வெள்ளி, 20 மே, 2011

சட்டம் தன் கடமையை செய்கிறது !

                 அரசியலில் நேர்மையும் பொது வாழ்க்கையில் தூய்மையும் இல்லாத பல இந்தியத் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். தன்னுடைய நா வன்மையாலும், தமிழ் நடையாலும், கைதேர்ந்த எழுத்துக்களாலும் தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு மாற்று இல்லாத தலைவராக தொண்டர்கள் மத்தியிலும் மக்களின் மத்தியிலும் இதுவரை உலாவந்து கொண்டிருப்பவர். அடிக்கடி தன்னை ஒரு யோக்கியனைப்போல் வெளியுலகத்திற்குக் காட்டிக்கொள்வார். முதிர்ந்த வயது பெரியவர் - இந்திய நாட்டின் மூத்த தலைவர் என்ற போர்வையில் தான்தோன்றித்தனமான வேலைகளை செய்து கொண்டும், அவரையும் அவரது தான்தோன்றித்தனமான வேலைகளையும்  போற்றிப்பாடுவதற்கு வைரமுத்து, வாலி, விஜய் உள்ளிட்டக்  கவிஞர்கள், அவரை குஜால் படுத்த நடனம் ஆடுவதற்கு நமிதா, குஷ்பூ, ரம்பா  இன்னும் பல நடிகைகள், புகழ்ந்து பேசி சந்தொஷப்படுத்துவதற்கு ரஜினி, கமல், பிரபு என்ற நடிகர்கள் பட்டாளம் - இப்படியாக கலைநிகழ்ச்சிகளையும் பாராட்டுவிழாக்களையும் நடத்தச் செய்து ஒரு மகாராஜாவைப் போல் வலம் வந்துகொண்டிருப்பவர்.. 
                  இதையெல்லாம் தொலைக்காட்சிகளில் காட்டி மக்களையும் புத்திசாலித்தனமாகத்  திசைதிருப்பி விடுவார்.  இவர் செய்யும் எந்தத் தில்லுமுல்லுகளும் மக்களுக்குத் தெரியாமல் இருக்க வழக்கமாக செய்வது போல் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விடலாம் என்று நினைத்து தான் உச்சக்கட்டமாக 2 ஜி - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு வகையாக மாட்டிக்கொண்டார். அவரது இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு தப்புகளை மாட்டிக்கொள்ளாமல் செய்து தப்பித்துக்கொள்ளும் திறமைசாலியான கருணாநிதி, உச்சக்கட்டமாக அலைக்கற்றை ஊழலில் தான் மட்டுமே  சிக்கிக்கொள்ளாமல்  தன் மனைவி தயாளு அம்மாள், துணைவி ராசாத்தி அம்மாள், செல்ல மகள் கனிமொழி, தன்னை நம்பி அமைச்சர் பொறுப்பேற்ற  ஆ. ராசா, தன் சொந்த தொலைக்காட்சியின்  இயக்குனர் சரத்குமார் என்ற படித்த இளைஞர் என அனைவரையும் சிக்கவைத்தது தான் அவரது திறமைக்கு சவாலாய் அமைந்து விட்டது.   
                    பல நாள் திருடன் ஒருநாள் சிறையில்....!     தவறுகள் செய்யும் நம் நாட்டுத் தலைவர்களுக்கு இது ஒரு பாடம் ஆகும்.

2 கருத்துகள்:

Varadha Rajan சொன்னது…

நன்று

puduvairamji.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி.. நிறைய எழுதவும்..