சனி, 20 டிசம்பர், 2014

கங்கைஅமரா... உனக்கு வெட்கமாக இல்லை...?

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பட்டித்தொட்டிகளிலெல்லாம்  பொதுவுடைமை கருத்துகளை கொண்ட பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடி, பொது மக்களை ஈர்த்துவந்த பாவலர் வரதராஜன் அவர்களின் தம்பிகளில் ஒருவரான கங்கைஅமரன் இன்று பாரதீய ஜனதாக்கட்சியில் இணைந்தார் என்ற இன்றைய செய்தி பெரும் அதிர்ச்சியை தந்தது. ஏனென்றால் பாவலர் வரதராஜன், இளையராஜா மற்றும் கங்கைஅமரன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் திரைப்படத்தொழிலுக்கு வருவதற்கு முன்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேடைகளில் பொதுவுடைமை மற்றும் முற்போக்கு கருத்துகளை கொண்ட பாடல்களை பாடி கூட்டத்தை சேர்ப்பார்கள்.
             இன்றைக்கும் பல்வேறு முற்போக்கு இயக்க மேடைகளில் கருத்துரையாற்றியிருக்கிற கங்கைஅமரனுக்கு  திடீரென்று மதவாத சக்திகள் மீது ஏற்பட்ட ஈர்ப்புக்கு காரணம் என்ன...? வெட்கமில்லாமல் அமித்ஷாவுக்கு பொன்னாடைப் போர்த்தி அவர்களோடு இணையும் அளவிற்கு அவரது அறிவுக்கண்ணை மறைத்தது எது...?

கருத்துகள் இல்லை: