வெள்ளி, 27 மே, 2011

சர்ச்சைக்குள்ளாகிய சன் பிக்சர்ஸ் படம்!

             தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன், பிராந்திய மொழிப்படங்களுக்குத்தான், அதிலும் தமிழ் மொழிப்படங்களுக்கு ஏராளமான விருதுகள் என்றவுடன் தமிழ் திரைப்பட ரசிகர்கள் அதைஇன்பஅதிர்ச்சியாகவே எடுத்துக் கொண்டனர்.அந்தப் பெருமையைப் பெற்றது ‘ஆடுகளம்’ என்பது பெரும்பாலான திரைப்பட ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது.
சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என்று 58 - வது தேசிய திரைப்பட விழாவுக்கான குழுவினர் அள்ளித்தந்து விட்டார்கள். இப்படத்தின் குழுவினர் கூட இவ்வளவு விருதுகளை எதிர்பார்க்கவில்லை என்பது ஒருபுறம். மறுபுறத்தில் விருது வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் வெளியான அங்காடித்தெரு, மைனா, மதராசப்பட்டிணம் உள்ளிட்ட பல படங்களுக்கு
எதுவுமே இல்லை என்பது பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

            அங்காடித்தெரு, மைனா மற்றும் மதராசப்பட்டிணம் போன்ற படங்கள் ஒவ்வொரு வகையில் பல தரப்பட்ட ரசிகர்களைக் கட்டிப்போட்ட படங்களாகும். இருட்டில் மறைந்துகிடந்த சாமானிய தொழிலாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது அங்காடித்தெரு. ஆனால் இந்தப்படங்கள் எல்லாம் விருது பெறத் தகுதியில்லை என்று தீர்மானிக்கப்பட்டதற்கு இப்படங்களை தயாரித்ததோ அல்லது வெளியிட்டதோ ஆட்சி அதிகாரத்தில் இருந்த, மத்தியில் தற்போது இருக்கிற குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதுதான் காரணமா என்று பரபரப்பாக திரையுலகத்தினர்  விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

               மைனா படத்தைப் பார்த்தபிறகு, தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும். நான் நிம்மதியாகத் தூங்குவேன் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.  இத்தகைய படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதே என்று ரஜினிகாந்த் வருத்தப்பட்டார். இவ்வளவு ஈர்ப்பை ஏற்படுத்திய இப்படத்திற்கு ஒரு விருது மட்டும்ஆறுதல் பரிசு போல கொடுத்திருக்கிறார்கள்.

                இந்தப்படங்கள் எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லையா அல்லது திட்டமிட்ட முறையில் ஒருதலைப்பட்சமாக விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விகள் திரையுலகத்தினரைக் குடைந்து கொண்டிருக்கின்றன. எது எப்படியோ, நல்ல
திரைப்படங்களில் பல விருதுகளைத் தவற விட்டுவிட்டன என்பதுதான் துயரத்திலும் துயரம்.

நன்றி : தீக்கதிர் 

கருத்துகள் இல்லை: