செவ்வாய், 31 ஜூலை, 2012

''பங்குச்சந்தை'' சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சர் ஆனார்...!

     
   மத்தியில் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த பிரணாப்முகர்ஜி குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் நம்ப ''பங்குச்சந்தை'' சிதம்பரம் மீண்டும் மத்திய நிதியமைச்சர் ஆனார். ''சிதம்பரம் ஒரு திறமை வாய்ந்த நிதியமைச்சர்'' என்று  அமெரிக்க பிணந்தின்னிகளால் வாயாரப் பாராட்டப்பட்டவர். சும்மா சொல்லக்கூடாது. அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள பொதுத்துறைகளையும், பொதுத்துறைப் பங்குகளையும் அமெரிக்க முதலாளிகள் வாங்குவதற்கு ''தரகு'' வேலைகளைப் பார்த்திருக்கிறார்.  சென்ற முறை முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே நான்கு ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்தார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு மட்டுமே பாராளுமன்ற அவைக்கு வருவார். ஆனால் அதன் பிறகு  பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி சம்பந்தமாக  - பட்ஜெட் சம்பந்தமாக  கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குக் கூட பாராளுமன்ற இரு அவைகளுக்கும் வரமாட்டார். உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவரது இணையமைச்சர் பதில் சொல்லுவார் அல்லது சிதம்பரமே தன் அலுவலகத்தில் இருந்தப்படியே எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பார்.  தப்பித்தவறிக்கூட அவைக்குள்ளே நுழைய மாட்டார்.  காரணம் இந்திய - அந்நிய பெருமுதலாளிகளோடு இந்திய அரசு நிறுவனங்களின் விற்பனை சம்பந்தமாக உரையாடிக்கொண்டிருப்பார். இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, இந்திய மக்களின் சம்பளத்தை வாங்கிக்கொண்டு - அமெரிக்காவிற்கு எஜமான விசுவாசம் காட்டும் பணிகளை மட்டும் தான் செய்துகொண்டிருப்பார். ஒட்டு மொத்தமா சொல்லனும்னு சொன்னா... இந்த தேசத்தை பங்குப்போட்டு விற்கும் ''தரகு'' வேலையை மட்டும் தான் செய்வார். 
             அது மட்டுமா... செய்வாரு... தன் மகன் கார்த்திக் சிதம்பரம் கோடிகோடியாய் சம்பாதிப்பதற்கு பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் போன்ற  வழிமுறைகளை ''ஏற்பாடு'' செய்து  கொடுப்பார். அதுவும் நிதி அமைச்சர்ன்னா இந்த ''வேலைக்கெல்லாம்'' ரொம்ப வசதியா போச்சி. உலகத்திலேயே ''சிறந்த அப்பா'' டாப் -10 வரிசையிலே  கருணாநிதிக்கு அடுத்து இவர் தான் ''சிறந்த  அப்பா'' என்று சொன்னால் தப்பில்லைங்க.
                இப்படிப்பட்டவரைத் தான் 2008 - ஆம் ஆண்டில இந்தியாவில் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின்  அச்சுறுத்தல் அதிகமானதாலேயும், நாட்டில் அமை குலைந்ததனாலேயும்  உள்துறை அமைச்சராக ஆக்கினாங்க. அங்கேயும் தனது பணிகளை  கச்சிதமாக தான் செய்தார். 2009 - ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் அமெரிக்க உளவுத்துறையான  சி. ஐ. ஏ - வின் தலைவரை இந்தியாவிற்கு வரவழைத்தாருங்க. தேர்தல் பற்றிய பேச்சுகளை அமெரிக்க உளவுத்துறையோடு நடத்தினார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வேலைகளை செய்வதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும்  அமெரிக்க உளவுத்துறையையும், இந்தியாவில் பணியிலிருந்த அமெரிக்க தூதரையும், துணைத் தூதரையும் துணைக்கு வைத்துக்கொண்டார். சிதம்பரம்  சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவதற்கே இவர்கள் உதவி தேவைப்பட்டது.
           இப்படிப்பட்டவர் தான் 2009 - பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னரும், மீண்டும் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால்,சிதம்பரத்தைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சகப் பொறுப்பில்  இருந்த இன்றுவரை, சர்ச்சைகளை மட்டும்   தான் அதிகம் சந்தித்திருக்கிறார். மத்திய அரசு எதிர்ப்பார்த்தது போல் அமைதி  கிடைக்கவில்லை  மாறாக நாட்டில் அமைதி குலைந்தது தான் மிச்சம். இந்த காலங்களில்  . வடமாநிலங்களில் மாவோயிஸ்டுகள் வளர்ச்சியடைந்தனர். மாவோயிஸ்ட்டுகளால்  வடமாநிலங்களில்  ஆள் கடத்தல் - கொலை போன்ற  தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மக்கள் ஆளானார்கள்.   அதனால் மக்களால் அமைதியான வாழ்க்கை நடத்தமுடியவில்லை. அதேப்போல் இந்த காலக்கட்டத்தில்  வடகிழக்கு மாநிலங்களிலும் மாவோயிஸ்டுகள் வேரூன்றத் தொடங்கினார்கள்.
           அதேப்போல், தீவிரவாதிகளையும் மாவோயிஸ்ட்டுகளையும் அடக்கப்போவதாகச் சொல்லி   தேசிய அளவிலான ''பயங்கரவாத தடுப்பு மையம்'' அமைக்க துடித்துக்கொண்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களின் எதிர்ப்பால் அது முடியாமல் போனது, அசாம் இன மோதலை ஆரம்பத்திலேயே  தடுக்க முயற்சிச் செய்யாமல் அதை வளர விட்டது. இவ்வாறு ஒரு உள்துறை அமைச்சராக பல ''சாதனைகளை'' படைத்தவர் தான் இந்த ப - பங்குச்சந்தை சிதம்பரம்.
           அதுமட்டுமல்ல, ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்த போது  ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆ. ராசாவுடன் சேர்ந்து இவரும் முறைகேடுகளில்  ஈடுபட்டதற்கான  குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் இருக்கின்ற இப்படிப்பட்ட  சூழ்நிலையில் தான் இந்த ப. சிதம்பரம் நிதி அமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்பதும்,
             முன்பு இவர் நிதி அமைச்சராக இருந்த போதும் நாட்டின் பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தல... தற்போது உள்துறை அமைச்சராக இருந்த போதும் உள்நாட்டு பாதுகாப்பையும் தூக்கி நிறுத்தல... இப்படிப்பட்டவரைத் தான் நாட்டின் பொருளாதர நிலை மோசமாக இருக்கும் தற்போதைய  சூழ்நிலையில் தான் ப. சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்பது மக்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியமாக இருக்கிறது.

வியாழன், 26 ஜூலை, 2012

வெனிசுலாவில் ஒரு புரட்சிகர தொழிலாளர் சட்டம்...!

            லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சிந்தனை கொண்ட அரசுகள் பின்பற்றிவரும் கொள்கைகள், நவீன தாராளமயமாக்கலுக்கும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கும் எதிரான மாற்றுக் கொள்கைகளை வழங்கி வருவதைப் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 20 வது அகில இந்திய மாநாட்டுத் தீர்மானங்கள் சுட்டிக்காட்டுகின்றன.      
            2012 மே தினத்தன்று வெனிசுலாவின் சாவேஸ் அரசால் வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் சட்டம் இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகின்றது. இந்தச் சட்டம் வேலை என்பதை ஒரு சமூக நிகழ்முறையாக வரையறை செய்கிறது. குறைந்தபட்ச ஊதியம், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, பணியிடத்தில் சமத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்கிறது. இந்தச் சட்டம் வெனிசுலா மக்களின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து, தாம் மிகவும் திருப்தி அடைவதாகக் கியூபாவின் மகத்தான தலைவராகிய பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.  
        
அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பின் வருமாறு வரிசைப்படுத்தலாம்.
         வீட்டு வேலை என்பது மதிப்பைக் கூட்டுவது மற்றும் செல்வத்தையும் நல்வாழ்வையும் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பொருளாதார நடவடிக்கையே. எனவே குடும்பப் பெண்களுக்கும் சமூகப்பாதுகாப்பு உரிமை சட்டப்படி வழங்கப்படும்.
           வேலை என்ற சமூக நிகழ்முறையின் முக்கியக் குறிக்கோள்களாவன: முதலாளித்துவச் சுரண்டல் வடிவங்களைக் கட்டுப்படுத்துவது நம்முடைய பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த கூடிய விதத்தில் பண்டங்களையும் பணிகளையும் உற்பத்தி செய்வது, செல்வத்தை நியாயமானமுறையில் பகிர்வதன் மூலம் மனிதத்தேவைகளை நிறைவு செய்தல், மக்களின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கான அடிப்படைத்தளமாகக் குடும்பம் இருப்பதை உறுதிசெய்யும் விதத்தில், பொருளாதார, சமூக, ஆன்மிக நிலைகளை உருவாக்குவது, வேலை என்னும் சமூக நிகழ் முறை பின்வருபவற்றை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் சுதந்திரம் மற்றும் தேசிய இறையாண்மை, பொருளாதார இறையாண்மை, ஒரு கவுரவமான வாழ்க்கைக்கான மனிதவள மேம்பாடு, மக்களின் வாழ்க்கைத்தரம், உணவு இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உயர்த்தும் தன்மையில் அமைந்த பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை அறிவுக்குப் பொருத்தமான வகையில் பயன்படுத்துவது ஆகியவை.
         நிறுவனங்கள் தங்கள் பணிகளை வேறு ஒருவரிடம் அளிப்பது தடைசெய்யப்படும். இதன் பொருள் யாதெனில், பொது வேலை அல்லது பணியானது நிரந்தரமானதாகவும் அந்த நிறுவனத்தின் உற்பத்தியோடு நேரடி யாகத் தொடர்பு உடையதாகவும் இருக்குமானால், அதனை ஒப்பந்த முறை மூலம் வேறு ஒருவரிடம் ஒப்படைக்கக்கூடாது, ஒப்பந்த தொழிலாளிகளுக்கு நிரந்தரத் தொழிலாளிகளுக்குரிய நியாயமான உரிமைகளை மறுபதற்கே இது செய்யப்படுவதாகக் கருதப்படுவதால், இது தடை செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட தேசிய குறைந்தபட்சக் கூலியைவிடக் குறைவாக வழங்குவது அனு மதிக்கப்படமாட்டாது. சமவேலைக்குச் சம ஊதியத்தை ஒவ்வொரு நிறுவனமும் வழங்க வேண்டும்.
             ஒரு தொழிலாளி நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டால் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகலாம். சமபளத்தை வழங்குமாறு நீதிபதி ஆணையிடுவதற்கு இது உதவிசெய்யும், மூன்று நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்படாவிட்டால் முதலாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நீதிபதி ஆணையிடமுடியும், அந்த உத்தரவும் பலன் அளிக்கவில்லை என்றால் அந்த முதலாளிக்கு 6 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம். ஒவ்வொரு நிறுவனமும் நிதி ஆண்டின் இறுதியில் வரி செலுத்தியபிறகு எஞ்சும் நிகர வருவாயின் 15 சதவீதத்தைத் தொழிலாளிக ளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். இது குறைந்தபட்சமாகத் தொழிலாளியின் ஒரு மாதசம்பளத்துக்கு ஈடாகவும், அதிகபட்சமாக நான்கு மாதச்சம்பளம் வரையிலும் இருக்கலாம். சரியான தொகை வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்வதற்காக நிறு வனத்தின் வரவு-செலவுக்கணக்குகளைப் பரிசீலிப்பதற்கான உரிமை தொழிலாளிகளுக்கு உண்டு.
                 சட்டவிரோதமான முறையில் ஒரு தொழில் நிறுவனம் மூடப்படுமானால், தொழிலாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க அந்த நிறுவனத்துக்குள் நுழைந்து பணிகளை மீண்டும் துவக்குமாறு உத்தரவிடுவதற்குத் தொழிலாளர் நல அமைச்சருக்கு உரிமை உண்டு. கடன் சுமைக்கு ஆளாகும் நிறுவனங்களில், தொழிலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் பிற சமூகப் பாதுகாப்புப் பயன்கள் போன்றவற்றுக்கு அடமான கடன்கள் உள்ளிட்ட கடன்களை விட முன்னுரிமை அளிக்கப்படும். தொழிலாளிகளுக்குக் கிடைக்கவேண்டிய பயன்களை உத்தரவாதம் செய்வதற்காக முன்கூட்டியே முதலாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது அனுமதிக்கப்படும்.
            வார வேலை நாட்கள் ஐந்தாக நிர்ணயிக்கப்படும். தொழிலாளிகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் ஓய்வு பெறும் உரிமை உண்டு. ஒரு நாளுக்கு எட்டுமணி நேரமும் வாரத்துக்கு 40மணிநேரமும் வேலைநேரமாகக் கணக்கிடப்படும். இரவு வேலை நேரம் நாளொன்றுக்கு ஏழுமணி நேரமாகவும் வாரத்துக்கு 35 மணிநேரமாகவும் கருதப்படும்.
            வீடுகளில் வேலை பார்க்கும் தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள், ஆயாக்கள் ஆகியோரின் பணிநிலைகளும் இந்தச் சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்படும்.
            சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட் களை சட்டப்படி பெறுவதற்கான உரிமை விவசாயத்தொழிலாளருக்கும் உண்டு. வாரத்தில் 40மணி நேரத்துக்கும் மேலாகவோ அல்லது நாளொன்றுக்கு 8மணிநேரத்துக்கு மேலாகவோ அவர்கள் வேலை செய்யக்கூடாது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் ஓய்வு பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு. விவசாய உற்பத்திக்கிளை ஒன்றில் ஒரு விவசாயத் தொழிலாளி ஒரு குறிப்பிட்ட நிலத்தில் தனியாக விவசாயம் செய்து வந்தால் இந்த வேலைக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்தவுடன் அந்த நிலத்தில் தங்குவதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையை அவர் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்றால் அவரது உற்பத்திப் பொருளுக்கு ஈடான மதிப்பு அவருக்கு வழங்கப்படும்.
           நாட்டு வளர்ச்சிப் பணியில் பங்கேற்பதற்கான உரிமை உரிய வயதை எட்டிய இளைஞர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் சமூக உற்பத்தி நிகழ்முறையில் மாணவர்களாக, பயிற்சியாளர்களாக, கல்விச் சலுகைக் கட்டணம் பெறுவோராக, தொழிலாளர்களாக அரசு இணைக்க வேண்டும். நியமனத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எவரையும் கருவுறுதல் தொடர்பான மருத்துவச்சான்றை அளிக்குமாறோ அல்லது மருத்துவப்பரிசீலனைக்கு உட்படுமாறோ நிறுவனம் எதுவும் கேட்கக்கூடாது. பிரசவத்துக்கு முன்னர் 6வாரங்களுக்கும் பிரசவத்துக்குப் பின்னர் 20 வாரங்களுக்கும் பிரசவகால விடுப்பு வழங்கப்படும். இக்காலத்தில் நோய்வாய்ப்படும் தாய்மார்களின் விடுப்புக்காலம் அதிகரிக்கப்படும். இக்காலத்துக்கு முழுச் சம்பளமும் பிற பயன்களும் வழங்கப்படும்.
                தங்களின் விருப்பப்படி சங்கம் சேரும் உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு. தொழிற் சங்க நடவடிக்கையானது அரசால் அங்கீ கரிக்கப்பட்ட ஒரு உரிமையாகும். தொழிற்சங்கங்களைத் துவக்குவதற்கோ, அவற்றுக்கு நிதி அளிப்பதற்கோ, தொழிற்சங்க நடவடிக்கை களுக்கு ஊறு விளைவிக்கவோ, குறிப்பிட்ட சங்க உறுப்பினருக்கு எதிராகப் பாரபட்சம் காட் டவோ முதலாளிகளுக்கு அனுமதி கிடையாது. தொழிலாளி விரோத நடவடிக்கைகள் சுட்டிக் காட்டப்பட்டால் 72மணி நேரத்துக்குள் அவை நிறுத்தப்பட வேண்டும். தவறினால் தண்ட னைக்குள்ளாக நேரிடும்.
         தொழிலாளருக்கு வேலை நிறுத்த உரிமை உண்டு. வேலைநிறுத்த காலத்தில் பணியிடங் களிலேயே தங்க அனுமதி உண்டு. கோரிக்கைகளைச் சமர்ப்பித்த பிறகு 120 மணி நேரம் கழித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம். வேலை நிறுத்தத்தால் தொழிலாளியின் பணிக்காலம் பாதிக்கப்படமாட்டாது. வேலை நிறுத்தக்காலத்தில் வேலை நிறுத்தக்காரர்களின் இடங்களில் புதிய தொழிலாளர்களைப் பணியமர்த்தவோ, வேறு இடங்களிலிருந்து பணி மாற்றல் மூலம் கொண்டுவரவோ அனுமதி இல்லை.
             1999ன் பொலிவாரிய அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப்பின் சாவேஸ்அரசாங்கம் கொண்டுவந்துள்ள மிக முக்கிய ஆவணமாக இது கருதப்படுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பைப்போலவே இந்தச் சட்டத்துக்கும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. குறைந்தபட்ச மாத சம்பளத்தை 32.5 சத வீதம் அளவுக்கு உயர்த்தியுள்ள சாவேஸ் அரசின் நடவடிக்கையையே அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள் ஒரு கருத்துப்போராட்டத்தை வெனிசுலாவில் துவக்கியுள்ளன என்பதுடன், அவை தொழிலாளி வர்க்கத்தை மேலும் முற்போக்கான திசையில் இட்டுச்செல்லும் தன்மை கொண்டவையாக உள்ளன. தொழிலாளிகளின் உரி மைக்காகப் போராடுவோருக்குக் கிடைத் துள்ள ஒரு பேராயுதமாக இது இருக்கும். இப் போராட்டம் எவ்வாறு நடத்தப்படும்; எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படும் என்பது தொழிலாளி வர்க்கத்தின் வலிமை மற்றும் அதன் அரசியல் முதிர்ச்சியைச் சார்ந்துள்ளது.
               சர்வதேச தொழிலாளர் இயக்கத்துக்கு இந்தப் புரட்சிகர சட்டத்தின் மூலம் மாற்றுக்கான ஒரு ஆயுதத்தை வெனிசுலா வழங்கியுள்ளது. இச்சட்டத்தைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்குகின்றன. அவர்கள் அஞ்சி நடுங்கட்டும். புரட்சிகர சிந்தனைக்கான காலம் வந்து விட்டது. அதனால் அதன் முன்னேற்றத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.

ஆதாரம்: 

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’
(21/27 மே 2012) 

தமிழாக்கம் :  கி.இலக்குவன்

புதன், 25 ஜூலை, 2012

நான் சந்தித்த இந்திய நாட்டின் மாமனிதர் - கேப்டன் லட்சுமி...!

நான் அண்ணாந்து பார்த்த தேசத்தின் உயர்ந்த மனிதர்...!

                    சென்ற 2007 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கான்பூரில் நான் சார்ந்திருக்கக்கூடிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 14 - வது மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதிநிதியாக பங்குகொள்ளும் பெருமைமிகு வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. மாநாட்டிற்காக புறப்படும் போதே கான்பூரில் வசிக்கும் கேப்டன் லட்சுமி அவர்களை சந்திக்கவேண்டும் என்கிற திட்டத்தோடு தான் கிளம்பினேன். வாரணாசி எல். ஐ. சி. அலுவலகத்தில் பணிபுரியும் எனது நண்பர் தோழர். ராம்ஜி அவர்களிடம்  கேப்டன் லட்சுமி அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி புதுவையில் இருக்கும் போதே  கேட்டிருந்தேன். மாநாட்டில் அவரைப் பார்த்ததிலிருந்தே அரிக்கத் தொடங்கிவிட்டேன். அவரும் முதல் நாளிலிருந்தே முயற்சி செய்து கொண்டிருந்தார். மாநாட்டிற்கு வந்த தோழர்கள் நிறைய பேர் அவரை தினமும் சந்திப்பதால், எனக்கு டிசம்பர் 10 - ஆம் தேதி தான்  கேப்டன் லட்சுமி அவர்களை பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தது. அந்த சமயம் கடுமையான  குளிர்காலம் என்பதாலும், வயது முதிர்ந்தவர் என்பதாலும் ( அன்று அவருக்கு வயது 92 ) நிறையத் தோழர்களை அனுமதிக்க முடியாது என்றும், எனவே என்னோடு சேர்த்து  வெறும் ஐந்து தோழர்கள் மட்டுமே வாருங்கள் என்றும் சொல்லி எங்களுக்காக தனி வாகனத்தையும் அமர்த்தியிருந்தார்கள். 
            அதன் படி அன்று மாலை 4 மணிக்கு, வேலூர் கோட்டத்திலிருந்து மாநாட்டிற்கு வந்தவர்களில் நானும், தோழர்கள் இராமர், பார்த்தீபன், வேலாயுதம், வேல்முருகன் ஆகியோரும் கேப்டன் லட்சுமி அவர்களின் வீட்டிற்கு சென்றோம். வீட்டிலிருந்தவர்கள் எங்களை வரவேற்று உட்காரச் சொன்னார்கள். கேப்டன் அவர்கள் அவரது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் வந்திருக்கும் தகவலை சொன்னவுடன் எழுந்து வந்து விட்டார். எங்களை வணக்கம் சொல்லி வரவேற்றார். நான் அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன். கடவுள் மீது நம்பிக்கையுள்ளவன் உண்மையிலேயே கடவுளைப் பார்த்தால் என்ன உணர்வு ஏற்படுமோ... அதே உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இந்த தேசத்தின் விடுதலைக்காக தியாகம் செய்த தலைவர்களான ஜான்சி ராணி, பாரதி, பகத்சிங், நேதாஜி, வ.உ.சி., போன்றவர்களையெல்லாம் நாம் பார்க்கவில்லையே. அவர்களெல்லோரும் வாழ்த்த காலத்தில் நாம் வாழவில்லையே என்று சிறு வயதிலிருந்தே பலமுறை நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆனால்  கேப்டன்  லட்சுமி அவர்களைப் பார்த்ததும் அந்த தலைவர்கள்  அத்துணை பேரையும் ஒருசேரப் பார்த்தது போல் ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது. 
              நாங்கள் மாநாட்டிற்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று நாங்கள் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த போது அவர் அழகிய தமிழில் ''தமிழ்நாட்டிலிருந்து வரீங்களா'' என்று பேசியதை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. வந்திருந்த எங்கள் ஐவரிடமும் தனித்தனியாக எந்தெந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டார். நான் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும், ''புதுச்சேரி என்று சொல்லுங்கள்'' என்று திருத்தினார். வியந்து போய்விட்டேன். பிறகு அவரிடம் அவர் கலந்துகொண்ட விடுதலைப்போராட்டங்கள் பற்றியும், மாவீரன் நேதாஜி பற்றியும், காந்தி இவர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை பற்றியும் எங்களோடு நினைவு கூர்ந்தார். அந்த வயதிலும் பழைய நினைவுகளை மறக்காமல் அவர் சொன்னது என்பது எங்களை ஆச்சரியப்படச் செய்தது. 
             பேசிக்கொண்டு  இருக்கும் போது இடையில் தேநீர் வரவழைத்து எங்களை உபசரித்தார்.   எங்களுக்கு பெருமையாய் இருந்தது. இன்றைய ஆட்சியாளர்களைப் பற்றியும், இந்த நாடு போகும் போக்கைப்பற்றியும் கவலையோடு பேசினார். ஏறக்குறைய ஒருமணி நேரம் அவரோடுப் பேசிக்கொண்டிருந்தோம். விடைபெறுவதற்கே எங்களுக்கு மனமில்லை. அவரது ஓய்வு கருதி அவரிடம் மனமில்லாமல் பிரியாவிடைபெற்றோம். கிளம்புவதற்கு முன்பு நாங்கள் தனித்தனியாக அவரோடு சேர்ந்து - அவரது பக்கத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இறுதியாக புறப்படுவதற்கு முன்பு எங்களுக்கு உங்களது செய்தி என்ன என்று கேட்டபோது அவர் சொன்னது இப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

         ''இந்த நாட்டிற்கு அரசியல் விடுதலை கிடைத்துவிட்டது.... பொருளாதார விடுதலைக்கூட கிடைத்துவிட்டது..... ஆனால், சமூக விடுதலை என்பதும், பெண் விடுதலை என்பதும் இன்னும் இந்த நாட்டில் கிடைக்கவில்லை. தீண்டாமை என்பது இன்னும் ஒழியவில்லை. நீங்கள் அதற்காக போராடுங்கள்'' என்று செய்தியாகவும், அறிவுரையாகவும் அவர் கூறியதும் மெய்சிலிர்த்தது. புல்லரித்துப்போனது. 

              வணக்கம் சொல்லி அவரை விட்டு கிளம்பியப்பின்னரும், அந்த மாமனிதரை மீண்டும் நாம் எப்போது பார்க்கப்போகிறோம் என்கிற உணர்வோடு அவர் என் பார்வையிலிருந்து விலகும் வரையில் அவரைப் பார்த்துக்கொண்டே பின்னாலேயே நகர்ந்தே அவர் வீட்டின் படியிறங்கினேன். 
             அவரோடு இருந்த அந்த மணித்துளிகள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மணித்துளிகள். என் பிறப்பின் பலன் கிடைத்த மணித்துளிகள்.
              அவர் இறந்துவிட்ட இந்த நேரத்தில், கடந்த இரண்டு நாட்களாகவே என் மனசு சரியில்லை. என்றாலும், அவர் நமக்கு கொடுத்த வார்த்தைகளை - போராட்டக்குணங்களை மேலும் செம்மைப்படுத்தி, அவர் விட்டுச் சென்ற போராட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என்று என் மனம் என்னை ஆறுதல் படுத்தியது. ஆம்... அது தான் நாம் அவருக்கு செய்யும் இதே அஞ்சலியாகும்.

                                                

வாழ்க கேப்டன் லட்சுமி புகழ்...!

 

1)Captain Lakshmi 19431021 Singapore

1943 - இல் சிங்கப்பூரில் கேப்டன் லட்சுமி

  

 

 

 

 

 

 

 


19440107 Lakshmi in Burma 

1944 -இல் ரங்கூனில் மாவீரன் நேதாஜியுடன் கேப்டன்...

19440107_lakshmi_in_Burma with Bose 

  07.01.1944 அன்று ரங்கூனில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில்....

Captain Lakshmi  1943-1944 

நேதாஜிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை....

Captain Lakshmi インド国民軍(INA)]婦人部隊閲兵


Captain Lakshmi 行進Captain Lakshmi with Bose  1943


Lakshmi with S.C.Bose 1943

Dr. Lakshmi Swaminathan

 

 

 

 

இதை இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும்...!


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு - ''இந்தியாவின்   துயரம்''  

          சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப் பாடப்புத்தகங்களில் ''சீனாவின் துயரம்'' என்று ஒரு பாடம் படித்திருப்போம். அது என்னவென்றால், சீன நாட்டின் இரண்டாவது பெரிய நதி ''மஞ்சள் ஆறு'' என்பது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளம் சீறிப் பாய்ந்துவரும் நதி ஆகும். அதானால் அந்த நதி பாயும் பகுதிகளில் மக்கள்  வாழ்க்கை நடத்துவதற்கும்,   விவசாயம், வியாபாரம், கால்நடைகள் வளர்ப்பு போன்றவற்றிற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்பதே சிரமத்திற்கு உள்ளாகியது. கேள்விக்குறியானது. இந்த இயற்கையின் சீற்றத்திற்கு எதிராக மக்கள் ஒரு வாழ்க்கைப் போராட்டத்தையே நடத்தினார்கள். அதனால் தான் இந்த மஞ்சள் ஆற்றினை ''அன்று'' சீன மக்களும், வரலாற்று ஆசிரியர்களும் ''சீனாவின் துயரம்'' என்று குறிப்பிட்டனர். 
              ஆனால் ''இன்று'' அதே மஞ்சள் ஆற்றினைப் பற்றியோ - சீனாவின் துயரம் என்பது பற்றியோ நாம் பாடப் புத்தகத்தில் பார்க்க முடிகிறதா...? ''துயரம்'' என்பதையே சீனர்கள்  அழித்துவிட்டார்கள். சீன சோஷலிச அரசு இயற்கையின் சீற்றத்தை தனது  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது தான் அதற்கு காரணம். சீன நாட்டின் ஆட்சியாளர்கள், அந்த இயற்கையின் சீற்றத்தை - பாய்ந்து வரும் வெள்ள நீரை திசை மாற்றிவிட்டார்கள். மஞ்சள் ஆற்றின் பாதையை மூன்றாகப் பிரித்து மற்றப் பகுதிகளில் ஓடும் சிறிய ஆறுகளோடு இணைத்துவிட்டனர். மேலும் அந்த வெள்ள  நீரை பெரிய பெரிய குழாய்கள் மூலமும், வாய்க்கால்கள் மூலமும்  தண்ணீர் பற்றாக்குறையுள்ள மற்ற பகுதிகளுக்கு திருப்பிவிட்டனர்.  ( ஆனால் வீராணம் குழாய்கள் போல் ஊழல்கள் நடக்கவில்லை ) அப்படியாக அனுப்பப்பட்ட தண்ணீர் வயல்களில் பாய்ந்தது. அதனால் அந்தப் பகுதிகளில் விவசாயம் செழித்து வருகிறது. அதனால் ''சீனாவின் துயரம்'' நீங்கி இன்று சீன மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். இது போன்ற நாடு சார்ந்த - மக்கள் சார்ந்த சாதனைகள் ஒரு சோசலிச நாட்டில் தான் நாம் பார்க்கமுடியும்.
            இதே நம்ப நாடாக இருந்தால் நம் ஆட்சியாளர்கள்  அந்த ஆற்றையே பெப்சி - கோகாகோலாவிற்கு இந்நேரம் விற்றிருப்பார்கள் 
                 உலகத்திலேயே இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியம்  கொள்ளையடிக்க ஏற்ற இரண்டாவது மிகப்பெரிய வளம் கொழிக்கும் சந்தை  எது என்று கேட்டால் அது இந்தியா தான். முதலாவது பெரிய சந்தை சீனா. ஆனால் சீனா ஒரு சோஷலிச நாடு என்பதால் அந்த நாட்டில் கடுமையான சட்டங்கள் இருப்பதால்  கொள்ளையடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அங்கே அரசு நிர்ணயிக்கிற விலையில் தான் பொருட்களை விற்றாக வேண்டும். இலாப நோக்கில் அதிக விலைக்கு விற்றால் சீன ஆட்சியாளர்களே  அந்த பலசரக்கு கடையை மூடி திருப்பியனுப்பி வைத்து விடுவார்கள். அங்கே எங்குமே மக்களை ஏமாற்றும் கொள்ளைகளுக்கு அனுமதி கிடையாது. அதேப்போல் அங்கே வேலை செய்யும் சீன தொழிலாளர்களுக்கு கடுமையான தொழிலாளர் சட்டம் பாதுகாப்பாக இருக்கிறது. அதனால் இந்தியாவைப் போல் அங்கே உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளத்தை கொடுத்து அவர்களை மணிக்கணக்காக வேலை வாங்கி  பிழிந்தெடுக்க முடியாது. அதுமட்டுமல்லாது, சீனாவில் அந்நிய நேரடி  முதலீட்டிலும் கடுமையான சட்டம் உள்ளது. அங்கே அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் கொஞ்சப் பணத்தை முதலீடாகப்  போட்டு, அதனால் வரும் இலாபத்தை உடனே தங்கள் நாட்டிற்கு அள்ளிக்கொண்டு சென்றுவிட  முடியாது. அந்நிய நேரடி முதலீட்டில் கிடைத்த இலாபத்தை மீண்டும் சீனாவிலேயே தான் முதலீடு செய்யவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இப்படியாக தங்கள் தேசப் பொருளாதாரத்தின் மீது அக்கறை கொண்டுள்ள சீனா தொழிலாளர்கள் சட்டம், பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம், அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டம் போன்ற சட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால், அங்கே கொள்ளை இலாபத்திற்கு வாய்ப்பும், வழியும் இல்லாததால், அடுத்து அமெரிக்காவின் கண்ணை உறுத்துகிற நாடு இந்தியா தான்.
           இந்தியாவும் இதற்கு முன்பு, கடுமையான சட்டங்களை கொண்ட நாடாகத் தான் இருந்தது. ஆனால், இந்த தேசத்தின் பாதுகாப்பாக - பொருளாதாரத்தின் பாதுகாப்பாக - தொழிலாளர்களின் பாதுகாப்பாக  இருந்த இந்த சட்டங்களை எல்லாம், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியும், பின்பு வந்த வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியும், தற்போது பொறுப்பிலிருக்கும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியையும் நீர்க்கச் செய்துவிட்டன. சட்டங்களெல்லாம் வெறும் சட்டங்களாகவே இருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்கள் எல்லாம் இந்தியாவில் முதலீடு செய்யும் அந்நிய முதலாளிகளுக்கு மட்டும் பாதுகாப்பாகவே இருக்கின்றன.
              நம் நாட்டில் அப்படியாக வளம் கொழிக்கும் துறைகளில் ஒன்று தான் சில்லறை வர்த்தகத்துறை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது இந்திய பொருளாதாரத்தின் உறுதியான பொருளாதாரத் தூண்களில் ஒன்றாகவே விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% பங்களிப்புடனும், மொத்த தொழிலாளர்களில் 7% பேர்களையும் ஓங்கி வளர்ந்த மிகப்பரிய சந்தை இது தான். அதனால் தான் உலக அளவில் உள்ள  பிரம்மாண்டமான முப்பது சந்தைகளில் இரண்டாவது பெரிய ஈர்க்கத்தக்க சந்தை இந்தியா தான் என்று எ.டி.கர்னி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது
              இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 98% அமைப்புசாரா வடிவத்திலும்,   2%  அமைப்பு சார்ந்த வர்த்தகமாகவும் நடைபெறுகின்றன.  நம் நாட்டில் சில்லறை வர்த்தகம் என்பது  ஆண்டொன்றுக்கு 40% வேகத்தில் வளர்ச்சிபெற்று வருகிறது. இதில் உணவுப்பொருள் விற்பனை மட்டுமே 63% ஆகும். இப்போது 28 பில்லியன் டாலர்களில் இருக்கும் அதன் வணிகம் 2020ல் 260 பில்லியன் டாலர்களாக அதிரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
          இந்தியாவில் அமைப்பு சார்ந்த வர்த்தகப் பிரிவில்  5,00,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். அமைப்புசாராப் பிரிவில் 4 கோடிக்கும் அதிகமானோர்  வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்தியாவில் 1.25 கோடிக்கு மேல்  சில்லறை விற்பனை கடைகள் உள்ளன, இவற்றில் 4% மட்டுமே 500 சதுர அடிக்கு மேல் உள்ளவையாகும். மற்றவை எல்லாம் சிறு சிறு விற்பனைக்கடைகளாகும். இந்த அமைப்புசாரா சில்லரைவணிகத்தில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.7,35,000 கோடிக்கு மேல் விற்பனையாகிறது என்பதைப் பார்க்கும் போது அமெரிக்க ஓநாய்க்கு நாக்கில் எச்சில் ஊருகிறது.
             இந்நிலைலையில், மத்திய அரசின் தாராளமயக் கொள்கையின் விளைவால், அந்நிய சில்லரை வர்த்தக  நிறுவனங்கள் இந்தியச் சில்லறை வர்த்தகத்தைக் கைப்பற்றும் நோக்குடன்
இந்தியாவுக்குள் நுழையத் துடிக்கின்றன. இந்திய ஆட்சியாளர்களும் இரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கின்றனர்.
               சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி  முதலீட்டால் நுகர்வோருக்கு 5-10% விலைகள் குறையும் என்றும்,  சில்லறை விற்பனை நிலையங்களிலும் பொருள் போக்குவரத்துத் துறையிலும் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும்,  விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு 10-30% கூடுதல் விலை கிடைக்கும் என்றெல்லாம் ஆட்சியாளர்கள் அடுக்கடுக்காக கூறி நம் நாவில் தேனைத் தடவுகிறார்கள். 
                     ஆனால் காலகாலமாக - பரம்பரைப்பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக சில்லறை வர்த்தகம் செய்பவர்களும், இந்த வர்த்தகத்திற்கு பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வரும் இந்திய சிறு உற்பத்தியாளர்களும், இந்திய விவசாயப் பொருள் உற்பத்தியாளர்களும், இந்த சில்லறை வர்த்தகத்தை சுற்றி வியாபாரம் செய்கின்ற பெட்டிக்கடை வியாபாரிகளும், இந்த சிலரை  வர்த்தக நிறுவனங்களில் வேலைசெய்யும் ஆண்களும் - பெண்களும், சுமைத்தூக்கும் தொழிலாளர்களும் - கூலித்தொழிலாளர்களும் - தட்டு வண்டி முதல் லாரி வரை ஓட்டும் தொழிலாளர்களும், சிறு தொழிற்சாலைகளில்  வேலைசெய்யும் தொழிலாளர்களும், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய வியாசாயக்கூலித் தொழிலாளர்களும் - என இந்த தேசத்தை சார்ந்த பலகோடி மக்களின் வாழ்வாதாரம் என்பது இந்த சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி நுழைந்தால் கேள்விக்குறியாகிவிடும் என்பது தான் உண்மை. வருமானம் இல்லாமல் இவர்களும் இவர்கள் வீட்டுக் குழந்தைகளும் பட்டினிக் கிடந்து சாகவேண்டியது தான். இதை நிறைவேற்றத் தான்  தான் இலாப வெறிப்பிடித்து அலையும் ஏகாதிபத்தியமும், ஆட்சியாளர்களும், பெருமுதலாளிகளும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
            வால்மார்ட் மட்டுமல்லாமல்  ஸ்வீடனின் எச் & எம், ஐகியா, ஜப்பானின் உனிக்டோ, பிரிட்டனின் டாப்ஷாப், அமெரிக்காவின் ஆப்பிள், போலோ. அபெர்க்ரோம்பீ, பெஸ்ட் பை போன்றவை இந்தியாவில் நுழைந்து கொள்ளையடிக்கக்  காத்திருக்கும் சில்லறை வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனங்களில் முக்கியமானவை. 

           இவ்வளவு நடந்துகொண்டிருக்கிறது இந்திய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்...? என்பது தான் நமது கேள்வி.                                  

செவ்வாய், 24 ஜூலை, 2012

தீரமும், கருணையும் நிரம்பிய கம்யூனிஸ்ட் தலைவர் கேப்டன் லட்சுமி - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு புகழஞ்சலி

         















 
       

        உத்வேகமூட்டக்கூடிய, தீரமிக்க விடுதலைப்போராட்ட வீரரும் அர்ப்பணிப்பு உணர்வோடும், கருணை உள்ளத்தோடும் எளிய மக்களுக்கு மருத்துவம் செய்து வந்த மருத்துவரும் பெண் உரிமைப்போராளியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னதமான மதிப்புமிக்க உறுப்பினருமான கேப்டன் லட்சுமி செகால் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த தலைவர்களில் ஒருவரான அவர் மறையும்போது அந்த அமைப்பின் புரவலராக இருந்தார்.              கேப்டன் லட்சுமி கேரளத்தில் புகழ்மிக்க குடும்பம் ஒன்றில் பிறந்தார். சென்னையில் கல்வி பயின்ற அவர், மதி நுட்பம் மிகுந்த மாணவியாகத் திகழ்ந்தார். அவரது பெற்றோர் தங்களது வாழ்வை நாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்ட விடுதலைப்போராட்ட வீரர்கள் ஆவர். அவரது தந்தையார் மிகச்சிறந்த வழக்கறிஞர், அவரது தாயார் சமூக ஊழியர் மற்றும் பெண்ணுரிமை பிரச்சாரகராகத் திகழ்ந்தவர் ஆவார்.
                கேப்டன் லட்சுமி தனது இளமைக்காலத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தார். இந்த அர்ப்பணிப்பு உணர்வு அவரது வாழ்நாள் முழுவதும் அவரிடம் இருந்து வந்தது. அவரது பெற்றோர் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இதனால் இளம்வயதிலிருந்தே லட்சுமி சாதிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராக வளர்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலேயே மாணவர்களிடையே சாதி, மத வித்தியாசம் கூடாது என்று போராடியவர் அவர்.
             1938ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த அவர், 1940ல் சிங்கப்பூர் செல்ல முடிவு செய்தார். அங்கு மருத்துவராக பணியாற்றிய அவர் இந்திய விடுதலைக்கு பெருமளவு துணை நின்ற இந்திய சுதந்திர லீக் அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றினார்.
                 1943ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸின் நேரடி அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப்பிரிவை ஜான்சிராணி ரெஜிமெண்ட் என்ற பெயரில் அமைக்க சுபாஷ் சந்திர போஸ், லட்சுமிக்கு அழைப்பு விடுத்தார். கேப்டன் லட்சுமியின் முழு தலைமையின் கீழ் அந்த அமைப்பு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் கம்பீரமானத் தலைவராக விளங்கிய அவர் சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட ஆசாத் ஹிந்த் பிரதேச அமைச்சரவையில் ஒரே பெண் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டார். இந்திய தேசிய ராணுவத்தின் தீரமிக்க தலைவராக விளங்கிய அவர், தனது வீரத்தினால் ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளார். பிரிட்டிஷ் படையினரால் பிடிக்கப்பட்டு 1946ல் இந்தியா கொண்டுவரப்பட்ட போது அவருக்கு மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
            சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து செயல்பட்ட பிரேம் செகாலை கேப்டன் லட்சுமி மணந்துகொண்டார்.
                 நாடு விடுதலைப் பெற்ற பிறகு கான்பூரில் தனது மருத்துவசேவையை கேப்டன் லட்சுமி துவக்கினார். கான்பூரில் லட்சக்கணக்கான ஏழை-எளிய பெண்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அந்த மக்களின் நேசிப்புமிகுந்தவராக திகழ்ந்தார். எளிய மக்களுக்கு எந்தவிதமான கட்டணமும் பெறாமல் அவர் சேவை செய்தார். முன்னுதாரணமாகத் திகழ்ந்த தனது மருத்துவமனையில், எளிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவர் நாள் முழுவதும் அயராமல் பாடுபட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல்நாள் கூட மருத்துவமனைக்கு சென்ற அவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இதுதான் அவரது அர்ப்பணிப்பு உணர்வு.
               1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். மேற்குவங்கத்தில் மக்கள் நிவாரணக்குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு சேவையாற்ற மருத்துவர்கள் முன் வர வேண்டுமென்று தோழர் ஜோதிபாசு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின்பேரில் மேற்குவங்கம் சென்ற கேப்டன் லட்சுமி, பல மாதங்கள் அங்கு தங்கியிருந்து நிர்க்கதியாக இருந்த அகதிகளுக்கு மருத்துவ சேவை அளித்தார்.
              இத்தகைய அனுபவத்திற்கு பிறகு கேப்டன் லட்சுமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய முடிவு செய்தார். கான்பூரில் கட்சி உறுப்பினராக இணைந்த அவர் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்தார். பெண்ணுரிமை போராட்டத்தில் முன்னின்ற அவர், தாம் ஏற்றுக்கொண்ட கடமைகளோடு, பெண்களை அவர்களது உரிமைகளுக்காக அணிதிரட்டிய மிகச்சிறந்த கம்யூனிஸ்ட் பெண் தலைவராகவும் விளங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான அவர் அந்த அமைப்பை உருவாக்கி வளர்த்திட நாடு முழுவதும் அயர்வின்றி பயணம் செய்துள்ளார். அந்த அமைப்பின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.
               சோசலிசப் புரட்சித் தேவை என்ற கருத்தில் அவர் அழுத்தமான பிடிப்புக் கொண்டிருந்தார். அந்த லட்சியங்களுக்காகவே அவர் வாழ்ந்தார். பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அவர், இளம்தலைமுறையினர் தலைமைப்பொறுப்புக்கு வரவேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். நாடு முழுவதும் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கு நேசிப்புமிகுந்த தலைவராக அவர் விளங்கினார்.
                   விடுதலைப் போராட்ட வீரரும், தீரமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட கம்யூனிஸ்ட் தலைவருமான கேப்டன் லட்சுமியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது. அவரது வாழ்வும் பணியும் இளம் தலைமுறையினருக்கு என்றென்றும் உத்வேகமூட்டக்கூடியதாக அமையும்.
            கேப்டன் லட்சுமியின் மகள்கள் சுபாஷினி அலி மற்றும் அனுசியா பூரி மற்றும் அவரது பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

                                          கேப்டன் லட்சுமியின் புகழ் நீடுழி வாழ்க!

திங்கள், 23 ஜூலை, 2012

Com. Lakshmi - A Captain's Credentials...!

RED SALUTE TO COM. CAPTAIN LAKSHMI

          THE Left parties' search for a presidential candidate could not have ended with a more distinguished and nationally acceptable choice. Dr. Lakshmi Sahgal, or Captain Lakshmi as she is better known to generations of Indians, is one of India's most illustrious citizens, and her qualifications for the highest constitutional position in the country are impeccable. Her life has been an inextricable part of India's destiny as a nation - its struggle against colonial rule, its attainment of freedom, and its maturing as a nation through 55 tumultuous years. In this great historical transition, of which she has been an active and inspiring participant, Captain Lakshmi always positioned herself firmly on the side of the poor and unempowered. A freedom fighter, a dedicated medical doctor and an outstanding leader of the women's movement in India, Captain Lakshmi embodies the finest aspirations of Indian leadership. 
                Lakshmi Sahgal was born Lakshmi Swaminadhan on September 24, 1914, in Chennai, to S. Swaminadhan, a brilliant lawyer, and A.V. Ammukutty, a social worker, freedom fighter and campaigner for women's rights. Young Lakshmi participated enthusiastically in nationalist programmes of burning foreign goods - including her own clothes and toys - and picketing liquor vends. Her decision to study medicine arose from a desire to be of service to the poor, especially to women. She received her MBBS degree from the Madras Medical College in 1938. A year later she received her Diploma in Gynaecology and Obstetrics.
             In l940, Lakshmi left Chennai for Singapore where she established herself as a successful, competent and compassionate doctor. She was soon drawn into the vortex of the anti-British struggle in Singapore, playing an active role in the India Independence League. In l942 came the historic surrender of Singapore by the British colonial power to the Japanese. Lakshmi was enthused by the idea of forming an Indian army of liberation in Singapore. She was very much a part of the deliberations that finally resulted in the formation of the Indian National Army (INA) under General Mohan Singh.
            Subhas Chandra Bose arrived in Singapore on July 2, l943. From public platforms, Netaji, as he was popularly called, spoke of his determination to raise a women's regiment, the Rani of Jhansi Regiment, which would fight for Indian independence. Lakshmi's name was immediately proposed as the woman most suited to lead the regiment. Lakshmi met Netaji on July 5. She accepted his proposal to lead the regiment without a moment's hesitation. The next day, she closed her clinic and began preparations for the formation of the Rani of Jhansi Regiment of the INA.
            It is her role as the head of the Rani of Jhansi Regiment that ensured a place for her history books. In a short time, a well-trained fighting force of women recruits took shape. The regiment saw active duty on the front. Lakshmi, who was given the rank of Colonel (although in the popular mind she remained a "Captain") was active on both military and medical fronts. She played a heroic role not only in the fighting but also during the terrible days when INA personnel were hunted by the victorious British troops. She saved many lives because of her courage and devotion. She was finally captured and brought to India on March 4, l946, where she received a heroine's welcome. Realising that keeping her a prisoner would rouse public anger, the British authorities released her. She campaigned tirelessly for the release and rehabilitation of imprisoned and de-mobbed INA personnel, traveling the length and breadth of the country, collecting funds for INA members and mobilising people against colonial rule.
             In March 1947, Captain Lakshmi married Col. Prem Kumar Sahgal in Lahore. They settled in Kanpur, where Lakshmi plunged into her medical work almost immediately because the influx of refugees from Pakistan had started. She worked tirelessly among them for several years. She earned the trust of the Muslim population because she was the only doctor in Kanpur who would treat Muslims at that time. Later on she established a small maternity home in a hired premises where it continues till today. Her compassion for the poor has become legendary in Kanpur, where the news of her candidature was met with pride and jubilation.
           Captain Lakshmi became active in Left politics in the early 1970s, first in the trade union movement and then in the women's movement. When the All India Democratic Women's Association (AIDWA) was formed in l981, she became its vice-president. Since then she has been actively involved in the activities, campaigns and struggles of the largest women's organisation in the country.
             Through all this, Captain Lakshmi has continued her work as a doctor from her clinic in the heart of Kanpur city, her life a source of inspiration and protection for the poor and the victimised. During the anti-Sikh riots in October l984, this mild-mannered doctor was out on the streets standing fearlessly before screaming mobs. In the crowded area where her clinic stands, not a single Sikh was attacked. 
Dr. Lakshmi Sahgal was awarded the Padma Vibhushan in 1998.
            At 87, this diminutive and gracious woman steps out of her house at 9 a.m. and proceeds to her clinic where she works until late afternoon - a routine she observes throughout the week. "I am very happy that the Left parties were united in choosing me as their presidential candidate," Captain Lakshmi told Frontline over the phone from New Delhi. "What concerns me though is what my patients will do without me."
With A.P.J. Abdul Kalam, the presidential candidate of the National Democratic Alliance, Captain Lakshmi perhaps shares drive and firepower. Captain Lakshmi's missiles in a 60-year-old public life have, however, been pointed in a different direction - against colonialism, poverty and injustice, and the irrationalities of narrow and divisive thought.
                                                                Above Photo :  Lakshmi Sahgal arrives at the New Delhi railway station from Kanpur on June 14, 2002 after the Left parties nominated her as their presidential candidate. In the background, daughter Subhashini Ali, president of the All India Democratic Women's Association.

- PARVATHI MENON 
courtesy : 
Frontline

சனி, 21 ஜூலை, 2012

திருநங்கையர் - மதிக்கப்படவேண்டியவர்கள்...!

                சென்ற மாதம் சென்னையிலிருந்து வானவில் பௌண்டேஷனைச் சேர்ந்த திருநங்கையர்  ஏழு பேர் எழுத்தாளர் பிரியா பாபு தலைமையில்  புதுச்சேரி வந்திருந்தனர். அவர்களை புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தோழர்கள் வரவேற்று உபசரித்தனர். அந்த சமயத்தில் அவர்களோடு கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் அந்த உரையாடலில் கலந்துகொண்டேன். 
           அது ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. யாரைக் கண்டால் இந்த சமூகம் கிண்டலும் கேலியுமாக பார்க்குமோ... ஒரு சக உயிரினமாகக் கூட யாரை இந்த சமூகம் மதிக்காதோ.... அவர்கள் அருகில் அமர்ந்து அவர்களோடு பேசியதில் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தான். 
           அவர்கள் சமூகத்தில் பட்ட கஷ்டங்களையும் போலீஸ்காரர்களால் கிடைத்த அவமானங்களையும் எங்களோடு உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்து கொண்டது என்பது  எங்களை அறியாமலேயே  எங்கள் மனதை கணக்கச்செய்தது. அப்பப்பா... இந்த கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும்  இடையில் தான் எத்தனை எத்தனை போராட்டங்கள். தாங்கள் நிம்மதியாக வாழ்வது மட்டுமல்லாது, சமூதாயத்தில் தாங்கள் கவுரவமாகவும் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாகவும் வாழ்வதற்கு அவர்கள் போராடிவருவதை கேட்கும் போது நமக்கே மெய்சிலிர்க்கிறது. 
             நாமும் அவர்கள் இதுவரை செய்தப் போராட்டங்களை பாராட்டினோம்.  சமூகத்தில் ஒதுக்கப்படாமல் எல்லாரோடும் சேர்ந்து வாழ்வதற்கும், தேர்தல்களில் வாக்களிப்பதற்கும், தங்கள் மீது இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கும் என அவர்கள் செய்த பல்வேறு போராட்டங்களை நெஞ்சாரப் பாராட்டினோம்.
            அவர்கள் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி ஒரு அற்புதமான கோரிக்கையை வைத்து போராடி வருவதாக சொன்னார்கள். அதைக் கேட்டதும் உண்மையிலேயே மெய்சிலிர்த்து தான்  போனேன். அது என்னவென்று கடைசியில் சொல்கிறேன்.
             அவர்கள் சொன்ன அந்த கோரிக்கையை கேட்டதும் அவர்கள் பற்றிய வரலாற்று ரீதியான தகவல்களை திரட்ட தொடங்கினேன். அதில் கிடைத்த சிலத் தகவல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
           கிறித்துப் பிறப்பதற்கு முன்பே சுமேரிய நாகரிகத்தில் திருநங்கைகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. அந்த மக்களின் வீட்டு விழாக்களில் இவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் திருநங்கைகள் பல உயர்பதவிகளை வகித்திருப்பதகவும் இராஜாங்க ஆலோசகர்கள், இராணுவ அதிகாரிகள், பெண்களை பாதுகாக்கும் அந்தப்புர அதிகாரிகள், நீதிமன்றப் பணியாளர்கள், மதப் பூசாரிகள் அரசவைப் பாடகர்கள் என பல்வேறு வகையான மதிக்கத்தக்க உயர்பதவிகளில் இருந்திருக்கிறார்கள்.
          அது மட்டுமல்ல, ரோம் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியான கான்ஸ்டான்டினைச் சுற்றி எப்போதும் திருநங்கைகளின் ஆலோசனைக் கூட்டமே நடந்துகொண்டிருந்ததாக   பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
           அதுமட்டுமல்ல, அசிரியப் பேரரசு, கிளியோபாட்ராவின் டாலமிப் பேரரசு போன்ற பேரரசுகளில் கூட திருநங்கைகள் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் சீனாவில் மிங் வம்ச அரசு முடிவுக்கு வந்த போது, அங்குள்ள  இம்பீரியல் அரண்மனையில் சுமார் 70,000 திருநங்கைகள் பணியில் இருந்ததாகவும்,  செங் ஹி என்கிற சீன நாட்டின்  புகழ்பெற்ற கப்பற்படைத் தளபதி ஒரு திருநங்கை என்றும் வரலாறு கூறுகின்றது. வியட்நாம் நாட்டின் இராஜ குடும்பங்களிலும் திருநங்கைகள் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். 
                இவை எல்லாவற்றுக்கும் மேலாக முதன்முதலில் காகிதத்தை கண்டுப்பிடித்த சீன நாட்டைச் சேர்ந்த காய் லுன் என்பவர் ஒரு  திருநங்கையாவார். லங் கியட் வியட்நாம் நாட்டின்  முதல் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட தேசிய ஹீரோ. அவரும் ஒரு திருநங்கையே என்பதும்,  1794ம் வருடம் பெர்ஷியாவின் மன்னராகி காஜர் வம்சத்தயே தோற்றுவித்த முகம்மது கான் காஜர் என்பவரும் ஒரு  திருநங்கை தான்என்பதும்   குறிப்பிடத்தக்கது.
                இப்படியாக திருநங்கைகள் சரித்திரத்தில் மறக்கப்பட்டவர்களாகவும் மறைக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்திருந்தாலும் மதிக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை.
         இந்தியாவில் பல ஆண்டுகளாக அவர்கள் கண்டுகொள்ளப்படாதவர்களாகவும், கேலிக்குரியவர்களாகவுமே அறியப்பட்டனர். ஆனால் அண்மைக்காலங்களில் முற்போக்கு சிந்தனையாளர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் திருநங்கையர் மீது தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். அதனால், இன்றைக்கு சமூகம் அவர்களையும் தங்களின் சகமனிதர்களாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, திருநங்கையர்களும் சமூகமும் தங்களை மதிக்கும்படி தாங்கள் வாழவேண்டும் என்ற நோக்கில் தங்களுக்கென்று சங்கமும், சுயவுதவிக் குழுவும் அமைத்து சமுதாயத்தோடு கலந்து வாழ்கிறார்கள். எழுத்தாளர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள் என்பதும், தங்களின் உரிமைககளுக்காக போராடுகிறார்கள் என்பதும் அவர்களிடையே உள்ள வரவேற்கத்தக்க மாற்றங்களாகும். 
              இந்தியாவில் உள்ள அனைத்து திருநங்கையர்களும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை அளித்துள்ளனர். அவைகளில் முக்கியமானது, ஒன்று : திருநங்கையர்களுக்கென்று ''தனி கமிஷன் '' அமைக்கப்படவேண்டும் என்றும்,  மற்றொன்று : பாராளுமன்றத்தில் ஆங்கிலோ-இந்தியர்களுக்கும், திரைப்படக் கலைஞர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ''நியமன உறுப்பினர் அந்தஸ்து'' வழங்குவது போல், திருநங்கையர்களுக்கும் அவர்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு ''நியமன உறுப்பினர் அந்தஸ்து'' வழங்கப்படவேண்டும் என்றும் இரண்டு அருமையான யோசனைகளை கோரிக்கைகளாக வைத்துள்ளனர். 
     இவர்களின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு கவனிக்குமா...?                                                
.

வியாழன், 19 ஜூலை, 2012

13th Party Congress of South African Communist Party....!

Declaration of the 13th National Congress of the SACP

            We, 2000 Communist militants, have met over the past four day , 12th July to 15th July,  as delegates to the SACP`s 13th National Congress in Ongoye, KwaZulu-Natal. We are drawn from 3,298 SACP branches across the length and breadth of our country and from the ranks of the Young Communist League of South Africa. As delegates, we represent more than 150,000 SACP members – marking an unprecedented three-fold increase in the Party`s membership since our 12th Congress just five years ago.
             Our Congress occurs in the midst of an ongoing and deepening global capitalist crisis that is inflicting ever greater misery on the majority of the world`s population and ever greater destruction of the natural world on which human civilization depends. It is a crisis that underlines the imperative of abolishing capitalism and replacing it with socialism, a system based on meeting social needs and on a sustainable relationship with nature.
          Here in South Africa, notwithstanding 18 years of major progressive changes towards consolidating our national democratic revolution, the untransformed legacy of colonialism of a special type continues to reproduce the triple crises of racialised and gendered inequality, poverty and unemployment. If the gains of our democracy are not to be overwhelmed, then it is critical that, together with our Alliance partners, we embark on a radical shift in the National Democratic Revolution, led by the working class.
          It is in this context that the 13th Congress reviewed progress made by the SACP over the past five years in advancing our Medium Term Vision to build working class hegemony in all key sites of power. The consolidation and acceleration of this strategic agenda remains a key imperative over the coming five years. At this 13th Congress we have adopted important policy and organisational resolutions to guide revolutionary action and to deepen and take forward our programme, "The South African Road to Socialism."
         Our 13th Congress was marked by both vibrant policy debate and unity – the product of 91 years of unbroken struggle, and of growing confidence based on our important achievements over the past 5 years. A common thread throughout the duration of our Congress was the need for Communists to take active responsibility for our unfolding revolution. We are not, and we shall not be armchair critics observing the struggle from a comfortable distance. We shall wage the class struggle wherever the class struggle is to be waged for democracy and against exploitation and all forms of oppression.
         Our disciplined unity in the midst of an Alliance facing many challenges; our Marxism-Leninism; our principled commitment to Communist values of solidarity and to fighting all negative tendencies – including individualism, self-enrichment, and corruption – all these attributes of the SACP and its cadres place an enormous vanguard responsibility upon us, now more than ever.
         This was a view that was also underlined in addresses to our Congress by the leaders of our Alliance partners, and particularly by the message of support delivered in person to our Congress by ANC President, cde Jacob Zuma. The work of our 13th Congress has sharpened our collective analysis of our current situation, and deepened our resolve to intensify the national democratic revolution as the most direct route to socialism in the South African context.
         As delegates to this 13th National Congress we pledge to rise to these challenges, inspired by the many generations of SACP heroes, the sung and the unsung, who have kept the red flag flying for over nine unbroken decades in this southern tip of the African continent. We pledge to carry forward our vanguard role in our communities, in our places of work and learning, in the formations of our allied and other progress organisations, in the public sector and the state, on the terrain of the battle of ideas, and in our internationalist work. We pledge to work with a sense of confidence but also humility in the service of the working class and poor.
         As we rise, today, at the conclusion of the largest ever, and one of the most united congresses of the Communist Party in South Africa, we declare once more that
SOCIALISM IS THE FUTURE!
WE ARE NOT WAITING FOR THAT FUTURE – WE ARE ACTIVELY BUILDING THAT FUTURE, HERE AND NOW!!



SACP General Secretary, Blade Nzimande

SACP 13th National Congress Central Committee
  1. General Secretary, Blade Nzimande
  2. National Chairperson, Senzeni Zokwana
  3. National Treasurer, Joyce Moloi-Moropa
  4. First Deputy General Secretary, Jeremy Cronin
  5. Second Deputy General Secretary, Solly Afrika Mapaila
  6. Deputy National Chairperson, Thulasi Nxesi

கம்யூனிஸ்ட் மாமுனிவர் - இ.எம்.எஸ்.

மலையாளத்தில் - தகழி சிவசங்கரம்பிள்ளை 
தமிழில் – உதயசங்கர்  


                எல்லாவிதங்களிலும் நான் ஆதரிக்கிற இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடினை முதலில் பார்த்தது எப்படி என்று நினைவுபடுத்தமுடியவில்லை. ஏனென்றால் நேரில் பார்ப்பதற்கு முன்பே என்னைக் கவரவும், பாதிக்கவும் செய்த ஆளுமை அவர்.
                  எனக்குச் சரியாக ஞாபகம் இருக்கிறது. கேஸரிசபையில் நடந்த விவாதங்களுக்கு ஊடே தான் இ.எம்.எஸ். என் வாழ்க்கையில் நுழைந்தார். நான் ப்ளீடர் பரீட்சைக்குத் திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த காலம். எங்களுக்குக் குரு கேஸரி பாலகிருஷ்ணபிள்ளை. அப்போது கேஸரிசபை புதிய சிந்தனைகளின் இலக்கியசர்ச்சைகளின் கேந்திரமாக இருந்தது. 1930 களில் என்று ஞாபகம். கேஸரி இ.எம்.எஸ்ஸினைக் குறித்து அடிக்கடிப் பேசுவார். சில நேரங்களில் விமரிசனமும் செய்வார். கேஸரியின் தலைமையில் எங்களுடைய சபையில் இ.எம்.எஸ். பல சமயம் சர்ச்சைக்குரிய விஷயமாகியிருந்தார். புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டவர் என்ற வகையில் புதிய சிந்தனைகளைத் தேடியடைய ஆசைப்பட்ட என்னுடைய மனசில் இ.எம்.எஸ். இடம் பிடித்தார்.
அப்போது தான் ‘ உண்ணி நம்பூதிரி ‘ பத்திரிகையைப் பற்றியும், நம்பூதிரி யுவஜன சங்கத்தைப் பற்றியும் அறிய நேர்ந்தது. புரட்சியின் சாராம்சம் பிடித்திருந்தது. என்னைப் போன்றவர்களுக்கு உண்ணி நம்பூதிரியில் பிரசுரமான கட்டுரைகள் உத்வேகமளித்தன. இந்தப் பத்திரிகையிலுள்ள பல கட்டுரைகளும் கேஸரியின் சபையில் சர்ச்சைக்குரிய விஷயமாயின. இத்தனைக்கும் பின்னால் இ.எம்.எஸ்ஸினுடைய அறிவார்ந்த தலைமை இருந்தது என்று தெரிந்தபோது, அவர் மீதுள்ள மதிப்பு பெருகியது. அன்று திருவிதாங்கூர்காரர்களாகிய எங்களுக்குக் கொச்சியோடும் மலபாரோடும் போதுமான அளவுக்குப் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை.
            இன்னொரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். இ.எம்.எஸ்ஸினுடைய தலைமையிலும் வெளியீட்டிலும் ‘ முற்போக்கு ‘ என்ற பத்திரிகை வெளிவந்தது. உண்ணிநம்பூதிரியில் கிடைத்த உற்சாகத்தில் நான் ஒரு ஓரங்க நாடகம் எழுதினேன். பெயர் ஞாபகத்திலில்லை. ஆனால் உள்ளடக்கம் ஞாபகத்திலிருக்கிறது. நெருப்பை உமிழும் புரட்சி. அநாதை இல்லங்களை உருவாக்கக்கூடாது. இருப்பவைகளையும் சாம்பலாக்க வேண்டும். சமூகத்தை நேராக்க அநாதை இல்லங்களால் முடியாது. அவை மனிதனைச் சோம்பேறியாக்குகிறது. இன்றைய அத்தியாவசியத் தேவையான சமத்துவக்கொள்கைகளுக்கு அவை உபயோகப்படாது. இதே புரட்சிகர நோக்கத்தோடு தான் கேஸரியில் கதைகள் எழுதினேன். நான் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். இதற்கெல்லாம் ஒரு உந்துசக்தியாக அன்று நான் நேரில் கண்டிராத இ.எம்.எஸ். இருந்தார்.
                   மிகக் குறைந்த தடவைகளே நான் இ.எம்.எஸ்ஸை நேரில் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போது கொஞ்சம் நலம் விசாரிப்போம். தீர்க்கமான உரையாடலோ, விவாதமோ, கிடையாது. சில மீட்டிங்குகளில் வைத்துத் தான் இந்தச் சந்திப்புகளும் நிகழ்ந்தன. யதார்த்தமாய் நலம் விசாரித்துக் கொள்ளும்போதும் எனக்கு வெளிப்படையாகத் தெரியாத பாசமும் ஆதரவும் உறுதியாக இருந்தது.
                      முற்போக்கு இலக்கிய அமைப்போடு ஆரம்பம் முதலே நான் தொடர்பு கொண்டிருந்தேன். ஷொரனூர், திருச்சூர், கோட்டயம், கொல்லம், மாநாடுகளில் கலந்து கொண்டுமிருக்கிறேன். 1973 ல் ஷொரனூரில் நடந்த இலக்கிய மாநாட்டில் கேசவதேவோடு கலந்து கொண்ட அநுபவம் உண்டு. அன்று இளம் எழுத்தாளர்களுக்கு கதை கவிதை நாடகம் முதலான இலக்கியப்பிரிவுகளில் போட்டி நடத்தினோம். கேசவதேவும் நானும் சேர்ந்து தான் படைப்புகளைப் பரிசீலித்தோம். ஏராளமான படைப்புகள் கிடைத்தன. ஆனால் அவைகளில் இலக்கியம் இல்லை என்ற விமர்சனம் எங்களுக்கு இருந்தது. அதாவது முற்போக்கு இலக்கிய அமைப்பு உயர்த்திப் பிடித்த சில விஷயங்களோடு வேறுபாடு ஏற்பட்டது. அந்த நிலையில் இ.எம்.எஸ்ஸின் இலக்கியம் சம்பந்தமான நிலைபாடுகளோடு ஒத்துப்போக முடியவில்லை.
முண்டசேரியும் பொதுவாக எங்களோடு உடன்பட்டார். அதே நேரம் இ.எம்.எஸ்ஸினுடைய இலக்கியக் கட்டுரைகளை விருப்பத்தோடு வாசிக்கவும் செய்தோம். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர் படைப்புகளின் புதுமையும், யதார்த்தமும், ஆத்மார்த்தமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. யோசித்துப் பார்க்கும்போது நெருக்கமாகவும் இருந்தது.
ஸி.வி.ராமன் பிள்ளையைப் பற்றி இ.எம்.எஸ். வெளியிட்ட கருத்துகளை அப்படியே என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. ஸி.வி. நாவல்களின் காலகட்டத்தைப் பரிசோதிக்கும் போது ராஜபக்தி தவறு என்று கருத முடியுமா? கொஞ்சம் தாமதமாக என்றாலும் இ.எம்.எஸ். சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்தது. அது நல்ல விதமாகவே வெளிவந்தது சந்தோஷம்.
              உலகப்புகழ் பெற்ற இரண்டு சங்கரன்கள் கேரளத்தில் பிறந்தார்கள் என்று நான் நம்புகிறேன். முதலாவது ஆதி சங்கரர் சங்கராச்சாரிய சுவாமிகள். இரண்டாவது இ.எம்.சங்கரன் நம்பூதிரிபாடு. ஆதி சங்கரன் ஆன்மீகவாதியாகவும், வேதாந்தியாகவும் இருந்தார். சமகாலச் சங்கரன் உன்னதமான அரசியல் சிந்தனையாளராக இருந்தார். மார்க்சிய அறிவிலிருந்து வெளிப்பட்ட புதிய வெளிச்சம் தான் இ.எம்.எஸ். பாரதத்திற்குக் கொடுத்த மகத்தான கொடை. எனக்கு அறிவார்ந்த தலைமையேற்ற இ.எம்.எஸ்ஸின் அறிவு சாதனை படைத்திருக்கிறது. மற்றவையெல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட, தான் நம்புகிற கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்த வாழ்க்கை அவருடைய வாழ்க்கை. இந்த விஷயத்தில் அவருக்குச் சமமாக இன்னொரு ஆளுமையை என்னால் பார்க்க முடியவில்லை. பாரதத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்குத் தெளிவான உருவம் கொடுத்தது இ.எம்.எஸ். தான் என்று நான் நம்புகிறேன். இந்தச் சித்தாந்தத்தின் ஊடே வாழ்க்கைக்கு ஒரு புதிய முகம் தந்து கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் தன் வயப்படுத்தியது தான் இ.எம்.எஸ்ஸினுடைய வெற்றிக்குக் காரணம். தீர்க்கதரிசனமும், உயிர்த்துடிப்பு மிக்க அறிவும் கொண்ட ஒருவருக்கே இந்த மாதிரியான தன் வயப்படுத்துதல் முடியும். இ.எம்.எஸ். ஒரு யதார்த்தவாதி. பாரதத்தின் ஆத்மாவின் உயிர்த்துடிப்பாக விளங்கியது யதார்த்தவாதம். அதனால் அவருடைய கருத்துகளை சமகால இந்தியா கவனமுடன் கேட்டது. ஏற்றுக்கொள்ளவோ, விமர்சிக்கவோ செய்தது. பாரத பாரம்பரியத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் திறந்த மனதுடன் நான் சொல்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரையிலேனும் கம்யூனிஸ்ட் மாமுனிவர் அவர். லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் போலவே எனக்கும் இன்று அவர் ஒரு மாபெரும் உந்துசக்தி.

நன்றி – மலையாளம் வாரிக
நன்றி - கரிசக்காடு - வலைப்பூ 
                  

புதன், 18 ஜூலை, 2012

பாவம் கருணாநிதிக்கு பொழுது போகல... அவரு என்ன பண்ணுவார்..?

உடன்பிறப்புக்களே.... உங்க கலைஞர் அய்யா 

உங்களை வெச்சி காமடி - கீமடி  பண்ணலியே...?           

            தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அய்யா இருக்காருங்களே... அவரு ஓய்வு பெற்றதிலிருந்து  கொஞ்ச நாளா ஏதாவது உளறிகிட்டே இருக்காருங்க... ஓ.. சாரி... பேசிகிட்டே இருக்காருங்க... ஓய்வுபெற்ற பின் தமிழக மக்கள் அவரை மறந்துடப் போறாங்கன்னு அவருக்கு பயம் வந்துடுது. இது மாதிரியான நேரங்களில் அவர் மக்கள் மனசில ஆழமா பதியறதுக்கு வழக்கமா ஏதாவது செய்வாரு. வழக்கமா இந்தி பிரச்சனையை தான் கையிலேடுத்துப்பார்... இந்தி பிரச்சனை - வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது போன்ற இவைகள் எல்லாம் இப்ப காலாவதியாயிடுத்து. இன்றைக்கு அவருடைய பேரன் - பேத்திகளே இந்தி படிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... அவரு என்ன செய்வாரு பாவம்..
              அதனால இந்தி பிரச்சனையை கையிலெடுக்காமல்,  கொஞ்ச நாட்களுக்கு முன்பு   இதேப்போல் காலாவதியான வேறுவொரு பிரச்னையை கருணாநிதி கையிலெடுத்தார். சென்ற ஏப்ரல் 25 - ஆம் தேதியன்று வடசென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இதுவரையில் தனக்கு நிறைவேறாத கனவாக இருப்பது தனி ஈழம் தான் என்றும், பக்கத்து நாடான இலங்கையில் தனி ஈழ நாடு பெற்றுத் தராமல் நான் சாகமாட்டேன் என்றும்  வீராவேசமாக பேசி, உயிரே இல்லாத இயக்கமான  ''டெசோ'' என்கிற தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்புக்கு உயிர் கொடுத்தார். இலங்கையில் தமிழினம் தலைநிமிர உடல், பொருள், ஆவி அனைத்தையும் தரத் தயங்கமாட்டேன் என்றும் நீட்டி  முழங்கினார். இப்படி எல்லாம் பேசியதன்  மூலம்  இலங்கைத் தமிழர்கள் மீது தனக்குள்ள ''நீங்காத'' பாசத்தை காட்டி ( தான் ஆட்சியிலிருக்கும் போது செய்யாமல் ) தமிழக மக்கள்  மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கினார். தேர்தல் தோல்வியால் சோர்ந்து போன தன்னுடைய தொண்டர்களையும் இதன் மூலம்  உற்சாகப்படுத்தினார்.
            இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 - ஆம் தேதியன்று சென்னையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்புக் கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சனை தீர்வதற்கு தனித்தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைய தமிழர்கள் வாழும் பகுதியில் ஐ நா மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு எல்லாவிதமான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்  ஒன்றை நிறைவேற்றினார். அவர் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை அவரது உடன்பிறப்புக்கள் பாராளுமன்றத்தில் வழிமொழிந்தனர்.
                 முதலில்,  வரும் ஆகஸ்ட் 5 - ஆம் தேதியன்று விழுப்புரத்தில் ''டெசோ'' மாநாடு நடத்தப்படும் என்றும் அந்த மாநாட்டில் தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார். பிறகு, அந்த மாநாட்டின் தேதியையும், இடத்தையும் மாற்றி அறிவித்தார். ஆகஸ்ட் 12 - ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று மாற்றி அறிவித்து அதற்கான வேலைகளையும் முடுக்கிவிட்டார்.
               இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் பானா சீனா ( ப. சிதம்பரம் தான்  ) சென்னைக்கு வந்து இந்த ''டெசோ'' தலைவரை சந்தித்துவிட்டுப் போனார். இந்த சூழ்நிலையில் தான் மத்திய அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து, தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு சக்திகள் பலம்  பெற்று வருவது என்பது வருத்தமளிக்கிறது என்றும் அறிவித்தது.
         இதன் பிறகு தற்போது இவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் வரும் ''டெசோ'' மாநாட்டிம் தனி ஈழம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட மாட்டாது என்று இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பின்னர் கருணாநிதி அறிவித்தது என்பது ''உடன்பிறப்புக்கள்'' மத்தியில் மீண்டும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாகியுள்ளது.

திங்கள், 16 ஜூலை, 2012

இந்திய சந்தையை கொள்ளையடிக்கத் துடிக்கிறது அமெரிக்க கழுகு....!

             கடந்த பத்து நாட்களாக அமெரிக்கா இந்தியா மேல ஒரே எரிச்சலா இருக்கு. அங்கிருந்து கடுமையான வார்த்தைகளாகத் தான் வந்து விழுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு தான் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ''டைம்'' பத்திரிகை தனது இதழில் நமது பிரதமர் மண்ணு மோகன்சிங்கைப் பற்றி ''செயல்படாத மங்குனி பிரதமர்'' என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்ததை நாடே பார்த்தது. ஆனால்  இவ்வளவு கடுமையான விமர்சனத்தைப் பார்த்தும் அதைப் பற்றி எதையுமே சொல்லாமல் நமது பிரதமர் வழக்கம் போல் ''மௌன சாமியாராகவே'' இருந்தார். 
          இன்னும்  அமெரிக்கா இந்தியாவை விடுவதாக இல்லை. இந்தியா அமெரிக்காவிற்கு வேண்டிய மிகப்பெரிய சந்தை. ''அந்நிய நேரடி முதலீடு'' என்ற பெயரில் இந்தியாவில் அமெரிக்கா மிகக் குறைவான முதலீட்டை செலுத்தி மிகப்பெரிய இலாபத்தை கொள்ளையடித்துச் செல்லத் துடிக்கும் அமெரிக்காவிற்கு, தங்களின் பேராசை நிறைவேறாமல் தடுக்கும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் பெரும் சிம்மசொப்பனமாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த சூழல் என்பது அமெரிக்காவை மேலும் மேலும் எரிச்சலூட்டுகிறது 
         அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடிமை ஆட்சிக்காலத்திலேயே  ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ., நாங்கள் சாகவோ'' என்று இந்திய  மக்களை தட்டி எழுப்பிய  பாரதியின் எழுச்சிக்குரலைப் போல், இன்று இந்த தேசத்தை கொள்ளை கொண்டு போக துடிக்கும் அமெரிக்காவின் ''தாராளமயம், தனியார்மயம், உலகமயம்'' என்ற சுரண்டல் கொள்கைகளை ஆரம்பக் காலத்திலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரி கட்சிகளும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்த்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதால்,  அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் தங்கள் இஷ்டப்படி   அமெரிக்காவிற்கு சாதகமான சட்டங்களை அவர்கள் கேட்கிற மாதிரி நிறைவேற்றி தந்து தங்களின் எஜமான விசுவாசத்தை காட்டமுடியாமல் தவிக்கிறார்கள் என்பது நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கும் உண்மை.
              கடந்த முதலாவது ஐக்கிய முற்போக்கு முன்னணியின் ஆட்சி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவில் நடைபெற்ற ஆட்சி என்பதால் குறைந்தபட்ச செயல் திட்டம் அடிப்படையில் அந்த ஆட்சியை மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் சரியான பாதையில் வழிநடத்தி சென்றதால் அமெரிக்கா எதிர்ப்பார்த்த சாதகமான சூழ்நிலை இல்லாமல் போனது. அமெரிக்காவிற்கு ஆதரவான சட்டங்களை இயற்றி, அவர்கள் இந்த தேசத்தை சூரையாடுவதற்கு ஏற்பாடு செய்து எங்கள் எஜமான விசுவாசத்தை காட்டமுடியாமல் ''இடதுசாரிகள் எங்கள் கைகளை கட்டிப்போட்டு விட்டார்கள்'' என்று அன்றே மண்ணு மோகன்சிங் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் தங்களால் இந்த தேசத்தில் இருந்து ஒரு சிறு துளியைக் கூட கொத்திச் செல்ல முடியவில்லையே என்று அமெரிக்காவிற்கு ஏமாற்றமாய் இருந்தது. எரிச்சலூட்டியது. 2009 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு அமெரிக்காவும் சேர்ந்து தானே தேர்தல் களம் இறங்கியது. இடதுசாரி கட்சிகள் மீண்டும் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றாலும், அவர்கள் ஆதரவோடு மத்தியில் ஆட்சியமைந்தாலும் தங்கள் ஆசை நிறைவேறாமல் போய்விடும் என்பதால் இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்க உளவுத்துறை சி. ஐ. ஏ - வும், அமெரிக்க தூதரகமும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக - குறிப்பாக மண்ணு மோகன்சிங்கிற்கு ஆதரவாக தேர்தல் வேலைகளை செய்தது என்பதை இந்த நாடு மறந்திருக்க முடியாது.  
              ஆனால்  இன்றும்  இரண்டாவது ஐக்கிய முற்போக்கு முன்னணியின் நடப்பு ஆட்சியிலும் அதே நிலைமை தான். அவர்கள் நினைத்து போல் இடதுசாரி  கட்சிகளின் தயவு இல்லாமல் ஆட்சி செய்யலாம் என்ற கனவோடு 2009 - ஆம் ஆண்டு இரண்டாவது கட்ட ஆட்சியை தொடங்கிய  மண்ணு மோகன்சிங்கிற்கு அமெரிக்கா விரும்புவது போன்ற - அவர்கள் எதிர்ப்பார்ப்பது போன்ற அமெரிக்க சாதக சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. காரணம் ''கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'' என்பது போல் வெறும் இருபத்து நான்கே பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றிருந்தாலும், நாட்டின் பாதக விஷயங்களை - அமெரிக்காவின் சாதக விஷயங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் இடதுசாரிகள் குறுக்கே நிற்பதால், அமெரிக்க சாதக சட்டங்களான இன்சுரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் சட்டம், சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கும் சட்டம், இந்திய உழைப்பாளி மக்களின் பென்ஷன் நிதியை தனியாரிடம் கொடுத்து பங்குசந்தையில் சூதாட வகை செய்யும் பென்ஷன் சட்டம், விலைப்போகாத அமெரிக்க பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது, அமெரிக்காவில் மருத்துவம், சட்டம், மேலாண்மை, தணிக்கை, பொறியியல், கட்டடக்கலை போன்ற தொழில் சார்ந்த கல்விப்பயின்றவர்களையும், அமெரிக்க ஆசிரியர்கள்  மற்றும் பேராசிரியர்களையும் இந்தியாவில்  அனுமதிக்கும் அந்நிய பல்கலைக்கழக சட்டம், இந்திய கடல் செல்வங்களை - வளங்களை அமெரிக்கா கொள்ளையடிக்க வகை செய்யும் கடற்கரை மேலாண்மை சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் போராட்டங்களின் காரணமாக இன்றைக்கு பாராளுமன்றத்தில் அறிமுகக்கட்டத்திலேயே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. மண்ணு மோகன்சிங்கால் அந்த சட்டங்களை  எல்லாம் நிறைவேற்ற முடியவில்லை.
               இந்த சூழ்நிலையில் தான், இந்திய வளங்களை சூறையாடத்துடிக்கும் அமெரிக்காவிற்கு கோபத்தை ஊட்டுகிறது. இந்திய நாட்டின் சொத்துக்களான நிலம், நீர், ஆகாயம், கடல் ஆகிய இடங்களில் கிடைக்கும் செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போக துடிக்கும் அமெரிக்காவிற்கு தங்களுக்கு சாதகமான சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போவது கண்டு எரிச்சலூட்டுகிறது. அதனால் தான் கடுமையான கோபத்திலிருக்கும் அமெரிக்கா, இந்திய  பிரதமர் மண்ணு மோகன்சிங்கை ''எதற்கும் லாயக்கில்லாத பிரதமர்'' என்று ''டைம்'' பத்திரிகை மூலம் திட்டுவதும், ''மண்ணு மோகன்சிங் எனது இனிய நண்பர்'' என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரதமர் மண்ணு மோகன்சிங்கை தூக்கிவைத்து கொஞ்சுவதுமாக கடந்த வாரங்களில் அமெரிக்கா நடந்துகொள்கிறது. 
           நேற்று கூட ஒபாமா, தனது இனிய நண்பர் மண்ணு மோகன்சிங் இந்தியாவில் கடுமையான ''பொருளாதார சீர்த்திருத்தங்களை'' கொண்டு வரவேண்டும் என்று அறியுரை கூறியிருக்கிறார். இது அறியுரையா...? ஆலோசனையா...? கட்டளையா...? சர்வாதிகாரமா..? என்பது மண்ணு மோகன்சிங்கிற்கு தான் வெளிச்சம்.