சனி, 21 மே, 2011

துப்புக்கெட்ட சிதம்பரம் பதவி விலகவேண்டும் !

                  இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் ஐம்பது தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார்கள். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அண்மையில் ஐம்பது பேர் கொண்ட தீவிரவாதிகளின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியிருந்தார். 
                  இதில் என்ன வெட்கக்கேடான விஷயம் இருக்கிறது என்றால்,  இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும்படி கேட்ட ஐம்பது பயங்கரவாதிகளில் இருவர் ஏற்கனவே இந்தியாவில் தான் இருக்கின்றனர் என்பதும் இருவரில் ஒருவர் மும்பை சிறையில் இருப்பதும், மற்றொருவர் மும்பையில் தங்கியிருப்பதும் இந்திய உள்துறை அமைச்சருக்கே தெரியவில்லை என்பது தான் வெட்ககேடான விஷயமாக இருக்கிறது. இது தெரிந்த பிறகு, துப்புகெட்ட சிதம்பரம் தவறு தன் மீது இருக்க, பழியை மத்திய புலனாய்வுக் கழகமான     சி.பி. ஐ. மீதே போட்டதுமட்டுமில்லாமல், அந்த பட்டியலை தயாரித்த சி பி ஐ அதிகாரிகளில் சிலரை பதவிநீக்கம் செய்தும், சிலரை பணி மாற்றம் செய்தும் இருப்பதென்பது, சிதம்பரத்தின் செய்யும் வெட்கக்கேடான செயல்களுக்கு மற்றுமொரு உதாரணம். 
                 நடைபெற்ற தவறுகளில் ப. சிதம்பரத்திற்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதிகாரிகள் மீது பழியைப்  போட்டு இவர் தப்பித்துக்கொள்ள முடியாது. அண்டை நாடு சம்பந்தப்பட்ட அரசு  விவகாரங்களில் - இரு நாட்டு அரசுகளின்  பரிமாற்றங்களில் விழிப்போடும், எச்சரிக்கையோடும்  வழிமுறைகளை கடைபிடிக்காத உள்துறை அமைச்சரின் அலட்சிய போக்கையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் துப்புக்கெட்ட சிதம்பரம் நியாயமாக பதவி விலகி இருக்கவேண்டும். இதை தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: