புதன், 7 செப்டம்பர், 2011

அடிக்கடி குண்டு வெடிப்பு - மத்திய உள்துறை அமைச்சரும் உளவுத்துறையும் தான் பொறுப்பேற்கவேண்டும்..!

                   இன்று காலை புதுடெல்லி உயர்நீதி மன்றம் அருகில் சக்கிவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 65 பேர் பலத்தக் காயங்களுடன் புதுடெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்பாவி மக்கள் தான் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு மாதங்களில் இங்கு இரண்டாவது முறையாக இது போன்ற குண்டு வெடிப்பு  நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் உள்துறை அமைச்சரும், உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தான்   தெரியவில்லை. 
                   உள்துறை  அமைச்சரைப் பொறுத்தவரையில் ஒரு ''மங்குனி'' உள்துறை  அமைச்சர் என்றும் சொல்லிவிட முடியாது. ரொம்ப ''விபரமா''னவர். உள்துறையைத் தவிர ''மற்ற'' எல்லா விஷயங்களிலும் ''கை'' தேர்ந்தவர். உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும், அமெரிக்க பெருமுதலாளிகளுக்கும் பொதுத் துறையையும், அதன் பங்குகளையும் விற்பதும் கொடுப்பதுமான புரோக்கர் வேலைகளை மட்டும் சிறப்பாக செய்வார். ஆனால்  உள்நாட்டு  பாதுகாப்பை மட்டும் கோட்டை விட்டுவிடுவார். தேசத்தைப் பற்றியோ, மக்களை பற்றியோ அக்கறை இல்லாதவர் இந்த நாட்டின் உள்துறை அமைச்சர்.  நாட்டின் பாதுகாப்பு என்பது ஒரு கேலிக் கூத்தாக போய்விட்டது. 
   இந்த குண்டுவெடிப்பில் தன் குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் இழந்து தவிக்கும் அப்பாவி  மக்களுக்கு  உள்துறை அமைச்சர் என்ன  சொல்லப்போகிறார்...? எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஆறுதல் கூறுவார்...? இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ஒரு உள்துறை அமைச்சர்  எதற்கு..?
                 மத்திய உள்துறை  அமைச்சர் மாற்றப்படவில்லையென்றாலும், அல்லது  ப.சிதம்பரம் திருந்தவில்லையென்றாலும்  ...  இதுபோன்ற குண்டு வெடிப்புகளையும், நாச வேலைகளையும் தடுக்க முடியாது.

கருத்துகள் இல்லை: