வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ராஜீவ் கொலையாளிகளை பழி தீர்த்துக்கொள்ளத் துடிக்கும் காங்கிரஸ் கட்சி...!

      
            நேற்று முன் தினம் கருணை மனுவின் மீதான காலதாமத நடவடிக்கையை காரணம் காட்டி 23 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாய் குறைத்தது மட்டுமல்லாமல், தமிழக அரசே  அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்ற ஆலோசனையையும் கொடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள்  தீர்ப்பு வழங்கியதும், அடுத்த 24 மணிநேரத்தில் அந்த 3 பேர்களோடு சேர்த்து ஆயுள் தண்டனை வகிக்கும் நளினி உட்பட மற்ற 4 பேர்களையும் சேர்த்து ஏழு பேர்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதென்று தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி முடிவெடுத்து, பின் சட்டமன்றத்திலும் தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிவித்ததை கண்டு காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் மிரண்டு போய்விட்டன என்று தான் சொல்லவேண்டும்.
                விடுதலை என்ற அறிவிப்பை கேட்டு காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தியும், பிரதமர் மன்மோகனும் புலம்பித் தள்ளியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பிரதமர் அலுவலகம் இன்று காலை விடிந்ததும் அந்த மூன்று பேரின் தண்டனைக் குறைப்பை எதிர்த்தும், விடுதலையை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்து அந்த மூன்று பேரின் விடுதலையை நிறுத்திவைத்து தடை உத்தரவை பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசின் ''இரக்கமற்ற'' இந்தச் செயல் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் ராஜீவ் கொலையாளிகள் மீதான பழி உணர்வைத் தான் காட்டுகிறது. அந்த மூன்று பேர்களின் மரணத்தில் இவர்களுக்கு அப்படி என்ன சந்தோசம்...?

கருத்துகள் இல்லை: