மட்டுமே முழுமையாக வசனம் பேசியவர் என்பது மட்டுமல்லாமல், தன்  வாழ்நாளில் வரலாற்று மற்றும் சமூக திரைப்படங்களில் நடித்திருக்கிறாரே தவிர புராண - இதிகாச திரைப்படங்களில் இவர் இறுதிவரையில் நடிக்காமல் தான் ஒரு இலட்சியநடிகனாகவும், ஒரு பகுத்தறிவாளனாகவும் வாழ்ந்துகாட்டினார். 
              இந்தியாவிலேயே நடிப்புத்துறையிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் இவர் தான். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். இலட்சியநடிகராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும்   மக்களிடம் நன்கு அறிமுகமான இவரால் தமிழகத்தின் முதலமைச்சர் என்ற அளவிற்கு உயர்வதற்கு இவருக்கு அரசியல் சூச்சமம் தெரிவில்லை என்பது தான் உண்மை.
              மறைந்த இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி....!    

வியாழன், 23 அக்டோபர், 2014

கோக் விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய் கம்யூனிசம் பேசுகிறாராம்...!


                       ''கோக்'' விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய் மற்றும் ''ஏழாம் அறிவு'' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் முருகதாஸ்  இருவரும் ''கத்தி'' திரைப்படத்தின் மூலம் பிராயச்சித்தம் தேடியிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இதுவரையில் கடத்தல், தீவிரவாதம், பயங்கரவாதம் என வெறும் மசாலா படங்களிலேயே நடித்து தன்னுடைய இரசிகர்களை திருப்திப்படுத்த திணறிக்கொண்டிருந்த விஜய் இதுவரையில் யாரும் கையில் எடுக்காத - தற்போது நாடு முழுதும் எரிந்துகொண்டிருக்கும் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதற்காக போராடும் இளைஞனாக தன் இரசிகர்கள் முன் நின்றது என்பது உண்மையிலேயே பாராட்டுதற்குரியது.
              திரைப்படத்தின் முன் பாதி எப்போதும் போல் வழக்கமான விஜய் பாணியாக நகர்கிறது. ஆனால் பின் பாதியில் தான் ஊடக தர்மமே இல்லாமல் அம்மணமாய் நிற்கும் இந்திய ஊடகங்களின் உண்மை முகத்தை தன் இரசிகர்களுக்கு தோலுரித்துக்காட்டியிருக்கிறார். இந்த தேசத்தின் வயிற்றுக்கு சோறிட்ட இந்திய விவசாயிகளின் இரத்தத்தையும், உயிரையும் குடித்து தேசத்தையே கபளீகரம் செய்யத்துடிக்கும்  இராட்சச பகாசூர பன்னாட்டு கம்பெனியின் முதலாளிகளை எதிர்த்து மக்களை திரட்டிப்போராடும் இளைஞனாக விஜய்யை பார்க்கும்போது அவரின் மீது இதுவரை இல்லாத மரியாதை உண்டாகிறது.
              ஏனென்றால் அண்மையில் பாராளுமன்றத்தேர்தலின் போது  தான் தமிழகத்திற்கு நரேந்திரமோடியை சந்தித்த நடிகர் விஜய்  தன்னை ஒரு போராளியாக காட்டிக்கொண்டு நடித்தது என்பது ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணும். ''கத்தி'' திரைப்படம் யாருடைய சிந்தனையில் உதித்தது என்பது தெரியவில்லை. ஆனால் இத்திரைப்படத்தின் ''கரு'' படம் வெற்றியடையடைவதற்கும், விஜய்யின் இரசிகர்களை திருப்திப்படுத்துவதற்கும், வசூலில் சாதனைப்படைப்பதற்கும் பெரிதும்  பயன்பட்டிருக்கிறது. இதோடு நிறுத்திக்கொள்ளாமல் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் மக்கள் பிரச்சனைகளை பேசும் திரைப்படங்களில் நடிக்க முன்வரவேண்டும்.  அதுமட்டுமல்லாது தங்கள் கட்- அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதும், கொடிக்கட்டுவதுமான போக்குத்தனமான செயல்களில் ஈடுபடும் தங்கள் இரசிகர்களை   மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் பின்னால் நிற்கச் செய்யுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் இதுபோன்ற படங்களில் ஒரு போராட்டக்காரனாக நடிப்பதெல்லாம் விளம்பரத்திற்காகவும், வருமானத்திற்காகவும் நீங்கள் போடும் வெளிவேஷமாக போய்விடும். அன்னா  அசாரேக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்.

புதன், 22 அக்டோபர், 2014

முதல்ல பொண்டாட்டியோடு கொண்டாடுங்கள் மிஸ்டர் மோடி...!

                   
           நாளை பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் பயங்கர வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இன்றுவரையில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் காஷ்மீர் மக்களோடு தீபாவளி கொண்டாடப்போறாராம். இது மோடியின் தீபாவளி கொண்டாட்டம் என்ற பெயரில் காஷ்மீர் இந்துகள் ஓட்டுகளை குறிவைத்து  மோடி நடத்தும் ''தேர்தல்  ஸ்டண்ட்'' என்பதை காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் இருபது நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட இஸ்லாமியர்  பண்டிகையான பக்ரீத் பண்டிகையை   அவர்களோடு சேர்ந்து கொண்டாடியிருக்கலாமே. மோடி அப்படி செய்திருந்தால் நாம்  நெஞ்சார பாராட்டியிருக்கலாம். ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமராக செயல்படுகிறார் என்று போற்றியிருக்கலாம். அனால் அவர் எப்போதுமே இந்துத்துவாவை உயர்த்திப்பிடிக்கும் சேவக் என்பதைத்தான் அவ்வப்போது தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். அதனால் தான் குடியரசு தலைவர் ஏற்பாடு செய்த ரமலான் நோன்பு கொண்டாட்டத்தில் கூட பிரதமர் என்ற முறையில் கூட கலந்துகொள்ள இவருக்கு பரந்த மனமில்லாமல் போனது. 
            பிரதமர் அவர்களே.... நீங்கள் இந்தியா என்ற ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். அதை விடுத்து, நவராத்திரி விழாவை அனுமாரோடு கொண்டாடுறது... தீபாவளி திருநாளை ஸ்ரீநகர் மக்களோடு கொண்டாடுறதுன்னு உங்கள் இந்துத்துவ அடையாளங்களை அடிக்கடி வெளிப்படுத்திக்கொண்டிருக்காதீர்கள். முதல்ல பண்டிகையை பொண்டாட்டியோடு கொண்டாடுங்கள் மிஸ்டர் மோடி...!

செவ்வாய், 21 அக்டோபர், 2014

பொலிவியாவைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் மோடி...!


கட்டுரையாளர் : வே. வசந்திதேவி, கல்வியாளர்,      
                   முன்னாள் துணைவேந்தர்,                        
                   மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்             

முதலாளித்துவத்துக்கு எதிரான போரில் பொலிவியாவைப் பின்பற்றுமா உலகம்?          

           லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் சென்ற வாரம் நடந்த அதிபர் தேர்தலில் ஈவோ மொராலிஸ் 60% வாக்குகள் பெற்று மூன்றாம் முறையாக அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ஈவோ மொராலிஸ் பொலிவியாவின் பெரும்பான்மையான, ஆனால் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களிலிருந்து தோன்றிய முதல் அதிபர். பல காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், பெருநிறுவன அசுரர்களும் பொலிவியாவைக் கொடிய சுரண்டலுக்கு உள்ளாக்கி, தங்கள் கைப்பாவை அரசுகள் மூலம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர். அந்த சகாப்தத்தை 2005-ல் முடிவுக்குக் கொண்டுவந்து, பெரும் மக்கள் ஆதரவுடன் மொராலிஸும், அவர் தலைமையிலான சோஷலிஸத்தை நோக்கிய இயக்கமும் வெற்றி கண்டன.
         முந்தைய இருண்ட சகாப்தத்தில் பொலிவிய மக்கள் கொடும் இழப்புகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் உள்ளானார்கள். அனைத்து வளங்களும் பெரும் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டன. நவதாராளமயம் (நியோலிபரலிஸம்) தலைவிரித் தாடியது. சந்தையின் மகிமை தாரக மந்திரமாக ஓதப்பட்டது. தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டன. ஏழ்மையும் கொள்ளையும் எல்லை மீறியபோது, மக்கள் இயக்கங்கள் வெடித்துக் கிளம்பின. தண்ணீருக்கான போராட்டம், எரிவாயுவைக் காப்பதற்கான போராட்டம் என்று நாடு கொதித்தது. அந்தக் கொந்தளிப்பின் குழந்தையாக, அதன் தலைவராக மொராலிஸ் எழுந்தார்
         
2009-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் பிரகடனப் படுத்தப்பட்டது. அதில் இந்தியாவையும், மற்ற பல நாடுகளையும் ஆட்டிப்படைக்கும் சித்தாந்தமான நவதாராளமயம் கடுமையாக எதிர்க்கப்பட்டு, பொருளா தார நிர்வாகத்தில் அரசுக்குத் தலைமை ஸ்தானம் அளிக்கப்பட்டது. சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வலியுறுத்தப்பட்டன. ஏழ்மை ஒழிப்புக்கான திட்டங்கள் முன்னுரிமை பெற்றன.
              
மக்களுக்காகத்தான் நாடு

                 கடும் ஏழ்மையிலும், எழுத்தறிவின்மையிலும் ஆழ்ந்து கிடந்த நாடு பொலிவியா. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏழ்மை ஒழிப்பை முன்னிறுத்தி, வியத்தகு வளர்ச்சியையும், அனைத்து மக்களும் நலனடையும் வகையிலான ஜனநாயகத்தையும் நிறுவி அந்த நாடு வெற்றி கண்டிருக்கிறது. சோஷலிஸத்தை நோக்கித் திரும்பிய புதிய எழுச்சிப் பாதையினால்தான் இந்த வரலாற்றுச் சாதனை சாத்தியமாயிற்று. மொராலிஸின் ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2006-ல் இருந்ததைவிட, 2012-ல் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. அதனினும் மகத்தானது ஏழ்மை ஒழிப்பில் அதன் சாதனை. ஏற்றத்தாழ்வுகளும் குறைந்து வருகின்றன. சமுதாய ஏணியின் உச்சியில் இருந்த 20 சதவீதத்தினரின் கையில் இருந்த தேச வருமானம் குறைந்து, கீழ்த்தட்டில் உள்ள 20 சதவீதத்தினரின் பங்கு அதிகரித்திருக்கிறது. மிகுந்த ஏழ்மையில் வாடிய மக்களுக்கு நாட்டின் செல்வத்தின் கணிசமான பகுதியை மாற்றி அளிப்பதில் பொலிவியா வெற்றி கண்டிருக்கிறது என்று ஐநா சபையின் வளர்ச்சி அமைப்பு (யூ.என்.டி.பி.) பாராட்டுகிறது. பணவீக்கம் பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, லத்தீன் அமெரிக்காவிலேயே குறைந்த பணவீக்கம் உடைய நாடாக பொலிவியா மாறியிருக்கிறது.
          இந்தப் பொருளாதார வளர்ச்சியின் முதல் ஆயுத மாக அமைந்தது அரசுடமையாக்கும் கொள்கை. பொலிவியாவின் பெரும் வளமான இயற்கை எரிவாயு அதற்கு முன் அமெரிக்க, உள்ளூர் பெருமுதலாளிகளின் வசம் இருந்தது. அது 2006-லிருந்து படிப்படியாக அரசுடமையாக்கப்பட்டது. விளைவு: உற்பத்தி இரு மடங்குக்கும் அதிகமாயிற்று. தொடர்ந்து, இத்தாலிய முதலாளிகளின் கையிலிருந்த தொலைத்தொடர்பு சாதனத் தொழில், தகரம், துத்தநாகம் போன்றவற்றின் உற்பத்தி அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.
           
ஏற்றம் பெறும் வாழ்க்கை

                அத்துடன், அடித்தட்டு மக்கள் அனைவரும் பயனடையும் பிரம்மாண்டமான நலத்திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ வசதிக்கும், பிரசவத்துக்குப் பின் தாய்-சேய் இருவர் நலனுக்குமான பண உதவி வழங்கியது; கல்விக்கான பெரும் நிதி ஒதுக்கீடு செய்தது; தோழமை நாடுகளான கியூபா, வெனிசுலாவின் உதவி யுடன், அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வி பெறும் திட்டங்கள் உருவாக்கியது; 60 வயதுக்கு மேற்பட்டோருக்குக் கண்ணியமான ஓய்வூதியம் வழங்கியது ஆகியவை பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன. சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட நிலப் பட்டாக்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது. அதேபோல் பெண்களுக்கு பொலிவியாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் பாராட்டியாக வேண்டும். நாடாளுமன்றத்தில் 28% பெண்கள்; செனட்டில் 47% பெண்கள்; அமைச்சரவையில் பாதி (10 பேர்) பெண்கள்; அதில் மூவர் பழங்குடியினர்.
 
முழு வேலையுடைமை

                 கல்விக்காக மொராலிஸ் மேற்கொண்ட இயக்கம் பெரும் வெற்றி கண்டிருக்கிறது. பொலிவியா எழுத்தறிவின்மையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. அரசு பிரம்மாண்டமான கட்டமைப்புத் திட்டங்களைப் பொதுத்துறையின் வழியாக மேற்கொண்டதன்மூலம் பொலிவியா அநேகமாக முழு வேலையுடைமையை அடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மக்கள் நலனுக்காகப் பெருமளவு செலவு செய்யும் அரசு, நமக்கெல்லாம் உபதேசம் செய்வதைப் போல் சிக்கனம் பிடிக்கும் அரசு அல்ல. இத்தனைக்குப் பின்னும், இன்று உலகிலேயே அதிக சதவீதம் நிதி சேமிப்பு கொண்ட நாடு என்று பன்னாட்டுச் செலா வணி நிதியம் (ஐ.எம்.எஃப்) பொலிவியாவுக்குச் சான்றிதழையும் பாராட்டுதலையும் வழங்கியிருக்கிறது. ஆனால், பொலிவிய அரசு அந்த அமைப்பைச் சந்தேகத்துடன் பார்த்து, இன்னும் அதிகமாகச் செலவழிக்கலாமோ என்று யோசித்துவருகிறது. இவை அனைத்துமாகச் சேர்ந்து, அரசு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கிறது.

முதலாளித்துவ இந்தியா

                 இந்தியா இன்று கடைப்பிடிக்கும் பாதை இதற்கு எதிர்மறையானது என்பது சொல்லத் தேவையில்லை: கடைந்தெடுத்த நவதாராளமயம், அனைத்தும் தனியார் மயம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றல், அந்நிய, உள்நாட்டுப் பெரும் முதலாளிகளின் தேவைக்கேற்ற கொள்கைகள், வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி, உலகிலேயே அதிக அளவில் தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, சுகாதார அமைப்புகள், அரசின் முதலீட்டையும், செலவையும் குறைக்கும் சிக்கனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
            லத்தீன் அமெரிக்கா முழுவதையும் தன் உடும்புப் பிடியில் வைத்திருந்த அமெரிக்காவின் பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில்தான் பொலிவியாவின் சாதனைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமீபத்தில் நடந்த தேர்தலிலும் மொராலிஸை எதிர்த்த வேட்பாளர், அமெரிக்காவின், பெரும் முதலாளிகளின் பிரதிநிதியாகத்தான் போட்டி யிட்டார். நாட்டின் பல வளங்களும் நிறுவனங்களும் இன்னும் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டின் ஊடகங்கள் இன்னும் வலதுசாரி சக்திகளான பெரும் முதலாளிகளின் கையில் தான் இருக்கிறது. அவையெல்லாம், மொராலிஸுக்கு எதிரான பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. ஆனால், பெருநிறுவன ஊடகங்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரத்துக்கு மக்கள் வீழ்ந்துவிடுவதில்லை.

கொடிய எதிரி

                    வட அமெரிக்க சாம்ராஜ்யத்தின் கொடும் கொலைப் பிடியிலிருந்தும், பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் பொருளாதார ஆதிக்கத்திலிருந்தும் தப்பியதால்தான், தன் நாட்டை உயர்த்த முடிந்தது என்று மொராலிஸ் கூறுகிறார். “முதலாளித்துவம் மனித சமுதாயத்தின், சுற்றுச்சூழலின், இந்த பூமியின் கொடிய எதிரி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்று மொராலிஸ் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.
          அத்துடன், பொலிவியாவின் மிகப் பெரும் பலம் லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றிடையே தோன்றி யிருக்கும் அற்புதமான ஒருமைப்பாடும் தோழமையும். இன்று கியூபா, வெனிசுலா, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, சிலி உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இடதுசாரி புரட்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. தங்களுக்குள்ளாக வலிமைமிக்கக் கூட்டு அமைப்பையும் அந்த நாடுகள் உருவாக்கியுள்ளன. அதன் ஒரு அத்தியாயம்தான் பொலிவியாவின் எழுச்சியும், மக்கள் ஆதரவு அரசியலும். மொராலிஸ் வணங்கும் முன்னோடிகள் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும், சமீபத்தில் மறைந்த வெனிசுலாவின் சாவேஸும்.

புகழ் பெற்ற அரசியல் சிந்தனையாளரும், உலக ஆன்மாவின் குரல் என்று போற்றப்படுபவருமான நோம் சாம்ஸ்கி சொல்கிறார், “பொலிவியா தனது சிறந்த முன்னுதாரணத்தினால், உலக முதலாளித்துவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகியிருக்கிறது.” உலக முதலாளித் துவத்துக்கு அச்சுறுத்தல்; நம்மைப் போன்ற நாடுகளின் மக்களுக்கு வழிகாட்டி..

நன்றி : தி இந்து - தமிழ் 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றது தியாகமா...?


 கட்டுரையாளர் : தோழர்.ஜி.ராமகிருஷ்ணன்,            
                                  மாநிலச்செயலாளர்,                                    
                                  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)           

           சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் சிறைத் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றத்தில் பெற்ற நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் “சோதனைகளைக் கண்டு கவலை இல்லை, தமிழக மக்களுக்காக எந்த தியாகமும் செய்வேன்“ என்றுகூறியுள்ளார். “பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளிலிருந்து உணர்ந்திருக்கிறேன்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு 18 ஆண்டுகளாக நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
              சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு விபரங்கள் இடம்பெற்றுள்ளன.3 ஆயிரம் ஏக்கர் நிலம் உட்பட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தகாலத்தில் குவிக்கப்பட்டுள்ளன. நிலத்தை வாங்குபவரின் பெயர்களை பூர்த்தி செய்யாமலே பதிவாளரை வீட்டிற்கு அழைத்து சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரின் பெயரிலும் சொத்துக்கள் இருந்தாலும் அது முதல்வர் பதவியை பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள்தான் என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்போது தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. வெறும் காகிதத்தில் மட்டுமே அந்த நிறுவனங்கள் இருந்துள்ளன என்பதும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட உரிமைகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உண்டு.
                  ஆனால் அவர் தண்டனை பெற்றதும், சிறையில் அடைக்கப்பட்டதும் மிகப்பெரிய அநீதிஎன்று அதிமுகவினர் போஸ்டர் அடித்தனர். தெய்வத்திற்கு மனிதன் தண்டனை வழங்குவதா? என்று கேட்கும் அளவிற்கு சென்றனர். ஆனால், ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையிலும் கூட அதே தோனி இடம்பெற்றுள்ளது விசித்திரமாக உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி எந்த தியாகமும் செய்வேன் என்று கூறுவதுபொருத்தமற்றது.விடுதலைப்போராட்டக் காலத்திலும் அதன்பின்பும் மக்களுக்காக சிறை சென்ற தலைவர்கள் இப்போதும்கூட நம்முடன் உள்ளனர். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா விடுதலைப்போராட்ட காலத்தில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு சிறைத்தண்டனை பெற்றவர். நாடு விடுதலை அடைவதற்கு முதல்நாளான ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை தான் அவர் மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். நாடு விடுதலை அடைந்த பின்பும் கூட அவர் பலமுறை சிறை சென்றுள்ளார்.
                             ஆனால், இந்த வழக்குகள், தண்டனை அனைத்தும் அவருடைய சொந்த விவகாரத்திற்கானவை அல்ல. அனைத்தும் நாட்டு மக்களின் விடுதலைக்காக, நல்வாழ்விற்காக அவர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவை.அதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு விடுதலைப்போராட்ட காலத்திலும் அதன் பின்பும் பலமுறை சிறை சென்றவர். இதிலும் தனிப்பட்ட வழக்கு ஏதும் இல்லை. அனைத்தும் மக்களுக்காக நாட்டுக்காக நடத்திய போராட்டங்களுக்காக தொடுக்கப்பட்டவையே. இந்த இருபெரும் தலைவர்களும் சென்னையில் பங்கேற்க இருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு கூட அதிமுக தலைமையிலான மாநில அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால், மாநிலம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு (!) எந்தத் தடையும் இல்லை.“நான் என்றும் மக்கள் ஊழியனே” என்று முழக்கமிட்ட தோழர் ஏ.கே.கோபாலன் மக்களின் விடுதலைக்காக போராடியவர்.
                        அவரும் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர். தமிழகம் தந்த மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி மாணவப் பருவத்திலேயே விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறை சென்றவர். ஆனால், அவர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அவர், மதுரை சிறையில் இருந்துகொண்டே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.விடுதலைப்போராட்ட வீரர்களாக திகழ்ந்து, சிறை சென்று அதன்பின் மக்கள் பணியின் ஒரு பகுதியாக முதல்வர் பொறுப்பை ஏற்ற தோழர்கள் இஎம்எஸ் நம்பூதிரிபாட், ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், சி.அச்சுதமேனன், இ.கே.நாயனார் போன்ற தலைவர்கள் பொதுவாழ்வில் எதிரிகளால் கூட குற்றம்சாட்ட முடியாத தூய நிர்வாகத்தை தந்தவர்கள்.
                   கேரள முதல்வராக இருந்த தோழர். வி.எஸ்.அச்சுதானந்தனும் அப்படியே.திரிபுரா மாநில முதல்வராக தொடர்ந்து நான்காவது முறையாக பதவிவகிக்கும் தோழர் மாணிக் சர்க்கார் இந்தியாவின் ஏழை முதல்வர் என்றும், அவருக்கு சொந்தமாக வீடும் இல்லை. காரும் இல்லை என்று பத்திரிகைகள் எழுதின. இதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாரம்பரியம். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதையே ஒரு மகத்தான தியாகமாக கூறிக்கொள்வதையும், அது தொடரும் என்று கூறுவதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.

நன்றி : தீக்கதிர்                      

திங்கள், 20 அக்டோபர், 2014

நம்ப தலீவர் அநியாயத்துக்கு ரொம்ப நல்லவரா இருக்காரே...!

             
        வரவர தமிழ்நாட்டு அரசியல் கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாம போயிட்டு  இருக்கு. அடிக்கடி இந்த ரெண்டு திராவிட தலைகளும் மோதிப்பாங்களே. அத நாடே வேடிக்கை பாக்குமே. அது மாதிரியான சுவாரசியங்கள சமீப காலமா நம்மாள பாக்கவே முடியலையே.  நாம்ப தமிழ்நாட்டுல தான் இருக்கோமான்னே சந்தேகமா இல்ல இருக்கு. அந்த ரெண்டு தலைகளும் மாத்தி மாத்தி சேத்தை வாரி அடிச்சிக்கிறத பாக்கவே அலாதியா இருக்குமே. அந்த மாதிரியான சம்பவங்கள இனி பாக்கவே முடியாதோ...?
                 கருணாநிதிக்கு ஒன்றென்றால் ஜெயலலிதா அறிக்கை விடுவதும், ஜெயலலிதாவிற்கு ஒன்றென்றால் கருணாநிதி அறிக்கை விடுவதும் என இருவரும் மாறிமாறி அம்பு விட்டுக்கொள்வார்களே. அந்த அரசியல் சாகச விளையாட்டுகள் இப்போது எங்கே போனது...?
              22 நாட்களுக்கு முன்பு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது திமுக தலைவர் கருணாநிதி எந்தவித ரீயாக்ஷனும்  காட்டாமல் அமைதியா இருந்தார். அத பாத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், பொதுமக்களும் ஏமாந்து போயிட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன். 
                சரி அப்போ தான் அப்படின்னா... ஜெயலலிதாவிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டபோதும் அதே ரீயாக்ஷன் தான். ரெண்டு நாள் கழித்து ''அம்மையார்  சிறை சென்ற போதும் நான் சந்தோஷப்படவில்லை....  இப்போது ஜாமீனில் வெளியே வந்தபோதும் நான் வருத்தப்படவுமில்லை...'' என்று நம்ப தலீவர் வழக்கத்திற்கு மாறாக வாய்மொழிந்திருக்கிறார். தலீவர் தன்னுடைய இயற்கையான குணாதிசயங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறாரே என்றும் நம்ப தலீவர் அநியாயத்திற்கு நல்லவரா இருக்காரே என்றும்   தமிழக மக்களுக்கா  ஒரே ஆச்சரியப்பட்டு போயிட்டாங்க. தமிழ்நாட்டுல இன்னும் என்னென்ன அதிசயங்கள் நடக்கப்போவுதோ...?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பூத்த ஒரே செம்மலர்...!

            
           நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தேர்தலில் அம்மாநில மக்கள் கடந்த காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியை தனக்கு சாதகமாக அறுவடை செய்துகொண்ட பாரதீய ஜனதாக்கட்சியால்,  மத்தியில் ஆட்சிக்கு வந்து ஆறே மாதத்தில் மக்களுக்கு தங்கள் மீது ஏற்பட்ட அதிருப்தியை இந்திய - பாகிஸ்தான் எல்லை மோதலை படம்பிடித்துக்  காட்டி திசைத்திருப்பி வாக்குகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அதிருப்தியிலிருந்த மக்கள் ஆட்சியமைக்கும் அளவிற்கு யாருக்கும் முழு மெஜாரிட்டி தரவில்லை என்பது தான் உண்மை. பா.ஜ.க.-விற்கு அடுத்து சிவசேனா, காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் மக்கள் சிறு சிறு இடங்களில் வெற்றிபெற செய்திருக்கிறார்கள். 
              இப்படிப்பட்ட சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஒன்றுபட்ட கூட்டணி இத்தேர்தலில் போட்டியிட்டதில், கல்வான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர். ஜிவபந்து கேவிட் என்ற  ஜே.பி.கேவிட் மகத்தான வெற்றிபெற்றிருக்கிறார். அதிலும் இந்த தொகுதி  பழங்குடியினர் தனி  தொகுதி என்பது பெருமைப்படத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் பழங்குடி மக்களின் நேசத்திற்குரிய தலைவருமான தோழர். ஜே.பி.கேவிட் ஏற்கெனவே ஆறு முறை இதேத் தொகுதியில் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதி மறுசீரமைக்கப்பட்டதால் கடந்த முறை மட்டும்   அவர் தோல்வி அடைந்திருந்தார். தற்போது ஏழாவது முறையாக வெற்றி வாகை சூடி 67,795 வாக்குகள் பெற்றுள்ள ஜே.பி.கேவிட், தன்னை அடுத்து வந்த தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜுன் துளசிராம் பவாரைவிட 4,786 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.பா.ஜ.க மூன்றாவது இடத்தையும், சிவசேனா நான்காவது இடத்தையும், காங்கிரஸ் கட்சி ஐந்தாவது இடத்தையும் பெற்றன. 
                கல்வான் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற - மகாராஷ்டிரா மாநிலத்தில் பூத்த ஒரே செம்மலர் தோழர்.ஜே.பி.கேவிட் அவர்களை பாராட்டுகிறோம். நெஞ்சார வாழ்த்துகிறோம். தோழருக்கு வாக்களித்த கல்வான் தொகுதி மக்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

இரு மாநிலத்தேர்தல்களில் பா.ஜ.க-வின் வெற்றி இரகசியம்...!

             அண்மையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி எதிர்பாராதவிதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், ஹரியானா மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றக் கட்சியாகவும் வெற்றிபெற்றிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பின் நடைபெற்ற இந்தியாவில் நடைபெற்ற மூன்று  இடைத்தேர்தல்களிலும் பலத்த தோல்விகளையே சந்தித்து வந்த பாரதீய ஜனதாக்கட்சி இப்போது மட்டும் வெற்றிபெற்றது எப்படி...? மக்களுக்கு எப்படி திடீரென்று பா.ஜ.க மீது நல்லெண்ணம் வந்தது....? நரேந்திரமோடி - அமித்ஷா இரட்டையர்கள் திட்டமிட்டு செய்த தந்திரம் தான் இந்த வெற்றிகளுக்கு கை கொடுத்தது.
            தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறே நாட்களில் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதாக்கட்சியானது  அமெரிக்க ஆதரவு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் ஆதரவு கொள்கைகளையும், நடவடிக்கைகளையும்   முந்தைய காங்கிரஸ் கட்சியை விட அதிவேகமாக முன்னெடுத்து செல்வதும், அத்தியாவசிய பொருட்களின்  தொடர்ச்சியான விலை உயர்வு, உயிர்காக்கும் மருந்துகள் விலையேற்றம், பெட்ரோல் - டீசல் விலையேற்றம், இரயில் கட்டண உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் இரயில்வே ஆகிய துறைகளில் அந்நியநேரடி முதலீடு உயர்வு, பாதுகாப்புத்துறையில் அந்நியநேரடி முதலீடு அனுமதி போன்ற மக்கள் விரோத - தேச விரோத செயல்களை முன்னெடுத்து செல்வதுமான வேலைகளை   மட்டுமே செய்துகொண்டிருப்பதால் பாரதீய ஜனதாகட்சியின் மீதும், பிரதமர் நரேந்திரமோடியின் மீதும் இந்திய மக்கள் அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் இருப்பதால் தான் பாரதீய ஜனதாக்கட்சி  கடந்த இடைத்தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தது என்பதை நாடு  நன்கு அறியும்.
   அப்படியிருக்க இந்த இரு வடமாநிலங்களின் சட்டமன்றத்தேர்தல்கள் நடைபெற்ற  தற்சமயமும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் போக்கில் மாற்றமும் வந்துவிடவில்லை என்பது மட்டுமல்ல. முன்னை விட வேகம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் தான் இந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலின் போதும் அந்த இரு மாநில மக்களிடையே பா.ஜ.க-வின் மீது   அதே அதிருப்தியும், ஏமாற்றமும் இருந்தன  என்பதை யாராலும் மறுக்கமுடியாது. என்றாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி எப்படி வெற்றிப்பெற்றது...? இந்த வெற்றியையும் ''மோடி அலை'' என்றும் ''மோடி சுனாமி''  என்றும் அமித்ஷாவும்  பா.ஜ.க-வினரும்  கொண்டாடி வருவது வேடிக்கையாய் இருக்கிறது.
                   ஆனால் மோடியின் ''தந்திரம்'' மோடிக்கு எதிரான அலையை வீழ்த்தி பா.ஜ.க-வுக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது என்பது தான் உண்மை.  பாகிஸ்தானாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் இவர்களின் தேர்தல் நேரங்களில்  இருநாடுகளுக்கும்  இடையே ''வேண்டுமென்றே'' உருவாக்கப்படும்  இராணுவ  மோதல்களையும்  எல்லைப் பிரச்சனைகளையும்   இந்த இரு  நாட்டு ஆளுங்கட்சியினரும்  தங்கள் வெற்றிக்கு  சாதகமாகவே மாற்றிக்கொள்வார்கள்  என்பது தான்  கடந்தகால வரலாறு. இது போன்ற இராணுவ மோதல்கள் அல்லது  தீவிரவாதசெயல்கள் போன்ற அச்சுறுத்தல்களை அதிருப்தியில் இருக்கும் மக்களை திசைத்திருப்பி    ஆட்சியாளர்கள் அல்லது ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.  அதிருப்தியிலிருக்கும்   மக்களின் கவனத்தை  திசைத்திருப்பி தங்களுக்கு சாதகமான ஓட்டுகளாக மாற்றி வெற்றிபெற்று விடுவர் என்பதும் உண்மையிலும் உண்மை. இந்த தந்திரத்தை தான் அந்தக்கால நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் முதல் இந்தக்கால மோடி வரை செய்திருக்கிறார்கள். இந்த இரு மாநில தேர்தல்களிலும் படுதோல்வியை தவிர்ப்பதற்காக ''அதே  தந்திரத்தை'' பயன்படுத்தி தான் இன்றைய அரசியல் புத்திசாலியான  நரேந்திரமோடியும் வழக்கம்போல் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை  உதவிக்கு வைத்துக்கொண்டு  மிக திறமையாக தேர்தலில்  வெற்றிபெற்றார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
                  நீங்கள் இந்த இரு மாநிலத் தேர்தலுக்கு முந்தைய நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்த்தால் புரியும். இந்த தேர்தலுக்கு முந்தைய பதினைந்து நாட்களாக இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்துவதாகவும், பதட்டமாக இருப்பதாகவும் இந்திய  தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் அலறி துடித்தன. இந்த நிகழ்வுகளை பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்திக்கொண்டு மக்களுக்கு தங்கள் மீதிருந்த அதிருப்தியை மறக்கச்செய்து திசைத்திருப்பினர். இது தான் இவர்களுக்கு இந்த வெற்றியை தேடித்தந்த இரகசியம். 
               ஆனால் இவர்களின் நல்லாட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்றெல்லாம் வார்த்தை ஜாலத்தை உதிர்க்கிறார்கள். அனால் உண்மை அதுவன்று என்பதும், எதுவென்று என்பதும் மக்கள் நன்கு  அறிவார்கள். இப்போது தேர்தலும், இந்திய-பாகிஸ்தான் பிரச்சனையும் ஓய்ந்துவிட்டது. ஊடகங்களும் தங்கள் திருப்பணி முடிந்து வேறு வேலையை பார்க்க சென்றுவிட்டன. 

சனி, 18 அக்டோபர், 2014

ஜெயலலிதாவின் பொறுப்பற்றத் தன்மை...!

               
             கடந்த 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு சென்ற மாதம் 27-ஆம் தேதியன்று கர்நாடக மாநில பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அவர்களால்  ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அந்நாளைய முதலமைச்சர் ஜெயலலிதா நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து உச்சநீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட  இன்று வரை தமிழகமே அல்லோலப்பட்டது. தவறு செய்த ஒருவரை தண்டிப்பதே தவறு என்று இங்கே தமிழகத்தில் இருந்த ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் நடத்திய வகைவகையான ஆர்ப்பாட்டங்களையும், ஆர்ப்பரிப்புகளையும் உலகமே பார்த்து சிரித்தது. சாலைகளில் கூடி ஒப்பாரி வைப்பதும், மொட்டையடித்துக் கொள்வதும், காவடிஎடுப்பதும், மண்சோறு சாப்பிடுவதும், பாதயாத்திரை நடத்துவதுமான காட்டுமிராண்டித்தனங்களும், இன்னொருபக்கம் தெருத்தெருவாய்  உண்ணாவிரதங்கள் இருப்பதும்,ஆங்காங்கே தீக்குளிப்புகள் நடத்தி தங்களை வருத்திக்கொள்வதும், உயிரை மாய்த்துக்கொள்வதுமான கண்மூடித்தனங்களும் நாள்தோறும் தமிழகம் முழுதும் நடந்தேறிய வண்ணம் இருந்தன.
                   அதுமட்டுமல்லாது, மேலே சொன்ன போராட்டங்களில் பேசுகின்ற அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் ஜெயலலிதா சிறைசெல்லும் அளவிற்கு செய்த தவறுகளை மறைத்துவிட்டு, தமிழகம் - கர்நாடகம் சம்பந்தப்பட்ட  இரு மாநில பிரச்சனைகளாக திசைத்திருப்புவதும் தண்டனை அளித்த நீதிபதியை தரக்குறைவாக விமர்சிப்பதுமான வேலைகளில் இறங்கினர்.  மேலும் தமிழகம் முழுதும் ஆங்காங்கே  ''கடவுளை மனிதன் தண்டிக்கலாமா..?'' என்பது போன்ற வரம்பு மீறிய வாசகங்களும் வசனங்களும் அடங்கிய போஸ்டர்களும், டிஜிட்டல் பேனர்களும் காணப்பட்டன.
                  இவ்வளவு நிகழ்ச்சிகளும் சென்ற 27 -ஆம் தேதியிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஜெயலலிதாவும் அறிவார். ஆனால் இதுபோன்ற விரும்பத்தகாத காரியங்களில் இறங்கவேண்டாம் என்று அறிவுறுத்தி தன் தொண்டர்களை தடுக்க ஜெயலலிதா ஏன் முயற்சி செய்யவில்லை என்பது தான் நடுநிலையாளர்களின் கேள்வி. அப்படியென்றால் இப்படியான அமைதிகுலைப்பு வேலைகளை தான் ஜெயலலிதா விரும்புகிறாரா...? அல்லது தனது தொண்டர்களை இதுபோன்ற செயல்களில்  ஈடுபடச்செய்து தனக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்களை நிர்பந்தம் செய்திருக்கிறாரா...? என்பதும்  நடுநிலையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.
                 ஆனால் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கொடுக்க  விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்று கொண்டு தன்னுடைய தொண்டர்களை மாநிலத்தில் அமைதியை  காக்கும்படியும், நீதிபதியையும், நீதிமன்றத்தையும் விமர்சிக்கவேண்டாம் என்றும் பணிவாக கேட்டுக்கொண்டது என்பது ஜெயலலிதாவின்  சுயநலத்தையும், பொறுப்பற்றத்தன்மையையும் தான் காட்டுகிறது.     

வியாழன், 16 அக்டோபர், 2014

<<< 50th Anniversary of CPI (M) >>>


 Written By Com.Prakash Karat, General Secretary, CPI(M)        

            The Communist Party of India (Marxist) is observing the 50th anniversary of its formation. The Party that was born at the Seventh Congress held in Kolkata (from October 31 to November 7, 1964) has advanced facing many trials and tribulations. On this occasion, we remember and pay homage to the thousands of comrades who became martyrs for the cause of the Party and the movement.
            The formation of the CPI(M) marked an important and crucial stage in the Communist movement in India. The Party was founded in October 1920 in Tashkent by a group of Indian Communist émigrés and was recognised as such by the Communist International. In subsequent years small Communist groups emerged in different parts of the country in the 1920s. The Communist Party of India began to work as an organised all India Party in 1934 after the Meerut case prisoners were released from jail.
           The formation of the CPI(M) was the result of a prolonged inner Party struggle about the strategy to be pursued after independence for the Indian revolution. This struggle took place for a full decade within the united party and that is the reason why no programme could be adopted.
           When the split took place in 1964, after 32 members of the National Council walked out of the meeting in April, it was widely perceived as a split on the lines of the Soviet-China division. The then Congress government also labeled the CPI(M) as “pro-Peking” rebels. The confusion arose partly from the fact that in the mid-1960s and in the later part of the sixties, a number of groups split away from the existing communist parties in many countries at the call of the Communist Party of China. Most of these parties remained splinters of the parent party and did not acquire any significant political influence or mass base.
              But things were different in India. The division in the CPI coincided with the growing divide between the Communist Party of the Soviet Union and the Communist Party of China. But this was not the cause for the split in the Indian party. The formation of the CPI(M) was the culmination of a prolonged struggle within the Party which centered on the programmatic strategy to be followed by the Party which pertained to basic questions such as the character of the Indian State, the nature of the ruling classes and so on.
 
I                            

          Thus, the formation of the CPI(M) was marked by the adoption of a programme at the 7th Congress in October-November 1964.
            The Party programme adopted at the 7th Congress set out for the first time the strategic task of the Indian revolution based on a Marxist-Leninist analysis of Indian society and the classes obtaining there. The programme spelt out the character of the Indian State in clear terms as the State run by a bourgeois-landlord alliance led by the big bourgeoisie, thereby dispelling the fog of confusion which had prevailed over this crucial feature so vital for working out a current strategy.
              The stage of the revolution, the character of the State and the class alliance required for the People’s Democratic Revolution were set out in the programme which has stood the test of time and practice. This programme was updated in 2001 but the essential strategic features referred above remains valid. It is this programme which has guided the political, organisational and ideological activities of the Party in the past five decades.
It is based on this Programme that the CPI(M) has grown to be the leading Left party in the country. The Party has more than one million members and these members are working in mass organisations whose combined membership numbers 70 million (7 crore).
 
II                          

         The CPI(M) had formulated its ideological positions soon after the formation of the Party. In the early 1960s there was a serious ideological debate and conflicts in the international communist movement. The questions about the content of the new epoch, the major social contradictions, the peaceful coexistence between the two social systems and the peaceful transition to socialism had all led to sharp differences and polemics with the CPSU and the CPC in opposing camps. Practically the entire CPI(M) leadership had been put in jail soon after the 7th Congress and therefore the Party’s stand on various ideological issues could not be formulated till 1968. This contributed to the wrong perception in some quarters that the CPI(M) was following the positions taken by the Chinese party. The delay in clarifying the ideological positions of the Party caused some damage when the Left sectarian trends emanated within the communist movement in the country.
         The CPI(M) after a thorough inner Party discussion adopted its ideological stand at the Burdwan Plenum held in 1968. This plenum marked a historical break with both right revisionism and Left sectarianism within the Indian Communist movement and also in the international communist movement. The CPI(M) displayed a robust independence in being critical of many of the theoretical positions of the CPSU and the CPC.
          This in fact brings out the distinctive character of the CPI(M). When the united CPI was a fledgling party it was dependent for its theory and practice on the CPSU (at times in the pre-independence period this was mediated by the Communist Party of Great Britain as instructed by the Communist International). This legacy persisted even after independence. Later, the Left sectarian trend found sustenance from the CPC in the last sixties. The CPI(M) broke with this “dependence”. The formulation of the programme, the tactical perspective which flowed from it and the ideological positions which were adopted marked a dialectical break from the past practice. The basis for this radical departure was the determined effort to apply Marxism-Leninism to the concrete Indian conditions. This meant not relying on borrowed wisdom and a mechanical copying of the models followed in other countries especially the ones which had made revolutions.
            The collapse of the Soviet Union had a delete
rious effect on the communist parties and the socialist cause all over the world. Its impact was felt in India too upon the communist movement. However, the CPI(M) as a party was the least affected in political-ideological terms or as an organisation in contrast to some other communist parties around the world. This was because the Party had an independent understanding of Marxism. It had adopted a critical approach to the ideology and practice of the CPSU without ever taking an anti-Soviet position. Since the Party had no blind faith in the Soviet Union and the CPSU, it was better equipped to face the debacle of the Soviet Union. The CPI(M) suffered lesser damage as a result. Being deeply rooted among the Indian working people and the Marxist-Leninist ideology, the Party could draw sustenance from its own theory and practice to reappraise the experience of building socialism in the 20th century and to renew its confidence to work for a renovated socialism in the 21st century. In fact the decade consequent to 1991 saw a steady increase in the Party membership.

III                        

            The CPI(M) programme states that the agrarian revolution is the crux of the democratic revolution. Hence the agrarian question and the land issue have been central to the practice of the Party.
          The CPI(M) is a Party which has done the most to advance the struggle for land since its inception. It is these struggles against landlordism, for take over of benami land, for distribution of ceiling surplus land, pattas for house sites for agricultural workers and so on which resulted in the Left-led governments of West Bengal, Kerala and Tripura being the only states which have implemented land reforms in a meaningful manner. Reforms which have led to the distribution of surplus land, ending of rack rented tenancy or ensuring security of tenure for sharecroppers.
         The 1960s and 1970s in particular witnessed a wave of struggles on these issues. Both the United Front governments in West Bengal and Kerala in 1967 to 1970 period in which the CPI(M) was the leading force, made determined advance on the land issue which was backed by powerful struggles.
         As a Party of the working class, the CPI(M) has consistently sought to strengthen the working class movement and organise the workers as a political force capable of leading the democratic movement. The Party has been actively taking up the fight against privatization, against contractualisation of labour and in defence of trade union rights.
The CPI(M) views class exploitation and social oppression as twin pillars of the present bourgeois-landlord order. The Party has, therefore, been ceaselessly fighting all forms of social oppression – of women, dalits, adivasis and minorities.

