வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை...! - நீதியரசர் சந்துரு

              
             குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432 மற்றும் 433 ஆகியவை கைதி ஒருவருக்குத் தண்டனைக் குறைப்பு செய்து முன்னரே விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 435 இன் படி ஒருசில குற்றங்களில் தண்டனை பெற்றோருக்கு தண்டனைக் குறைப்பு செய்யும்போது மத்திய அரசோடு கலந்துபேசி செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
              அதன் உட்பிரிவு 2 “(2) No order of suspension, remission or commutation of sentences passed by the State Government in relation to a person, who has been convicted of offences, some of which relate to matters to which the executive power of the Union extends, and who has been sentenced to separate terms of imprisonment which are to run concurrently, shall have effect unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends.” எனச் சொல்கிறது.
          ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரை விடுவிக்கப்போவதாக அறிவித்திருக்கும் தமிழக முதல்வர், ”மத்திய அரசு மூன்று நாட்களில் பதில் சொல்லவேண்டும் இல்லையென்றால் நாங்களே விடுதலை செய்வோம்” என அறிவித்திருக்கிறார். ஒருவேளை மத்திய அரசு விடுவிக்கக் கூடாது என ஆலோசனை தந்தால் என்ன ஆகும் என்ற கேள்வியை நீதியரசர் சந்துரு அவர்களிடம் கேட்ட கேள்விக்கு,
                "மத்திய அரசைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்பது பொருள் அல்ல. மத்திய அரசு பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைத்தான் தமிழக முதலமைச்சர் கூறியிருக்கிறார். அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என சிலர் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிரச்சனை இப்போது எழவே இல்லை. அது வீணான வாதம்” என்று அவர் கூறினார்.
                //unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends // மத்திய அரசும் தண்டனைக் குறைப்பு செய்து தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கலாம் என முடிவு செய்யாதவரை மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மதிப்பு கிடையாது என இந்தப் பிரிவு தெளிவாகச் சொல்கிறது என்பது உண்மைதான் என்றாலும் இந்த ஏழு பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில்தானே தவிர மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின்கீழ் வருகிற குற்றங்களுக்காக அல்ல. இதைத் தமிழக அரசு அறியாமல் இருக்க முடியாது.
            இந்தப் பிரச்சனையில் மத்திய அரசைக் கலந்தாலோசிக்கத் தேவையே இல்லை என்பதுதான் உண்மை. அப்படியிருந்தும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் சொல்லவேண்டும் எனத் தமிழக அரசு கெடு விதித்திருப்பது ஏன் எனப் புரியவில்லை. ஒருவேளை மத்திய அரசு நிராகரித்தால் அதை காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தேர்தலில் பயன்படுத்தலாம், முடிவு எதையும் சொல்லாவிட்டாலும்கூட காங்கிரசைக் குற்றம்சாட்ட முடியும். இதுதான் அதற்குக் காரணமா என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் நாம் புரிந்து கொள்ளலாம்.
           மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தணடனையாகக் குறைக்கப்பட்ட தென்தமிழன் என்பவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்யவேண்டும் என 2009 ஆம் ஆண்டில் சிறப்பான தீர்ப்பு ஒன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் வழங்கியிருந்தார். அந்தத் தீர்ப்பு இந்தப் பிரச்சனைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.
              ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தாலே போதும் நீதி வென்றுவிட்டது என்ற விதத்தில்தான் பெரும்பாலோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது சரியல்ல. இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கும் கருத்தொற்றுமையைப் பயன்படுத்தி தமிழக சிறைகளில் அடைபட்டுக்கிடக்கும் சிறைவாசிகளின் உரிமைகள் குறித்து கவனத்தை ஈர்க்க நாம் முயற்சிக்கவேண்டும். அதுதான் மனித உரிமைகள் மீது அக்கறைகொண்டவர்கள் செய்யவேண்டிய பணி ஆகும். 
இவ்வாறு நீதியரசர் சந்துரு கூறியுள்ளார்.
ஆதாரம் :Naam TamilarGermany

கருத்துகள் இல்லை: