வெள்ளி, 16 செப்டம்பர், 2011

என்ன கொடுமை சார் இது..! வரி கட்டுகிறவனையும், வாகனம் வெச்சிகிறவனையும் இப்படி தாக்குறாங்க..!

நம்ம கோவணத்தையும் உருவிடுவாங்களோ...!

            நேற்றும் இன்றும் இரண்டு நாட்களாக நடப்பதை பார்த்தா...  கடனை  வாங்கி வண்டி வாங்கினவங்களையும், கடனை வாங்கி வீட்டைக்கட்டினவங்களையும்  என்னமா அடிக்கிறாங்க..  போகிற போக்கப் பாத்தா.. ஏன்டா கோவணத்தைக் கட்டியிருக்கேன்னு அதையும் உருவிடுவாங்களோன்னு  பயமா தான் இருக்கு.       
            நேற்று மாலை தான் பெட்ரோல் விலை மூன்று ரூபாய்  உயர்வுன்னு ஒரு பெட்ரோல் குண்டைத் தூக்கி தலையில்  போட்டார்கள். இரவு பார்த்தாக்கா.. நிலைமை இன்னும் மோசமா போயிடுத்து..!
              நீங்க வருமான வரி கட்டுபவரா..? சொந்தமா வீடு இருக்கா..? வாகனம் வெச்சிருக்கீங்களா..? அப்படீனா.. இனிமே உங்களுக்கு வருஷத்துக்கு நாலு கேஸ் சிலிண்டர் தான் மான்யவிலையில கிடைக்கும்.... அதுக்கும் மேல வேணும்னா மான்யம் கிடையாது.. முழு விலை 740 ரூபாய் கொடுத்து தான் வாங்கனுமாம். பெட்ரோல் குண்டுக்கே தலை சுத்தி கீழே விழுந்து கிடந்து எழுந்திருக்க முடியாம திணறிக்கொண்டிருந்த போது, மத்திய அரசு இப்படி ஒரு சிலிண்டர் குண்டையும் போட்டு மனுஷன எழுந்திருக்க முடியாம பண்ணிட்டாங்க..
               மறு நாள் ஆகியும் இன்றைக்கு மயக்கமே தெளியாம கிடக்கிறப்போது, பாரத ரிசர்வ் வங்கி தன் பங்குக்கு அவிங்க ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.. வீடு கட்டுறத்துக்கும் வண்டி வாங்குறதுக்கும் வாங்கின கடனுக்கு இதுவரை கட்டிவந்த வட்டி விகிதத்தை உயர்த்தப் போறாங்களாம்... ஏன்னு கேட்டா.. பணவீக்கம்ன்றாங்க... இத்தனை அடி அடிச்சதாலே ஏற்பட்ட  நம்ப உடம்பு வீக்கத்தை யார் தான் பார்க்கிறது..?
               மக்களைப் பற்றிக் கொஞ்சம் கூட அக்கறையில்லாத அரசு.. வருமானம் என்பது நாட்டுல யாருக்குமே உயரல.. அப்படியேதான் இருக்குது.. ஆனா அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிங்க, பள்ளி-கல்லூரிக் கட்டணங்க - என  இவைகளின் விலைகளெல்லாம்  நாளுக்கு நாள் ஏறிகிட்டே இருக்கு.. இது போதாதுன்னு அரசாங்கமே ஒரு பொழுதுபோக்கா பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு விலைகளை கண்மூடித்தனமாக உயர்த்துவது மட்டுமல்லாமல், மேலே சொன்ன விலைகளை குறைப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது நாமெல்லாம் வருந்தத்தக்க  விஷயமாகும்.
             போகிறப் போக்கைப் பார்த்தா, ஏண்டா கோவணம் கட்டியிறக்க என்று சொல்லி, கட்டியிருக்கிற  ஒரு கோவணத்தையும் உருவிகிட்டு விட்டுடு வாங்களோன்னு  பயமா இருக்கு. எல்லாத்தையும் இழந்தாச்சி.. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை.. அதைத் தவிர...!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

No rational basis for fuel price hike
An excellent interview with Surya Sethi,Former Principal Advisor on energy to the Planning Commission explains the logic behind fuel pricing ,He also breaks the face mask of govt claims that subsidies in the oil sector are high that's why they are forced to raise the prices over

http://newsclick.in/india/no-rational-basis-fuel-price-hike

http://newsclick.in/international/fuel-price-hike-global-prices-local-wages