வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காங்கிரஸ் கட்சியும், பிஜேபி-யும் முகேஷ் அம்பானியை காப்பாற்றியிருக்கிறார்கள்...!

           
         

            இன்று டில்லி சட்டமன்றத்தில் முகேஷ் அம்பானியை காப்பாற்றுவதில் காங்கிரஸ் கட்சியும் பிஜேபி-யும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாய் தெரிகிறது. இதில் வியப்பதற்கொன்றுமில்லை. சமையல் எரிவாயுவின்  விலைகளை தனது  இஷ்டம் போல் அடிக்கடி உயர்த்தியதன் மூலம் இந்திய மக்களை கொள்ளையடித்து சொத்துக்களை சேர்த்த இந்திய பெருமுதலாளி முகேஷ் அம்பானி கிரிமினல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட போதே, கேஜ்ரிவால் அரசுக்கு அல்பாயுசு தான் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. தேர்தல் நேரங்களிலும், நெருக்கடியான நேரங்களிலும் தங்களுக்கு படியளக்கும், கேட்டவாறு கொட்டிக்கொடுக்கும் பெருமுதலாளியை காப்பாற்றுவதில் காங்கிரஸ் கட்சியும், பிஜேபி-யும் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் செயல்பட்டிருப்பது வெட்கக்கேடானது. 
                 அதிகாரத்தில் உள்ளவர்களின் அல்லது இருந்தவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ''ஜன் லொக்பால்'' மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் தடுக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி கவர்னர் முட்டுக்கட்டைகளை போட்டும், அதையும் மீறி கவர்னரின் ஆணையை பொருட்படுத்தாமல் கேஜ்ரிவால் தாக்கல் செய்த போது  மசோதாவை தாக்கல் செய்யவிடாமல் ஊழல் விசாரணைக்கு பயந்த காங்கிரஸ் கட்சியும், அதற்கு துணையாக பாரதீய ஜனதாக் கட்சியும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மசோதா தாக்கல் செய்வதை தடுத்திவிட்டார்கள். தங்களுடைய முதலாளியை காப்பாற்றுவதில் தங்களது ஒற்றுமையை காட்டியிருக்கிறார்கள். இதுதான்   இவ்விரு கட்சிகளின் இலச்சணம். 

கருத்துகள் இல்லை: