ஞாயிறு, 29 மார்ச், 2015

கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்...!

                                                                                                     
கட்டுரை : பி.சாய்நாத், மூத்த பத்திரிக்கையாளர்                   
           
           தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் ( இவையெல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்திடும் பொருட்களா என்ன? ) போன்றவை இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் மீது விதிக்கப்படும் சுங்கவரியில் 75,592 கோடி ரூபாய் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தொகையானது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டத்திற்கு `முன்னெப்போதும் இருந்திராத அளவு’ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் கூடுதலான ஒன்றாகும்.
            மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் என்பது பல நூறு கோடி மனித உழைப்பு நாட்களை பல லட்சக்கணக்கான கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் அளித்தது என பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிடுகிறார். ஏழை மக்களுக்கு பயனளித்திடும் இத்தகையதொரு திட்டத்திற்கு வெறும் 34,699 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் அளவு என்பது மொத்தமாக சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும்.
          விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது 5,000 கோடி ரூபாய்க்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்கத்தின் மீதான சுங்க வரிச் சலுகை என்பது கடந்த 12 மாதங்களில் இருந்த அளவை விட ஐந்து மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

42 டிரில்லியன் ரூபாய்               

           இதனிடையே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகை என்பது 42 டிரில்லியன் ரூபாய் (ஒரு டிரில்லியன் என்பது நூறாயிரம் கோடி) என்ற அளவை இந்த ஆண்டு தாண்டியுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டு வருவோம் என நரேந்திரமோடி அரசு சூளுரைத்ததே, அந்த கருப்புப் பணத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு புரிந்திடும்படி சொல்ல வேண்டும் எனில், இதனை 678 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிட வேண்டும்.
          42 என்கிற எண்ணுக்குப் பிறகு வருகின்ற பன்னிரண்டு பூஜ்யங்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் ஏழைகளுக்கு(?!) நிவாரணமாக 5,89,285.2கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே, தனிநபர் வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள லேசான சலுகையை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனில், கார்ப்பரேட்களுக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ள தொகையின் அளவு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் (சுமாராக 88 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
          கார்ப்பரேட் வருமான வரி, கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வை ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டும் தர்ம தாராளத்துடன் சலுகைகள் இவர்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள 5.49 லட்சம் கோடி ரூபாய்களோடு சேர்த்து கடந்த பத்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை என்பது 42.08 டிரில்லியன் ரூபாய்களாகும். பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்த கார்ப்பரேட் விருந்தாளிகள் கும்மாளமடித்து வருகிறார்கள்.

140 சதவீதம் அதிகம்                 

              2005-06ம் ஆண்டிலிருந்துதான் தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் பட்டியலை அரசு வெளியிடத் துவங்கியது. எனவேதான் கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட தொகை என சொல்கிறோம். உண்மையில் சொல்லப் போனால், இன்னும் கூடுதலான காலத்திற்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் கூட்டினால் மொத்தத் தொகை எவ்வளவாக இருக்கும்? நிச்சயம் அது ஒரு மிகப் பெரியதொரு தொகையாக இருந்திடும்.
          கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட ஆரம்பித்த பின்னர் உள்ள தொகைகளை கூட்டினால் அது 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். இந்த அளவிற்கு இதற்கு முன்எப்போதும் அளிக்கப்பட்டதில்லை. இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள சலுகை என்பது, இத்தகைய புள்ளிவிவரம் நமக்கு கிடைக்கத் துவங்கிய ஆண்டான 2005-06ம் ஆண்டில் அளிக்கப்பட்ட சலுகையின் அளவை விட கிட்டத்தட்ட 140 சதவீதம் அதிகம் ஆகும். 

மோடியின் புதிய பாணி                 

              இந்த ஆண்டு சலுகைகள் என்பது புதிய பாணியில் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பார்த்தோமேயானால், கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டு வரை இது கார்ப்பரேட் வரி செலுத்துவோரின் மிக முக்கியமானதொரு செலவினமாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் `ஊக்கத்தொகை’ என இதற்கு புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. ஆம்.. இது கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையே ஆகும். அரசிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட ஒன்றல்ல. பாஜக அரசின் கீழ், `வீண் செலவாகிய’ மானியங்கள் அளிப்பது என்ற பழைய நடைமுறை மீண்டும் இடம் பெறாது என “நம்புவதாக” சென்ற ஆண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். மேலும், நிலவுகின்ற காலச்சூழலைப் பொறுத்து அது அமைந்திடும் என்றும் குறிப்பிட்டார். எனவே, தற்போது அத்தகையதொரு காலச்சூழல் அவரைப் பொறுத்தவரை கனிந்துவிட்டது. முந்தைய ஐமுகூ அரசின் பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீதான வரி என்பது 57,793 கோடி ரூபாய்களாகும். மோடி அரசின் முதலாவது ஆண்டில், அது 62,399 கோடி ரூபாய்களாக ஆனது. அதாவது கிட்டத்தட்ட 8 சதவீதம் அதிகரித்தது. இந்த ஆண்டு இத்தொகையின் அளவு இன்னமும் கூடுதலான ஒன்றாகவே இருந்திடும். ஏனெனில், தற்போது மதிப்பீடு செய்யப்பட்ட அல்லது இடைக்கால தொகையே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும்171 கோடி ரூபாய் சலுகை                

           மதிப்பீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்ட தொகையை எடுத்துக் கொண்டாலும் கூட, அதாவது வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள சலுகையை மட்டும் எடுத்துக் கொண்டால், 2014-15 நிதியாண்டின் ஒவ்வொரு நாளிலும் 171 கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகையாக அளிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7 கோடிக்கும் கூடுதலான ரூபாய்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகையோடு, தள்ளுபடி செய்யப்பட்ட கலால் வரித் தொகையான 1.84 லட்சம் கோடி ரூபாய்களையும், தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரியான 3.01 லட்சம் கோடி ரூபாய்களையும் சேர்த்து கணக்குப் போட்டால், மொத்தமாக இவர்களுக்கு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதனைப் பார்த்திட இயலும்.

கேட்காதீர்கள்... அது ரகசியம்               

         இந்திய நாட்டு வங்கிகளின் வாராக் கடனாக உள்ள பல லட்சம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய சலுகைகளை அனுபவித்தவர்களிடமிருந்து வரவேண்டிய ஒன்றாகும். ஆனால், ரகசியக் காப்பு சட்டத்தின்படி இவர்களது பெயர்களை வெளியிட இயலாது. இதற்கு முன்எப்போதும் இருந்திராத அளவு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதலானதொரு தொகையை அருண் ஜெட்லி ஒதுக்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
            உண்மையில், வரிகள் வாயிலாக அரசிற்கு கிடைத்திடும் வருமானம் என்பது உற்சாகமளிக்கக் கூடிய வகையில் இருந்தால்... இன்னமும் கூடுதலாக 5000 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படும் என்றே ஜெட்லி குறிப்பிட்டார். ஒரு நிகழ்வு நடைபெற்றால் அதனையடுத்து மற்றொன்று நிகழும் என்று சொல்லும்போது அது அவ்வாறு நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதுமட்டுமின்றி, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 34,699 கோடி ரூபாய்கள் என்பது உண்மையில் குறைவான தொகையே அன்றி கூடுதலான தொகையல்ல. ஏற்கனவே, மத்திய அரசு இந்த ஆண்டு 6000 கோடி ரூபாய்களை மாநில அரசுகளுக்கு அளித்திடாமல் பாக்கி வைத்துள்ளது.
            எனவே, பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிட்டுள்ளபடி, அடுத்த ஆண்டு ஒதுக்கப்படுகிற புதிய தொகை என்பது 30,000 கோடி ரூபாய்களை விட குறைவான ஒன்றாகவே இருந்திடும். எது எவ்வாறு இருந்தாலும் இத்திட்டத்திற்கென ஒதுக்கப்படுகிற தொகை பணவீக்கம் மிக அதிகமாக இருந்த மூன்றாண்டுகளில் இருந்த அளவே இருந்திடும். அதாவது சுமார் 33000 கோடி ரூபாய்களாகவே இருந்திடும். ஆனால், இது குறித்து ஜெட்லி மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. இதற்கான துவக்கப்புள்ளி ப.சிதம்பரம் காலத்திலேயே வைக்கப்பட்டுவிட்டது.

121 ஆண்டுகளுக்கு செலவழிக்கலாம்!              

         கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு தற்போது செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவின்படி பார்த்தால், முதலாளிகளுக்கு சலுகையாக அளிக்கப்படுகிற 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வருகின்ற 121 ஆண்டுகளுக்கு அதனை செயல்படுத்திடலாம். ஆனால், நாடாளுமன்றத்தின் அவையிலே இத்திட்டத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற பிரதமரைக் கொண்ட நாடாக இருக்கும் வரை, இதனை நாம் செய்திட மாட்டோம்.
34 ஆண்டுகளுக்குமானியம் தரலாம்!              
         தற்போது உணவு மானியத்திற்கு அளிக்கப்படும் தொகையின் அளவீட்டின்படி, இந்த 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வரும் 34 ஆண்டுகளுக்கு இந்த மானியத்தை மக்களுக்கு தொடர்ந்து அளித்திடலாம். “குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதியில் 22 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது”, “குழந்தைகளின் ஒட்டுமொத்த கல்விக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது” என குழந்தைகளின் உரிமைகளுக்கான மையம் தெரிவிக்கிறது.
            இந்நிலையில், 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதிகள் வெட்டிச் சுருக்கப்பட்டதை மாற்றியமைத்திடலாம்.
குழந்தையா? தங்கமா?                 
         ஆனால், தள்ளுபடி செய்யப்பட்ட வருமானம் குறித்த பட்டியலைப் பார்த்தால் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் இலவசங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் மதிப்பு மிகுந்த ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரித் தொகை என்பது 2014-15ம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 10 சதவீதமாகும். 2005-06 முதலான பத்தாண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரி என்பது 4.3 டிரில்லியன் ரூபாய்களாகும்.
           குழந்தைகளின் மேம்பாட்டை தடுத்து நிறுத்தி, தங்கத்தை அதிகரித்திடும் நடவடிக்கையே இது. சலுகையாக அளிக்கப்படுகிற இந்த 42 டிரில்லியன் ரூபாய்கள் எல்லோருக்குமானது. இதனுடைய பலன் அனைவருக்கும் கிடைக்கிறது என இத்தகைய “ஊக்கத் தொகைக்கு” வக்காலத்து வாங்குகிறவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இத்தகைய சலுகையின் பெரும்பகுதி செல்வச் சீமான்களையே சென்றடைகிறது என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
ஏழையின் பணம்                 
             இவ்வாறாக செல்வந்தர்களுக்கு வாரி இறைக்கப்படும் மக்களின் வரிப்பணம் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரிந்திடவில்லை. உதாரணமாக சொல்லவேண்டுமெனில், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனாக நிலுவையில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய செல்வந்தர்களால் திருப்பிச் செலுத்தப்படாதவை ஆகும். ஆனால், ரகசியக் காப்பு என்ற பெயரில் இவர்களது பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. கார்ப்பரேட் ஊடகமும் இவர்களது பெயரை வெளியிடாமல் இருப்பதில் ஆனந்தம் அடைகிறது.
            தங்களிடம் உள்ள சிறு சிறு தங்க நகைகளை அடமானம் வைத்து அதனை திருப்ப முடியாமல் போகிற சாதாரண மக்களின் நகைகள் ஏலம் விடப்படுவது குறித்த விளம்பரங்களையும், சிறு தொகையை பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் குறித்த விளம்பரங்களையும் ஊடகத்தில் நாம் பார்க்கிறோம். இதுதான் இவர்களது நியாயமும் தர்மமும் ஆகும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நூற்றுக் கணக்கான செல்வந்தர்களின் பட்டியலை கடந்த ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டபோது கார்ப்பரேட் ஊடகம் கனத்த மௌனத்தையே சாதித்தது.
        இதற்கு மேலும் இதனை மூடி மறைத்திட முடியாது என்ற நிலை தோன்றுகின்ற வரை இந்த மௌனம் நீடிப்பதனை பார்க்க முடிகிறது. இதுமட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு, மிக மலிவானதொரு விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கை மாற்றப்பட்டுள்ளன. செல்வந்தர்களுக்கு இவற்றையெல்லாம் வாரி இறைக்கிறவர்கள் தான் ‘இலவசம்’ என்பது சாத்தியமல்ல என சொல்கிறார்கள்.
தமிழில் : எம்.கிரிஜா                                 
நன்றி : தீக்கதிர்

சனி, 28 மார்ச், 2015

சிறுபான்மையினரின் அடையாளங்களை அழித்தொழிப்பதுதான் இந்துத்துவமா...?


       ''டீஸ்டா செடல்வாட்''       - 2002 குஜராத் கலவர வழக்கைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாத பெயர்களில் முக்கியமானது. ஆளும் கட்சிக்கு எதிராகவும், இந்தியாவின் பெரிய மதவாத அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருவது அத்தனை எளிதல்ல. அந்தப் போராட்டத்தின் விளைவாக இவர் மீதும் இவரது செயல்பாடுகள் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொலை மிரட்டல்கள் குவிந்தன. இவற்றுக்கெல்லாம் கொஞ்சமும் அசராமல், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கேட்டுப் போராடுவதில் பின்வாங்காமல் இருப்பதொன்றே டீஸ்டாவின் மனஉறுதிக்குச் சான்று. சென்னை வந்திருந்தவரிடம் பேசினோம்... 

உங்கள் சமூகப் பார்வைக்கான அடித்தளம் எது?                       
 
          என் வீடுதான் என் போராட்ட வாழ்வுக்கான முதல் படியை அமைத்துத் தந்தது. மும்பையில் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தேன். என் தாத்தா எம்.சி. செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல். என் அப்பா அதுல் செடல்வாட், ஒரு வழக்கறிஞர். எனக்கும் என் தங்கைக்கும் அநாவசியக் கட்டுப்பாடு இல்லை. இருந்தாலும் நாங்கள் எங்கள் சுதந்திரத்தின் எல்லையை உணர்ந்தே இருந்தோம்.
           சிறு வயதில் இருந்தே நான் நிறைய படிப்பேன். உணவு மேசையில் அப்பா நிறைய விஷயங்களைப் பேசுவார். நாங்கள் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து விவாதித்திருக்கிறோம். வாசிப்பும் விவாதமும் புதிய வாசல்களைத் திறந்தன. 

பத்திரிகைப் பணி எந்த வகையில் உங்கள் சமூகப் பார்வைக்கு உதவியது?                 
 
           பள்ளி நாட்களிலேயே பாப் வுட்வர்ட் போன்ற பத்திரிகையாளர்களின் புத்தகங்களைப் படித்தேன். உலகின் சிறந்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளை வாசித்தேன். அதுதான் பத்திரிகைத் துறையின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணம். ஏழு தலைமுறை வழக்கறிஞர்களைக் கொண்ட குடும்பத்தில், நானும் அதே துறையில் பணியாற்றுவேன் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயல்புதானே. ஆனால், நான் பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுதேன். என் முடிவை என் அப்பா வரவேற்றார். ‘டெய்லி,’ ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்களிலும், பிறகு ‘பிஸினஸ் இந்தியா’ பத்திரிகையிலும் பணியாற்றினேன்.
          சமூகத்துக்கு நீதி சொல்கிற பத்திரிகைத் துறையிலும் ஆண், பெண் சமநிலையின்மையை உணர்ந்தேன். பெண் நிருபருக்கு அரசியல் செய்திகளைச் சேகரிக்க அனுமதியில்லை. பெண்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்ற பிற்போக்குத்தனமான எண்ணமே இதற்குக் காரணம். ஒருமுறை ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலைப் பார்வையிட்டுச் செய்தி சேகரிக்கப் போயிருந்தோம். கப்பலுக்குள் பெண் நிருபர்கள் வந்தால் கமாண்டர்களின் கவனம் சிதறும் என்று எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். ஒரு பெண், பிரதமராக இருக்கும் நாட்டில் பெண் நிருபர்களுக்கு இப்படியொரு அவமானமா என்று அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். 

பத்திரிகைப் பணியைத் துறந்தது ஏன்?                   
 
            பத்திரிகைப் பணியில் நான் சமரசம் செய்துகொண்டதில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு தேக்க நிலை இருப்பதாகத் தோன்றியது. நானும் என் கணவர் ஜாவேத் ஆனந்தும் பத்திரிகைப் பணியைத் துறந்துவிட்டு, ‘கம்யூனலிசம் காம்பாட்’ இதழைத் தொடங்கினோம். மதவாதத்தை எதிர்ப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். மதத்தின் பெயரால் சூறையாடப்படப்படுகிற மக்களுக்கு வேறு எதையும்விட சட்டத்தின் துணை அவசியம். அதை எங்கள் பத்திரிகை வாயிலாகச் சொல்கிறோம்.

மதவாதத்துக்கு எதிராக நீங்கள் செயல்பட ஆரம்பித்தது எப்படி?                
 
           மதவாதத்தின் கோரத் தாண்டவத்தின் விளைவுகளை மிக அருகில் இருந்து பார்த்தேன். தங்கள் அடிப்படை உரிமைகளுக்குக்கூடக் குரல் எழுப்ப முடியாத சிறுபான்மை மக்களுக்கு நீதி மட்டும் தானாகக் கிடைத்துவிடுமா என்ன? அதனால் முழு நேர மனித உரிமை செயல்பாட்டில் என்னை இணைத்துக்கொண்டேன். சில பத்திரிகை நண்பர்களுடன் சேர்ந்து ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ (Citizens for Justice and Peace) என்ற அமைப்பைத் தொடங்கினோம். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். 

உங்கள் கணவர் முஸ்லிமாக இருப்பதால்தான் நீங்கள் குஜராத் கலவரத்தில் ஆர்வம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறதே?          
 
          இந்த ஒரு வழக்கில் மட்டுமா ஈடுபாடு காட்டுகிறேன்? இந்த நாட்டில் நடக்கும் எத்தனையோ செயல்களை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை, நான் துணிந்து போராடுகிறேன். அவ்வளவே. 

ஆளுங்கட்சியை எதிர்த்து நிற்பது எப்படி இருக்கிறது?               
 
         முன்னாள் குஜராத் முதல்வரும் இந்நாள் பிரதமருமான நரேந்திர மோடியையும் வேறு சில அரசியல் பிரமுகர்களின் பெயர்களையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கச் சொல்லி வலியுறுத்தி நாங்கள் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்தே எங்களுக்குப் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. ஏகப்பட்ட கொலை மிரட்டல்கள். கொலை மிரட்டல்களைக்கூடச் சமாளித்துவிடுகிறேன். ஆனால், சிலரின் கொச்சையான வார்த்தைகளையும் அருவருக்கத் தக்க வசைகளையும் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி. 

பள்ளிகளின் பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துடன் நீங்கள் தொடங்கிய ‘கோஜ்’ அமைப்பின் நிலை என்ன?               
 
          மறைக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுத்து, அதை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதுதான் ‘கோஜ்’ அமைப்பின் நோக்கம். தென்னிந்தியாவில் இன்னும் எங்கள் பணிகளை ஆரம்பிக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் ஓரளவுக்கு நாங்கள் நினைத்ததைச் செயல்படுத்த முடிகிறது. பள்ளிகளில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்களை உரையாடச் செய்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களோடு ஒன்றிணைந்து வாழும் வேற்றுமையில் ஒற்றுமைதான் நாங்கள் விரும்புவது. இந்தியப் பாடப் புத்தங்களில் திட்டமிட்ட சதி அரங்கேறிவருகிறது.
          முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படுவதற்கும் மறைக்கப்படுவதற்கும் என்ன காரணம்? இந்துத்துவம் என்பது சிறுபான்மையினரையும் அவர்களின் அடையாளங்களையும் அழித்தொழிப்பதா? 

ஒரு செயல்பாட்டாளராக, இந்தியாவில் பெண்களின் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?                     
 
          பெண்கள் இங்கே சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ஆண், பெண் சமநிலையின்மை குறித்த கருத்தரங்கில் பேசுவதற்காக லக்னோ சென்றிருந்தேன். ஆண்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் என்னையும் சேர்த்து இரண்டே பெண்கள். எத்தனை முரண்...! ‘எங்கே என் சகோதரிகள்?’ என்ற கேள்வியோடுதான் என் பேச்சைத் தொடங்கினேன். நம் சமூக அமைப்பிலேயே கோளாறு இருக்கிறது. ஆண் குழந்தையைக் கொண்டாடுவதும் பெண் குழந்தையை அடக்கிவைப்பதும் இங்கே ஆண்டாண்டு காலமாக நடந்துவருகிறது. அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். மனித உரிமை என்பது பெண்ணுக்கான உரிமையும்தானே. 

ஊடகப் பெண்களுக்கான கூட்டமைப்பிலும் நீங்கள் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறீர்களல்லவா?
 
                பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி ஊடகப் பெண்களுடன் தொடர்ந்து விவாதித்துவருகிறோம். பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களின் பாதுகாப்புக்காக ஒரு குழு செயல்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அது எத்தனை இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எழுதிய காகிதத்தை வைத்துக்கொண்டு பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச் சமாளித்துவிட முடியுமா? பெண்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்த்துப் போராட வேண்டும். அந்தப் போராட்ட குணம்தான் அவர்களைப் பாதுகாக்கும் கவசம். 

போராட்டத்தின் பலன் கைது செய்யப்படுவதா?                                
 
           நரேந்திர மோடிக்கு எதிராக டீஸ்டா செயல்படத் தொடங்கியதுமே அதற்கான விளைவு எப்படியிருக்கும் என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஈஷான் ஜாஃப்ரியும் அவரது வீட்டில் தஞ்சம் புகுந்தவர்களும் குஜராத் கலவரத்தின்போது படுகொலை செய்யப்பட்டனர். தன் கணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார் ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி. குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடியுடன் சேர்த்து 59 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று அவர் 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நரேந்திர மோடிக்கு எதிரான சாட்சிகள் இருந்தாலும் அவை வழக்கு தொடரக்கூடிய அளவுக்கு வலுவானவை இல்லை என்று அந்த வழக்கில் 2012-ல் தீர்ப்பு வெளியானது.
        அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டீஸ்டாவின் ஆதரவுடன் 2013-ல் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்தப் புள்ளிதான் டீஸ்டா மீதும் அவருடைய கணவர் ஜாவேத் மீதும் மோடி அரசாங்கம் தாக்குதல் நடத்தக் காரணமாக இருந்தது. இவர்கள் இருவர் மீதும் மோசடி வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ‘மோடி போன்றவர்களின் கையில் அதிகாரம் இருந்தால், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறவர்களின் நிலை என்ன ஆகும் என்பதற்கு டீஸ்டா மற்றும் ஜாவேத் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே சாட்சி’ என்று அரசியல் ஆர்வலர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். இருவருக்கும் தொடர்ந்து முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. கபில் சிபல் தலையிட்டதன் பேரில் டீஸ்டா கைது செய்யப்படுவது நின்றது. ஆனால் இது தற்காலிகமானதுதான்.
- பிருந்தா சீனிவாசன்
தொடர்புக்கு : brindha.s@thehindutamil.co.in 
நன்றி : தி இந்து - தமிழ்  

Somnath Chatterjee inaugurates an exhibition on Com.Jyoti Basu

           
            Former Lok Sabha Speaker Somnath Chatterjee inaugurated an exhibition of portraits and sketches on Com.Jyoti Basu at the Academy of Fine Arts on Tuesday.
          The event, that was held to commemorate the 100th Birth Anniversary of Com.Jyoti Basu, will continue for a week.
           "Jyotibabu is the tallest example in politics of how to serve people. People might have at times thought that he was a very reserved person. But having worked closely with him, I have seen how intense his feelings and emotions for people were. Jyoti Basu used to say politics was the only way to serve the masses. He did politics by putting his heart into it," Chatterjee said.

சனி, 7 மார்ச், 2015

மோடி உருவாக்கிய புதிய நெம்பர் ஒன் பணக்காரர்...!

               
              மத்தியில் இந்திய ஆட்சியாளர்கள்  நாட்டின் பெரும்பாலான ஏழை - எளிய மக்களின் ஓட்டுகளை பெற்று  தான் ஆட்சியில் அமருகிறார்கள். ஆனால் அவர்கள், அன்றைய நேருவில் தொடங்கி இன்றைய மோடி வரை ஓட்டுப்போட்ட அந்த மக்களுக்காக வேலை செய்வதில்லை. அன்றைக்கு நேருவுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் எந்த குடிசையிலிருந்து ஓட்டுப்போட்டார்களோ, அதே குடிசையிலிருந்து தான் அவர்களது பிள்ளைகளும் இன்றைக்கு மோடிக்கும் ஓட்டுப்போட்டு பிரதமராக உட்கார வைத்திருக்கிறார்கள். ஆனால் 1947-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகாலத்தில் ஏராளமான ஆட்சி மாற்றங்கள் தான் ஏற்பட்டிருக்கின்றனவே தவிர, ஓட்டுப்போட்ட மக்களின் பொருளாதாரத்தில் எந்தவிதமான மாற்றங்களும்  ஏற்படவுமில்லை. அவர்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தபாடில்லை. அதே சமயத்தில் இந்தியாவில் ஆட்சியாளர்களை - அவர்களின் ஆட்சியை வழிநடத்துகிற பெருமுதலாளிகள்  மற்றும் பெரும்பணக்காரர்களின் பொருளாதாரத்தில் மட்டும்  மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. முன்னைவிட அவர்களின் வருமானமும், கொள்ளை இலாபமும் உயர்ந்துகொண்டே தான்  போகின்றன. அனைத்து இந்திய இந்திய பெருமுதலாளிகளும், பெரும்பணக்காரர்களும் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகளாய் இருப்பது என்பதும், அவர்களில் பிரதமருக்கு நெருக்கமானவ்ரர்கள் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்கள் மட்டும் நெம்பர் ஒன் இடத்திற்கு வருவது என்பதும் நம் நாட்டில் காலகாலமாக நடந்துவரும் வழக்கமாகும். அப்படித்தான் ஆரம்பக் காலத்திலிருந்து டாட்டா, பிர்லா, கோயங்கா, திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி என ஆட்சியாளரிடத்தில் இவர்களுக்கு இருக்கும் நெருக்கத்தின் காரணமாக, காலத்திற்கு தகுந்தாற்போல் இவர்களில் ஒருவர்  அவ்வப்போது இந்தியாவின் நெம்பர் ஒன் பணக்காரராக முன்னிலைக்கு வந்தனர்.
            அதிலும் கடந்த 1991-ஆம் ஆண்டிற்கு பின் இந்தியாவில் புகுந்த  உலகமயக்கொள்கையின் காரணமாக உலகப்பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறும் அளவிற்கு இந்திய பெரும்பணக்காரர்களின்   பொருளாதாரம் தாறுமாறாக உயர்ந்தது. ஆரம்பத்தில் ஐந்து பெரும்பணக்காரர்கள் மட்டுமே இருந்த நம் நாட்டில், இந்த காலக்கட்டத்தில் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களின் முழு ஒத்துழைப்போடும், ஆதரவோடும் நூற்றுக்கணக்கில் பெரும்பணக்காரர்கள் உருவாகினர் என்பது தான் உண்மை. இது போன்று உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறும் அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான பெரும்பணக்காரர்களை அடையாளம் காட்டி,  ''இந்தியப்  பொருளாதாரம்  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது'' என்று ஆட்சியாளர்கள் ஒன்றுமறியா நம் நாட்டு ஏழை எளிய மக்களிடமே மார்தட்டிக்கொண்டனர். நம் ஆட்சியாளர்கள் பெருமுதலாளிகளின் எண்ணிக்கை வளர்ச்சியும், அவர்களின் பொருளாதார வளர்ச்சியும் மட்டுமே நாட்டு  வளர்ச்சியின் அளவுகோளாக காட்டித்தான் இதுவரையில் மக்களை ஏமாற்றிவருகின்றனர். 
                அண்மையில் மோடி தலைமையில் பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சியை பிடித்தவுடன், மோடியின் ''பொருளாதார அடியாளான'' குஜராத் மாநிலத்தை சேர்ந்த  அதானி என்ற பணக்காரர் உலக அரங்கில் போட்டிப்போடக்கூடிய பணக்காராராக மோடியால் முன்னிறுத்தப்பட்டார். அதேப்போல் திரைமறைவில் உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் ஒருவராகவும், இந்தியாவின் நெம்பர் ஒன் பணக்காரராகவும் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டவர் தான் ''சன் பர்மாசுடிக்கல்ஸ்'' என்ற மருந்து உற்பத்தி செய்யும்   நிறுவனத்தின் முதலாளியான  திலிப் சாங்வி. என்பவர் தான். இவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது 2,150 கோடி டாலர் என்று சொல்லப்படுகிறது. ரூபாய் மதிப்பில் சொல்லவேண்டுமென்றால், ரூ.1,29,000 கோடியாகும். இப்படி ரூபாய் மதிப்பில் சொன்னால் மக்கள் புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதால், டாலர் மதிப்பில் சொல்கிறார்கள். இவரென்ன உழைத்து இந்த அளவிற்கு சொத்து சேர்த்திருக்கிறாரா...? உலகமயம் மற்றும் தாராளமயக் கொள்கைகளும், ஆட்சியாளர்களின் தாராளமான கருணையும் தான் இவரை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. அதிலும் நரேந்திரமோடி பிரதமர் ஆனவுடன் இவருக்குத் தந்த திரைமறைவு ஆதரவினால் தான் திலிப் சாங்வி, கடந்த எட்டு ஆண்டுகாலமாக இந்திய பெரும்பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்திலிருந்த முகேஷ் அம்பானியையே  மிஞ்சமுடிந்தது.
                  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய மருந்தாலையாக தொடங்கப்பட்ட சன் பார்மாசுட்டிக்கல்ஸ் என்ற திலிப் சாங்வியின் நிறுவனம், இன்று  இந்தியா மற்றும் அமெரிக்காவில் மொத்தம் 18 இடங்களில் பறந்து விரிந்து மருந்தாலைகளை நிறுவி,  உலக அளவில் முக்கிய நோய்களை குணப்படுத்தும் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அவரது 18 மருந்தாலைகளில் ஒவ்வொரு ஆலையிலும் சுமார் 20 அல்லது 30 வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அண்மையில் சென்ற ஆண்டு ரேன்பாக்சி லேபாரேட்டரீஸ் லிமிடெட் என்ற மிகப்பெரிய மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது என்பது இவரது பொருளாதார வளர்ச்சியில் இன்னொரு மைல்கல் என்று தான் சொல்லவேண்டும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அந்த ஒரு அளவிற்கு அபார வளர்ச்சி.
                புற்றுநோய், இருதய நோய், நுரையீரல் மற்றும் சுவாச நோய், எலும்புறுக்கி நோய், சர்க்கரை நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய், வயிறு மற்றும் குடல் நோய், மன நோய், பாலியல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளிட்ட  ''இந்திய தேசிய வியாதிகள்'' அனைத்திற்கும் திலிப் சாங்வி நோய் தீர்க்கும் மருந்துகளை உற்பத்தி செய்கிறார். அதுமட்டுமல்ல அவைகள் அனைத்திற்கும் காப்புரிமையும் வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்திய பணக்காரர் வரிசைக்கோ அல்லது உலகப்பணக்காரர் வரிசைக்கோ போட்டியில் இல்லாமல் ஏதோ ஒரு இடத்தில் இருந்த இவரை முதல் 50 - உலகப்பணக்காரர் வரிசையில் 37-ஆவது இடத்திற்கு முன்னேறி இருப்பதற்கும், முதல் இந்திய பெரும் பணக்காரராக முன்னுக்கு வந்ததற்கும் இன்றைய பிரதமர் மோடியே மிகமுக்கிய காரணம்.  மோடி பதவியேற்றவுடன் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின் போது, இந்திய - அமெரிக்க மருந்து உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து பேசியதும், அந்த கூட்டத்தில் தான் மோடி 108 வகையான நோய் தீர்க்கும் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை உற்பத்தி விலையை விட பலமடங்கு கூட்டி விற்பனை செய்து கொள்ளலாம் என்று  அனுமதி அளித்து, உயிர்காக்கும் மருந்துகளின் விலைகளை பலமடங்கு உயர்த்திவிட்டு இந்திய மக்களின் உயிருக்கு உலைவைத்து விட்டு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த கூட்டத்தில் பங்குகொண்டவர்களில் இந்த திலிப் சாங்வியும் ஒருவர் என்பது மட்டுமல்ல,  விலைகள் உயர்த்தப்பட்ட அந்த 108  வகையான மருந்துகளில்  அதிகப்படியானது ( நான்கில் மூன்று பங்கு ) திலிப் சாங்வி தயாரிக்கும் மருந்துகள் என்பதும் நாம் மனதில் வைக்கத்தக்கது.  
            அதுமட்டுமல்ல, திலிப் சாங்வி உள்ளிட்ட மருந்து உறபத்தி செய்யும் முதலாளிகள் மருந்தின் விலையை தாறுமாறாக உயர்த்தி கொள்ளை இலாபம் அடிக்க, அவர்களுக்கு வசதியாக பிரதமர் மோடி நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த  ''மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையை'' ஒழித்துக்கட்டினார். இதன் மூலம், மருந்து உறபத்தி செய்யும் முதலாளிகள் தங்கள் இஷ்டப்படி மருந்தின் விலையை பலமடங்குக்கு உயர்த்தி விற்கிறார்கள். இந்த புதிய நெம்பர் ஒன் பணக்காரரான திலிப் சாங்வி மட்டுமே, தான் உற்பத்தி செய்யும் மருந்துகளுக்கு, உற்பத்தி விலையை விட மனசாட்சியே இல்லாமல் 2,000% அளவிற்கு உயர்த்தி மருந்தின் விலையை நிர்ணயம் செய்து மக்களிடம் விற்பனை செய்கிறார். இதன் காரணமாக பத்து ரூபாய்க்கு விற்கவேண்டிய மருந்துகளெல்லாம் இன்றைக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கிறது. அவைகள் அனைத்தும் உயிர்காக்கும் மருந்துகள் என்பதால் மக்கள் எப்படியாவது வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்திய மக்களே... சன் பார்மாசுட்டிக்கல் நிறுவன முதலாளி எப்படி இந்தியாவின் முதல் பணக்காரராக முன்னுக்கு வந்தார் என்பது இப்போது புரிகிறதா...?
                 டாட்டா, பிர்லா, கோயங்கா, திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி வரிசையில்  திலிப் சாங்வி என்ற புதிய பெரும் பணக்காரராக  நரேந்திரமோடி தான் முன்னிலைக்கு கொண்டுவந்தார் என்பதே இந்திய பொருளாதார வளர்ச்சியின் வரலாறு.       

செவ்வாய், 3 மார்ச், 2015

மோடியின் முகத்தில் கரியை பூசிய மாநிலங்களவை...!


                       மக்களவையில் ராட்சச பலத்தை வைத்துக்கொண்டு தன்  இஷ்டப்படி ஆட்டம் போடுகிற மோடியின் முகத்தில் மாநிலங்களவை நன்றாக கரியை பூசியிருக்கிறது. வழக்கம்போல் ஆளும்கட்சியின் தலைமை எழுதிக்கொடுத்த உரையை சென்ற மாதம் புதிய ஆண்டிற்கான நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் வாசித்துச்சென்றார். ஆனால் கருப்புப் பணத்தை மீட்கவும், உயர்மட்ட ஊழலை தடுக்கவும் மோடி தலைமையிலான அரசு தவறிவிட்ட நிலையில், குடியரசுத்தலைவர் தனது உரையில் அதைப்பற்றி குறிப்பிடவில்லை என்று கூறி, அந்த உரையின் மீதான திருத்தம் ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் தோழர்.சீத்தாராம் யெச்சூரி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற மாநிலங்களவை உறுப்பினர்களான தோழர்.டி.கே.ரங்கராஜன், தோழர்.பி.ராஜீவ் ஆகியோர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தனர்.
                  இந்த குறிப்பிட்ட  திருத்தத்தின் மீது பிரிவு வாரி வாக்கெடுப்பு கோருவது என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு முடிவெடுத்து களத்தில் இறங்கின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தம் 233-ன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். ஆனால் அந்த திருத்தத்தின் மீது வாக்கெடுப்பு கோர வேண்டாம் என்றும், அப்படி கோருவது என்பது குடியரசுத் தலைவர் உரைக்கு மரியாதையாக இருக்காது என்றும் நாடாளுமன்ற அலுவல்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு மாநிலங்களவை உறுப்பினர்களிடம் கெஞ்சியிருக்கிறார். ஆனால் குடியரசுத் தலைவர் உரை என்பது அரசின் தயாரிப்பே என்பதனால் அதில் திருத்தம் கோருவது தவறல்லவே  என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வாக்கெடுப்பு நடத்தவேண்டி விடாப்பிடியாக நின்று, வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுக்க ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு வகையான முயற்சிகளையும்  முறியடித்து  ஒற்றுமை காத்தனர் என்று தான் சொல்லவேண்டும்.
                 பின்னர் வேறுவழியின்றி, திருத்தம் 233-ன் மீது பிரிவுவாரி வாக்கெடுப்பு நடத்த அவை தலைவர் ஹமீத் அன்சாரி ஒப்புக்கொண்டதைத் அடுத்து நடைபெற்ற பிரிவுவாரி வாக்கெடுப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் பதிவாகி தீர்மானம் வெற்றி பெற்றது. மாநிலங்களவையின் இந்த சம்பவம் மோடியையும், அவரது கட்சினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்பது தான் உண்மை. உலக அரங்கில் தன்னை மாபெரும் தலைவராக காட்டிக்கொள்ளும் மோடிக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவக்காப்பீட்டு பிரிமியத்தை அதிகரிக்க மோடி சூழ்ச்சி...!


                     ''ஆயுள் காப்பீடு'' என்பது நமது நாட்டில் வாங்கக்கூடியப் பொருளல்ல. விற்கக்கூடிய பொருள். இந்திய மக்கள் ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம் உணர்ந்து தானாக முன் வந்து தங்களுக்கு வேண்டிய ஆயுள் காப்பீட்டை வாங்கிக்கொள்ளும் அளவிற்கு அவர்களின் பொது அறிவு என்பது மிகவும் குறைவானதே. ஆனால் வாகனத்திற்கான ''ஆயுள் அல்லாத காப்பீடு'' என்பது கட்டாயம் தேவை என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.  அதுவும் குறிப்பாக தங்கள் வாகனத்திற்கு கட்டாயத்தின் பேரில் மனமுவந்து தேடித்தேடி காப்பீடு செய்துவிடுகிறார்கள். ஏனென்றால் தங்கள் வாகனங்கள் தொலைந்துவிட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ இழப்பீடுகளை பெறுவதற்கு ''ஆயுள் அல்லாத காப்பீடு'' என்பது அத்தியாவசமானது என்பதை நன்கு தெரிந்துவைத்திருக்கிறார்கள். காவல்துறையின் நெருக்கடியை சமாளிப்பதற்காகவே கூட கட்டாயத்தின் பேரில் காப்பீடு செய்துகொள்கிறார்கள்.
                அதேப்போல் இன்றைக்கு  மக்களின் மாறிவிட்ட உணவு பழக்கங்களாலும், நிறைய வாகனங்கள் பெருகிவிட்டதாலும் நாட்டில் ஏகப்பட்ட நோய்களும், விபத்துகளும் அன்றாட வழக்கமான விஷயமாக போய்விட்டது. நோய்வாய்பட்டாலோ, விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டாலோ மக்கள் அரசு மருத்துவமனையை நாடுவதில்லை. ஆம்புலன்சை வரவழைத்து நேராக ஏதாவது ஒரு தனியார் மருத்துவமனையை நோக்கி சென்றுவிடுகிறார்கள். அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கையில்லாமல் தனியார் மருத்துவமனையை நாடி சிகிச்சை பார்த்துக்கொள்வதால் சாதாரண மக்கள் தங்கள் சக்தியை மீறி செலவு செய்யவேண்டியிருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் வெளியே கடன் வாங்குவதும், கடனை திரும்பக்கட்டமுடியாமல் கஷ்டப்படுவதாலும், அந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் இன்றைக்கு ''மருத்துவக்காப்பீட்டை'' நாடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ள  கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள், கணவனின் பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர் என அனைவருக்கும் சேர்த்து மருத்துவக்காப்பீடு செய்யலாம்.
                   இந்த மருத்துவக்காப்பீட்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவைகள் (1) மருத்துவச்செலவை திரும்பப்பெறுதல்  (2) பணமில்லா சிகிச்சை வசதி என இரண்டு வகைகள் உள்ளன.

மருத்துவச்செலவை திரும்பப்பெறுதல் :

            இந்த முறையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துக்காப்பீடு பெற்றவர் வழக்கம்போல் கடனை - உடனை வாங்கி செலவு செய்துகொள்ளவேண்டும். மருத்துவமனையில் கொடுக்கப்படும் ரசீதுகள்  மற்றும் மருந்துக்கடைகளில் கொடுக்கப்படும் ரசீதுகள் என பாதிக்கப்பட்ட நோயாளியின் பெயரில் வாங்கவேண்டும். பின் உடல் நலம்பெற்று வீடு திரும்பியவுடன் ரசீதுகள் அத்தனையையும் இன்சூரன்ஸ் கம்பெனியில் கொடுத்து செலவு செய்தப் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும். இதில் பல்வேறு விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இருப்பதால், இந்த முறையில் தவறு நடப்பதற்கு மிகக்குறைவான வாய்ப்புகளே உள்ளன. அதனால் தான் அரசுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி மற்றும் நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளும் தங்களது மருத்துவக்காப்பீட்டில் மருத்துவச்செலவை திரும்பப்பெறும் முறையைத்தான் நடைமுறையில் வைத்திருக்கிறார்கள்.

பணமில்லா சிகிச்சை வசதி :

                   ஆனால் இந்தியாவிலுள்ள தனியார் கம்பெனிகள் அனைத்தும் பணமில்லா சிகிச்சை வசதி முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். இந்தக் காப்பீட்டை வைத்திருப்பவர்கள், ஏதாவது சிகிச்சைஎன்றால் பாக்கெட்டுல ஒரு பைசா இல்லாமல் மருத்துவக்காப்பீட்டு அட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரு தனியார் மருத்துவமனைக்கு போய் படுத்துக்கொள்ளலாம். அவர் எந்தக் கம்பெனி காப்பீட்டை வைத்திருக்கிறாரோ, அந்தக் கம்பெனிக்கு ''அய்யா இந்த சிகிச்சைக்காக எங்க மருத்துவமனைக்கு வந்திருக்காரு. இவருக்கு சிகிச்சை அளிக்க இவ்வளவு செலவாகும். அதை உடனடியாக எங்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள்'' என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு எழுதிப் போட்டால் போதும், ஏன் - எதுக்கு என்றெல்லாம் கேள்வி கேட்காமல் கேட்டப் பணத்தை தாராளமாக அனுப்பி வைத்துவிடுவார்கள். மக்களுக்கும் இது தான் சுலபமான முறையாக உணருகிறார்கள். இந்த வகையான பணமில்லா  சிகிச்சை வசதி முறையை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மட்டும் தான் தருகிறார்கள். அதனால் மக்களும் அரசு நிறுவனத்தை விட தனியார் நிறுவனத்தையே நாடுகிறார்கள்.
              அரசு நிறுவனமோ அல்லது தனியார் நிறுவனமோ யார் மருத்துவக்காப்பீடு அளித்தாலும், மேலே சொன்னபடி ஒரு குடும்பத்திலுள்ள எட்டு பேருக்கும் சேர்த்து அளித்தாலும் கூட ஆண்டுக்கு ரூ.12,000 அல்லது 13,000 ருபாய் தான் பிரிமியமாக கட்டவேண்டியிருக்கும். பிரிமியம் அதற்கு மேல் போவதற்கு வாய்ப்பே இல்லை.
              இது  இப்படியிருக்க பிப்ரவரி 28 -ஆம் தேதி பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மாத சம்பளக்காரர்களின் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பையும் நிறைவேற்றாமல், வருமானவரிச்சட்டம்-80D அடிப்படையில் மருத்துவக்காப்பீட்டிற்கு தரப்படும் சலுகையை ரூ.15,000-திலிருந்து 25,000 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000-திலிருந்து 30,000 ஆகவும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஏதோ  பெரிய சலுகையை கொடுத்துவிட்டது போன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் கூவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தற்சமயம் மருத்துக்காப்பீட்டில் 12,000-மோ அல்லது 13,000-மோ அதிகப்பட்ச பிரிமியமாக பெறப்படும் சூழ்நிலையில், 20,000 மாக உயர்த்தினால் என்ன...? 30,000 மாக உயர்த்தினால் என்ன...? மாத சம்பளக்காரர்களுக்கு ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை.
             ஆனால் இதையெல்லாம் தெரியாமல் மோடியும், அருண் ஜெட்லியும் பட்ஜெட்டில் சும்மா அறிவித்துவிடவில்லை. இந்த அறிவிப்புக்குப் பின்னால் மோடியின் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும். இந்தியாவில் மருத்துவக்காப்பீடு வழங்கும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்க்காலத்தில் மக்களிடம் கொள்ளை இலாபம் அடிப்பதற்காக, மருத்துவக்காப்பீட்டுக்கான  பிரிமியத்தை மேலும் கடுமையாக உயர்த்தப்போவதற்கான அறிகுறி தான் இந்த பட்ஜெட் அறிவிப்பு என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். பிரிமியத்தை உயர்த்துவதற்கு முன்பே அதற்கு வசதியாக சலுகையை உயர்த்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை.

தொடப்பக்கட்டை வாங்குவதற்கு மக்களிடமே வசூல் செய்கிறார் மோடி...!

                 சென்ற பிப்ரவரி 28-ஆம் தேதியன்று நரேந்திரமோடி தலைமையிலான ''அகாஜுகா'' ஆட்சியின் முதலாவது முழு பட்ஜெட் பாராளுமன்றத்தில், அவரது கூட்டாளியும், நிதியமைச்சருமான அருண் ஜெட்லியால் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டில், இந்தியாவில் வாழ்க்கை நடத்துவதற்கே கஷ்டப்படும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ரூ.5,90,000 கோடியளவிற்கு வரிச்சலுகையும், மானியமும் தாராளமாக அள்ளித்தந்து தன்னை ''கார்ப்பரேட்டுகளின் அடியாள்'' என்று துணிச்சலாக அடையாளம் காட்டியிருக்கிறார். இன்னொரு பக்கம் உண்டுக்கொழுத்திருக்கும் நம் நாட்டு ஏழை ஜெனங்கள்  கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த வருமானத்தையும், சிறுசிறு சேமிப்புகளையும் கொஞ்சமும் அச்சமில்லாமல் அள்ளி எடுத்து அபகரித்து ஒட்டாண்டியாக்கியிருக்கிறார்.
              தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து இலாபம் கொழிக்கும் மோடியின் செல்லங்களுக்கு ''கார்ப்பரேட் வரி'' 5% அளவிற்கு குறைப்பு, மூலதன முதலீட்டு வரி (Wealth Tax) முழுமையாக ரத்து என சலுகைகளாக அள்ளி வீசியிருக்கிறார். ஆனால் சாதாரண மக்களுக்கு சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக மோடி மிகவும் துணிச்சலாக உயர்த்தியிருக்கார். இதனால் சாதாரண மக்கள் வாங்கும் மருந்துகளின் விலை மேலும் உயரும். ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிடும் உணவிற்கான விலையும் உயரும். எங்கெல்லாம் சேவை வரி வசூலிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இனி மக்களிடம் கூச்சப்படாமல் 2% அதிகமாக வசூலிக்கப்படும் என்கிற கொடுமையான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில்  வெளியிட்டிருக்கிறார்.
              இதுமட்டுமல்லாமல், ''தொடப்பக்கட்ட வரி'' என்ற புதிய வரியை சாதாரண மக்கள் மீது திணித்திருக்கிறார். மக்களிடமிருந்தே  வரியை வசூல் செய்து அந்த பணத்தை  நாட்டை சுத்தம் செய்யவும், கங்கையை சுத்தம் செய்யவும் பயன்படுத்திக்கொள்ளும் துப்புக்கெட்ட அரசை நடத்துகிறார் மோடி. மக்களிடம் சேவை வரியாக வசூலிக்கப்படும் 14% தொகைக்கு இன்னும் கூடுதலாக ''தூய்மை இந்தியா'' திட்டத்திற்காக  2% மேல் வரியாக வசூலிக்கப்படுமாம். என்ன கொடுமை சார் இது...? இவங்க வாங்குகிற தொடப்பக்கட்டைக்கெல்லாம் நாம்ப ஏன் காசு தரனும்...? நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.

ஞாயிறு, 1 மார்ச், 2015

சென்னை சி.பி.எம் மாநாடு - ஆச்சரியப்பட்டுப்போன துப்புரவு தொழிலாளர்கள்..!

                    
          அண்மையில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது மாநில மாநாடு கடந்த 16-ஆம் தேதியிலிருந்து 19-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான 19-ஆம் தேதியன்று மாலை  சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமல்லாது கட்சியின் விருப்பமுள்ள அனைத்து தோழர்களும், ஊழியர்களும் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  காலை 10 மணியிலிருந்தே வகை வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாலை ஆறு மணிக்கு கட்சித்தலைவர்களின் சிறப்புரை வரை சிறு மணித்துளிகள் கூட வீணடிக்காமல் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
                  இந்நிகழ்ச்சிகளுக்கு காலையிலிருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  ஆயிரக்கணக்கான பேர் கூடிய வண்ணம் இருந்தார்கள். அந்த மைதானத்தில் வயிற்றுப்பசிக்கு குறைந்த விலையில் உணவும், குடிநீரும் மாநாட்டு வரவேற்புக்குழு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. அறிவுப்பசியை தீர்ப்பதற்கும் குறைவில்லாமல் ஏராளமான புத்தகங்கள் கால் பகுதி பொதுக்கூட்ட மைதானத்தில் குறைந்த விலைக்கு தாராளமாக கொட்டிக்கிடந்தன. ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த மைதானமோ மிகப்பெரிது. அங்கே ஆடம்பரமில்லாத மிகப்பெரிய பொதுக்கூட்டப் பந்தல். ப்ந்தலுக்குள்ளே பெரிய பொதுக்கூட்ட மேடை. பந்தலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கான இருக்கைகள். பந்தலுக்கு வெளியே அமர்ந்திருப்பவர்களுக்கு மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை காண்பதற்கு பந்தலின் இருப்பக்கமும் நேரடி ஒலி - ஒளிப்பரப்பு செய்யும் இரு பெரும் திரைகள். அப்பப்பா... ஏராளமான கூட்டம்.  மனைவி - மக்களுடன், குழந்தைகளுடன், நண்பர்களுடன் குடும்பம் குடும்பமாய் கூடிய கூட்டம். ஏற்கனவே வந்தவர்கள் அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்து விட, நின்று கொண்டே பொதுக்கூட்டத்தை கவனித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர்.  கூட்டம் பெருகிப்போனதால் மைதானம் சிறுத்துப்போனது. ஆனால் கட்டுக்கடங்காத கூட்டமல்ல. ஆண்களும் பெண்களுமாய் கட்டுப்பாடுடன் கட்சிக்கடமை ஆற்றிய கூட்டம்.
               மக்கள் கூடும் இடம் என்பதால், கடலை, சம்சா போன்ற திண்பண்டங்களும், உணவுப்பொட்டலங்களும், டீ - காபியும் மைதானம் முழுதும் பரவலாக விற்கப்பட்டன. வந்திருந்த தோழர்களும், பொதுமக்களும் அவைகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு மைதானம் முழுதும் இரைத்து போட்டிருந்தனர். அவைகளை அந்த மைதானத்தை சுத்தம் செய்வதற்கு அமர்த்தப்பட்ட துப்புரவு தொழிலாளிப் பெண்கள் ஐந்தாறு பேர் மைதானத்தில் போடப்பட்ட குப்பைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் தான் அந்த மாநாட்டின் ''ஹைலைட்'' என்று சொன்னால் மிகையாகாது. அவர்கள் நம்மிடையே சொன்ன தகவல் என்னவென்றால்....
           ''மற்றக்கட்சிகளின் மாநாடு அல்லது பொதுக்கூட்டம் என்றால், அங்கே மேடையில் தலைவர்கள் ஒருபக்கம் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த மாநாட்டிற்கு அல்லது பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்கள் அந்த மைதானத்தில் ஆங்காங்கே குழு குழுவாக உட்கார்ந்துகொண்டு தண்ணி அடிச்சிகிட்டு இருப்பார்கள். பிரியாணி பொட்டலங்கள் இரைந்து  கிடக்கும். போதையில் மானங்கெட்டு மைதானத்திலேயே விழுந்தும் கிடப்பார்கள். கூட்டம் முடிந்து மைதானம் முழுதும் காலியான பிறகு, வந்திருந்தவர்கள் குடித்துவிட்டு காலியாக போட்டுவிட்டு சென்ற மது பாட்டில்களை பொறுக்கியெடுத்து சேர்ப்பதற்கே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். அப்படி எடுத்து சேர்த்து வைத்த காலி பாட்டில்களை கடையில் போட்டால், எங்களுக்கு 2000 - 3000ன்னு ஏதாவது துட்டு கிடைக்கும். நாங்க எல்லோரும் பிரிச்சி எடுத்துப்போம். ஆனால் இது என்ன வித்தியாசமான கூட்டமா இருக்கு. அந்த மாதிரியான காட்சிகளை இங்க பார்க்கவும் முடியல. இதுவரையில் ஒரு பாட்டில் கூட எங்களுக்கு கிடைக்கல'' என்று ஆச்சரியப்பட்டு சொன்னார்கள்.
               அதைக்கேட்டதும், எங்களுக்கு பெருமை தாங்கல... இந்த ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் தான் என் கட்சி எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது என்று மனதிற்குள்ளே பெருமைப்பட்டுப் போனேன்.   

An exercise in contraction - Sitaram Yechury, M.P.,


             Article by Com.Sitaram Yechury, Polit Bureau Member CPI(M) and Member, Rajya Sabha                                                            

         The Finance Minister presented the first full budget of the Modi government with an air of “illusions of grandeur”. Preparing for the celebrations of the 75th anniversary of our independence in 2022, he listed “targets” that will be achieved by then. This list is a mere reiteration of what is contained in our Constitution’s Directive Principles of State Policy that should have been attained by 1960! Clearly, he has presumed the Modi government’s return in the 2019 general election. The Modi anti-incumbency wave in Delhi election has, thus, become a victim of the BJP’s “selective amnesia”.
        Shorn of all its rhetoric, what does the budget mean for the people? Instead of expanding public expenditures to stimulate growth, employment and people’s livelihood, the budget sees a contraction. In 2014-15, total government expenditure will be 7 per cent lower than the last budgeted figure, i.e., Rs.1.14 crore less. For 2015-16, the estimated gross tax revenue stands at 10.3 per cent of GDP which is less than last year’s budget figure of 10.8 per cent.

Social sector spending                
 
          Instead of stimulating domestic demand by targeting larger expenditures in social sectors, the budget proposals do the opposite to contain the fiscal deficit at 3.9 per cent. The allocations for MGNREGA and food subsidy have almost stagnated, in real terms, showing scant concern for food security, generating employment and improving people’s livelihood. Total subsidy as percentage of GDP has come down from 2.1 per cent to 1.7 per cent (Rs.2.60 lakh crore to Rs.2.44 lakh crore). The allocation for health and family welfare has come down from Rs.35,163 crore last year to Rs.29,653 crore. The total budgeted figure for housing and urban poverty alleviation has come down from Rs.6,008 crore to Rs. 5,634 crore. Similarly, there is a huge shortfall in allocations for the Tribal Sub-Plan (less by Rs.5,000 crore compared to last year), for the SC Sub-Plan (less by Rs.12,000 crore). The Gender Budget cut by 20 per cent (less by Rs.20,000 crore). The ICDS programme has been halved, from over Rs.16,000 crore to Rs.8,000 crore.
          Instead, India’s rich and both foreign and domestic corporates have hugely benefited. The budget proposals will reduce direct taxes by Rs.8,315 crore benefiting the rich and increase the burden on people through indirect tax hikes of Rs.23,383 crore. In addition to direct tax benefit, for India’s rich, wealth tax has been abolished, corporate tax planned to reduce from 30 to 25 per cent, greater concessions and access to FDI, and FIIs absolved of capital gains tax and minimum alternate tax (MAT).
        Further, the reduction in the tax concessions given by the Central government to the rich (subsidies to the rich called “tax incentives”) results in a revenue loss which is more than the actual fiscal deficit (i.e., Rs.5,89,285.2 crore for 2014-15 as against the budget estimate of fiscal deficit of Rs.5,55,649 crore). Hence, our economy is suffering from a deficit burden primarily due to such subsidies to the rich, not due to subsidies for the poor. Under these circumstances, to bolster governmental revenues, the budget has announced an aggressive disinvestment of the public sector to the tune of Rs.70,000 crore, i.e., selling “family silver” to meet current expenditure.

Mirrors UPA reforms              
 
          The Modi government’s budget this time is, thus, a more aggressive variant of Dr. Manmohan Singh’s reforms. They follow the same logic that our economic development is only possible by attracting larger quantum of investments through big concessions to foreign and domestic Capital. However, this alone cannot automatically lead to higher employment and growth. This can only happen if the purchasing power of our people grows to be able to purchase any increased production. With global commerce shrinking due to continued economic slowdown, our exports will remain low. People’s purchasing power will now further contract this budget.
          Instead of expanding concessions amounting to lakhs of crores of rupees for attracting investments, which, in any case, cannot result in growth and improve people’s welfare, if these amounts were utilised for substantially increasing public investment to build our much needed economic and social infrastructure, both greater growth and equity could have been achieved.
           However, by doing this, the Modi government could not have redeemed its “payback time” promises to those who heavily financed its election campaign. The Finance Minister was confident that the time has come for India to fly. With this budget, the rich may soar but the poor will have to prepare themselves for a disastrous crash landing.
Courtesy :