செவ்வாய், 30 டிசம்பர், 2014

FDI increase in Insurance is Anti-National...!


The author : Justice Rajindar Sachar                                        
Retired Chief Justice of the Delhi High Court, The Chairperson of the Prime Minister’s high-level Committee on the Status of Muslims and the UN Special Rapporteur on Housing. Former President of the People’s Union for Civil Liberties (PUCL), A tireless champion of human rights.             

            The Modi Government has decided to introduce a Bill to allow increase of FDI from 26 per cent to 49 per cent in insurance. Outwardly the Congress and the other constituents of the erstwhile UPA Government are threatening to oppose it—though ironically, it was opposed by the BJP when the Congress-led UPA Government proposed it earlier. The enormity of the hypocrisy by both the major political groups hits you in the eye.
           In 1956, the Congress, to strengthen its position in the 1957 general elections in India, nationalised about 250 private Life insurance companies and formed the Life Insurance Corporation (LIC), a totally owned government corporation, the justification being the interest of small persons as expounded by C.D. Deshmukh, the then Finance Minister, who said insurance in a developing country must be seen as an essential service which a welfare state should provide to its people and not as a business proposition or additional source of investment to those who put their money in the stock market. The capital contribution of the government in the LIC was a mere Rs 5 crores.
              When the general insurance was nationalised in 1973, Y.B. Chavan, the then Congress Finance Minister, declared: This step has been taken to serve better the needs of the economy by securing development of general insurance business in the best interests of the community and to ensure that concentration of wealth does not result in common detriment.
           However, in 2002 the BJP Government permitted private companies with 26 per cent FDI in the insurance sector. In 2011 the Congress-led UPA Government wanted to increase FDI in this sector to 49 per cent but the parliamentary Standing Committee headed by Yashwant Sinha, the BJP leader, opposed it and the proposal was defeated.
          It is therefore rather intriguing why the BJP Government now wants to increase FDI in this sphere. This cannot be justified by saying that the proposed 49 per cent increase in FDI will bring any further foreign money funds to be used by India in road and house building sectors. The income raised by the insurance companies is all local, the premium which an average insurer pays—the result will be that the profits will be increased to 49 per cent instead of 26 per cent for foreign investors without creating any asset in India.
            It is not as if the LIC has not given expected results. Those favouring increase in FDI falsely claim that it will lead to more penetration of insurance in the backward rural areas. The government has not stated that that will be the inherent conditionality of increase in FDI to 49 per cent that these companies will operate in rural areas so as to get 75 per cent of the total premium from the rural areas and the failure to do so will invite penalty. In fact the private sector in insurance is not interested in life Insurance business because of the small quantum of profit. This is shown by high lapses of life insurance in the case of private companies ranging from as much as 36 per cent to 51 per cent in some cases, while the LIC has only five per cent lapsed policies.
             The penetration of life insurance in India under the LIC in 2011 (3.4 per cent) compares favourably with the USA (3.6 per cent); and Germany (3.2 per cent). The same situation was in 2012 — India (3.2 per cent); Germany (3.1 per cent), and the USA (3.7 per cent) which have private life insurance companies.
             The argument that the public sector is a drag on the economy is a calumny. In the USA, one private life insurance company goes into liquidation every month. Over 370 general companies became insolvent during the 1982-2000 period. Even Lloyds of London, supposed to be the last word on stability and solvency, suffered a loss of over $ 38 billion in 1991.
           The lesson to be drawn from the economic crisis in the USA and Europe is clear, namely, that it were the oligarchic financial institutions that were chiefly responsible for it. The latest financial disaster in the USA relates to the case of J.P. Morgan, Chase Bank, the largest in the US by assets, which faces multiple investigations and $ 5.8. billion loss on the wrong-way bets on credit derivates. Ironically both the UPA and BJP Central governments still feel that the talisman for growth is in permitting these very foreign insurance/banks unchecked entry into Indian markets.
            The loss that the government funds are going to suffer are immense. Before 2002, when private insurance was again permitted, vast sums were paid to the government. The LIC made an investment of Rs. 7000 crores in the Sixth Plan and Rs 56,097 crores the Eighth Plan. A sum of Rs 30,000 crores in insurance funds was earmarked for infrastructure development as part of the Ninth Plan. It distributed to policy-holders a bonus of over Rs 3700 crores in 1996-97; it rose steadily from Rs 2250 crores in 1992-93.
         In a developing country like India, public sector is the only instrument through which the social sector can be strengthened. The gross direct premium even in general insurance projected for 2030 AD is Rs 13,000 crores. No amount of this fund will be available for public use if privatisation takes place—the money will go to the private investors.
          Increase in FDI is falsely projected as bringing in new techniques to increase the funds available. The argument that the increase in FDI will lead to more competition and will result in better service to consumers is a hoax. The reality is that in 2000 there were 3500 general insurance companies in the USA but only 15 (0.4 per cent) of them controlled 50 per cent of the market. Six per cent together control 95 per cent. So the slogan of competition in the private economy is most cynical.
           In the USA in the nineties a Senate Sub-committee report on rising insolvencies of insurers, submitted to the House of Representatives, had detailed the “scandalous mismanagement and rascality of private operating insurance companies and ill-effects of frauds and incompetence leading to bankruptcies among 50 large-sized companies in the course of the last five years”.
           Insurance is not a sophisticated industry which may require the involvement of multinationals in order to obtain the latest technology. We should heed the warning given by the UN Under Secretary-General for Economic and Social Affairs “that the world’s economic system was alert enough to protect the rich but too tardy to protect the poor and that the goal was not to have a global economy that ended up as a welfare state of the rich. Rethinking was needed on how to make the system more equitable and mindful of long-term concern.”

e-mail: rsachar1@vsnl.net/rsachar23 @bol.net.in

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

பா.ஜ.க-வின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை - தேச ஒற்றுமைக்கு ஆபத்தானது

                             டெல்லி அருகில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த புள்ளிவிவர மையம் அண்மையில் ஒரு அதிரச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டது. அந்த செய்தி சொல்வது என்னவென்றால், நடப்பு 2014-ஆம் ஆண்டு இறுதியில் நமது நாட்டில் மிக அதிக எம்.எல்.ஏ-க்கள் கொண்ட கட்சியாக பாரதீய ஜனதாக்கட்சி உருவெடுத்துள்ளது. நாட்டிலேயே பா.ஜ.க 1.058 எம்.எல்.ஏ-க்களுடன்   முதலிடத்தில் இருக்கிறது. எண்ணிக்கை அடிப்படையில் முதலிடம் பெற்றது மட்டுமின்றி,  காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கையையே மிஞ்சியதும் இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியோ  இந்த ஆண்டு நாடு முழுவதும் 949 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
                 முடிந்து போன மக்களவை தேர்தல் முடிவுகளையும் சேர்த்து அலசினால், பா.ஜ.க இந்த ஆண்டு 282 எம்.பி-க்களுடன் முதலிடம் உள்ளது. மக்களவையில் 282 என்ற எண்ணிக்கையை அக்கட்சி எட்டியிருப்பதும்  இதுவே முதல்முறை. இதுபோல் இந்திய அரசியலில் 44 எம்.பி.-க்கள் என்ற மிக்குறைந்த எண்ணிக்கையை காங்கிரஸ் கட்சிப் பெற்றிருப்பதும்   இதுவே முதல்முறை என்பது போன்ற அதிர்ச்சிகரமான செய்திகளை அந்த புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ளது. 
               இது போல் பிராந்திய அளவிலும், நாட்டில் பரவலாகவும் பாரதீய ஜனதாக்கட்சி இதுவரை இல்லாத அளவிற்கு எம்.எல்.ஏ-க்களையும் எம்.பி-க்களையும் பெற்றிருப்பது என்பது தேச நலனுக்கும், ஒற்றுமைக்கும் ஆபத்தானது என்பதை நாம் கண்டிப்பாக உணரவேண்டும். நாட்டின் மீது - மக்களின் மீது அக்கறையில்லாத பிற்போக்குத்தனமான பா.ஜ.க மாதிரியான கட்சியின் இராட்சச வளர்ச்சி என்பது தேச ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்.  ஆளும் கட்சியின் இந்த அசுர பலமும், எதிர்க்கட்சிகளின் பலமிழப்பும் ஆட்சியாளர்களை சர்வாதிகாரத்தை நோக்கியே அழைத்துச் செல்லும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். 

புதன், 24 டிசம்பர், 2014

வாஜ்பாய் எனும் தேசபக்தருக்கு ''பாரத் ரத்னா'' விருது...!

                   1998 பிப்ரவரி 7- 20 தேதியிட்ட ''ஃப்ரண்ட் லைன்'' இதழில் தேசபக்தரும், விடுதலைப்போராட்ட வீரருமான வாஜ்பாய் பற்றிய ''வரலாற்று ஆய்வு'' கட்டுரையிலிருந்து சில பகுதிகளை கீழே தரப்பட்டிருக்கிறது.
             ஆக்ரா மாவட்டம் பட்டேஸ்வர் கிராமத்தை சேர்ந்த 18 வயதே ஆன பிராமண சமூகத்தை சேர்ந்த குவாலியர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வாஜ்பாய் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட இளைஞன் 1942 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 - ஆம் தேதியன்று அந்த கிராம மக்களால் நடத்தப்பட்ட ''வெள்ளையனே வெளியேறு'' இயக்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு சேர்த்து வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த வாஜ்பாயையும்   கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். ஆறு நாட்கள் சிறையிலிருந்த இந்த ''விடுதலைப்போராட்ட வீரர்'' வாஜ்பாய்  1942 செப்டம்பர் 1-ஆம் தேதியன்று ஆக்ரா நீதிமன்றத்தில்  கிராம மக்கள் நடத்திய அந்த போராட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லையென்றும், வெறும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த என்னையும் அவர்களோடு சேர்த்து கைது செய்து சிறையிலடைத்து விட்டார்கள் என்றும்  கடிதம் எழுதி கொடுத்துவிட்டும், பட்டேஸ்வர் கிராமத்தை சேர்ந்த காகு, மகுன் என்ற இருவர் உட்பட இருநூறு பேர்கொண்ட கூட்டம் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் ஆக்ரா மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் எழுதிகொடுத்து விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களையே காட்டிக்கொடுத்துவிட்டும்  வெளியே வந்த ''மாவீரர்'' தான் இந்த அட்டல் பிஹாரி வாஜ்பாய் என்பது இந்த  நாடு அறியாத வரலாறு. 
 
             ''ஃப்ரண்ட் லைன்'' இதழில் வெளியிடப்பட்ட உருது மொழியில் எழுதப்பட்ட ஒப்புதல் வாக்குமூலமும், அதன் ஆங்கில மொழியாக்கமும்...

          ON SEPTEMBER 1, 1942, Atal Behari Vajpayee signed the following confessional statement - which had been taken down in Urdu, which he could not read - before S. Hassan, II Class Magistrate (his elder brother, Prem Behari Vajpayee, made a virtually identical statement): 

My name: Atal Behari
Father's name: Gauri Shankar
My caste: Brahman
Age: 20 years
Occupation: Student, Gwalior College
My address: Bateshwar, P.S. Bah, Distt Agra 


On being asked by the Court "Did you commit an act of arson and cause damage? What have you to say in this regard?", Shri Atal Behari Vajpayee made the following statement: 

"On August 27, 1942, Ala was being recited in Bateshwar bazaar. At about 2p.m. Kakua alias Liladhar and Mahuan came to the Ala and delivered a speech and persuaded the people to break the forest laws. Two hundred people went to the Forest Office and I along with my brother followed the crowd and reached Bateshwar Forest Office. I and my brother stayed below and all other people went up. I do not know the name of any other person, except Kakua and Mahuan, who was there.
       "It seemed to me that bricks were falling. I could not know who was razing the wall to the ground but the bricks of the wall were certainly falling. "I along with my brother started to go to Maipura and the crowd was behind us. The above mentioned persons forcibly turned out the goats from the cattle-pound and the crowd proceeded towards Bichkoli. Ten or twelve persons were in the Forest Office. I was at a distance of 100 yards. I did not render any assistance in demolishing the government building. Thereafter, we went to our respective homes." 

Signed: S. Hassan
1.9.42 


Signed: Atal Behari Vajpai. 

******************************************************************

        The statement was recorded under Section 164 of the Criminal Procedure Code (CrPC). The magistrate appended the following handwritten note in English to the statement: 

          I have explained to Atal Behari son of Gauri Shankar that he is not bound to make a confession and that if he does so, any confession he may make may be used as evidence against him. I believe that this confession was voluntarily made. It was taken in my presence and hearing and was read over to Atal Behari who made it; it was admitted by him to be correct and it contains a full and true account of the statement made by him. 

Signed: S. Hassan
Magistrate II Class
1.9.1942. 


******************************************************************
              இப்படிப்பட்ட அரிய - பெரிய தேசபக்தரும், விடுதலைப் போராட்டவீரருமான அட்டல் பிஹாரி வாஜ்பாயின்  தேச சேவையை பாராட்டி மோடி தலைமையிலான மத்திய அரசு ''பாரத் ரத்னா'' விருதினை அளிக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

திரையுலக சிகரம் சாய்ந்தது - அஞ்சலி

       திரையுலகில் தனக்கு நிகரில்லாமல் இயக்குனர் சிகரமாக அசைக்கமுடியாத அபூர்வ மனிதராய் உயர்ந்து வாழ்ந்த கே. பாலச்சந்தர் மறைந்தார். எம்.ஜி.ஆர் - சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துக்கொண்டிருந்த  காலத்திலேயே தனக்கென தனி பாணியை வைத்துக்கொண்டு, ஜெமினிகணேசன், சிவகுமார்,  முத்துராமன், நாகேஷ் போன்றவர்களை கதாநாயகர்களாக நடிக்கவைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதேப்போன்று அவர்கள் காலத்திலேயே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்றவர்களை அவர்களுக்கு இணையான கதாநாயகர்களாக  மிக தைரியமாக திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார் என்றால் அது மிகையாகாது. பழமைகளை வலியுறுத்தும் அந்தக்காலத்திலேயே சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் உடைத்தெறியும் முற்போக்கான கருத்துகளை கொண்ட பலவகையான  திரைப்படங்களை தந்திருக்கிறார்.  அதற்காக பழமைவாதிகளின் எதிர்ப்புகளுக்கும் அவர் அஞ்சியதும்  இல்லை. அதேப்போல் மத்திய - மாநில அரசுகளை இடித்துரைத்தும், கிண்டலடித்தும் திரைப்படங்களை யாருக்காகவும் பயப்படாமல் இயக்கியது மட்டுமல்ல, காட்சிகளுக்கு தகுந்தாற்போல் ஆங்காங்கே கம்யூனிச சித்தாந்தங்களையும், உழைப்பாளி மக்களையும் தயங்காமல் உயர்த்திக்காட்டி  வறுமையின் நிறம் சிவப்பென்று  வரைந்து காட்டிய ஓவியர் கே.பி. பெரும்பாலான பாரதியின் கவிதைகளை தன்னுடைய திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
                 அப்படிப்பட்ட ஒரு சிறந்த இயக்குனரின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாதது. மறைந்த இயக்குனர் சிகரம் கே.பி., அவர்களுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி.

பாராளுமன்றம் வருவதென்றால் மோடிக்கு கசக்கிறது...!


எழுதுகிறேன்...!

செங்கொடியின் பக்கம் வாருங்கள் இளைஞர்களே...!

தோழர் டி.கே.ரங்கராஜன், எம்.பி.,                
20-12-2014 அன்று நடைபெற்ற, சிபிஎம் மதுரை புறநகர் மாவட்ட 21-ஆவது மாநாட்டுப் பொதுக்கூட்ட உரையில் இருந்து                
 
                     நிரஞ்சன் ஜோதி என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சால் ஐந்து நாட்களாக முடங்கியது நாடாளுமன்றம். ராமனுக்குப் பிறந்தவர்களைத் தவிர யாரும் நாட்டில் இருக்கக் கூடாது என்று மதவெறியுடன் அவர் பேசியுள்ளார். ராமனுக்கு லவன், குசன் என்ற இரண்டு மகன்கள் மட்டும்தான் இருந்தனர். நிரஞ்சன் ஜோதி கூற்றுப்படி, ராமனுக்குப் பிறக்காத பரமசிவன், அவருடைய பிள்ளைகள் விநாயகர், முருகன் ஆகியோர் எங்கே போவது? பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் கணக்குப்படி அவர்கள் இந்திய பிரஜையே இல்லை.
             கடந்த ஏழு மாதங்களுக்கு முன் பாஜக, தேர்தல் வாக்குறுதி தந்தது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவோம் என நரேந்திர மோடி கூறினார். அப்படி கைப்பற்றும் பணத்தில் தலைக்கு 35 லட்சம் ரூபாய் கிடைக்கும் என வெங்கைய்யா நாயுடு கூறினார். அவர்கள் கூறியபடி நூறு நாட்களைக் கடந்து 7 மாதங்கள் முடிந்து விட்டன. ஏன் கறுப்புப்பணம் வரவில்லை எனக் கேட்டால் கமிட்டி போட்டிருக்கிறோம் என்கிறார்கள். இதையேதான் காங்கிரசும் சொன்னது. மன்மோகன்சிங்கும் சொன்னார்.
             பாஜக ஆட்சிக்கு வந்து 7 மாதங்களில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. மானியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. கிராமப்புற வேலை உறுதித் திட்டம் படிப்படியாகக் கைவிடப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை சந்தைக்கு தள்ளிவிடப்பட்ட பின்னும், அரசு சார்பில் கடுமையாக வரி விதிக்கபடுகிறது. 
               திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு விட்டது. அப்படியென்றால் இதற்கான திட்டங்களை யார் தீட்டுவது...? ஒரு காலத்தில் டாட்டா, பிர்லா என்றால் இப்போது அதானி, முருகப்பா, அம்பானி ஆகியோர் தான் இத்திட்டங்களைத் தீட்டுகிறார்கள். உலகத்தில் யாரும் கடன் தர மறுத்த பின்பும் அதானியின் பக்கம் மோடி நிற்கிறார்; ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தை வாங்கிவதற்கு 1 லட்சம் டாலரை ஸ்டேட் பாங்க் மூலம் கடனாக வழங்க உத்திரவிடுகிறார். எந்த ஆட்சியிலாவது இந்த அநியாயத்தைப் பார்த்ததுண்டா?
              இப்படிப்பட்ட பாஜக, அரசு எப்படி மக்கள் நலனைப் பாதுகாக்கும்? கடந்த 7 மாதங்களாக மக்கள் பிரச்சனை குறித்து பிரமரான நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசவில்லையே, ஏன்...?
                இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்க வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தை பாடமொழியாக்க வேண்டும் என்ற இரண்டு அஜண்டாக்களை மட்டும் பாஜக வைத்துள்ளது. இதைச் சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி விடுவதாக போஸ்டர் போடுகிறார்கள். பொதுத்துறையைக் காப்பதற்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் எங்கள் கொள்கையைச் சொல்ல ஒருமுறையல்ல, பலமுறை தூண்டிவிடுவோம்.
        சிறுபான்மை மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பாஜக, முஸ்லீம் ஒருவர் இந்துவாக மாறினால் அவரை என்ன சாதியில் சேர்க்கும்...? இந்து மதத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு மதத்திற்குப் போனது வர்ணாசிரமக் கோட்பாடுதான் காரணம். வர்ணாசிரமவாதிகள் செய்யும் வேலையைத் தான் உசிலம்பட்டியில் முருகன்ஜி செய்து கொண்டிருக்கிறார்.
                128 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியாவில் சமஸ்கிருதம் படித்து ஒருவர்கூட பி.எச்.டி பட்டம் வாங்கவில்லை. எம்.ஏ படித்த ஒருவரும் இல்லை. பாடமொழி சமஸ்கிருதம் என்றால் இதற்குப் புத்தகங்கள் எங்கே...? இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்குவதுதான் பாஜகவின் வேலை.
நன்றி :

சனி, 20 டிசம்பர், 2014

கங்கைஅமரா... உனக்கு வெட்கமாக இல்லை...?

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பட்டித்தொட்டிகளிலெல்லாம்  பொதுவுடைமை கருத்துகளை கொண்ட பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடி, பொது மக்களை ஈர்த்துவந்த பாவலர் வரதராஜன் அவர்களின் தம்பிகளில் ஒருவரான கங்கைஅமரன் இன்று பாரதீய ஜனதாக்கட்சியில் இணைந்தார் என்ற இன்றைய செய்தி பெரும் அதிர்ச்சியை தந்தது. ஏனென்றால் பாவலர் வரதராஜன், இளையராஜா மற்றும் கங்கைஅமரன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் திரைப்படத்தொழிலுக்கு வருவதற்கு முன்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேடைகளில் பொதுவுடைமை மற்றும் முற்போக்கு கருத்துகளை கொண்ட பாடல்களை பாடி கூட்டத்தை சேர்ப்பார்கள்.
             இன்றைக்கும் பல்வேறு முற்போக்கு இயக்க மேடைகளில் கருத்துரையாற்றியிருக்கிற கங்கைஅமரனுக்கு  திடீரென்று மதவாத சக்திகள் மீது ஏற்பட்ட ஈர்ப்புக்கு காரணம் என்ன...? வெட்கமில்லாமல் அமித்ஷாவுக்கு பொன்னாடைப் போர்த்தி அவர்களோடு இணையும் அளவிற்கு அவரது அறிவுக்கண்ணை மறைத்தது எது...?

புதன், 17 டிசம்பர், 2014

பாகிஸ்தானில் குழந்தைகளின் உயிரை குடித்த தீவிரவாதம்...!

        நம் சகோதர நாடான  பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த ஏதுமறியா 130 அப்பாவி  இளம் பிஞ்சுகளை தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பலிவாங்கியது என்பது அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற அனைவரும் கண்டிக்கத்தக்கது.
               அறிவையும், அன்பையும் அழித்துவிட்டு தீவிரவாதத்தாலோ அல்லது  பயங்கரவாதத்தாலோ அல்லது கட்டாய திணிப்புகளாலோ மதங்களை வளர்த்து விட முடியாது. மதங்கள் வளர்க்கும் தீவிரவாதங்களும்,  தீவிரவாதங்கள் தூக்கிப்பிடிக்கும் மதங்ககளும் மானுடம் விரும்பாதவைகளே.  அறிவையும், அன்பையும் அறியாதவைகளே. அறிவும் அன்பும் மழுங்கிப்போனாதால் தான் தீவிரவாதிகளின், பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் அப்பாவி மக்களை நோக்கியே... ஏதுமறியா குழந்தைகளை நோக்கியே பாய்கின்றன. 
                அன்று ஏகாதிபத்திய  பயங்கரவாதத்தால் இராக்கில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டது என்பதற்கும், இஸ்ரேலின் அரசு தீவிரவாதமாக மாறி பாலஸ்தீனத்தில் குழந்தைகளையும், கொல்லப்பட்டனர் என்பதற்கும், அரசு பயங்கரவாதத்தால் குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்  என்பதற்கும், இன்று மத தீவிரவாதத்தால் பாகிஸ்தானில் படிக்கும் தன் சொந்த குழந்தைகளை பலி வாங்கியது என்பதற்கும் அடிப்படை என்பது அறிவையும், அன்பையும் அழித்து வளரும் மதங்களே என்பது தான் உண்மை. அறிவை இழந்து மனிதத்தை அழிப்பதன் மூலம் மதங்களை வளர்க்கமுடியாது. மதங்கள் ஒழிந்துவிட்டால் மானுடம் தழைத்தோங்கும். 

செவ்வாய், 16 டிசம்பர், 2014

நோபல் மங்கை மலாலா..!


நான் ஷாஜியா... நான் கைனட் ரியாஸ்... நான் கைனட் சோம்ரோ... 
நான் மேஸான்... நான் அமினா...!        
         இந்த விருது எனக்குரியது மட்டுமல்ல. இது கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கானது. அமைதியை வேண்டி அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்கானது. இது மாற்றத்தை விரும்பும், குரலற்ற குழந்தைகளுக்கானது. நான் இங்கே அவர்களுடைய உரிமைக்குரலாக ஒலிக்கிறேன். இது அவர்களுக்கு பரிவு காட்டுவதல்ல; கல்வி மறுக்கப்பட்ட ஒரு குழந்தையை நாம் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என உறுதியேற்கும் தருணம்.
             கல்வி, வாழ்வின் அதிஅற்புதமான ஒன்று. இதுவே எனது 17 ஆண்டுகால வாழ்வின் அனுபவம். வடக்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தான் என்னுடைய வீடு இருக்கிறது. நான் எப்போதும் பள்ளிக்குச் செல்வதிலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் ஆர்வமாயிருந்தேன். பண்டிகைக் காலங்களில் நானும், எனது நண்பிகளும் எங்களது கைகளில் மருதாணி வைத்துக்கொள்வோம். எங்கள் கைகளில் பூக்களையும், கோலங்களையும் வரையவில்லை;
         மாறாக கணித வாய்ப்பாடுகளையும், சமன்பாடுகளையும் நாங்கள் வரைந்தோம்.கல்வியின் மீது தீராத் தாகம் கொண்டிருந்தோம். ஏனெனில் வகுப்பறைதான் எங்கள் வருங்காலத்தை மாற்றப்போகிறது. நாங்கள் ஒன்றாக அமர்ந்து இணைந்து படித்து வந்தோம். நாங்கள் எண்ணிலடங்கா கனவுகளோடு, சுத்தமான சீருடைகளை அணிய மிகவும் விரும்பினோம். ஆண்களால் மட்டுமே முடியும் என சிலர் எண்ணிவந்தவற்றை உடைத்து நாங்கள்அறிவிலும், படிப்பிலும் சிறந்தவர்களாக எங்களுடைய பெற்றோர்கள் பெருமையடையும் விதம் நடந்துகொள்ள ஆசைப்பட்டோம்.ஆனால் அந்தக் கனவு அப்படியே நிலைத்திருக்கவில்லை.
          சரியாக எனக்கு 10 வயது. அழகும் பொலிவும் நிறைந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு திடீரென தீவிரவாதத்தின் தலமாக மாற்றப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் அடையாளமின்றி அழிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்பட்டது. பெண்கள் சாட்டையால் அடிபட்டார்கள். அப்பாவிமக்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம். எங்களின் கனவுகளை இருள் கவ்வத் துவங்கியது. கல்வி பெறுவது, உரிமை என்பதற்கு மாறாக குற்றம் என ஆக்கப்பட்டது.என்னுடைய உலகமும், என்னுடைய தேவைகளும் தடம் மாறின. எனக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன.
            முதலாவது, அமைதியாக இருந்துவிட்டு, சில காலம் காத்திருந்து பின் கொல்லப்படுவது; இரண்டாவது, உரத்துப் பேசி உடனே கொல்லப்படுவது. இதில் நான் தேர்ந்தெடுத்தது இரண்டாவது வழியை. நான் உரத்துப் பேச முடிவு செய்தேன். அக்டோபர் 9, 2012. தீவிரவாதிகள் எங்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். ஆனால் அந்த துப்பாக்கிக் குண்டுகளால் எங்களை வெல்ல முடியவில்லை. இது என் கதைமட்டுமல்ல... ஏராளமான பெண் குழந்தைகளின் கதை.நான் இங்கு என்னுடன் நைஜீரியா, சிரியா என் பாகிஸ்தான் சகோதரிகளை அழைத்து வந்துள்ளேன்.
           நான் சுடப்பட்ட நாளில் என்னுடன் இருந்த துணிவுமிக்க சகோதரிகள் ஷாஜியா மற்றும் கைனட் ரியாஸ் ஆகியோரை என்னுடன் அழைத்து வந்துள்ளேன். அவர்களும் அந்த துயரமிக்க அதிர்ச்சியை கடந்து வந்தவர்களே. பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கும் இன்னொரு சகோதரி கைனட் சோம்ரோ, எல்லைமீறிய துன்புறுத்தலுக்கும், வன்புணர்ச்சிக்கும் ஆளாகி, தனது சகோதரனையும் இழந்தவள். ஆனாலும் அவர்களிடம் அடங்கிவிடாமல் துணிந்து எதிர்த்தவள். இன்னும் நான் சந்தித்த ஏராளமான சகோதரிகளைச் சொல்வேன். சிரியா நாட்டைச் சேர்ந்த 16 வயதான மேஸான் - தற்போது அகதிகள் முகாம்களில் இருக்கும் ஆண் - பெண் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறாள்.
              போகோ ஹாராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட - கல்விக்காக ஏங்கும் சிறுமிகளில் ஒருத்தியான வடக்கு நைஜீரியாவின் அமினா... இன்னும் ஏராளமான சிறுமிகள் இருக்கிறார்கள். உங்கள் முன்னால் நிற்கும் இந்த மலாலா, ஒரு நபர் அல்ல... எனது குரல், ஒரு நபருடையதல்ல... நான் ஷாஜியா. நான் கைனட் ரியாஸ். நான் கைனட் சோம்ரோ. நான் மேஸான். நான் அமினா. நான், பள்ளிகளில் இருந்து துரத்தப்பட்ட 660 லட்சம் பெண் குழந்தைகளின் குரல். உலகெங்கிலும் நவீனமயத்தையும், வளர்ச்சியையும் பார்க்கிறோம். இருந்த போதிலும் அந்த நாடுகள் முழுவதும் இன்றும் மிகப்பழமையான பிரச்சனைகளான பசி, வறுமை, அநியாயம் மற்றும் மோதல்கள் ஏராளமாய் நிறைந்துள்ளது.
         முதலாம் உலகப்போர் நிறைவடைந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இன்னும் அந்தப்போரின் பல லட்சக்கணக்கான உயிர்ப்பலியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத நிலையே தொடர்கிறது. இங்கே இன்னும் ஏராளமான போர்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. சிரியாவிலும், காஸாவிலும், இராக்கிலும் ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளன. வடக்கு நைஜீரியாவில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவி மக்கள் குண்டுவெடிப்புகளில் பலியாவதை கண் முன்னே பார்க்கிறோம்.
            ஆப்பிரிக்காவில் ஏராளமான குழந்தைகள் வறுமையின் காரணமாக பள்ளிகளின் படிகளைக் கூட மிதிக்க முடியவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் சமூக ஒடுக்குமுறைகளால் கல்விகற்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் அல்லது குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்களினால் பாதிக்கப்படுகின்றனர். என்னுடைய வயதுடைய மிகுந்த நம்பிக்கையும், திறமையும் வாய்ந்த என் தோழி டாக்டராக வேண்டும் என கனவு கண்டு கொண்டிருந்தாள். ஆனால் அவள் கனவு கனவாகவே மாறிப்போனது. 12 வயதில் அவளுக்கு கட்டாய திருமணம். 14வயதுள்ள குழந்தை 1 வயதுக் குழந்தைக்கு தாயாகிப் போனாள். எனக்குத் தெரியும் அவள் நிச்சயம் டாக்டராகி இருப்பாள். ஆனால் அவளால் இப்போது முடியாது.           ஏனென்றால் அவள் ஒரு பெண்.
           நீங்கள் அளித்துள்ள நோபல் விருதுத் தொகை என் இதயத்தில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானில் பள்ளிகளை கட்டுவதற்கு உதவிடப் போகிறது. முக்கியமாக எனது தாயகமான ஸ்வாட் பள்ளத்தாக்கு எனது கிராமமான சங்லாவில். என்னுடைய ஊரில், பெண் குழந்தைகளுக்கான மேல்நிலைப்பள்ளி ஒன்று கூட இல்லை. எனவே என் நண்பர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கும், அவர்கள் கல்வியைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பாய் நான் ஒரு பள்ளியை உருவாக்கப்போகிறேன். நம்முடைய அரசியல் தலைவர்களுக்கு கல்வியின் அவசியத்தைப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்குத் தெரியும். எனவேதான் அவர்களது குழந்தைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். நாங்கள் உலகத் தலைவர்களிடம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்துகிறோம். வலிமையான நாடுகள் என்று சொல்லிக் கொண்டு போரை உருவாக்குவதில் முனைப்பாக இருப்பது போன்று ஏன் அமைதியை உருவாக்குவதில் முனைப்பு இல்லை? ஏன் துப்பாக்கிகளைக் கொடுப்பது எளிதாகவும், புத்தகங்களைத் தருவது கடினமாகவும் உள்ளது உங்களுக்கு..? ஏன் பீரங்கிகளை உருவாக்குவதை மிக எளிமையாகவும், பள்ளிக்கு கட்டடங்களை கட்டுவதை மிகுந்த சிரமமாகவும் உணருகிறீர்கள்?நாம் நிலவை அடைய முடிகிறது; ஏன் செவ்வாய்க்கிரகத்திலேயே விரைவில் வாழ முடியும் என்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கல்வி தர முடியாதா? எனவே நாம் அனைவருக்குமான சமத்துவத்தையும், நீதியையும் மற்றும் அமைதியையும் பெற்றிட குழந்தைகளை இந்த உலகம் முழுவதும் போராட அழைக்கிறேன். இதுவே ஆண், பெண் குழந்தைகள் தாங்கள் பால்யங்களை தொழிற்சாலைகளில் தொலைத்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பெண் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டு குழந்தைத் திருமணங்கள் செய்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே ஏதுமறியா அப்பாவிக் குழந்தைகள் போரில் இறந்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே வகுப்பறைகள் யாருமின்றி தனித்துக் கிடந்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பெண்கல்வி பெறுவது உரிமையல்ல என்று கூறுவது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பள்ளிக்கு வெளியே குழந்தைகள் ஏக்கத்தோடு காத்திருப்பது கடைசியாய் இருக்கட்டும்.

(அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமியும் பெண் கல்வி உரிமைப் போராளியுமான மலாலா யூசுப் ஜாய், நோபல் விருது விழாவில் ஆற்றிய உரையிலிருந்து)
தமிழாக்கம்  : எஸ். கார்த்திக், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர், 
                              இந்திய மாணவர் சங்கம்
நன்றி : தீக்கதிர்

சனி, 13 டிசம்பர், 2014

போதும் இத்தோடு விட்டுவிடுங்கள் ரஜினிகாந்த் சகிக்கில...!

           
           எம்.ஜி.ஆருக்கு அடுத்து வயதான பின்னும் இளைஞர்களை உசுப்பேற்றிவிடும் ஹீரோவாக ரஜினிகாத்தை சொல்லலாம். தமிழகத்தில் முன்னெப்போது இல்லாத அளவிற்கு நடுநிசி ஒரு மணிக்கு ரஜினி நடித்த ''லிங்கா'' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஐ.டி கம்பெனிகள் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் இந்திய இளைஞர்களை நம்பி இரவு நேரங்களில் இயங்குவது போன்று, தமிழக இளைஞர்களின் பாக்கெட்டை குறிவைத்து ''கார்ப்பரேட் நடிகர்'' ரஜினிகாந்த்தின் திரைப்படம் நடுநிசி நேரத்தில் திரையிடப்படுகிறது. டிக்கெட் விலை 1000... 2000 என்ற வசூலிக்கப்படுகிறது. அரசு கண்டுகொள்ளவேயில்லை என்பது இன்னொரு விஷயம். ஆனாலும் அந்த நேரத்திலும் கட்டுக்கடங்காத இளைஞர்களின் கூட்டம்... ஆர்ப்பரிப்பு... ஆர்ப்பாட்டம்... வெறித்தனமான செயல்கள்... இதைப்பார்த்ததும் எங்கே செல்கிறார்கள் நம் இளைஞர்கள் என்ற வேதனை. மீண்டும் தங்கள் தலைவர்களை திரையரங்குகளிலும், திரைப்படங்களிலும் தேடுகிறார்களே என்ற கவலை எழுகிறது.
              எல்லாம் சரி... 60 வயதை கடந்த ஒரு ''பெரியவர்'' 18 வயதே ஆன பெண் பிள்ளைகளோடு மனசாட்சியே இல்லாமல் ஆடிப்பாடி நடிக்கிறாரே... இது நியாயம் தானா என்று அதை பார்க்கிற இரசிகர்களுக்கு உறுத்தவே இல்லையா..? முரண்பாடாக தெரியவேயில்லையா..? 
           ''அன்புள்ள ரஜினிகாந்த்...!'' இனி மேலாவது உங்கள் வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் நடியுங்கள். லிங்கா போல் நடிப்பதை இத்தோடு விட்டுவிடுங்கள்.. சகிக்கலை.. இது விமர்சனம் அல்ல. இன்றைய இளைஞர்களின் மீது உண்மையான அக்கறை வைத்துள்ள ஒரு தந்தையின் வேண்டுகோள்.

புதன், 3 டிசம்பர், 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு - காணொளி...!

சென்னையில் 2015 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது தமிழ் மாநில 
மாநாட்டினை  முன்னிட்டு வெளியிடப்பட்ட முதலாவது காணொளி...!