IV                  

            The CPI(M) has the basic understanding that democracy and democratic rights and even the limited rights provided by the Constitution are not secure as the ruling classes of the country tend to encroach and attack democracy whenever its interests dictate so. The CPI(M) was the first Party to warn against the impending danger of one party authoritarianism in its ninth Congress in 1972. It said this on the basis of the experience of the semi-fascist terror instituted in West Bengal from 1971 onwards, which was backed by the Indira Gandhi government and the State machinery. The CPI(M) was active in the fight to protect democracy and democratic rights in the period leading up to the declaration of internal emergency in June 1975. The Party struggled against the emergency regime. Hundreds of its leaders and cadres were put in prison during this time but the Party joined with other democratic forces to oppose the onslaught on democracy. That is why with the lifting of the Emergency, the Party emerged with heightened prestige. It was in the background of the fight against semi-fascist terror and the Emergency at the all India level that the CPI(M) and the Left Front won the West Bengal assembly elections in 1977 for the first time with a two-third majority.

        The attacks on democracy and democratic rights have often been concentrated against the CPI(M) and the Left. After the semi-fascist terror in West Bengal, there was a period of terror in Tripura between 1988 and 1993. West Bengal has again been facing widespread terror and trampling of democratic rights since 2011. Hundreds of comrades have laid down their lives defending democratic rights and the Red Flag.

V                        

          The Communist movement in India has the rich experience in working in the parliamentary democratic system. The CPI(M) has made, on its part, the most significant contribution in this sphere. After its formation the Party formulated a creative approach on how to work in parliamentary forums and on participation in state governments. The tactical direction for this was given in the programme itself. It also drew on the experience of the first communist ministry in Kerala in 1957. The CPI(M) would join state governments only where the Left and democratic forces were a strong force in the legislature. It looked at participation in state governments as an aid to develop the mass struggles and the democratic movement while providing all relief possible to the people within the bourgeois-landlord system. The CPI(M) sought to put this into practice when the United Front governments were formed in 1967-70 in West Bengal and Kerala.
         The formation and running of CPI(M)-led Left government in West Bengal, Kerala and Tripura from 1977 onwards were an important part of the task of developing the Left and democratic movement in the struggle to project alternative policies (within the limitation of the state government) against the bourgeois-landlord policies.
           The achievements in the sphere of land reform, decentralisation of powers, strengthening the rights of the working people for collective action and the defence of secularism by these governments have contributed to the advancement of the Left and democratic agenda.
 
VI                

            The concomitant political platform championed by the CPI(M) has been federalism. As per the Party’s understanding of the national question, India is a multinational country. The unity of the Indian Union can be strengthened only by a federal structure which allows the various linguistic nationalities to be able to have their due share in the economic and social development. There has to be a federal political structure.
            The CPI(M) has been a consistent force for federalism and for the unity of the people by combating the forces of regional, linguistic and ethnic chauvinism. When the divisive forces were active in the 1980s in various parts of the country, the CPI(M) stood firm on the question of national unity and hundreds of comrades laid down their lives in Punjab, Assam, Tripura and Jammu & Kashmir fighting these forces. The Party has played a key role on the issue of restructuring of Centre-state relations and this has been articulated by the Left-led state governments. The Party played an important role in the formulation of a common stand on Centre-State relations as seen in the deliberations of the Srinagar conclave of 15 parties in 1983.

VII                       

          The CPI(M) has been the most consistent and resolute force against communalism. Historically, religious communalism as a weapon was used to divide the people during the days of the fight against British rule. The Communists have a glorious record of standing firm in the face of communal frenzy in the days of partition. Communists, however small in number, stood against the violence and rescued those targeted by the mobs. Later in independent India whenever communal riots broke out communists have sought to protect those facing violence. It is in that tradition that in Kerala a CPI(M) leader, U.K. Kunhiraman, died while protecting a mosque which came under attack in Thalassery during the communal violence of 1968. The CPI(M) adheres firmly to the principle of secularism which means separation of religion and the State and politics. Unlike the bourgeois parties which seek to appease the various forces of majority and minority communalism, the CPI(M) is completely opposed to any intervention in politics by the communal forces.
When the threat of majority communalism arose in the late 1980s, it was the CPI(M) which pointed out that the BJP-RSS combine represented this threat. The party has worked relentlessly to combat the Hindutva forces and to isolate them politically. The Party views the ascendance of the BJP and its coming to power as integral to the interests of the big bourgeoisie and the corporates who view the BJP as a party committed to advance the neo-liberal agenda. That is why the CPI(M) views the struggle against the neo-liberal policies and the fight against majority communalism as interconnected. In the entire political spectrum only the CPI(M) and the Left parties are the force who have never compromised with the BJP and the communal forces either for electoral or political gains.

VIII                    

            The CPI(M) in the last five decades has been a significant force in political terms in projecting an alternative path of development for India – one which is socially and economically just and politically democratic. On all the major issues which have arisen in the Indian polity – secularism, democracy, federalism, equity and justice – the CPI(M) has made its own distinctive contribution.
          The CPI(M) and the Left have suffered serious electoral reverses in the recent election. The rightwing offensive has resulted in a BJP government which represents the twin forces of corporate power and Hindutva. The fight for secular democracy, the rights of the working people and alternative policies requires a strong CPI(M) and Left. The Party is taking up this challenge in right earnest. In the run up to the 21st Congress of the Party to be held in April 2015, the Central Committee is formulating a fresh political-tactical line which can effectively deal with the new political situation. It is undertaking concrete studies of the changes that have occurred in Indian society and classes in the more than two decades of neo-liberal capitalism. The Party Congress will provide a new direction for the organisation and its work among the people.
          India is witnessing a more predatory capitalist process unfold through the neo-liberal model adopted by our ruling classes. Economic and political inequalities have arisen sharply. Along with some of the world’s riches persons, India has the largest number of poor people. The fight for an alternative path leading to socialism is an ongoing and arduous struggle.

       As the CPI(M) marks its 50th year of existence we rededicate ourselves to pursue the goal with confidence and determination.

News source courtesy & - See more at: http://ganashakti.com/english/comments/details/142#sthash.m6BqUY24.dpuf