ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வேகவேகமான தனியார்மயமே ஊழலை ஊதிப் பெருக்குகிறது..

           நவீன தாராளமயக் கொள்கை கோலோச்சும் சூழலில், ஊழல்கள் மேலும் மேலும் பெருகுவதைத் தடுக்க, ஒரு தீர்மானகரமான மக்கள் இயக்கத்தின் பின்னணி கொண்ட ஊழல் தடுப்புச் சட்டம் அவசியம் என்று பிரபல பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத்    
                                                      
பட்நாயக் கூறினார்.                       
             சென்னையில் வெள்ளியன்று நடைபெற்ற தோழர் உ.ரா.வரதராசன் நினைவு சொற்பொழிவில் பங்கேற்று “நவீன தாராளமயமும், ஊழலும்” என்ற பொருளில் அவர் உரையாற்றினார். இந்திய சமூக விஞ்ஞானக் கழகம், இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
            நவீன தாராளமயக் கொள்கைகள் அமலானால், ஊழல்களில் இருந்து விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், ஊழலுக்கான களம் விரிவடைந்துள்ளது என்பதே உண்மை. பொதுச்சொத்துக்கள் எல்லாம் தீவிரமாக தனியார்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், லஞ்சம் - ஊழலுக்கான வாய்ப் புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வெறுமனே சட்டம் இயற்றுவது மட்டும் போதுமானதல்ல என்று பிர பாத் பட்நாயக் தனது உரையின்போது குறிப்பிட்டார்.
            பொதுச் சொத்துக்களை வேகவேகமாக தனியார்மயமாக்கும் தன்மை கொண்ட நவீன தாராளமயம், சொத்துடைமை உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பெருமளவிற்கு மூலதனக் குவிப்பை தூண்டி விடுகிறது, இதன் மூலம் மிக மோசமான ஊழல்களுக்கு காரணியாகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
              2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுரங்க ஊழல் போன்ற பெரும் கொள்ளை நடந்த ஊழல்களில், லஞ்சம் என்பது நேரடியாக பணம் கொடுத்தது அல்ல; மாறாக திட்டமிட்ட முறையில் நிதியாதாரங்களை மடைமாற்றி, தனியார் மூலதனக் குவிப்பை அதிகப்படுத்தி, மக்களுக்கு இழப்பு ஏற்படச் செய்ததாகும். அரசின் கருவூலத்திற்கு பதிலாக குறிப்பிட்ட தனிநபர்கள் பலன் அடைந்ததாகும் என்று பிர பாத் பட்நாயக் விளக்கினார்.
             “பெருங்கொள்ளை நடந்த இந்த ஊழல்களில் சிக்கியுள்ள அரசியல் வர்க்கமானது, ஜனநாயகத்திற்கு முற்றிலும் ஆபத் தானது” என்றும் அவர் எச்சரித்தார்.
            எனவே, ஊழலுக்கு எதிரான சட்டமானது, மாறு பட்ட தன்மை கொண்டது மட்டுமின்றி, கோபாவேச மிக்க மக்கள் இயக்கத்தின் ஆதரவினையும் பெற்றதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
          மேற்கூறியதைப் போலவே பொதுச் சொத்துக்களை தனியார்மயம் ஆக்கக் கூடாது என் பது மற்றொரு முக்கிய அம்சம் ஆகும் என்று குறிப்பிட்ட அவர், விரைவில் தீர்ந்து போகக் கூடிய வளங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தமானதாகவும், அரசாலேயே இயக்கப் படக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும், நிலம் போன்ற பற்றாக்குறை வளங் களைக் கையாள்வதில் அரசுக்கே முதன்மை உரிமை இருக்க வேண்டும் என்றும் கூறினார். அப்போதுதான், இந்த வளங்களை, ஊக வணிகத்தில் ஈடுபடுத்துவதைத் தடுக்க முடியும் என்றும் கூறினார்.
              ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு மையமான பங்கு இருப்பதை இடதுசாரிகளாலேயே உறுதிப்படுத்த முடியும் என்று கூறிய அவர், நடுத்தர வர்க்க மக்கள் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மனப்போக்கு உருவாக்கப்படுகிறது என சுட்டிக் காட்டினார். நடுத்தர வர்க்க மக்களை தனிமைப்படுத்துவதன் மூலம், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகத்திற்கு எதிரான போராட டமாக சித்தரிக்க முயற்சி நடக் கிறது என்றும் அவர் எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை: